துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
இலங்கைத்தீவிலே குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல நெடுங் காலமாக தமிழர்கள் மீது நன்கு திட்டமிட்டு அரச படைகளாளும், ஏனைய சமூகத்தினராலும் நாங்கள் அடக்கப்பட்டு எமது சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களாக இந்த நாட்டிலே வாழமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பு வாழ்வாதார உதவித்திட்டங்களை எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார். நேற்று நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்விலும், மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பானது வாழ்வாதார உதவிகளுக்க…
-
- 0 replies
- 701 views
-
-
பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல். மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வாண்டு 5ம் தர புலமைபரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைத் தெரிவு செய்து அதிலும் மிகச் சிறப்பு மாணவர்களாக தற்போது 32 மாணவர்களை கொண்டமைந்த விஷேட சிறப்புக் கற்கை நெறித்திட்டமாக பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முழுநேர கற்கைநெறி பாசறை நடாத்தப்பட்டு வருகின்றது. இம் மாணவர்களினை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் அக்கறையை அதிகரிக்கவும் மேற்படி 32மாணவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடனும் 17.08.2013 சனிக்கிழ…
-
- 0 replies
- 468 views
-
-
‘தேன்சிட்டு இசைவிருது 2014′ மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள். எமது கலைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நேசக்கரம் உப அமைப்பான தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் மாவட்டம் தோறும் ‘தேன்சிட்டு இசைவிருது 2014′ தேர்வு நடைபெற்று வருகிறது. 02.08.2014அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது தேர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் நாட்டாரியல் பாடல் தேர்வு போட்டியில் நூற்றிற்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர். வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வினை பிரதேச செயலாளர் உதயசிறீதர் அவர்கள் தலைமையேற்றிர…
-
- 0 replies
- 923 views
-
-
சுவிஸ் லுசர்ன் மாநிலத்தில் போரினால் பாதிக்கப் பட்ட தாயக மக்களுக்கு உதவும் முகமாக சில நலன் விரும்பிகளால் நலன் காப்போம் என்ற அமைப்பு தொடங்கப் பட்டு உதவி வருகிறது. மனிதாபிமானம் கொண்ட மக்கள் எம் உறவுகளுக்கு தொடர்பு கொண்டு உதவுங்கள் நன்றி . நலன் காப்போம் அமைப்பு சுவிஸ்.
-
- 0 replies
- 639 views
-
-
ஒவ்வொரு மாத்துக்கான கணக்கறிக்கையும் ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்குள் வெளியிடப்படும். பெப்ரவரி 2011இற்கான கணக்கறிக்கை. கணக்கறிக்கை PDFவடிவில் இணைத்துள்ளோம். உதவும் உறவுகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
-
- 0 replies
- 804 views
-
-
நேசக்கரம் ஆறுமாதங்களின் மொத்த கணக்கறிக்கையின் தொகுப்பு. தைமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக நேசக்கரம் உதவும் உறவுகள் வழங்கிய உதவித் தொகை :- (1473,82€, 350,00£) ( 277825,00/=இலங்கை ரூபாவில்) இவ்வுதவி மூலம் 170 குழந்தைகளுக்கான பால்மா உணவு வகைகளும் 25குடும்பங்களுக்கான உலர் உணவு வகைகளும் வழங்கப்பட்டது. தைமாதம் மாதாந்த உதவி மற்றும் மாணவர்கள் உதவி – 617,80€ பயன்பெற்றோர் தொகை :- + மாதாந்த குடும்ப உதவி – 2 குடும்பம். மாணவர்கள் கல்வியுதவி – 69மாணவர்கள். சுயதொழில் – 1 குடும்பம். தைமாதம் கணக்கறிக்கை. மாசிமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக கிடைத்த உதவி – 1108,52€. குடும்பக் கொடுப்பனவு மாணவர்களின் உதவி –…
-
- 0 replies
- 639 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 1ம் திகதி ஆழியவளை பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச அமைப்பாளர் தங்கராசா காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. சுயதொழில் முயற்சியை ஊக்குவித்து எமது தேச மக்களை சொந்தக் காலில் தங்கி நிற்கச் செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டது. ஆடுவளர்ப்பில் ஈடுபட விரும்பியவர்களுக்கு நல்லின…
-
- 0 replies
- 451 views
-
-
