அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
அப்பலோ விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் செல்வதற்கு முன்னர் ஹவாய் தீவில் பயிற்சி பெற்ற சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இப்புகைப்படங்களில் 'மூன் பக்கி' எனும் விண்வெளி வாகனத்தில் ஹவாய் எரிமலைப் பிரதேசத்திலுள்ள மண் மற்றும் அப்பிரதேத்தில் பயிற்சியில் ஈடுபடுவது புகைப்படமாக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வு முறைமைக்கான பசுபிக் சர்வசே விண்வெளி நிலையத்தின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் பிரதம பணிப்பாளர் ரொப் கெல்சோ என்பவர் ஜோன்ஸன் விண்வெளி நிலையத்திலிருந்தே இப்புகைப்படங்களைக் கண்டுபிடித்துள்ளார். 1970களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிகளில் அப்பலோ 13 திட்டத்தின் கீழ் 17 விண்வெளி வீரர்கள் பயிற்சி பெற…
-
- 0 replies
- 1.2k views
-
-
படம்: சி.வி. சுப்ரமண்யன் படம்: ராஜூ. வி படம்: விபின் சந்திரன் படம்: ஆர்.எம். ராஜரத்தினம் பச்சைப் பசேல் என்று மனதை மயக்கும் மரம், செடி, கொடிகளால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மூச்சு விடுவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்கள். மரமோ மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியம். அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயன். ஐம்பது ஆண்டு வளர்ந்த மரங்கள் மட்டுமல்ல பத்து ஆண்டுகள் வளர்ந்த மரங்கள்கூட பணங்காய்ச்சி மரங்கள் எனப் பெயர் பெறுவது உண்டு. பத்துக்குப் பத்து அடியில்கூட மரங்களை வளர்க்க முடியும். சொந்த வீட்டைச் சுற்றி மரங்கள்…
-
- 0 replies
- 985 views
-
-
‘என் கம்பெனியில் மொத்தம் பதினாறு மார்க்கெட்டிங் எக்ஸ்ஸிக்யூடிவ்ஸ் இருக்காங்க’ என்றார் மாட்டுத் தீவனம் விற்கும் ஒரு தொழிலதிபர். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தீவனம் விற்க பதினாறு மார்க்கெட்டிங் ஆட்களா? மாடுகளை விட ஆட்கள் அதிகம் எதற்கு என்று அவரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் மார்க்கெட்டிங் என்று குறிப்பிட்ட நபர்கள் செய்வது சேல்ஸ் வேலையை. அதை அவரிடம் கூறியபோது அவர் `மார்க்கெட்டிங், சேல்ஸ் எல்லா கழுதையும் ஒண்ணுதானே’ என்றார். நான் மார்க்கெட்டிங் கன்சல்டண்ட் என்பதால் என்னைக் குத்திக் காட்டுகிறாரோ என்று சந்தேகம் வந்தது. அதை அவரிடம் கேட்டு அவர் கன்ஃபர்ம் பண்ணித் தொலைத்தால் அசிங்கமாகப் போய்விடுமே என்று விட்டுவிட்டேன். ஆனால் அவர் பதிலில் இருந்த அறியாமையை நான் பல தொழிலதிபர்…
-
- 0 replies
- 595 views
-
-
இடம்: ரஷியாவின் கான்ட்டி மான்ஸி நகரம். நாள்: மார்ச் 29, 2014. கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் ஸெர்கே கராஜகினுடன் மோதல். ஆனந்திடம் கறுப்புப் படை. கராஜகினிடம் வெள்ளைப் படை. அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய 15 காய்களை லாவகமாக நகர்த்தவேண்டும், தன் அரசனைப் பாதுகாக்கவேண்டும், எதிரி அரசனைப் பிடிக்கவேண்டும். ஒவ்வொரு காயை நகர்த்தும்போதும், தன்னுடைய அடுத்த நடவடிக்கை என்ன என்று கணக்குப்போடவேண்டும். அதே சமயம், எதிர் ஆட்டக்காரர் தன் காயை எப்படியெல்லாம் நகர்த்தலாம் என்று யூகிக்கவேண்டும். இதுதான், செஸ் விளையாட்டில் ஜெயிக்கும் வழி. டீல் போடுவதும் செஸ் ஆட்டம்தான். “காய்”களுக்குப் பதிலாகக் க…
