Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த 113 வயது பாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகளில் அவரது 100 பேரப்பிள்ளைகள் கலந்து கொண்டனர். இது குறித்து பாட்டியின் 65 வயது பேரன் வெங்கடாசலம் (வயது 65) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூறியதாவது:- 113 வயது பாட்டியின் பெயர் கிருஷ்ணாம்மாள் சேலம் மாவட்டம் சவூரியூரில் மே 26, 1902, ஆண்டு பிறந்தவர் பின்னர் சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த தாத்தா முனுசாமியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் மகள் தான் சரஸ்வதி இவரில் இருந்து தான் எங்கள் தலைமுறை தொடங்குகிறது. கிருஷ்ணம்மாள் பாட்டி வாழும் காலம் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.அதற்கு காரணம் அவரது உணவு மற்று வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்தான்.அவ்ர்ஒரு காய…

  2. 22 கோடி ரூபாவை நிறுவன ஊழியர்களுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்த தொழிலதிபர் இத்தாலியிலுள்ள நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர், தனது சொத்தில் சுமார் 22 கோடி ரூபாவை தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு வழங்குவதாக உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதனால் அத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு 3 இலட்சம் ரூபா முதல் 15 இலட்சம் ரூபா வரை விசேட அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் எனோபிளாஸ்டிக் எனும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கே இந்த அன்பளிப்பு கிடைத்துள்ளது. போத்தல் தக்கைகள், லேபல்கள், ஸ்குரூ ஆணிகளுக்கான மூடிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் இது. பியரோ மாச்சி என்பவர் 1957 ஆம்…

  3. தாய்க்கு சிறுநீரக தானம் அளிக்க மகன் கூறிய சாமர்த்திய பொய்: லண்டனில் நெகிழ்ச்சி சம்பவம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு, சிறுநீரகத்தை தானம் அளிப்பதற்காக மகன் சாமர்த்தியமாக கூறிய பொய் நெகிழ்ச்சிச் சம்பவமாக பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இம்ரான் நஜீப் (34) என்பவர், தன் ஆறு குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இவரது தாய் ஜைனப் பேகத்துக்கு, திடீரென சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நாள்தோறும் அவருக்கு டயாலசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரகத்தின் இயக்கம் 25 சதவீதமாக குறைந்ததால், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்…

  4. மருத்துவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நோயாளி மருத்துவர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பெல்குரோட் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும், மேற்படி நோயாளியே முதலில் வன்முறையாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாதி ஒருவரை அந்நோயாளி காலால் தாக்கியதாகவும் அதையடுத்தே அவரை மருத்துவர் தாக்கியதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …

  5. ஜப்பான் நாட்டில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக அங்குள்ள ஒரு ரயில் நிலையம் செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அந்நாட்டு ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் நாட்டிற்கு மேற்கு திசையில் Hokkaido என்ற தீவுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு Kami-Shirataki என்ற ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் நகரை விட்டு தொலைவில் அமைந்துள்ளதால் அதனை நிரந்தரமாக மூடிவிட 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர்,ரயிலில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டு இதே ரயிலில் வீடு திரும்புவது ரயில் நிலையத்திற்கு தெரியவர அதனை மூடிவிடும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது. மே…

  6. அப்பாவின் உயிரை காத்த ஐந்து வயது சிறுவன். மேற்கு பிரான்சில், மாரடைப்பினால் மயங்கிவிழுந்த தனது தந்தையை காப்பாற்றுவதற்காக, ஐந்து வயது சிறுவன் ஒருவன், இரவு நேரத்தில், மழையில் நனைந்துகொண்டே நீண்டதூரம் சைக்கிளில் சென்றுள்ளான். அப்பாவின் உயிரை காத்த ஐந்து வயது சிறுவன் கெவின் என்ற அந்த சிறுவன், பல கிலோமீட்டர் தள்ளியுள்ள சான் பியே கோ என்ற சிறிய கிராமத்தில் வேலை செய்யும் அவனது தாயாரை அழைக்க முயன்றுள்ளான். வாகன ஓட்டுனர் ஒருவர், அந்த சிறுவனைக் கண்டு, அவசர உதவிச் சேவையை அழைத்துள்ளார். அவர்கள் அந்த சிறுவனின் வீட்டை தேடிப்பிடித்து, மாரடைப்பால் மயக்கமுற்ற அவனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுவனின் முயற்சியால் அவனது தந்தை உயிர் பிழைத…