மனிதநேயப்பணியை வாழ்த்துகின்றோம் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் திரு தர்மலிங்கம் பாஸ்கரன் அவர்களும், ஒன்றிய உறுப்பினர் திரு சதாசிவம் வைகுந்தவாசன் அவர்களும் அவர்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக புங்குடுதீவில் தற்போதைய கொடிய கொரோனா நோய்ப்பரவல் காரணமாக வீடுகளில் வாரக்கணக்கில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாரிய நிதியுதவியுடன், உள்ளுார் அமைப்புக்களுடன் சேர்ந்து அம்மக்களுக்கு தேவையான உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்கள் இவர்களின் இம்மனித நேயப்பணியானது சரியான நேரத்தில் அங்கு வாழ்வியல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்ததனையிட்டு அவர்கள…
-
- 0 replies
- 911 views
-
-
பிறேம் குமார், "கம்பிகளின் மொழி" எனும் கவிதைத் தொகுப்பு மூலம் வல்வையில் கலைஞராக அறிமுகமானவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி. தற்பொழுது மிகவும் மோசமாக விழுப்புண் அடைந்திருக்கும் நிலையிலும் கூட, தொடர்ந்து கலைஞன் வடிவில் சமூக சேவை தொடர்ந்து முனைபவர், சாதனைகள் செய்யத் துடிப்பவர். திரு. பிறேம் குமார் அகில இலங்கை ரீதியில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதலாவது இடத்தினை பெற்றிருந்ததும், எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது சாதனைக்கு நிதி உதவி கோரி எம்மூடாக வல்வை மக்களிடமும், புலம் பெயர் வல்வை மக்களிடம் சிறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதனுடன் சம்பந்தப்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
நேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி ஆவணப்படத்தின் தலைப்பு :- வளமும் வாழ்வும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை இனங்காண்பதோடு அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதார மேம்பாடு , கல்வி , சுகாதாரம் , சமூக விழிப்புணர்வு , சமூகப்பொறுப்பணர்வினை ஏற்படுத்து வகையிலான மாற்றத்துக்கான வழியைத் தேடும் ஓர் போட்டியாகும். நோக்கம் :- இருக்கும் வளங்களைக் கொண்டு வாழ்வை மேம்படுத்துவதும் , மேம்படுத்தக்கூடிய வளங்களை விருத்திசெய்வதுமாகும். நேர அளவு :- 10 தொடக்கம் 20நிமிடங்களுக்குள் சொல்லப்பட வேண்டிய கருத்து முழுமைப்பட வேண்டும். முடிந்தால் ஆங்கில உப தலைப்புகளுடன் தயாரித்தால் உப தலைப்புக்கான மேலதிக புள்ளிகள் வழங்கப்படும். ஆவணப்படங்கள் அனுப…
-
- 0 replies
- 525 views
-
-
-
நோக்கம் போரால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல். ஊக்கம் சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை, வியாபாரங்களை ஆரம்பித்தல். கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல். ஆக்கம் செயற்றிட்டங்களை விரிவுபடுத்தி, சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, எம் மக்களை பொருளாதார ரீதியில், கல்வியில் தன்னிறைவு நிலையை எட்டி வலுவடையச் செய்தல். வியாபாரத்தில் இணையும் பங்குதாரருக்கான உரிமைகளும் நிபந்தனைகளும். BY ADMIN IN 1) முதலீட்டாளர் எமது சமூகப்பணிகளில் இணைந்திருக்க முடியும். அதாவது நாம் முன்னெடுக்கும் சமூகப்பணிகளில் தங்களது உதவிகளை வழங்குவதன் மூலம் இணைந…
-
- 0 replies
- 610 views
-
-
ஐந்நூறு கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவா்களுக்கு உதவி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஐந்நூறு மாணவா்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதமர் அலுவலகம். சிறுவா் பெண்கள் விவகார அமைச்சு, சிறுவா் நன்னடத்தை திணைக்களம்,கிளிநொச்சி மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் கொழும்பு மயூரபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தினால் மேற்படி உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு மூனறு வருடங்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட…
-
- 0 replies
- 791 views
-
-
மதன் அவர்கள் இறுதி யுத்தத்தின் பின்னர், 10 வருடங்கள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து விட்டு, கடந்த 2 1/2 வருடங்களுக்கு முன்னர் சொகுசு கதிரை( Sofa) செய்யும் தொழிலை ஆரம்பித்துள்ளார். யுத்தத்தில் ஊனமுற்ற பல பெண்களை வேலைக்கு( முன்னாள் பெண் போராளிகள் ) அமர்த்தியுள்ளார். அண்மையில் தாயகத்தில் உள்ள உறவினருக்கு இங்கிருந்து மதனை தொடர்பு கொண்டு சொகுசு கதிரை வாங்கிக் கொடுத்தேன். விலாசம் : KMT SOFA, 25/1 உதயநகர் மேற்கு, கிளிநொச்சி. தொலைபேசி: 077-5702378.
