Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…

    • 0 replies
    • 340 views
  2. நடுவீதியில் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல்… July 15, 201511:02 am நடுவீதியில் ஒரு தகராறு – காரோட்டும் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல் – அதிரடி காணொளி……. http://www.jvpnews.com/srilanka/116595.html ஆடம்பர வாகனமும் அதிகார தோரணையும் அள்ளி வீசும் இந்த அம்மே!அரசியல் வாதியா? அல்லது போதைக்கும்பலா? எதற்கும் ஒரு தகுதி தராதரம் வேண்டுமோ?

  3. டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்! [ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:20.29 AM GMT ] டக்ளஸ் தேவானந்தா ஒரு கோடீஸ்வரர்தான். இவர் வைத்திருக்கின்ற கோடீஸ்வர செல்வம் மக்களாகிய நீங்களே. என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சமூக சேவையாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இவர் வட்டுக்கோட்டையில் துணவி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு கூறினார். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு- யாழ். …

  4. சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை டி.வியிலோ, தியேட்டரிலோதான் பாத்திருப்போம், கொடுத்து வைத்த சிலர் காட்டில் கூட பார்த்திருக்கலாம். ஆனால் அதே சிங்கம் நடுரோட்டில் மானைக் கடித்துக் குதறி துவம்சம் செய்யும் காட்சியை இதற்கு முன் எங்காவது பார்த்ததுண்டா? இப்படி ஒரு அரிதினும் அரிதான சம்பவம் நடந்தது தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க்கில். அங்கு சிங்கங்களை பார்ப்பதற்காக பிரத்தியேக கார் சபாரி வசதி உண்டு. கடந்த வெள்ளியன்று, சுற்றுலாப் பயணிகள் அந்த காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு காட்டுமான் திடுதிடுவென சாலைக்குள் புகுந்து காரில் மோதியது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பாற்றுவதற்காக காரிலிருந்து இறங்கப் போன ஒருவரை பக்கத்தில் இருப்பவர் இழுத்து உள்ளே போட்டார். காரணம் அந்த மா…

    • 0 replies
    • 322 views
  5. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஸ்டாபோர்ட் நகரின் மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையின் மைய பகுதியில் திடீர் என விமானம் ஒன்று இறங்கி ஓடத்தொடங்கியது.இதை பார்த்த காரோட்ட்டிகள் அனைவரும் பயந்து அலறி தங்களது காரை ஓரமாக கொண்டு சென்றனர். இதை பார்த்த விமானி விமானத்தை சாலையின் மையத்தில் இருந்த புல்வெளிக்கு திருப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விமானத்தின் இறக்கை சேதம் அடைந்து உள்ளது என உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்தது ஸ்டாப்போர்ட் போலீஸ் கூறியதாவது:- சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானம் ரோட்டில் இறங்கியது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.அதை கிழக்கு கடற்கரை ஸ்கை டைவிங் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்து உள்ளனர்.திடீர் என என்ஜின் ச…

    • 0 replies
    • 325 views
  6. விதுரன் வில் உடைத்தது சரியா? வீஷ்மர் போர் தொடுத்தது சரியா? [ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 12:36.12 PM GMT ] [ வலம்புரி ] பாரதப்போர் தொடங்குவதற்கு முன்னதாக அரச சபையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகின்றது. கெளரவர் தலைவன் துரியோதனனின் அட்டகாசத்தைத் தாங்க முடியவில்லை. பாண்டவர்களை எதிர்ப்பதே தனது பணி என்று அவன் கருதியதால் வீஷ்மர், துரோணர், விதுரன் முதலான மூத்த தலைவர்களை அவன் கடிந்து கொண்டான். கெளரவர்-பாண்டவர் போர் நடப்பது உறுதி என்றாகி விட்ட நிலையில், துரியோதனனின் மன நிலையும் குழம்பியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் விதுரனைப் பார்த்து தகாத வார்த்தையால் துரியோதனன் திட்டுகிறான். இச்சந்தர்ப்பத்தில் விதுரன் தனது வில்லை எடுத்து சபையில் முறித்துவிட்டு இனி மேல் வில்லெடேன் என்று சத்த…

