Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கலவான பகுதியில் கணவனின் பையில் பெண் ஒருவரின் உள்ளாடை இருப்பதை கண்ட மனைவி கணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவன் கடைக்குச் சென்று மனைவிக்கு பாதனி ஒன்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்லும் வழியில் பொருட்கள் இருந்த பை பாரம் தாங்காமல் அறுந்துள்ளது. இந்நிலையில் குறித்த நபருக்கு வீதியால் சென்ற பெண் ஒருவர் உதவி செய்துள்ளதோடு, தனது பையையும் தவறுதலாக அவரிடம் விட்டுச் சென்றுள்ளார். இதை அவதானிக்காது குறித்த பையை வீட்டுக்கு கணவன் எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்துள்ளார். பையை திறந்து பார்த்த மனைவி, பையினுள் பெண்ணின் உள்ளாடை இருப்பதை அவதானித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த மனை…

  2. இனி உங்களால் உடைக்க முடியாது! சமூக வலைதளங்கள் வாயிலாக, உலகமே திரண்டு ஒரு நிறுவனத்துக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளது. அது எந்த நிறுவனம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? கோக்ககோலா? மான்சாண்டோ? கேஎஃப்சி?... கண்டிப்பாக நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள். சீல்டு ஏர் (Sealed Air) என்கிற பபில் விராப் ( Bubble Wrap) பேகேஜிங் கவர் தயாரிக்கும் நிறுவனம்தான் அது. பேகேஜ் செய்து அனுப்பப்படும் பெரிய இயந்திரங்கள் முதல் கையடக்க செல்போன் வரை பாதுகாப்பாக செல்ல பயன்படுத்தப்படும் இந்த Bubble Wrap-ஐ அனைவருமே பார்த்திருப்போம். காற்று நிரப்பப்பட்ட சிறு பிளாஸ்டிக் குமிழ் போன்ற அமைப்பைக் கொண்ட அந்த கவரை பார்த்ததுமே உங்களை அறியாமலே அந்த பபில்ஸை உடைத்து பொழுது போக்கியிருக்கிறீர்கள் என்றால்…

  3. தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்தி பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வியப்பூட்டும் ஒரு சோதனையை நேர்முகத்தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள காங்டான் மகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் முதலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுகாதார பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தனது நிறுவனத்தில் 9 விற்பனை பிரநிதியை பணியில் அமர்த்த திட்டமிட்ட அந்நிறுவனம், அதற்கான நேர்முகதேர்வு ஒன்றையும் நடத்தியது. இ…

    • 1 reply
    • 231 views
  4. கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய பிள்ளையார்! முல்லைத்தீவில் பரபரப்பு தகவல்!! [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 06:38.18 AM GMT ] முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமி தனது விளையாட்டுக் காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அந்தக் காருடன் கிணற்றினுள் வீழ்ந்து விட்டது. குறித்த கிணறு 12 அடி நீரைக் கொண்ட ஆழமான கிணறாகும். இருந்தும் சிறுமி அக் கிணற்றின் உள்ளே ஏதோ ஒரு ஆதாரத்தைப் பிடித்தபடி தனது அத்தையை அழைத்துள்ளாள். சிறுமியின் குரல் கேட்ட அத்தை கிணற்றினுள் பார்த்து விட்டு அலறி அடித்தபடி கிணற்றினுள் வாளியை வி…

    • 0 replies
    • 335 views
  5. மகிந்தவை அச்சுறுத்தும் விடுதலைப் புலிகளின் ஆவி? [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 09:00.41 AM GMT ] மகிந்த ராஜபக்சவை ஆவிகளிடமிருந்து பாதுகாக்க அரசு மாதாந்தம் மூன்று கோடிக்கு மேல் செலவு செய்கின்றது. தனக்கு கொலை அச்சுறுத்தல், பயமுறுத்தல் என்பன விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி, இதில் இருந்து தன் உயிரை காப்பாற்றி கொள்ள அரசு தனக்கு மேலதிக பாதுகாப்பை கோரி இருந்ததையும், இதற்கு அரசு இவரின் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விபரங்களை கடந்த மாதம் பிரதமர் ரணில் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்ததையும் கண்டு நாட்டின் பொதுமகன் என்ற முறையில் அதிர்ச்சியடைந்தேன். காரணம் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஓர் முன்னாள் ஜனாதிபதி. அவருக்கு முன்னாள…