-
- 0 replies
- 912 views
-
-
அச்சியந்திரம் பெற்றுத் தந்த உறவுகளுக்கு நன்றிகள். நேசம் இலவச கல்வித்திட்டத்தில் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடுகள் இ பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் முன்னோடி பரீட்சை வினாத்தாழ்கள் அச்சடித்து வழங்கி மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான பயிற்சி நெறிகளை வழங்கிவருகிறோம். கடந்தகாலங்களில் அச்சுப்பதிப்புக்காக அதிகளவு செலவை எதிர் கொண்டிருந்தோம். தொடர்ந்த எமது தேவைக்கு ஒரு அச்சியந்திரத்தை பெற்றுக் கொண்டால் செலவில் பாதியை குறைத்துக் கொள்ள முடியுமென்ற எமது விண்ணப்பத்தை புலம்பெயர் உறவுகளிடம் வெளிப்படுத்தியிருந்தோம். தமிழ் மாணவர்களின் உயர்வில் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் முன்வந்து வழங்கிய உதவியில் அச்சியந்திரமொன்றினைப் பெற்றுள்ளோம். இம்முயற்சிக்கு உதவியோர் :- 1…
-
- 0 replies
- 765 views
-
-
புற்றுநோய் Patients- ஐ இலவசமாக பராமரிக்கும் இடம் | Eastern Cancer Care & Hospital
-
- 0 replies
- 999 views
- 1 follower
-
-
ஆபிரிக்காவில் அவதியுறும் ஈழப்போராளியின் நன்றி ஈழவிடுதலைப் போரில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த பல்லாயிரம் போராளிகளில் ஒரு தொகுதியினர் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலமையில் புலம்பெயர்ந்து ஐரோப்பிய ஆபிரிக்க , ஆசியநாடுகளில் அவதியுறுகின்றனர். இத்தகையதொரு போராளி குடும்பம் ஆபிரிக்க நாட்டில் அந்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட உணவிலிருந்து அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலமையில் வாழும் குறித்த குடும்பத்தினர் தமக்கான உதவியினைக் கோரியிருந்தனர். அவர்களுக்கான உதவியினை புலம்பெயர்ந்து வாழும் பல உறவுகள் முன்வந்து வழங்கியிருந்தனர். உதவியைப் பெற்றுக் கொண்ட போராளியும் அவரது குடும்பமும் எழுதிய நன்றிக் கடிதம். http://nesakkaram.org/ta/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E…
-
- 0 replies
- 578 views
-
-
நமது தேசம் சிறீலங்கா இனவெறி அரசின் கொடூரத்தால் துயர் சூழ்ந்து நிற்கின்றது . அவர்கள் பொழிந்த நச்சு குண்டுகளால் எமது மக்களின் உயிர்கள் உடைமைகள் அழிக்கப்பட்டு பிறந்த மண்ணிலேயே அகதிகளாக தகர குடிசைக்குள் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது . வீடிழந்து வாழ்விழந்து அங்கமிழந்து துயர்சுழியில் சிக்கி துயரத்தின் விரிவின் உச்சியிலே வாழும் எம் மக்களை இயற்கை அனர்த்தமும் அழிப்பதாகவே உள்ளது . நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.அத்தோடு மலையகத்தில் தொடரும் மண்சரிவுக்கு மக்கள் பலியாகின்றனர். ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ் வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள் . சிறப்பாக குழந்தைகள் பால்மா பற்ற…
-
- 0 replies
- 518 views
-
-
வன்னியில் இருக்கும் உறவுகளோடு நம் குடும்பத்து நிகழ்வுகளை எப்படிக் கொண்டாடி மன நிறைவு கொள்ளலாம் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தனி மடலில் நண்பர்கள் பலர் இந்த இல்லங்கள் குறித்த விபரங்களைத் தனி மடலில் கேட்டிருந்தீர்கள். நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் எம் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால் இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள். நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும். இதை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள். கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கனடா வாழ் புலம்பெயர் உறவுகளான ஜெயம், ஜெனா, ராஜ் ஆகியோர் கடந்த 13ம் நாள் கிளிநொச்சி பளையில் விவசாயம் கல்வி போன்ற முயற்சிகளுக்காக நீரிறைக்கும் மோட்டார் இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி என்பவற்றை வழங்கியுள்ளனர்.ஒருங்கிணைப்பாளர் கோகுலச்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த வாழ்வாதார உதவிகள் பளையைச் சேர்ந்த இரத்தினம் கறுப்பையா, கனகசீலன் நிர்மலா, சேனாதிராசா தெய்வானைப்பிள்ளை, செல்லையா செல்வேஸ்வரி ஆகியோருக்கும் கல்வியுதவிகள் ரவீந்திரன் பிரியங்கன், கந்தையா ஜெயசீலன், கனகசிங்கம் நிசாந்தன் ஆகியோருக்கு வழங்…