  7. இருபதாம் நூற்றாண்டிலும் சிலர் இன்னும் ஒரு ஊசி குத்திக்கொள்ள கூட பயந்து மருத்துவரிடம் போகாமல் தனக்குதானே சிகிச்சை செய்து கொள்வதுண்டு. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பத்தில் தற்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் பெருகிவிட்டன. பூசுமஞ்சள் வாங்க மளிகைக் கடைக்கு போவதுபோல தங்களது இல்லாத அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்துகொள்ள இப்போது இளம்வயது பெண்கள் டாக்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கோணல் மூக்கை நேராக்குவது, பெருத்துப் போன இடையை குறுக்கி, சுருக்கி ‘இஞ்சி இடுப்பழகி’ ஆவது, செயற்கை மார்பகங்களுக்கு சிலிக்கான் சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக இன்று லட்சக்கணக்கான பெண்கள் தகுதியும், திறமையும் வாய்ந்த டாக்டர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், எல்லா …

    • 0 replies
    • 351 views
  8. தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா! அமிர்தலிங்கத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சம்பந்தர் அய்யா. அமிர்தலிங்கத்தால் எம்.பி யாக்கப்பட்டவர் சம்பந்தர் அய்யா அந்த அம்ர்தலிங்கத்தையே இந்த தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டார் சம்பந்தர் அய்யா! கடந்தவருடம் அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தின்போது "அமிர்தலிங்கத்தின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று அறிக்கை விட்ட சம்பந்தர் அய்யா, இந்த வருடம் (13.07.15) எந்த அறிக்கையும் விடாத மர்மம்தான் என்னவோ? அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பா? (1) அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கமாட்டார். ஏனெனில் இந்திய ராணுவம் படுக…

    • 0 replies
    • 213 views
  9. மட்டு வாலிபனுக்கு சவுதியில் நடந்த கொடூரம்…. July 13, 20157:38 am சவுதிஅரேபியேவில் ரியாத் நகரில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். தற்போதும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளார். குறித்த இளைஞனின் ஆணுறுப்பு வழியாக நுழைந்த கம்பி அவரின் தோள்மூட்டுவரை கிழித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. http://www.jvpnews.com/srilanka/116220.html

  10. நிலவு படங்களில் 47 இடங்களில் மனித உருவ வடிவங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.ஒரு பாதையில் உருவாக்குவது போல் ஒரு உருவத்தை அடுத்து மற்றோரு உருவத்துக்கும் இடையே அதே அளவு இடைவெளியில் அந்த உருவங்கள் தெரிகின்றன. - See more at: http://www.canadamirror.com/canada/46114.html#sthash.W4Fe8jyr.dpuf

    • 0 replies
    • 330 views
  11. உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: உணவு பொருட்கள் மீது வரியை கூட்டுகிறதா பிரித்தானிய அரசு?[ திங்கட்கிழமை, 13 யூலை 2015, 06:32.33 மு.ப GMT ] பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் விதத்தில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள திரவ உணவுகள் மீது உள்ள வரியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரித்தானியாவில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மக்கள் பின்பற்றுவதில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சர்க்கரையின் அளவு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமானோர் எடுத்துக்கொள்வதால் ஒபிசிட்டி(Obesity) எனப்படும் உடல் பருமன் நோயிற்கு ஆளாகின்றனர். தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாததால், பல நோய்களு…

    • 0 replies
    • 319 views
  12. https://www.facebook.com/slupfa/videos/10153351355951259/ மருத்துவமனையில் சுசில் அனுமதிக்கப்பட்டதும் வேட்புமனுக்களை கைப்பற்ற ஓடிச்சென்ற மகிந்த JUL 14, 2015 | 1:36by கார்வண்ணன்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் பலருடைய வேட்புமனுக்களை கட்சி நிராகரித்திருந்த …

    • 0 replies
    • 355 views
  13. குவைத் வங்கியில் வெளிநாட்டை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் நாடு கடத்தினர். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத், பக்ரைன் ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது. குறிப்பாக புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வாகன ராேந்தில் காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர், அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவரை கைது…

