செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும் போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக …
-
- 0 replies
- 520 views
-
-
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் சில பக்கங்களை ஈழத் தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். இந்திய விடுதலைக்காக ஒரு தேசிய இராணுவத்தை அமைத்து, அதனை வழிநடாத்திய சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது வரலாறு தேசியத் தலைவர் அவர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தித் தம்மை அர்ப்பணித்த உயர்வான இந்தியர்களது வரலாறுகள் சில எமக்கும் படிப்பினையாக உள்ளன. அந்த வகையில், நாம் படிக்க வேண்டிய வரலாற்று மனிதராக உதம் சிங் அவர்களைக் கற்றுக்கொள்ளலாம். அவரது கோபமும், அதன்மீதான நியாயமும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பாதையும், பழிவாங்கலும், அவரது மரணமும் அவரைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்துகின்றது. …
-
- 0 replies
- 376 views
-
-
வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட்டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார். எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்க…
-
- 1 reply
- 700 views
-
-
-
- 0 replies
- 555 views
-
-
மீண்டும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படும் கிளாலி மக்கள்! – இளந்தி கிளாலிக் கடற் பகுதியில் முன்பு தொழில் செய்த மக்கள் இப்போது அதே தொழிலைச் செய்வதற்கு அனுமதிக்கப் படவில்லை. தமது வீடு வாசல்களை இழந்த இந்தக் குடும்பங்கள் கடந்த சில வருடமாக இடம் பெயர்ந்து வாழ்ந்தனர். மிக அண்மையில் அவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டாலும் ஒரு வகை நிவாரண உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏறத்தாழ 150 குடும்பங்கள் கிளாலிக்கு வந்துள்ளன. தமது கையிருப்புக்களை மூலதனமாக்கி அவர்கள் நிலத்தைத் துப்பரவு செய்து குடிசைகளை அமைத்துள்ளனர். அரச உயரதிகாரிகளும் படையினரும் இவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி நடக்கத் தவறியுள்ளதால் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். கிளாலிக் கடலில…
-
- 0 replies
- 436 views
-
-
முல்லைத்தீவு அரச அதிபராகப் பதவி வகித்த திருமதி இமெல்டா சுகுமார் 2010 யூலை 13ம் நாள் யாழ் அரச அதிபராகப் பதவியேற்றார் அவருக்கு முன்பு யாழ் அதிபராக க.கணேஷ் பதவி வகித்தார் அவர் வவுனியா அரச அதிபராக இருந்த பின் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாக வந்தார். 2010ம் ஆண்டு கே.கணேஷ் 69 வயதினராக இருந்தார். கொழும்பு அரசுக்குச் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதால் இளைப்பாறும் வயதிற்க்குப் பிறகும் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. மீண்டுமொரு நீடிப்பு வழங்கப்படலாம் என்று இருக்கையில் இமெல்டா சுகுமாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டிய தேவை எழுந்தது. இதன் காரணமாக கணேஷ் இளைப்பாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவும் யாழ் அதிபராக இமெல்டா சுகு…
-
- 0 replies
- 438 views
-
-
இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தினுடாக தீர்வு காணமுடியும் என பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கூறும் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதனை எனது அனுபவத்தினுடாகக் கூறுகின்றேன். 15 வருடத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து அரசியல் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து, ஐனநாயக அரசியலுக்குள் நுழைந்தேன். 1950 ஆண்டு முதல் அரசியல் பேச்சின் ஊடாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதால் 30 வருடத்தின் பின்னர் ஆயதமேந்திப் போராட ஆரம்பித்தோம் அதிலும் எட்டாத நிலையில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். -இதனைத் தெரிவித்திருப்பது டக்ளஸ் தேவ…
-
- 0 replies
- 529 views
-
-
உலகின் யதார்த்தங்கள் எப்போதும் ஒன்றாக நிலைத்திருந்ததில்லை. உலக ஒழுங்குகளும், யதார்த்தங்களும் எப்பொதுமே மாறியபடியே உள்ளன. கிழக்கு - மேற்காக ஜெர்மன் நாட்டைப் பிரித்து வைத்திருந்த சுவர் தகர்க்கப்பட்டதும், இரும்புக் கோட்டையாக இருந்த சோவியத் யூனியன் உதிர்ந்து போனதும், சாத்தியமே இல்லாத ஒரு மக்கள் புரட்சி துனீசியாவின் அரசியலைப் புரட்டிப் போட்டதும், அதன் நீட்சியாக லிபியாவின் இரும்பு மனிதன் கடாபி இல்லாமல் போனதும் உலகில் மாறிவரும் யதார்த்தங்களை எமக்குப் புரிய வைக்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், இந்தியாவைத் தாண்டி எந்த மாற்றமும் ஈழத்தில் சாத்தியம் இல்லை என்று கயிறு திரிப்பவர்கள் இந்தியாவிடமிருந்தே அந்த யாதார்த்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம். …
