செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7112 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 10:27 AM 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார். உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை கழித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே, 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவனை அவனின் சம்மதத்துட…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி செய்திகள் 7 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், ஒரு சிங்கம் கான்கிரீட் சுவரைத் தாண்டி ஒரு பெண்ணைத் துரத்தியதையும், அங்கிருந்தவர்கள் பயந்து, பாதுகாப்புக்காக ஓடியதையும் சிசிடிவி காட்சிகள் காட்டின. அந்த சிங்கம் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கும், ஐந்து மற்றும் ஏழு வயதுடைய அவரது குழந்தைகளுக்கும், கைகளிலும் முகங்களிலும் காயம் ஏற்பட்டத…
-
-
- 3 replies
- 216 views
- 1 follower
-
-
04 Jul, 2025 | 04:06 PM வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று வெள்ளிக்கிழமை (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்க…
-
-
- 10 replies
- 521 views
- 1 follower
-
-
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்! மெக்ஸிகோ நாட்டின் ஓக்சகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும்,முதலையொன்றுக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. இந்த நிகழ்வு, ஓக்சகா மாநிலத்திலுள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தில் நடைபெற்றது. அந்நகரின் மேயராக செயற்பட்டுவரும் டேனியல் குடியெரஸ் பென்யா என்பவரே “பிரின்சஸ் கேர்ல்” என அழைக்கப்படும் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் Chontal மற்றும் Huave எனப்படும் இரண்டு பழங்குடி சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும் இத்திருமண நிகழ்வானது அப்பகுதி மக்கள் இயற்கை மீது வைத்திருக்கும் நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் அ…
-
-
- 3 replies
- 312 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 30 JUN, 2025 | 12:45 PM உலகின் வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக திகழும் வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் வியாழக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. "நம்பமுடியாத நிகழ்வு! உலகின் மிகவும் வறண்ட அட்டகாமா பாலைவனம் பனியால் சூழப்பட்டுள்ளது," என கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம், X தளத்தில் வீடியோ காட்சிகளுடன் பதிவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனி படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த பனிப்பொழிவு காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. …
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES கட்டுரை தகவல் தனாய் நெஸ்தா குபேம்பா பிபிசி செய்திகள் 30 ஜூன் 2025, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதாக அந்நாட்டு அரசால் நடத்தப்படும் சூதாட்ட நிறுவனம் அனுப்பிய தகவலே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த தகவல் தவறுதலாக மக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது பின்னர் தெரியவந்தது. யூரோஜாக்பாட்டில் "ஆயிரக்கணக்கான மக்கள்" பல கோடி ரூபாய் வென்றிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர்கள் வென்ற தொ…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு. இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் (19:30 GMT) கோயூர் டி’அலீன் நகருக்கு வடக்கே உள்ள கேன்ஃபீல்ட் மலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு குழுவினர் பதிலளிக்கும் போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் பொதுமக்கள் அந்தப் பகுதியை விட்டு விலகி இருக்குமாறும் வலியுறுத்தினார். https://athavannews.com/2…
-
- 0 replies
- 106 views
-
-
அமெரிக்காவில் இறந்தவர்களின் அஸ்திகளில் இடம்பெற்ற மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுமார் 190 சடலங்களை பதுக்கி வைத்துவிட்டு, அவற்றை எரித்ததாக, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடல்கள் சிதைந்த நிலையில் இறுதிச் சடங்கு நடத்தும் நிலையத்தை நடத்தி வரும் ஜோன் ஹோல்போர்ட் என்பவருக்கு சொந்தமான ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள், கடந்த 2023இல் பொலிஸில் முறையிட்டிருந்தனர். இதையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுமார் 190இறுதிச்சடங்குகளுக்கான உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சிய…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2025 | 02:18 PM பொரளை பகுதியில் தனியார் பஸ்ஸில் பயணித்த இளம் பெண் ஒருவரின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, கோட்டை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ( 27) தீர்ப்பளித்தது. இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்தவருக்கு மேலதிமாக ஆறு மாதங்…
-
-
- 5 replies
- 270 views
- 1 follower
-
-
விமானத்தில் அணில் குரங்கை கடத்திவந்த பயணி கைது! மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச் சோதனையில், மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அணில் குரங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் . இதேவேளை, இந்த அணில் குரங்கு, அரி…
-
- 0 replies
- 76 views
-
-
பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்! பெண்கள் உட்பட மூவர் கைது! மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தி, பொல்லுகளால் தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று(25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி சென்றுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொ…
-
- 0 replies
- 86 views
-
-
சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா! அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தானியங்கி ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரத்தில் நேற்று அதிகாரபூர்வமாக ரோபோ டாக்ஸி சேவை தொடங்கியது. முதற்கட்டமாக தெற்கு ஆஸ்டின் நகரில் மட்டும் ரோபோ டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. செயலியில் முன்பதிவு செய்தால் ரோபோ டாக்ஸி பயணி இருக்கும் இடத்திலேயே வந்து ஏற்றிச் செல்கின்றது. காரில் அமர்ந்த பிறகு செல்லும் இடத்தை பதிவிட்டால் கார் தானாக இலக்கை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. உள்ளே இருக்கும் திரையில் கார் செல்லும் வழித்தடத்தை பயணிகள் கண்காணிக்க முடியும். பொழுது போக்கிற்காக காரினுள் பாடல்களை கேட்கவும், விரும்பும் விடியோக்களை பார்ப்பதற்கும் வச…