-
- 0 replies
- 612 views
-
-
அண்மையில் கொழும்பில் உள்ள ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவருடன் கதைத்த போது சொன்னார். " இந்தியாவில் இருந்து கொண்டெய்னர் , கொண்டெய்னராக ஊதுபத்தியும், அப்பளமும் இறக்குமதி செய்கிறார்கள். இவற்றை நாம் தாயகத்தில் ஊக்குவித்தால் நல்ல லாபம் பெறலாமெனவும் , போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பையும் வழங்கலாமெனவும் சொன்னார். எனக்கும் இது ஒரு நல்ல சிந்தனயாகப் படுகிறது. மூலப்பொருட்கள் பிரச்சனையும் வராது என நினைக்கின்றேன். கள உறவுகளே யாராவது வசதியிருந்தால் முயற்சித்துப் பாருங்கள். முடியுமானவர்கள் இச்செய்தியை வடமாகணசபையிடம் எடுத்து செல்லுங்கள். கீழே இவை தொடர்பாக தமிழ் நாட்டு பத்திரிகைகளில் வாசித்த இரண்டு செய்திகளை இணைத்துள்ளேன். ஊ…
-
- 0 replies
- 10.4k views
-
-
(கோப்புப் படம்) ‘எல் நீன்யோ' (El Nino) என்பது பசிபிக் கடல் பரப்பின் மேல் ஏற்படும் ஒருவித வெப்பநிலை மாற்றம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதன் காரணமாகப் பருவமழைக் குறைவு ஏற்படக்கூடிய ஆசிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பொருமுறை ‘எல் நீன்யோ’ வந்தபோது அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை ஏகமாக உயர்ந்ததை அந்த அரசுகள் மறக்கவில்லை. இதனால், மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து சமூக அமைதியும் குலைந்தது. இந்தோனேசிய அரசு நெல் பயிர் சாகுபடியைத் தேதிவாரியாக எப்படிச் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு அட்டவணையே வகுத்துக்கொடுத்துவிட்டது. மலேசியாவும் பிலிப்பைன்ஸும் மழை நீரைச் சேமிக்கவும், வீணாக்காமல் ப…
-
- 0 replies
- 639 views
-
-
(கோப்புப் படம்) சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறைகொள்வது நமக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததிக்காகவும்தான் பருவநிலை மாறுதல்கள் குறித்து சமீபகாலத்தில் கூறப்பட்ட பலவற்றில், வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த கவர்னர் ஜே இன்ஸ்லீ சொன்னதைவிட தெளிவானதும் வலிவானதும் வேறு எதுவும் இல்லை; “பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம், அதைச் சரிசெய்யக்கூடிய கடைசித் தலைமுறையாகவும் நாம்தான் இருக்கிறோம்.” பருவநிலைகளில் ஏற்பட்ட மாறுதல்களை எப்படிச் சரி செய்வது, எந்த அளவுக்கு நாம் இதில் செயல்பட முடியும், எல்லோருமே அவரவர் வயிற்றுப்பாட்டுக்காகக் காலையில் எழுந்திருப்பது, சாப்பிடுவது, வேலைக்குப் போவது, இரவில் வீடு வந்துசேர்ந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்குவது என்று செ…
-
- 0 replies
- 544 views
-
-