-
- 0 replies
- 403 views
-
-
இன்று தளபதி பிரிகேடியர் சொர்ணத்தின் அணியில் இருந்த ஒரு போராளியுடன் உரையாடினேன். சொர்ணம் அவர்கள் "தலைவர்தான் போராட்டம். தலைவர்தான் எல்லாம். தலைவரை நாம் எப்படியாவது காப்பாற்ற வேண்டும" என்று தமக்கு தொடர்ந்து கட்டளை இட்டபடியே இருந்ததாக குறிப்பிட்டார் அந்த போராளி. குறைந்த வளங்களுடன் ஓய்வின்றி பல ஊடறுப்பு சமர்களை தொடர்ந்து நடத்தியபபடி எதிரியை நிலைகுலைப்பதிலேயே குறியாக இருந்தாராம். எல்லா சமர்களிலும் சிற...ிதும் பெரிதுமாக நிறைய விழுப்புண்கள் அவருக்கு ஏற்பட்டதாகவும் அதையும் கவனியாமல் தமக்கு மே மாத நடுப்பகுதிவரை கட்டளை வழங்கியபடியே இருந்தாராம். இறுதியாக முழுவதுமாக உடல் செயல் இழந்த நிலையில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்திருக்கிறார். அந்த போராளி சொன்ன கதைகள் பல தற்போது இங்கு பதிவிட முட…
-
- 0 replies
- 844 views
-
-
காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது. ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி கொள்ளவும் புதிய வழி கிடைத்திருக்கிறது.அது தான் ஒரே பாஸ்வேர்டு.அதாவது காதலர்கள் பரஸ்பரம் பாஸ்வேர்டை பகிர்ந்து க…
-
- 0 replies
- 644 views
-
-
எதிர்வரும் பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச்சு 23 வரையான நாட்களில் ஜநா மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகள் ஜெனிவாவில் நடக்கவிருக்கின்றன. அதன் தலைவி நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார். இது இலங்கை – இந்திய தரப்பினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நவநீதம்பிள்ளையை வளைத்துப் போடலாம் என்ற இலங்கை அரசின் நப்பாசை கை கூடவில்லை. இலங்கை அரச படைகளின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் திருவாட்டி நவநீதம்பிள்ளை உறுதியாக இருக்கிறார். மனித உரிமை கவுன்சிலில் மேற்கு நாடுகள் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தடுப்பதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு இந்திய மத்திய அரசு கங்க…
-
- 1 reply
- 492 views
-
-
கடந்த வருடம் இரண்டு மாவீரர் தினம் நடந்தது எல்லாருக்கும் நினைவு தானே அந்த மாவீரர் கனவுகளைச் சுமந்ததாக சொன்ன எத்தனை பேர் , மாவீரர் விழா நடாத்துவதற்கு அப்பால் , ஏதாவது செயல்பாட்டில் உங்கள் நாட்டில் , சென்றிருக்கின்றார்கள். செல்கின்றார்கள் என்பதை மக்களே உங்கள் வீட்டுச் சுவரில் எழுதி வையுங்கள். கண்டிப்பாக இது தேவைப்படவேண்டிய விடயம் . (உங்கள் மறதிக் குணத்தை அறிந்து அரசியல் வாதிகள் செயல்படுவதை தடுக்க இது தான் ஒரே வழி ..ஹி ஹி ) இப்பொழுது சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை என்ற விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமான விடயமாக உள்ளது . இதனை நாம் செய்தால் தான் இனப்படுகொலை நிரூபிக்கப் படும் . தமிழீழம் மலரும் . நாம் ஒவ்வொருவரும் முதலில் நாம் வ…
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான வகையில்,அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட்ஓ பிளக் மற்றும் சிவிலியன் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பானதுணைச் செயலாளர் மாரியா ஒடேரோ ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுபேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. மிகவும் ஆக்கபூர்வமான வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் விரிவானபேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள்உள்ளிட்ட …
-
- 0 replies
- 386 views
-
-
காண்டீபன் என்றழைக்கப்படும் முல்லைத்தீவு குமுழமுனையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா, இவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்பித்துக்கொண்டிருந்தவர். போராளியான இவர், 1983ம் ஆண்டு காலப் பகுதியில் வன்னிப்பிராந்தியத்தில் இருந்து புதிய போராளிகளை இணைத்து இந்தியாவில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பும் பணியைச் செய்துகொண்டிருந்தார். அவருடன் புதிய போராளிகளை இணைப்பதில் அப்போது முன்னின்று செயற்பட்டவர் தான் பாலராஜ் அண்ணன் அவர்கள். கொக்குத்தொடுவாயில் பிறந்து வாழ்ந்தபடியால் திருமலை, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒவ்வொரு பகுதிகளையும் பால்ராஜ் அண்ணை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அத்துடன், சிங்கள ம…
-
- 0 replies
- 845 views
-
-
கொழும்பு சிங்கள பத்திரிகையில் வந்த செய்தி ... .... சிங்கள மகிந்த ராஜபகச, இதுவரை காலமும் சிங்களத்தின் ஏவலில் இனவழிப்புக்கு துணை போன அத்தியடிக்குத்தி டக்லஸை கழட்டி விட்டு, வித்தியாதரன்(உதயன் முன்னால் ஆசிரியர்) வடமாகாண முதல்வராக்க முனைவதாக ...!!!!!!!!?????????