    • 0 replies
    • 370 views
  6. க்ளைமாக்சில் வில்லன் துப்பாக்கியால் சுடும்போது கழுத்தில் போட்டிருக்கும் டாலரோ, பாக்கெட்டில் வைத்திருக்கும் பொருளோ ஹீரோவின் உயிரைக் காப்பாற்றுவதை பல தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனா இப்போ ஹீரோக்கள் எல்லாம் காஸ்ட்லியான ஐபோன் தானே பாக்கெட்ல வச்சிருக்காங்க, அதனால் எத்தனை ஐபோன் பாக்கெட்டில் இருந்தால் துப்பாக்கி தோட்டவிலிருந்து தப்பிக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த வீடியோ…. https://www.youtube.com/watch?v=DbVHe5A6rJs . - See more at: http://www.canadamirror.com/canada/45568.html#sthash.wA0fuakK.dpuf

    • 0 replies
    • 364 views
  7. பிரபாகரன் – பொட்டு அம்மான் இருவரையும் தேட ஆரம்பித்த இன்டர்போல். July 02, 20159:57 am அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதையெல்லாம் விட முக்கியம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ. சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில சந்தோஷ தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை…

    • 1 reply
    • 668 views
  8. இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது. ஆனால் தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் தலை கீழாக தொங்க விட்டு அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை http://www.jvpnews.com/srilanka/114453.html

    • 11 replies
    • 1.2k views
  9. • இப்பொது புரிகிறதா? தேர்தலில் போட்டியிட ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள் என்று! இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ, salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத…

  10. சீனாவில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர, உணவு பறிமாறும் ஊழியர்கள் கவர்ச்சி உடையில் பணி செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் நகரில் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் வாடிக்கையாளர்களைக் கவர, நீச்சல் உடை அணிந்த அழகிகள் உணவு பறிமாற நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள், உணவுடன் இந்த கவர்ச்சி விருந்தையும் விரும்பியதாகவும் இதனால் ஹோட்டலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கவர்ச்சியான கட்டழகு கொண்ட ஆண்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/06/27/கவர்ச்சி-விருந்து

    • 0 replies
    • 325 views
  11. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார். ஆனால் ஒரு வயதுக்கூட ஆகாத கைக்குழந்தையுடன் இளம்பெண் காட்டுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். கொலம்பியாவில் உள்ள சோகோவின் குயிப்டோ என்ற இடத்திலிருந்து நுகுய் என்ற இடத்திற்கு பசிபிக் கடல் வழியாக ஒரு குட்டி விமானம் சென்றது. இந்த விமானம் அல்டோ பவுடோ என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை கர்லோஸ் மரியோ செபல்லோஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார். இதில் மரியா நெல்லி முரில்லோ (வயது 18) என்ற இளம்பெண் தன் கைக்குழந்தையுடன் சென்றார். இரண்டு என்ஜின் கொண்ட இந்த விமானம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இத்தகவல் கிடைத்…

    • 0 replies
    • 302 views
  12. நம் சீரியல் நடிகைக்கு நிஜ வாழ்கையில் இது தான் நடக்கும். வீட்டில் கணவனின் கொடுமை பாருங்கள். June 26, 201510:37 am நம் சீரியல் நடிகைக்கு நிஜ வாழ்கையில் இது தான் நடக்கும். வீட்டில் கணவனின் கொடுமை பாருங்கள். http://www.jvpnews.com/srilanka/113904.html

    • 0 replies
    • 651 views
  13. இந்தியாவில் கடல் நடுவில் இப்படி ஒரு ஆச்சர்ய விமான நிலையம் உள்ளது …எத்தனை பேருக்கு தெரியும் June 26, 20158:27 pm விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங்களுக்கு முன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்கள் மெர்ஸ்லாயிடுவாங்க. ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும். அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. அரேபிக் கடலில் இருக்கும் 36 தீவுகளைக் கொண்ட லட்சத்வீப், இந்திய மத்திய அரசால் இயங்கும் சுற்றுலாத் தலம். கப்பல்களில் மட்டுமே செல்ல முடிந்த அகட்டி தீவில், 1987-ல் விமான நிலையம் கட்டத் தொடங்கி, 1988-ல் முட…