களப்பணியில் காளிமுத்து. வெளிநாட்டு வேலை, ஐ.டி. மோகம் என இந்தக் காலத்து இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கையில், தனது கிராமத்துக்கான தேவையை 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் காளிமுத்து. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள தங்களாச்சேரி கிராமம் தான் காளிமுத்துவின் சொந்த ஊர். ஏழு வருடங்களுக்கு முன்பு எம்.ஃபில் முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்த இவர், மற்றவர்களைப்போல் வேலை தேடி நகரத்துக்கு ஓடவில்லை. மாறாக, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைகளை முன்னெ டுத்தார். அதற்கு அவர் எடுத்த ஆயுதம் இயற்கை விவசாயம். அந்த ஆயுதத்தைக் கொண்டு சாதித்ததை நமக்கு விளக்குகிறார் காளிமுத்து. மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் தொழில் நகரங்…
-
- 0 replies
- 635 views
-
-
கேமராவில் எடுத்த புகைபடங்களை மொத்தமாக ரீசைஸ் செய்ய Digital கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அளவில்(Size) பெரிதாக இருக்கும்.அது போன்ற புகைப்படங்களை அதன் Quality மாறாது சிறிய அளவாக மாற்ற(Resize) இந்த மென்பொருள் உதவுகிறது.ஏற்கனவே சிறிய அளவாக மாற்றும்(Resize)Riot என்ற மென்பொருள் பற்றி பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த மென்பொருளில் ஒவ்வொரு படமாக தான் மாற்ற இயலும்.இந்த மென்பொருளில் மொத்தமாக பல படங்களை நிமிடங்களில் சிறிய அளவாக மாற்றலாம். உங்கள் படங்கள் இருக்கும் போல்டரை தேர்வு செய்து Add என்ற பட்டனை கிளிக் செய்து வலப்புறம் கொண்டு செல்க.பல படங்கள் இருக்கும் போல்டர்கள் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.பின் உங்களுக்கு தேவையான பட பார்மட்(format- .jpg,.png,.gif) தேர்வு செய்து Convert என்பத…
-
- 0 replies
- 546 views
-
-
சன்ஷேடில் இருப்பது மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர். தண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர். திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்.. தண்ணீர் தரத்தில் 120-வது இடம் …
-
- 0 replies
- 405 views
-
-
தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி சுந்தர் வேதாந்தம் தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும். அது ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்து புதிய செயலிகளை புரிந்து கொ…
-
- 5 replies
- 5.4k views
-
-
இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2013-14-ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 122.44 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை விளைச்சல் அதிகரித்ததே உற்பத்தி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 6.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் உற்பத்தியான தேயிலை அளவு 98 கோடி கிலோவாகும். முந்தைய ஆண்டு இவ்விரு மாநிலங்களின் உற்பத்தி 92 கோடி கிலோவாக இருந்தது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு 80 சதவீத அளவுக்கு உள்ளது. http…
-
- 1 reply
- 574 views
-
-
புகைப்படக்கருவியிலிருந்து நேரடியாக இணையத்திற்க்கு படங்களை அனுப்புவது பற்றி அறிய தர முடியுமா.சிம் காட் போடக்குடிய கமராக்கள் உள்ளன. அவை பற்றிய தகவல்களும் தேவை நன்றி.