-
- 8 replies
- 1.7k views
-
-
தென்னாப்பிரிக்காவின் புதிய நாணயதாளில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது. மண்டேலா ஆப்பிரிக்கா மக்களுக்காக சிறையிலிருந்து வெளிவந்தது மற்றும் 22வது மனித இன ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கூறுகையில் தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைக்காக போராடிய மண்டேலா சிறையிலிருந்து வந்து 27 ஆண்டுகளுக்கு பின் புதிய ஜனநாயக மலரவும், ஜனநாயக முறையில் நாட்டின் முதல் அதிபராக மண்டேலா இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
-
- 0 replies
- 934 views
-
-
சீனச் சிறுவனின் பூனைக்கண்ணால் இரவை ஊடுருவி பார்க்கலாம் சீனாவில் பிறந்த சிறுவன் ஒருவன் நீல நிறமான புனைக்கண்ணுடன் பிறந்துள்ளான். நொங் யூசி என்ற சிறுவன் இரவு நேரத்தை ஊடறுத்து பகல் போல காட்சிகளை காணும் வல்லமை உள்ளவன் என்று சீனர்கள் இணையம் மூலம் தகவல் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வு கடந்த சில வருடங்களாக சூடு பிடித்துள்ளது. தவிட்டு நிற விழிகள் உள்ள சீனர்களிடையே அந்தச் சிறுவன் அதிசயமான ஒருவனாகக் காணப்பட்டான். மனிதனாக பிறந்த ஒருவனால் இரவிற்குள் கிடக்கும் பொருட்களை பகல் போல பார்க்க முடியுமா என்பது உலக சமுதாயத்தை வெகுவாக சிந்திக்க வைத்தது. இது குறித்து கருத்து வெளிட்டுள்ள டென்மார்க் தெற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கண்களுக்கான சுகயீனப்பிரிவு பேராசிரியர் இதை மறுத்துள்ளார்…
-
- 0 replies
- 421 views
-
-
உலகின் மகிழ்ச்சி மிகுந்த மக்களில் இந்தியர்கள் முன்னிலை! - பானுமதி அருணாசலம் உலகில் மகிழ்ச்சியாக வாழும் மக்களில், இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக கூறுகிறது, ஒரு புதிய ஆய்வு! சந்தோஷமாக வாழும் மக்கள் யார்? என்ற ரீதியில் உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் சர்வே ஒன்றை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது, உலக ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ். கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து, உலகின் 24 நாடுகளைச் சேர்ந்த 18,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்தக் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சர்வே முடிவின்படி, 10-ல் 8 பேர் தாங்கள் 'மகிழ்ச்சியாக' இருக்கிறோம் என்று பதில் கூறியுள்ளனர். உலக மக்களில் 20% பேர் 'மிக்க மகிழ்ச்சியாக' இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். …
-
- 17 replies
- 1.1k views
-
-
தென்ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலோவின் உருவப்படம், அந்நாட்டு கரன்சிகளில் அச்சிடப்பட்டு வெளிவரவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது அவருக்கு கொடுக்கும் உயரிய கௌரவம் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இனவெறிக்கு எதிராக போராடிய ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் தென்ஆபிரிக்க அதிபருமான நெல்சன் மண்டேலோ 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கடந்த 1990-ம் ஆண்டு விடுதலையானார். பின்னர் தென்ஆப்ரிக்க அதிபராகவும் பதவியேற்றார். இந்நிலையில் மண்டலோ தனது இனவெறிக்கு எதிராக போராடியதன் 22-ம் ஆண்டு தினத்தையொட்டி அவரது இனவெறிக்கு எதிராக கொள்கையை கௌரவிக்கும் வகையில், அந்நாட்டு ரிசர்வ் வங்கி , மண்டேலா உருவம் பொறித்த கரன்சிகளை அச்சிட்ட…
-
- 2 replies
- 558 views
-
-
ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிப் பிராந்தியத்தை வழங்கவேண்டும். இதற்காகப் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான வைகோ. ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய நாடாளுமன்ற நீதிமன்றம் ஆகியவற்றின் கீழாக இந்த சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை உடன் வாபஸ் பெறவேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க அந்தப் பிரேரணையில் வலி யுறுத்தப்பட வேண்டுமெனவும் வைகோ தெரிவித்துள்ளார். பி…
-
- 2 replies
- 477 views
-
-