  7. மும்பை, மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு கடலில் விழுந்த கல்லூரி மாணவியை காப்பாற்ற முயன்ற வாலிபரையும் அலை இழுத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் கல்லூரி மாணவிகள் 3 பேர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க பின்னால் சென்ற கோவந்தி என்ற மாணவி கால் தவறி கடலில் விழுந்தார். இதனை கண்டு மாணவியை காப்பாற்ற ரமேஷ் என்பவர் கடலில் குதித்துள்ளார்.அவரையும் கடல் அலை இழுத்து சென்றது, கடலில் விழுந்த இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://www.dailythanthi.com/News/India/2016/01/09162713/Mumbai…

  8. ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த முயன்றவர் கைது! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த, காரில் ஆயுதங்களுடன் வந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஒபாமா, போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 2 உயர் ரக நாய்க் குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கடத்த இளைஞர் ஒருவர் ரகசியமாகத் திட்டமிட்டார். ஒபாமாவின் மனைவி மிச்செல், அந்த நாய்க் குட்டிகளை வெளியே ’வாக்கிங்’ அழைத்து வருவதையும் அவர் கண்காணித்து வந்தார். இந்நிலையில், அந்த இளைஞர் காருடன் நின்று கொண்டிருந்தபோது சந்தேகமடைந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்…

  9. ஐரோப்பா செல்ல பணத்திற்கு பதில் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த சிரியா நபர் தங்களது குடும்பத்தாரை ஐரோப்புவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஒருவரை அனுமதித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருவதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி வருகிறார்கள். அவர்களை கள்ளத்தனமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் அதிக அளவில் பணம் வாங்குகிறார்கள். இந்நிலையில் எப்படியாவது ஐரோப்பாவுக்கு சென்றால் போதும் என்ற நினைப்பில் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் செய்யக் கூடாத ஒன்றை துணிந்து செய்துள்ளார். சிரியாவைச் சேர்ந்த அந்த நபர் தனது 30 வயது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் பல்கேரிய…

  10. மெக்சிகோ நகரை சேர்ந்தவர் லிஸ்பெத் ஜெரோனிமா புயுண்டெஸ் முன்குயா (வயது 18 ) இவர் அகோல்மேன் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் தனது 4 மாத பெண் குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு பூட்டி விட்டு ஒடுமா நகராட்சியில் நடைபெற்ற ஒரு டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இது குறித்து பக்கத்து வீட்டு பெண்மணி லிஸ்பெத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். லிஸ்பெத் வேகமாக ஓடி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார் தனது குழந்தையை சுற்றி எலிகள் மொய்த்து கொண்டு இருந்தது. உடனடியாக குழந்தையை தூக்கினார். குழந்தையின் முகம்,கால் விரல்கள் முழுவதும் ரத்தமாக இருந்தது. எலிகள் குழந்தையின…

  11. குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது: ‘பீட்டா’ தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத் துக்காக (செல்பி) அந்த குரங்குக்கு பதிப்புரிமை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விவரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நருடோ மிகவும் பரிச்சயமாக விளங்கியது. இந்நிலையில், 2011-ல் ஆய்வுக்காக வந்திருந்த வனவிலங் குகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக் கல…

  12. இந்திய அறிவியல் மாநாட்டில், இந்துக் கடவுளான சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தெரிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில், ”கடவுள் சிவன்: உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி" என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பப்பட்டுள்ளது. மத்தியபிரதேச தனியார் பல்கலைக் கழக ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனும் தாவரவியல் துறை ஆராய்ச்சியாளருமான அகிலேஷ் கே.பாண்டே இந்த கட்டுரையை அனுப்பியுள்ளார். மேலும் அந்த கட்டுரை சொற்பொழிவுக்கு தெரிவு செய்யப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. …