  14. கனடா- அல்பேர்ட்டாவிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் குடியிருப்பு மனைக்குரிய ஒரு துண்டு நிலம் 10 டொலர்களிற்கு வழங்கப்படுகின்றது.டெலியா என்ற இக்கிராமத்தில் தற்போதைய மக்கள் தொகை 186. சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த விற்பனை இடம்பெறுகின்றது.டெலியா சிறிதாக இருந்தாலும் இங்கு நூல்நிலையம், பனி சறுக்கு ,உணவகங்கள் மற்றும் கிரடிட் யூனியன் போன்றன உள்ளன.இந்த சிறிய இடத்தில் வசிப்பதால் பெரிய நன்மைகள் உள்ளன என மேயர் டான் பன்குறொவ்ட் தெரிவித்துள்ளார்.பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் சைக்கிள்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார். வாழக்கைத் தரமும் சிறந்த இடமாகும்.டெலியா மற்றய சில சிறிய கிராமங்கள் மற்றும் ரவுன்களை போன்று தனி…

    • 5 replies
    • 441 views
  15. கடந்த 14-05- 2015 அன்று கொழும்பு மகஸீன் சிறைச்சாலையில் முன்னால் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் சுந்தரம் சதீஸ் கிணற்றடியில் வழுக்கிவிழுந்ததால் மரணமடைந்ததாக சிறைச்சாலை அதிகரிகள் தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனல் அவர் நஞ்சு உட்டப்பட்டு மரணத்தை தழுவியதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. அவர் வழுக்கி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயங்களும் சிறைச்சலையில் வைத்து அவர் தாக்கப்படிருகலாம் என்ற சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. மேலும் இச்சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அவருடன் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது தொடர்பில் இருந்த அப்புத்துரை நியாயராசா எனப்படும் சதீஸ்சினுடைய உறவினரை விசாரணைக்கு வரும்படி இராணுவத்தினர் என தம்மை அடையாளபடுத்தி சிலர் மேற்படி நப…

    • 0 replies
    • 506 views
  16. இலங்கை பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் மரணம்! July 12, 201511:27 am ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொழில் புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணொருவர் தாக்கியத்தில் மற்றுமொரு வீட்டுப் பணிப்பெண் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஃஹூஜிரா என்ற பிரதேசத்தில் இந்த பெண்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என ஐக்கிய அரபு ராஜ்ஜிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/116159.html

    • 0 replies
    • 271 views
  17. மைத்திரி விலகவுள்ளார்? July 12, 20157:25 am ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கியதைத் தொடர்ந்து, தமது ஆதரவாளர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட ஜனாதிபதி மைத்திரியின் நிலை தற்போது இருதலைக்கொள்ளி எறும்பாக மாறியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவருக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சிகளும் ஆதரவாளர்களும் பிரிந்துசென்று, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுசேர்ந்துள்ளனர். மக்கள் ஆணையை மைத்திரி காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களும், தற்போது மைத்த…

    • 0 replies
    • 298 views
  18. எனது புகைப்படம் நன்றாக இல்லை, வேறு படம் மாற்றுங்கள்; தேடப்படும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கோரிக்கை சந்­தேக நபர் ஒரு­வரை கண்­டு ­பி­டிப்­ப­தற்கு பொது­மக்­களின் உத­வியைக் கோரி, பேஸ்புக் பக்­கத்தில் சந்­தேக நபரின் புகைப்­ப­டத்­துடன் பொலிஸார் தகவல் வெளியிட்டனர். "இப்­பு­கைப்­படம் நன்­றாக இல்லை, வேறு அழ­கான படம் போடுங்கள்" என சந்­தேக நபரே பதில் அளித்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. அவு­ஸ்­தி­ரே­லி­யாவின் விக்­டோ­ரியா மாநில பொலிஸார், டேனியல் டொமோன் எனும் சந்­தேக நபரை தேடி­வந்­தனர். அந்­நபர் மீது போதைப்­பொருள் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. டேனி­யலின் இருப்­பி­டத்தை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக பொது­மக்­…