-
- 2 replies
- 773 views
- 1 follower
-
-
இலங்கையின் புகையிலை விவசாயிகளுக்கான நிலையான விவசாய செயற்திட்டமொன்றை 2013 ஆம் ஆண்டில் சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி அறிமுகம் செய்திருந்தது. இந்த திட்டத்தின் ஊடாக, விவசாயிகள் மத்தியில் சிறந்த விளைச்சல் நிர்வாக நுட்பங்கள், தேசிய உணவு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் தமது சொந்த போஷாக்கு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மரக்கறி செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனியின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான நிலையான விவசாய அபிவிருத்தி திட்டத்தின் அங்கமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. SADP Ultra திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தமது மேலதிக விளைச்சல்களை விற்பனை செய்து, த…
-
- 0 replies
- 2.3k views
-
-
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இயந்திரமான கூகுள் சர்வதேச தரப்படுத்தலில் முதற்தர நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்வர்ட் பிரவுன் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட் ஆய்வுகளின் பிரகாரம் பெறுமதியின் அடிப்படையில் கூகுள் முதலிடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நூறு நிறுவனங்களின் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 158.84 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக பெறுமதியை கூகுள் கொண்டுள்ளதுடன் 147.88 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை கொண்டு அப்பிள் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐபிஎம் நிறுவனம் 107.54 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியையும் மைக்ரசொப்ட் நிறுவனம் 90.19 அமெரிக்க டொலர் பெறுமதியையும் கொண்டு மூன்றாம் நான்காம் இடங்களை…
-
- 0 replies
- 474 views
-
-
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் இதுதான். அகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. அந்தக் குட்டியானையின் உடல் இப்போது லண்டனிலுள்ள இயற்கை உயிரின அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைபீரியாவில் பனிப்பகுதிகளில் அலைந்து திரியும் மான்களை மேய்க்கும் ஒருவரால் இந்த யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 50 கிலோ எடையும் 130 செ மீ உயரமும் இருக்கிறது. …
-
- 0 replies
- 590 views
-
-
தென் துருவக் கண்டத்தில் பனி உருகி ஆறுகள் பெருக்கெடுக்கெடுப்பதென்பது அதிகரித்துவருகிறது. புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மொத்தத்தையும் மதிப்பீடு செய்துள்ள புதிய ஆய்வு ஒன்று, தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியனன் டன்கள் எடையளவுக்கு இக்கண்டம் பனிக்கட்டியை இழந்துவருகிறது என்று தெரிவித்துள்ளது. அதனால் கடல் மட்டம் உயருவதற்கும் கரையோர சமூகங்கள் பாதிக்கப்படுவதற்குமான ஆபத்து அதிகரித்துவருவதாக ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. பனிப் படலத்தின் மாறும் வடிவத்தை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராடார் கருவியின் உதவியுடன் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கிரியோசாட் செயற்கைக்கோள் இந்த ஆய்வை மேற்கொண்டது.நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட …
-
- 0 replies
- 599 views
-
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள், திசு வாழை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியப்படைந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குன்னூரைச் சேர்ந்த கோபி என்பவர் நீலகிரியில் விளையும் அரிய வகைப் பழங்களை காட்சிக்கு வைத்திருந்தார். நோய்களுக்கு நிவாரணி நான்கு அடி உயரம் மட்டுமே வளரும் மலை வாழை, காட்டு வேடன், வெள்ளரி, பன்னீர் கொ…
-
- 0 replies
- 496 views
-
-
ஆர்ஜென்டீனாவில் மிகப் பெரிய டைனோசர்களின் எலும்புக்குகூட்டுத் தொகுதி நேற்று சனிக்கிழமை (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எச்சங்களில், இதுவே உலகில் வாழ்ந்த டைனோசர்களில் மிகவும் பெரிய டைனோசர்களின் எலும்புக்ககூட்டுத் தொகுதி என தெரிவிக்கப்படுகின்றது. இந்த டைனோசர் இனத்தில் உள்ளவை ஒவ்வொன்றும் சுமார் 77 டன்கள் எடை கொண்டதாக இருந்திருக்கும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த டைனோசர்கள் ஒவ்வொன்றும் 130 அடி (40 மீற்றர்) நீளமும் 65 அடி அகலமும் உடையது என கணிப்பட்டுள்ளது. 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவர உன்னி டைனோசர்களாக இவை இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.9 இந்த மிகப்பெரிய டைனோசர் எச்சங்களை கண்டுபிடித்தமை பற்றி, ஆர்ஜன்டீனாவி…