இலங்கை அரசின் சுற்றுலா உதயம் என்ற வேலைத் திட்டம் 2011ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை சுற்றுலாத் துறையில் ஈடுபடச் செய்யும் இலக்கை இந்த வேலைத் திட்டம் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகள் எதிர்பார்க்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டைத் தயார்ப்படுத்தும் இலக்கும் இதிலடங்கும். உள்ளுர் வாசிகளின் சுற்றுப் பயணங்கள் வடக்கு கிழக்கை நோக்கி இடம்பெறுகின்றன. போர் ஓய்ந்த பிறகு சிங்கள மக்கள் அலை அலையாக வடக்கு கிழக்கு நகரங்களுக்கு படையெடுக்கின்றனர். மாதமொன்றுக்கு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் குடும்பம் குடும்பமாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், யாழ்பாணம் போன்ற நகரங்களுக்குச் செல்கின்றனர். …
-
- 0 replies
- 392 views
-
-
1948இல் இலங்கை சுதந்திரமடைந்த போது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது. 30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக எஸ்.நடேசன், டொக்டர் நாகநாதன், பெரி.சுந்தரம் அவர்களும், நியமிக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக சி.குமாரசுவாமி, சேர் சிற்றம்பலம் கார்டினர் மற்றும் முதலியார் ஏ.பி.இராஜேந்திராவும், அத்தோடு தெரிவு செய்ப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களாக சேர்.ரசீக் பரீட்டும், சேர் முஹம்மட் மாக்கான் மாக்கரும் சுதந்திர இலங்கையின் முதலாவது செனட் சபையில் பங்குபற…
-
- 0 replies
- 374 views
-
-
நேற்று மாலை பசுமைக் கட்சியை சார்ந்த திருமதி Ute Koczy, MdB (Bündnis 90 / DIE GRÜNEN) மற்றும் சமூகஜனநாயக கட்சி சார்பாக Christoph Strässer, MdB (SPD) அவர்களுடன் மற்றும் ஏனைய பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியாளர்கள் ஈழத்தமிழர் மக்கள் அவையின் உறுப்பினர் உட்பட கலந்து கொண்ட சந்திப்பில் "இலங்கையில் அமைதி , சட்டம் மற்றும் மனிதஉரிமைகளின் பங்கு என்ன " எனும் தலைப்பில் கருத்தரங்கம் இடம்பெற்றது . Christoph Strässer தனது உரையில் இலங்கையில் மிக கொடூரமான போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக அறிகின்றோம் அத்தோடு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் விடையமாக எவ்வித திருப்திகரமான நடவெடிக்கைகளும் எடுக்காத வகையில் இவ்விடையம் குறித்து சர்வதேச சுஜாதீனமான விசாரணை மிக அவசியம் என வல…
-
- 0 replies
- 429 views
-
-
இந்த மண்ணில் மிகநீண்டதும், கொடியதுமான போரின் முடிவில் நிறைந்து கிடந்த வெறுமைக்கு அப்பால் போரின் வடுக்களாய், கடந்தகால வரலாற்றின் வாழும் சாட்சிகளாய் இன்று முன்னாள் போராளிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிந்துவிட்டது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிபேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதே பாங்கில் முன்னாள் போராளிகளை முடக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றது. அடிப்படைகள் எதுவுமில்லாமலும், யதார்த்தத்திற்குப் புறம்பாகவும், அரசாங்கத்தினாலும், அதனது படையினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர்களிடம் விடையில்லாத பல கேள்விகளை உருவாக்கியிருக்கின்றது. யுத்தத்தின் முடிவிலும், அதற்கு முன்னரும், புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் அரசாங்கத்துடன் இண…
-
- 0 replies
- 407 views
-
-
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. அறிவியலில் குறிப்பாக அணு சக்தி துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று அத்துறையில் பலகாலமாக பணியாற்றிய கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க இந்திய மத்திய அரசிற்கு அன்று பல காரணங்கள் இருந்தது. கலாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய மதத்தவர் என்பது ஒரு காரணம். அணுசக்தி துறையில் பாண்டித்துவம் உடையவரை குடியரசுத் தலைவராக்குவதனூடாக உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்கிற கருத்து அன்று இந்திய அரசிற்கு இருந்தது. இந்தியாவின் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் உலகநாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடை…
-
- 1 reply
- 539 views
-