-
- 0 replies
- 473 views
-
-
ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கான தங்கராசாவின் நன்றிக்கடிதம். இவ்வுதவியை முன் வந்து வழங்கிய பிரித்தானியா நிவேதா அவர்களுக்கு மிக்க நன்றிகள். குறித்த உறவால் கடிதம் எழுதும் திறன் இல்லாமையால் பிறிதொரு நபர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் ரமேஷ் அவர்கள் ஒப்பமிட்டுத் தந்துள்ளார். தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/ http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%…
-
- 0 replies
- 478 views
-
-
New Opportunities for Wounded, Widowed, and Orphans of War, (புதிய சந்தர்ப்பங்கள்) அமைப்பானது அமெரிக்க நாட்டு வருமானவரிச்சட்டத்தின் பிரிவு 501c3 பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டு அமெரிக்க நாட்டைத் தளமாகவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ் தமிழ் பேசும் மக்களைத் தன் சேவை நலங்களின் பெறுனராகவும்கொண்டியங்கும் ஒரு அறக்கொடை அமைப்பாகும். புலம்பெயர் தமிழ் மக்களுக்குத் தகவல் தருநோக்கில் உருவாக்கப்பட்ட எமது முகநூற் தளத்தினைத் (Facebook page) தற்போது நாம் விரிவுபடுத்தி வருகின்றனம். இந்த வகையில் நடைமுறையில் விரிந்துவரும், மற்றும் ஏற்கெனவே கனிந்துவிட்ட எமது திட்டங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், சலனப்படங்கள், நிழற்படங்கள் போன்றவற்றால் நிறைந்து காணப்படும் இத்தளமானது மேலதிகமாக…
-
- 0 replies
- 442 views
-
-
நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சுமார் 900 குடும்பங்களை கொண்ட நாவற்குடா கிழக்கு எனும் பின்தங்கிய கிராமம் உள்ளது. இங்கு சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக இவ்வூர் கிராம அபிவிருத்திச் சங்கம் நாவலர் ஆங்கில பாலர் பாடசாலை ஒன்றினை 2013 தை மாதம் முதல் நடத்தி வருகின்றது. இங்கு ஆரம்பக்கல்வியைப் பெற்றுவரும் 16 பாலர்களுக்கு சீருடையினை நேசக்கரம் வழங்கியுள்ளது. இன்று ஆங்கிலப்பாடசாலைகள் பணக்காரர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் ஏழைமாணவர்களும் ஆங்கிலக்கல்வியைப் பெற வைக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கான சிறிய கொடுப்பனவின் ஒருபகுதி உதவியை மட்டும் பெற்று இப்பாடசாலையை நடத்தப்படுகிறது. பாலர்களின் தேவைகளான புத்தகங்கள் சீருடை போன…
-
- 0 replies
- 490 views
-
-
‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம். போசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம். வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் வழங்கி விழிப்பணர்வு வாரமாக அனுட்டிக…
-
- 0 replies
- 784 views
-
-
கல்வி என்ற இலக்கினூடாக உலகத்தில் நமதினத்தை பெருமைப்படுத்தவேண்டும்…. கிளிநொச்சி பாரதிபுரம் ஒக்ஸ்போட் தனியார் கல்வி நிறுவனத்தின் பருத்திவிழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்று பாரதிபுரம் வித்தியாலய மண்டபத்தில் கல்வி நிலையத்தின் இயக்குனர்; கே.எம்.கேதீஸ் தலைமையில் நடைபெற்றது. நாமம் இதில் கலந்துகொண்ட வேளை எமது பதிவுகளாக….. பாரதிபுரத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலையில் புறச்செயற்பாடாக மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் தங்கள் பொழுதை சிறந்த முறையில் ஆக்குவதற்காக இத்தகைய கல்வி நிலையங்களின் பங்கு அளப்பரியது. ஒக்ஸ்போட் கல்வி நிலையத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சில தரப்புக்களால் பல்வேறுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்தப்பிரதேச மக்கள் இந்த கல்வி நிலையம் மாணவர்…
-
- 0 replies
- 554 views
-