செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த பத்தாண்டுகளாக சுவிஸ் வங்கி குறித்த செய்திகள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பண முதலைகளின் பெரும்பாலான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்படி பதுக்கியவர்களின் பெயர்கள்கூட அவ்வப்போது வெளியிடப்படுவதுண்டு. ``இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கித்துறையில் யதேச்சையாக ஒரு வரலாற்று ஒற்றுமை நடந்துள்ளது. ஆம், இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் …
-
- 2 replies
- 464 views
-
-
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை! உகாண்டாவில் ‘கில் த கேஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உகாண்டாவின் நீதி நெறி மற்றும் ஒருமைப்பாட்டுத்துறை அமைச்சர் சைமன் லோகோடோ, ‘தற்போதைய தண்டனைச் சட்டம் சில குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது. இது ஓரினச் சேர்க்கையை குற்றப்படுத்துவதாக மட்டுமே அமைந்துள்ளது. ஓரினச் சேர்க்கையை ஊக்குவித்தல், அவர்களை பணிக்கு எடுத்தல் ஆகிய செயலில் ஈடுபடுவோரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். ஓரினச் சேர்க்கை போன்ற கடும் செயலில் ஈட…
-
- 1 reply
- 585 views
-
-
அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர். சிலநாட்கள் கழித்து மனைவிக்கு போன் செய்த கணவர் காரை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். சிறிது தூரம் ஓடிய கார் திடீரென நின்று போனது. காருக்குள் விசித்திரமான சப்தம் கேட்பதையும், புகை வருவதையும் உணர்ந்த அந்த பெண், காரின் என்ஜின் பகுதியில் கூடுகட்டியிருந்த அணில் அதனுள் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்தார். பின்னர் காரை பழுது நீக்கும் இடத்திற்கு இருவர…
-
- 2 replies
- 455 views
-
-
அயர்லாந்தில் தனது இறுதிச் சடங்கில் அனைவரும் சிரிக்க வேண்டும் என்று கூறி உயிரிழந்த முன்னாள் ராணு வீரரின் வினோதமான ஆசையை அவரது உறவினர்கள் நிறைவேற்றினர். டப்ளின் நகரைச் சேர்ந்தவர் ஷே ப்ராட்லி. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 8ம் தேதி காலமானார். தான் இறப்பதற்கு முன்பாக விநோதமான ஆசையை தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அதன்படி பிராட்லியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் அனைவரும் சிரித்தபடி இருந்தனர்.\ தொடர்ந்து ப்ராட்லி ஏற்கனவே பதிவு செய்திருந்த அவருடைய பேச்சு சவப்பெட்டியில் இருந்து ஒலித்தது. அதில் தனது கல்லறை இருட்டாக இருப்பதாகவும், தான் இறந்ததை தன்னால் நம்பமுடியவில்லை என்றும் அனைவருக்கும் நன்றி கூறியப…
-
- 0 replies
- 281 views
-
-
நித்தியானந்தா மீது முன்னாள் வெளிநாட்டு பெண் பக்தை, புதிய குற்றச்சாட்டு....! நித்யானந்தா ஆபாசத் தகவல்களை அனுப்பியதாக, கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த, கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண், இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக Facebook மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய தகவல்களையும், அவர் வெளியிட்டுள்ளார். சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில், தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?, என அந்த சிஷ்யையிடம் கே…
-
- 3 replies
- 825 views
-
-
மெக்சிக்கோவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை வாகனத்தில் கட்டி வீதியால் இழுத்துச்சென்ற 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மெக்சிக்கோவின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் காலத்தில் கிராமத்தின் வீதிகளை திருத்தி தருவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை தொடர்ந்தே பொதுமக்கள் அவரை டிரக்கில் கட்டி பழுதடைந்த வீதி வழியாக இழுத்துச்சென்றுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயர் இரண்டாவது தடவையாக தாக்கப்பட்டுள்ளார். மேயரை அவரது அலுவலகத்திலிருந்து சிலர் வெளியே இழுத்து வருவதையும் வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதன் பி;ன்னர் அவரை வாகனத்தின் பின்னால் கட்டி இழ…
-
- 5 replies
- 563 views
-
-
கிளிகளுக்கு இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டுபிடிப்பு! மனிதர்களை போன்று கிளிகளுக்கும் இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க ஆராய்ச்சியாளரினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இசைக்கு ஏற்ப கிளி 14 விதமான நடனங்களை தானாக கற்றுக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்நோபால் கிளி போல், சில வகை பறவைகளும் அதிநவீன அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவை என கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஐரினா ஸ்கல்ஸ் என்பவர் வளர்த்து வரும் ஸ்நோபால் என்ற வெள்ளை நிற கிளி, தலையை அசைத்தும், கால்களை தட்டியும் Backstreet Boys குழுவின் “Everybody” ப…