    • 0 replies
    • 321 views
  14. இலங்கைஅரசின் உள்ளக கசிவுகள் மரண தண்டனை பெற்றுச் செல்லும் ஆழ ஊடுருவும் படையணித்தலைவருக்கு இரட்டிப்புச் சம்பளமும் ராஜ போக வாழ்க்கையுமாம்.இவர் ஒரு தேசிய வீரர் கூட, இவர்களைப்போல இன்னும் பலர் சிறை செல்லவிருக்கின்றனர்.இப்படி இவர்கள் சிறை செல்வதால் வெளி நாட்டு போர்க்குற்ற இலங்கை மீதான அழுத்தங்கள் இல்லாமல் போகுமாம். கோத்தபாயா பின்வருமாறு புலம்பல்: 2009ல் ஆனந்தபுரத்தில் நடந்த சமரில் பல ராணுவத்தினரும் இந்திய ராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டார்கள்.அதன் பின் பெரியளவில் நேரடிச்சமர் எதுவும் நடக்கவில்லை.ஆகவே விடுதலைபுலிகள் பெருமளவில் தப்பிவிட்டார்கள்.இதனால் தான் ராணுவத்தினரை நாட்டைச் சுற்றி நிறுத்திவைத்துள்ளேன்வடக்கிலிருந்து ராணுவத்தினரை எடுத்தால் புலிகள் மீண்டும் வந்து …

    • 0 replies
    • 207 views
  15. 30 வருடங்களின் பின்னர் தாயைக் கண்டுபிடித்த இலங்கைப் பெண்: மனதை நெகிழவைக்கும் சம்பவம்! [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 11:52.51 AM GMT ] இலங்கையில் பிறந்து நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பெண்ணொருவர் அவரது தாயை தேடிக் கண்டுபிடித்த சம்பவமொன்று சந்தலங்காவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது 30 வயதாகும் அப்பெண் நெதர்லாந்து நாட்டில் பொறியியலாளராக இருப்பவரென தெரிவிக்கப்படுகின்றது. இவர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் எனவும் அவரும் அவரது சகோதரியும் 1985-03-04 அன்று சந்தலங்கா வைத்தியசாலையில் பிறந்ததாகவும் தெரியவருகின்றது. நிமலாவதி என்ற அவரது தாயாரால் இரண்டு குழந்தைகளையும் சுமார் 2 1/2 மாதங்கள் வரையே வளர்க்க முடிந்துள்ளது. பொருளாதார சிக்கலால் தவித்த அவர் …

    • 0 replies
    • 279 views
  16. கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர் [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:36.34 AM GMT ] அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று அதிகாலை விமானம் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ 380 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறக்கப்பட்ட விமானத்தில் 510 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfxzB.html

    • 0 replies
    • 272 views
  17. பளையில் பல்கலைக் கழக மாணவிக்கு நடந்தது என்ன..? June 25, 20159:46 am கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். பானுசா சிவப்பிரகாசு எனும் இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் அறிந்து பானுசாவின் தந்தை அந்த இளைஞனின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்ற போது அந்த இளைஞனின் தந்தை தன்னை மிரட்டியனுப்பியதாக பானுசாவின் தந்தை தெரிவித்துள்ளார். http://www.jvpnews.com/srilanka/113796.html

    • 0 replies
    • 248 views
  18. வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 12:28.19 பி.ப GMT ] மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.சர்வதேச அளவில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு ரத்தத்தை பரிமாற்றம் செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆண்டுக்கு 12 மில்லியன் நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தின் இருப்பு என்பது 8 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே தேவையானதாக இருந்து வருகிறது. இந்த பற்றாக்குறையை ப…

    • 0 replies
    • 179 views
  19. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் வேல்ஸ் இளவரசியான டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி ஆவார். இவருக்கு வில்லியம்ஸ் மற்றும் ஹென்றி எனும் ஹேரி என இரு மகன்கள். இளவரசர் சார்லசை திருமணம் செய்ததில் இருந்து தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார் இளவரசி டயானா. பிரிட்டிஷ் இராஜ குடும்பத்தில் இணைந்ததில் இருந்தே உலகின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தார் டயானா. திருமணமானது முதல் இவர் இறந்து பல வருடங்கள் வரை ஊடகங்களுக்கு நல்ல இரையாக (செய்தியாக) இருந்தார் இளவரசி டயானா. இவரது மரணம் விபத்தா அல்ல கொலையா என்பது நீண்ட வருடங்களாக பெரும் குழப்பமாக இருந்து வந்தது. தன்னை விட வயது அதிகமான பெண்…

    • 0 replies
    • 222 views
  20. லுக்கோமியா என்னும் ரத்த புற்று நோயால் நோயால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள பிர்கிக்காம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஒமர் அல் ஷேக்( வயது 16) மருத்துவமனை படுக்கைதான் அவரது வாழ்விடம்.இவரின் வாழ் நாள் எண்ணபடுவதாகவும் அவர் சில நாட்களில் இறந்து விடுவார் எனவும் டாக்டர்கள் எச்சரித்து இருந்தனர். தனது வாழ் நாளை எண்ணிக் கொண்டிருந்த அந்த இளைஞர் தான் சிறு வயது முதலே காதலித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளியிட்டு உள்ளார். ஒமர் அல் ஷேக் என்ற இளைஞர் தனது கடைசி ஆசையை தனது காதலி அமி கிராஸ்வெல்லிடம் தெரிவித்து உள்ளார். தனது காதலரின் விருப்பத்தை நிறைவேற்ற காதலி அமியும் முடிவு செய்தார். தனது காதலனுக்கு ஒரு சில நாட்களே மனைவியாக வாழ முடியு…