  13. கிரிக்கெட் போட்டியின்போது ஆபாச படம் பார்த்த நிருபர் கைது! January 7, 2016 10:30 am ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்து சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் ஆண் மற்றும் பெண் செய்தியாளர்கள் மத்தியில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார். போட்டி நடந்து கொண்டிருக்கையில் அவர் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதை கண்டுபிடித்த கிரிக்கெட் மைதான அதிகாரி ஒரு…

  14. 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இதைப்போன்ற சிறப்பு இன்னும் 823 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் வரும் என்ற நிலையில் அந்த சிறப்புகள் என்னவென்று அறிந்து கொள்வோமா..? மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. அடுத்து இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இதைப்போன்ற கிழமைகளின் எண்ணிக்கை அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.p…

  15. சன்ட்விச் தேடிய பெண்ணிடம் ஆணுறுப்பை காட்டிய கெய்ல் பசியோடு சான்ட்விச் தேடிய பெண்ணை பார்த்து "இதைத்தான் தேடுகிறாயா" என கேட்டபடி தனது இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காண்பித்துள்ளார் மேற்கிந்தியத் தீவகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இதன் போது மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக அவுஸ்திரேலியப் பெண்மணி ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவதினத்தன்று மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் அந்தப் …

  16. 100 டொலர் நாணயத்தாள்களை சாரதிகளுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை நிறுத்தினால் பொதுவாக சாரதிகளுக்கு கலக்கம் ஏற்படும். அப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டுப் பத்திரம் எதையும் வழங்குவதற்கு பதிலாக சாரதிகளுக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினால் எப்படியிருக்கும்? இவ்வாறானதொரு இன்ப அதிர்ச்சி, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத் திலுள்ள வீதியொன்றில் அண்மையில் பயணம் செய்த சாரதிகளுக்கு கிடைத்தது. அதுவும் 100 அமெரிக்க டொலர்கள் (சுமார் 14,000 ரூபா) பெறுமதியான நாணயத்தாளை சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் வழங்கினர். …

  17. ஸ்டேடியத்தில் உட்கார்ந்து முழு தர்பூசணியை அப்படியே சாப்பிடும் 10 வயது பையன்..! சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் முழு தர்பூசணியையும் அப்படியே சாப்பிடும் 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட் மைதானம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை பிக் பாஷ் டி20 லீக் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் அணிகளான மெல்போர்ன் ஸ்டார்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்தப் போட்டி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. அப்போது கேமராவில் ஒரு சிறுவன் தர்பூசணி சாப்பிடுவதும் பதிவானது. இதைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள். தொல…

    • 1 reply
    • 550 views
  18. வெவ்வேறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டையர் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் இரட்டைக் குழந்தைகள் வெவ் வேறு வருடங்களில் பிறந்துள்ளனர். கலி­போர்­னியா மாநி­லத்தைச் சேர்ந்த 22 வய­தான மேர்பேல் வலேன்­சியா எனும் பெண்­ணுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்­தை பிறந்­தன. இதில் பெண் குழந்­தை­ கடந்த வரு­டத்தின் இறுதித் தரு­ணத்தில், அதா­வது 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குப் பிறந்­துள்ளது. இதேவேளை, மற்றைய குழந்தையான ஆண் குழந்­தை­ இவ் வருடம் 2016 ஜன­வரி மாதம் முதலாம் திகதி 00.02 மணிக்குப் பிறந்­துள்ளது. 3 நிமிட இடை­வெ­ளியில் இரு குழந்தைகளும் பிறந்­…

  19. முகப்புத்தகத்தில் ஏற்பட்ட காதலால் இளைஞன் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் முகப்பபுத்தகத்தில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் இலங்கைக்கு வருவதாகவும் யுவதியைச் சந்திக்க வேண்டும் எனவும் இளைஞன் கூறியுள்ளார். இதனை நம்பிய யுவதி இளைஞன் கூறியபடி, யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தியில் அமைந்துள்ள ஆலயத்துக்கு அருகில் சென்றுள்ளார். அங்கு வருகை தந்த இளைஞன், தனக்கு புதையல் ஒன்று க…