-
- 2 replies
- 419 views
-
-
கனடாவில் சேவல் சண்டை தொடர்பில் ஒரு குடும்பத்திற்கே பிடியாணை பிறப்பிப்பு! கனடாவில் சேவல் சண்டை தொடர்பில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிருகவதை தடுப்பு அமைப்பு, சர்ரேயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் மீது இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்து பறவைகள் எவையும் கைப்பற்றப்படாத நிலையில், ஆதாரங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ள அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆதாரங்களை வைத்து அந்த இடத்தில் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்ந்து வருவதாக மிருக வதை தடுப்பு அமைப்பின் தலைமை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். கால்நடைகள் மீதான வன்முறை குற்றவியல் சட்டத்தின் இரண்டு பிரிவு…
-
- 2 replies
- 736 views
-
-
கார் பந்தயப் போட்டியாளர்களால் புதல்வர்களை இழந்த பிரித்தானிய தம்பதி! பிரித்தானியாவில் பரபரப்பான வீதியொன்றில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட சில இளைஞர்களால் தமது இரண்டு புதல்வர்களையும் பறிகொடுத்த தம்பதியொன்று முதன் முறையாக ஊடகங்களிடம் மனம் திறந்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய தம்பதியினர் வொல்வர்ஹம்டன் பிரதேசத்தில் வசித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத் தலைவியான ஆரதி நேஹர் (43) தகவல்களை வௌியிட்டுள்ளார். கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இரண்டு கார்கள், தங்களின் கார் மீது மோதியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப…
-
- 0 replies
- 331 views
-
-
மும்பையில் ரயில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரரின் வீட்டில் ரொக்கமாக 1.5 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. Coins மும்பையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை ரயிலில் மோதி உயிரிழந்தார். ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் இந்த முதியவர் ரயிலில் வரும் பயணிகளிடம் பிச்சை எடுப்பார் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து முதியவர் குறித்த விவரங்களை காவல்துறையினர் விசாரித்தனர். Mumbai ரயில் நிலையங்களில் பிச்சை எடுத்து வந்த அந்த முதியவரின் பெயர் புர்ஜூ சந்திரா ஆசாத் என்பது தெரியவந்தது. அவர் மும்பை கோவான்டி குடிசைப்பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து அ…
-
- 4 replies
- 623 views
-
-
2019-10-08@ 17:07:38 ரோம்: பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா சபையில் உரையாற்றிய இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மையை இத்தாலியில் பாலத்திற்கு அடியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடு நடந்தது. இதில், சுவீடனில் இருந்து வந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக பேசினார். மேலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கு என்ன தைரியம்? என உலக நாடுகளை கடுமையாக சாடினார். இதற்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இவரால் ஈர்க்கப்பட்ட பள்ளிச் சிறார்கள், உலகின் பல்வேறு பகுதி…
-
- 0 replies
- 345 views
-
-
அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமானோரை கொலைசெய்த முதியவர் – குற்றத்தை ஒப்புக் கொண்டார்! அமெரிக்காவின் ரெக்ஸாஸைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த நாட்டின் வரலாற்றில் அதிகளவான கொலைகளை செய்தவர் என்று அறியப்பட்டுள்ளார். 79 வயதான சாமுவெல் லிட்டில் (Samuel Little) என்ற குறித்த முதியவர் 93 பேரை கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். 1970 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே அவர் இந்த கொலைகளைச் செய்ததாக தெரியவந்துள்ளது. அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களாவர். அவர் கொலை செய்ததாகக் கூறப்பட்ட பெண்களின் உயிரிழப்புகள் போதைப்பொருள் காரணமாகவும் விபத்துகளால் நிகழ்ந்ததாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 2014 ஆம் ஆண்டில் அவர் மூன்று கொலைகளுடன் தொடர்புபட்டிருந்த நி…
-
- 1 reply
- 387 views
-
-
ஐநா சபையில் மோடி *"யாதும் ஊரே யாவரும் கேளீர்"* என பேசுவதற்கு முன்னால்... ஐநா சபையின் முகப்பு வாசலில் எழுதப்பட்ட ஒரே ஒரு வாக்கியம் *"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மேலும், ரஷ்யாவில் உள்ள lumbha யூனிவர்சிட்டி வாசலிலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்ற வாசகம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் சிறப்புகளில் சில உங்கள் பார்வைக்கு ... சீனாவில் தமிழ் வானொலி சேவை இந்திய நேரப்படி 7 30 லிருந்து 8 30 வரை தினமும் நடைபெறுகிறது. அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா எனும் அருங்காட்சியகத்தின் வாசலில் "கற்றது கை மண் அளவு" என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பல்கலைக்கழகத்தின் வாசலில் சங்கத் தமிழின் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