-
- 4 replies
- 236 views
-
-
Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 09:48 AM பிரேசிலின் சாண்டா கேடரினா மாநிலத்தில் பிரியா கிராண்டே நகரில் சனிக்கிழமை (21) காலை வெப்பக்காற்று பலூன் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த 21 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர். சாண்டா கேடரினா மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி , சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பின்னர், பலூன் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார் தொடர்ந்து பேசிய அவர், "ருவாண்டா விவகாரத்தில் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். இன்னும் காங்கோ, செர்பியா, கொசோவோ என நிறைய சொல்லலாம். முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் விவகாரம். நான் நான்கு, ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்துக்காகவும் தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள். அவர்கள் லிபரல்களுக்கு மட்டும்தான் தருவார்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9vnx4k0ylo
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywywry9p5o
-
-
- 26 replies
- 1.4k views
- 2 followers
-
-
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது! ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டா பிரபலம் ”கபேன் காபி லேம் (Khaby-lame) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான காபி லேம் அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30-ம் திகதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசா காலத்தையும் தாண்டி,விதிமுறைகளை மீறி அதிக நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவரைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுக்குப் பின், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவதாக அவர் கூறிக் கொண்டதால் காபி லேம்மை விடுவித்துள்ளனர். தற்போது அவர் அமெரி…
-
- 1 reply
- 103 views
-
-
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி! இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தாலியில் உள்ள மிலான் மல்சேனா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதி அதிக எடையுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அப் பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என வினவியுள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அப் பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விமான நிலைய அதிகாரிகள் அவரை சம…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, ஒய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினடான நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரி…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmbvx38vg01uhqpbs6m6te5rt
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி காலமானார். லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது…
-
- 0 replies
- 135 views
-
-
ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக் கடுமையான சட்ட நடவடிக்கை சிவப்பு முத்திரையுடன் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களது நெருங்கியர்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் - சமல் ராஜபக்ச தெரிவிப்பு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரிய போராட்டத்துக்கு நீதிமன்ற தடை! மீறி குவிந்த போராட்டக்காரர்கள்! முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் கலகமடக்கும் பொலிஸார் களத்தில்
-
- 1 reply
- 307 views
-
-
எதிர்வரும் ஜூன் 11 முதல் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் – அதிகாரபூர்வ தகவல்கள் வெளியீடு அமெரிக்க வரிக் கொள்கை அவகாசம் முடிவதற்கு முன் இலங்கை உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – பேராசிரியர் சிறிமல் அபேரத்ன நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தொழில் சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதற்கு 17 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு தீர்மானம் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் - உதய கம்மன்பில சுட்டிக்காட்டு
-
- 0 replies
- 165 views
-
-
விரட்டியதால் வந்த விபரீதம்: நாயோடு குழியில் விழுந்த புலி..! Published By: VISHNU 09 JUN, 2025 | 02:38 AM தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள மயிலாடும்பாறை பகுதியில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, புலி ஒன்று இரைக்காக நாயைத் துரத்திக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஏலக்காய் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த உரக் குழிக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டும் விழுந்தது. இதையடுத்து அவைகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், நாய் மற்றும் புலியை மயக்க மருந்து செலுத்தி பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புலி, பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல மணி நேரம் நாயும் புலியும் ஒரே குழ…
-
-
- 3 replies
- 293 views
- 1 follower
-
-
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவிப்பு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தில் வடக்குக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளதாக தகவல்
-
- 0 replies
- 126 views
-
-
இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயன்றால், முன்பை விட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து கடந்த காலத்தில் அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள், பொருளாதார ரீதியாக சாத்தியமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரை செயல்படாமல் உள்ளதாக தகவல் முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு
-
- 0 replies
- 239 views
-