  19. "பரோட்டா" வாங்கித்தராததால், நண்பனின்... கழுத்தை நெரித்துக் கொன்றேன். தச்சு தொழிலாளி பகீர் வாக்குமூலம். புதுச்சேரி: புதுச்சேரியில் பரோட்டா வாங்கிக் கொடுக்காததால் பெயிண்டர் ஒருவரை அவரது நண்பர் கொலை செய்துள்ளார். புதுச்சேரியில் உள்ள சித்தன்குடியைச் சேர்ந்த சுந்தரராஜன் மகன் மணிகண்டன்(22). பெயிண்டர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சாரம் ஞானப்பிரகாசம் நகரில் இருக்கும் கழிவுநீர் வாய்க்காலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மணிகண்டன் மர்ம மரணம் அடைந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனையில் ம…

  20. பாடையில் போன தாத்தாவுடன் செல்பி எடுத்த வாலிபர்! சவுதியில் இறந்தவரின் உடலுடன் செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர் குறித்து பரபரப்பாக பேசி வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் இறந்தவர் உடல் தாங்கிய பாடையுடன் செல்பி எடுத்து பயமுறுத்தியுள்ளார். செல்பி என்பது ஒரு வகையான மன வியாதி என்று கூறி விட்டது ஆய்வு. ஆனாலும் செல்பி எடுக்க விரும்பாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஆளாளுக்கு எடுத்துத் தள்ளுகிறார்கள். செல்பி, குருப்பி என்று இது பல பரிணாம வளர்ச்சியையும் பார்த்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஒருவர் இறந்து போன தனது தாத்தாவின் உடலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போயுள்ளார். இவர் யார் எந்த ஊர்…

    • 2 replies
    • 642 views
  21. நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனித இனம் பல்வேறு துறைகளில் புதுப்புது வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. ஏன் இன்னும் பல அபரிமிதமான வளர்ச்சியையும் சமூகம் காணப்போகிறது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்ற…

  22. பணக்காரர் என்பதை நிரூபிக்க பணத்துடன் விளையாடும் நபர்கள் சீனாவில் உள்ள 70 பணக்காரர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவர்கள் தான் பெரிய பணக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காக பணத்தை எரித்து மற்றும் நாசம் செய்து அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு பெரும் தொகையான பணத்தினை நாசமாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன அரசாங்கம் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இளைஞர் யுவதிகளை சமூக சேவையில் ஈடுபடுத்துவதற்கு சீன அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/10/பணக்காரர்-என்பதை-நிரூபிக்க-பணத்துடன்-விளையாடும்-நபர…

  23. லக்னோ: ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி. மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்…

  24. ஓடும் காரில் பெண் பயணியை பார்த்தபடியே சுய இன்பம் செய்த கால் டாக்சி டிரைவர்! டெல்லி: தனியார் கார் நிறுவன டிரைவர் வண்டி ஓட்டும்போதே, ஒருமாதிரியாக சிரித்தபடி, சுய இன்பம் அனுபவித்தார் என்று காரில் பயணித்த இளம் பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் சகீத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் சம்பவத்தன்று, பரிதாபாத்துக்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். 'டாக்சி பார் சுயர்' நிறுவனத்தில் இருந்து டாக்சி வந்துள்ளது. இந்நிலையில், பயணத்தின்போது பயங்கர அனுபவத்தை சந்தித்துள்ளார் அப்பெண். இதுகுறித்து இளம் பெண் கூறியதாவது: காரை தேவேந்திரகுமார் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். நான் சென்று சேர வேண்டிய பகுதிக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக இருந்து அவரது நடவடிக்க…

  25. நீங்கள் சாப்பிடுவது சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் அரிசியா? - செக் செய்வது எப்படி? மேகியை விடுங்க பாஸ். நாம் 3 வேளையும் உட்கொள்கிற உணவான அரிசியிலும் கைவைத்துவிட்டார்கள். அதுவும் எப்படி...? சீனாவில் ‘பிளாஸ்டிக் அரிசி’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய வழக்கறிஞர் சுக்ரிவா துபே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகள், வர்த்தகர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரிசியை விற்பனை செய்கிறார்களா என்று ரெய்டு நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.