நோய்களை குணப்படுத்தும் விசேட ஆற்றல் கொண்ட 344 வயதான ஆமை உயிரிழப்பு! 344 வயதான அலக்பா என்ற ஆமை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, அலக்பா என்ற பெண் ஆமை மிகவும் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வந்தது. ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மாத்திரம் இரண்டு வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பாதுகாத்து வந்தனர். ஆபிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் விசேட ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்து ஆமையை பார்வையிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் அலக்பா என்ற குறித்த ஆமை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த…
-
- 1 reply
- 349 views
-
-
பொலியாவில் கரடு முரடான மலைப் பாதையில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஆண்டஸ்(Andes) மலைத்தொடரில் வளைவு நெளிவான பாதையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. மழை, மூடுபனி, கரடு முரடான பாறைகளுக்கு இடையே நடந்த இந்த மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி மிர்தா முனோஸ் பங்கேற்றார். தனது மகன் திடீரென மரணமடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்காக சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள மிர்தா முனோஸ், தனது 6 பேரக்குழந்தைகளுடன் சைக்கிள் பந்தயம் மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். https://w…
-
- 0 replies
- 308 views
-
-
எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்தது சரக்கு விமானம் – ஐவர் உயிரிழப்பு! உக்ரைனில் வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான குறித்த விமானம் ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்று கொண்டிருந்தது. பயண தூரம் மிகவும் அதிகம் என்பதால் உக்ரைன் நாட்டின் லிவில் நகரில் உள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து துருக்கி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், துருக்கியின் லிவில் விமான நிலையத்தை அடைய 1 கி.மீ தொலைவு இருந்தபோது விமானத்தின் எரிபொருள் முற்றிலும் தீ…
-
- 0 replies
- 331 views
-
-
பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் மனித குரங்குகள் அமர்ந்திருப்பது போல கேலியாக சித்தரித்து வரையப்பட்ட ஓவியம், சுமார் 85 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற பொதுமக்கள் அவையில் எம்.பி.க்களுக்குப் பதிலாக, மனித குரங்குகள் அமர்ந்திருப்பது போலவும், அந்த மனித குரங்குகளை சபாநாயகர் இருக்கையில் இருக்கும் இன்னொரு மனித குரங்கு வழிநடத்துவது போலவும் சித்தரித்து 13 அடி நீளத்தில் கடந்த 2009ம் ஆண்டில் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தை Banksy என்று அழைக்கப்படும் அடையாளம் தெரியாத ஓவியர் வரைந்திருந்தார். பிரபல Sotheby நிறுவனத்திடம் இருந்த ஓவியம், ஏலத்தில் விடப்பட்டது. சுமார் 13 நிமிடங்களில் அந்த ஓவியம், இந்திய மதிப்பில் 74.39 கோடி ரூபாய்க்…
-
- 1 reply
- 561 views
-
-
ஈராக்கில் 9 வயது முதலான சிறுமிகளை ஒரு மணி நேரத்துக்கு வரதட்சணை கொடுத்து இன்பத் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய மதகுருக்கள் அனுமதிப்பதாக பிபிசி துப்பறிந்த ஆவணப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி ஐ பிளேயரில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் படி, ஈராக்கின் புனிதமான இடங்களில் ஒன்றான கர்பலாவுக்குச் சென்ற பிபிசி பத்திரிக்கையாளர் ஆவணப்படத்தை யாரும் அறியாமல் படம்பிடித்தார். இன்பத் திருமணம் என்பது மனைவியை விட்டு விலகியிருப்பவர், ஏதேனும் சிறுமியை தன் தற்காலிக மனைவியாக்கி சுமார் ஒரு மணி நேரம் முதல் அவருடன் உறவு கொள்வதாகும் என விளக்கமளித்துள்ளார். இதற்காக வரதட்சணையை அச்சிறுமிக்கு வழங்குதையும் சுட்டிக்காட்டினார். ஈராக்கில் தடை செய்யப்பட்ட இன்பத் திருமண முறையை பத்தி…
-
- 0 replies
- 281 views
-
-