-
- 0 replies
- 696 views
-
-
கொடிகட்டிப் பறந்த சோனி நிறுவனம் பெரும் நஷ்டத்தில்! கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் [Wednesday, 2014-05-14 21:57:16] உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணினி அதாவது பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டேஷன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது. நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வாக்மேன்,…
-
- 4 replies
- 732 views
-
-
காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களைப் பார்த்து பலரும் வியக்கின்றனர். அரிய வகை மரங்களைப் பார்வையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி உருவானது இந்த சுகவனம்? மக்கள் விவசாய பண்ணையின் நிறுவனர் - செயலாளரான மரியசெல்வம் விவரிக்கிறார்... உணவு உற்பத்திக்கான செயல் திட்ட (Action For Food Production) அமைப்பிலிருந்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நீர் வடிபகுதி திட்ட…
-
- 0 replies
- 474 views
-
-
மொபைல் கேமராவிற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பே, சாப்ட்வேர் கண்டு பிடித்து, நோக்கியா நிறுவனத்திற்கு தந்த தமிழன், சங்கர் நாராயணன்: அமெரிக்காவில் உள்ள, சிலிக்கான் வேலி என்ற பகுதி தான், உலக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப புரட்சியின் நடுமையம் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் களின் கனவு பிரதேசம். இது போன்ற பகுதியை, தங்கள் நாட்டிலும் அமைக்க பல நாடுகள் முயன்றன. ஆனால், இதுவரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை.சிலிக்கான் வேலியின் பார்வை தான், அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனெனில், எந்த தொழில் என்றாலும், அதை ஏன் நாமே சொந்த மாக செய்யக் கூடாது என்பது தான், அங்கு நிகழ்ந்த மாற்றத்தின் முதல் படி.இந்த மாற்றம், நம் நாட்டில் நடக்க, முதலில் நம் கல்விமுறையும், சிந்தனை போக்கும் மாற வேண்டும். 'படித்து விட்…
-
- 0 replies
- 636 views
-
-
சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் ஒரு “பழுப்புக் குள்ளன்” இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழுப்புக் குள்ளன் எங்கே உள்ளது என்பதைக் காட்டும் படம். சூரிய மண்டலத்தின் எல்லைக்கு அப்பால் மேலும் ஒரு “பழுப்புக் குள்ளன்” (Brown Dwarf) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதென்ன பழுப்புக் குள்ளன்? நிச்சயம் அது மனிதன் இல்லை. அது ஒரு நட்சத்திரமா? இல்லை. அது ஒரு கிரகமா? அதுவும் இல்லை. அப்படியானால் அது தான் என்ன? நிலவற்ற நாளில் இரவில் வானைப் பார்த்தால் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிகின்றன. பல நூறு கோடி கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து நமது சூரியனைப் பார்த்தால் சூரியனும் ஒளிப்புள்ளியாக அதாவது நட்சத்திரமாகத்தான் தெரியும். சூரியன் மற்ற நட்சத்திரங்களைப் போல ஒரு ந்ட்சத்திரமே. …
-
- 1 reply
- 717 views
-
-
1,000 வருடங்களுக்கு முன்னர் உங்களது மூதாதையர்கள் எங்கிருந்தார்கள் என அறிந்துகொள்வது இலகுவானதொரு விடயமல்ல. ஆனால் உங்களை உங்கள் மூதாதையர்களின் இடத்திற்கு வழிகாட்டும் சாதனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்காக அதி தொழில்நுட்பத்திலமைந்த புவியியல் குடித்தொகை அமைப்பு (ஜோகிரபிக் பொபியூலேஷன் ஸ்ரக்சர்) எனும் ஜீ.பி.எஸ் எனப்படும் இணையத்த டூல் ஒன்றினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். இச்சாதனத்தின் மூலம் உங்களது மரபணு எங்கே எந்த கிராமத்தில் உருவானது என கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் உங்களது மூதாதையர்களின் இடத்தினை கண்டுபிடிக்க முடியும். இதற்கு முன்னர் எந்த இடத்தில் உங்களது மரபணு உருவானது என 700 கிலோ மீற்றர்களுக்கு உட்பட்ட பிரதேசத்திலே கண்டுபிடிக்க முடியுமாக இருந்…
-
- 1 reply
- 606 views
-
-
ந.கீர்த்தனா தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம். தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்ட…
-
- 1 reply
- 838 views
-