  20. டிக்கோயாவில் புத்தாண்டில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு டிக்கோயா பெரிய கெந்தகலையில் நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று புதுவருட தினத்தில் பிறந்துள்ளது. இந்த நான்கு கால்களில் இரண்டு கால் சிறிதாக காணப்படுவதுடன் ஏனைய இரண்டு கால்கள் நடப்பதற்கு பயன்படும் வகையில் காணப்படுகின்றன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14012#sthash.HMeIEqwn.dpuf

  21. மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்! மனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால், கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு சென்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த ருசிகர சம்பவம் ஜெர்மனி நாட்டில் அரங்கேறியுள்ளது. பவேரியா மாகாணத்தில் உள்ள நூரம்பர்க் என்ற நகரில் 55 வயதுடைய ஒருவர், தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக அவர் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரிந்தால…

  22. இத்தனை கோடியா.... ஜாக்பாட் பரிசை இழந்த தம்பதி... நடந்தது என்ன? லட்சாதிபதியாகும் அரிய வாய்ப்பை தங்களது கவனக்குறைவால் தம்பதியர் தவறவிட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் லீசெஸ்டர் பகுதியில் வசித்து வரும் டேவிட் மற்றும் எட்வினா நைலான் தம்பதியர், லோட்டோ எனப்படும் எண்கள் தெரிவு செய்யும் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு, அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்தும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 பவுண்டுக்கான லோட்டோ டிக்கெட் ஒன்றை வாங்க முயன்றுள்ளனர். அப்போது தமது கணக்கில் போதிய பணம் இல்லை என அந்த கைப்பேசி லோட்டோ செயலி தெரிவிக்கவும், அதை நிவர்த்தி செய்த பின்னர் டிக்கெட்டை வாங்கி 6 அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்து ச…

    • 2 replies
    • 482 views
  23. சவுதி அரேபிய காதலருக்கும் ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம்! காதல்... மதம், இனம் , மொழி,கடந்தது என்பதை நிரூபிக்கும்விதத்தில் குஜராத்தில் சவுதி அரேபிய ஆணுக்கும், ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் கிஷான் தோலியா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க கிஷான் தோலியாவின் அரேபிய நண்பர் ஹமீத் அல் ஹமாத் தனது ரஷ்யத் தோழியான ஜுலியானாவுடன் சூரத் வந்திருந்தார். ஹமித் சாப்ட்வேர் இன்ஜினியராக சீனாவில் பணியாற்றுகிறார். ஜுலியானா ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபடுபவர். இருவரும் சீனாவில்தான் வசித்து வருகின்றனர். சூரத்தில் இந்து கலாச்காரப்படி கிஷான் தோலியாவி…

  24. எலிக்கு வந்த ஆசை இந்தியாவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்றும் லண்டனை சுற்றிப்பார்க்க பயணித்தையறிந்த விமானி விமானத்தை மீண்டும் மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார். நேற்று வழக்கம்போல அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து காலை 7 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற குறித்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் பயணம் செய்தனர். குறித்த விமானம், ஈரான் நாட்டின் தெஹ்ரான் வான் பிரதேசத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையைச் சுற்றி ஒரு எலி ஓடிக்கொண்டிருந்ததை அவாபணித்த சிப்பந்தி உடனே விமானிக்கு தகவல் கொடுத்தார். இதையறிந்து பதற்றம் அடைந்த விமானி, உடனடியாக மு…

  25. டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: இது தேவையா? புதுடெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. இதேபோல், காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்று பல்வேறு இயற்கைக்கு எதிரான விஷயங்களிலும் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடையின் விற்பனையாளர், உதவியாளர் உள்பட அனைத்திற்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனைத்து வகையான மது வகைகள் பெண்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.