பெண்கள் இருவரும் தங்களது பயணத்தை அகமதாபாத்தில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பர்தோலி என்ற இடத்தில் தொடங்கினர். முதல் நாள் மாலை 5 மணிக்கு தொடங்கிய பின்னோக்கிய ஒட்டம் மறுநாள் இரவு 9 மணிக்கு தண்டி என்ற இடத்தில் முடிந்தது. பிரதமர் மோடிதான் தங்களுக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்தார் என்று பெண்கள் கூறியுள்ளனர். Bardoli-Dandi: கின்னஸ் சாதனைக்காக குஜராத்தை சேர்ந்த 2 பெண்கள் 13 மணி நேரம் பின்னோக்கி ஓடியுள்ளனர். இந்த 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். தங்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார் என்று அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். ட்விங்கிள் தாகர் மற்றும் ஸ்வாதி தாகர் என்ற அந்த இரு பெண்கள் தங்களது பயணத்தை…
-
- 3 replies
- 569 views
-
-
சீனாவில் முன்னாள் மேயரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம் பறிமுதல்! சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம், பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைக்குவின் முன்னாள் மேயரான 58 வயதான ஸாங் குய், என்பவரின் வீட்டிலிருந்தே குறித்த பெருமளவான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸாங் குய்யின் வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டிலிருந்து தங்க பிஸ்கட்டுகள், நகைகள் என 13.5 தொன் தங்கத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதன்போது, 37 பில்லி…
-
- 0 replies
- 174 views
-
-
கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்..! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது ! தங்களின் கணவர் என நினைத்து மனைவிகள் வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 50 வயதாகிறது. இவரது மனைவி பழனியம்மாள். இவரது வயது 42. கணவன், மனைவி இருவரும் ஒரு வேலை விஷயமாக சமீபத்தில் மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது ரங்கசாமி பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிந்திருந்தார். வழியில் பெட்ரோல் தேவைப்பட்டதால், தாராபுரம் ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஒரு பங்க்கிற்கு ரங்கசாமி சென்றுள்ளார். ஆனால் அவ…
-
- 19 replies
- 2.3k views
-
-
உக்ரேன் ராணுவத்தில் சேர்வதை தவிர்க்க வயதான பெண்ணை திருமணம் முடித்த இளைஞர்! உக்ரேனில் இளைஞர் ஒருவர் கட்டாய ராணுவ சேர்க்கையை தவிர்க்கும் முகமாக வயதான பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாட்டின் மேற்கு – மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த 24 வயதான இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக 81 வயதான மூதாட்டியை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரேனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டமாகும். அதேவேளை, ஒரு ஆண் உடல் ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து, அவரை கவனித்து வந்தால் அந்த ஆணுக்கு கட்டாய ராணுவ சேவையில் இரு…
-
- 1 reply
- 490 views
-
-
17 வருடங்கள் குகையில் மறைந்திருந்த குற்றவாளியை கண்டுபிடித்த ஆளில்லா விமானம்! சீனாவில் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு பொலிஸாரிடமிருந்து தப்பியோடி, தனியே குகையில் வசித்து வந்த ஒருவரை ஆளில்லா விமானத்தின் காணொளிகளைக் கொண்டு சீன பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சீனா பொலிஸாரின் இந்த சாதுர்யமான நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள 63 வயதான சாங் ஜியாங் என்பவர், 2002 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் நடமாட்டமே இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக சிறிய குகையில் ஜியாங் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்…
-
- 0 replies
- 308 views
-
-
பிரான்ஸ் "ஸ்பைடர் மான்" ஜேர்மனியில் கைது! பிரான்ஸ் ஸ்பைடர் மான் என அழைக்கப்பட்டும் Alain Robert கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் உள்ள Frankfurt skyscraper கட்டிடத்தில் Alain Robert 30 நிமிடங்களில் 152 மீற்றர் உயரம் ஏறியுள்ளார். அது அக்கட்டடத்தின் 42 ஆவது தளம் அமைந்துள்ள இடம் எனவும், தரையில் இருந்து 500 அடி உயரம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இன்றி அவர் கட்டிடத்தில் ஏறியதை அடுத்து, ஜேர்மனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக இவர் உலகின் மிகப்பெரிய கட்டிடமான பேர்ஜ் கலிஃபா (Burj Khalifa) இல் ஏறியதுக்…
-
- 1 reply
- 602 views
-
-
‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?! மனைவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் செல்போனுக்கு அனுப்பிய வில்லன் யாரென்று தெரிந்து கொள்ள செய்தியை முழுமையாக படியுங்கள். பி.என்.எஸ்.பாண்டியன் Updated on : 25 September 2019, 10:37 AM கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து திரும்பிய அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு தினந்தோறும் அவர் மனைவி உடைமாற்றும் நிர்வாண வீடியோ காட்சிகள் வந்து கொண்டிருந்தன. இதனால் திடுக்கிட்டுப் …
-
- 6 replies
- 1.7k views
-