    • 0 replies
    • 201 views
  21. ஒவ்வொரு நாளும் புதுவாழ்க்கை வாழும் விசித்திர பெண் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டினா கார்ப்(Christina Corp) என்ற பெண்மணிக்கு, தனது வாழ்வில் முதல் நாள் நடந்த சம்பவங்களை அடுத்த நாளில் நினைவுகூற முடியாது. ஏனெனில், இவருக்கு 17 வயது இருக்கும்போது ஏற்பட்ட கார் விபத்தில் இவரது மூளை சேதமடைந்தது, அதன் பின்னர் சுயநினைவிழந்து இருந்தார். அதன் பின்னர் குணமடைந்த அவரால், வாழ்வில் முதல் நாள் நடந்த சம்பவங்களை அடுத்த நாள் நினைவுகூற இயலாது. ஒவ்வொரு நாளும் புதுநாட்களாகவே அவருக்கு இருந்துள்ளது. மகளின் வாழ்க்கையை நினைத்து கவலையில் இருந்த கிறிஸ்டினாவின் பெற்றோருக்கு, இன்பமூட்டும் சம்பவமாக, ஜோ சிவேனி(Joe Sweeney - Age 29) என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்டினாவை சந்தித்துள்ளார். நாளடை…

  22. பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த குண்டு மனிதர் மரணம்![Wednesday 2015-06-24 20:00] பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த இளைஞர், கார்ல் தாம்சன் உயிரிழந்தார். பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் கென்ட் நகரம் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர் கார்ல் தாம்சன். 33 வயதான அவரின் எடை 412 கிலோ. அளவுக்கு அதிக மான உடல் எடையால் அவரால் நடக்க முடியாது. அவரது உதவிக்கு எப்போதும் இரண்டு பேர் உடன் இருந்தனர். பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்ட மனிதராக அவர் கருதப்பட்டார். தனது 17 வயதில் கென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் கார்ல் தாம்சன் பணியாற்றி வந்தார். அப்போது ஹோட்டலில் விற்காத பொருட்கள் அனைத்தையும் சாப்பிட்டு விடுவாராம். அப்போது முதலே அவரது உடல் எடை தாறுமாறாக அதிகரித்தது. அதன்பி…

  23. கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்! [ திங்கட்கிழமை, 22 யூன் 2015, 12:24.05 AM GMT ] 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....? 2009 வெள்ளைக் கொடி விவகாரம் ஆறு ஆண்டுகளைக் கடந்தாலும் சில விடயங்கள் மர்மமாக உள்ளது, உலகறிந்த உண்மை. அவற்றின் சில முக்கியமான சாட்சியங்களை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் வெளிப்படுத்துகிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரூட் ரவி. https://www.youtube.com/watch?v=…

    • 3 replies
    • 332 views
  24. நான் நாசா விண்கலம் லேண்டிங் ஓடுபாதை அருகில் இந்த படத்தை பார்த்தேன் . டிசைன் ஒரு patern தெரிகிறது. எந்த ஒரு இந்த புகைப்படத்தை எந்த விளக்கமும் உள்ளதா? உங்களுக்கு Google Earth சென்று தட்டச்சு செய்தால் இது இந்த இடத்தில் நீங்கள் பார்க்க முடியும் ஒருங்கிணைக்க கூறுகள் உள்ளன 37 25 ' 19.1 "E 122 05 ' 06 " டபிள்யு

    • 0 replies
    • 367 views
  25. அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பு, 6 ஆண்டுகள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயால் சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரை ஐஎஸ்ஐ அமெரிக்காவிடம் ஒப்படைத்தது என தகவல் வெளியாகியுள்ளது. ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் அபோதா பாத் நகரில் அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த சீல் பிரிவினர் கடந்த 2011 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். ஆனால், பின்லேடன் அமெரிக்க படையினரின் அதிரடி நடவடிக்கையால் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிட்ட நாடகம் என, புலிட்சர் விருது வென்றவரும் அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு செய்தியாளருமான செய்மோர் ஹெர்ஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐஎஸ்ஐ தான் அமெரிக்காவிடம் பின்லேடனை ஒப்படைத்தது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. பின்லேடன் குறித்து க…

    • 0 replies
    • 216 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.