துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
351 topics in this forum
-
கல்வி என்ற இலக்கினூடாக உலகத்தில் நமதினத்தை பெருமைப்படுத்தவேண்டும்…. கிளிநொச்சி பாரதிபுரம் ஒக்ஸ்போட் தனியார் கல்வி நிறுவனத்தின் பருத்திவிழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்று பாரதிபுரம் வித்தியாலய மண்டபத்தில் கல்வி நிலையத்தின் இயக்குனர்; கே.எம்.கேதீஸ் தலைமையில் நடைபெற்றது. நாமம் இதில் கலந்துகொண்ட வேளை எமது பதிவுகளாக….. பாரதிபுரத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலையில் புறச்செயற்பாடாக மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் தங்கள் பொழுதை சிறந்த முறையில் ஆக்குவதற்காக இத்தகைய கல்வி நிலையங்களின் பங்கு அளப்பரியது. ஒக்ஸ்போட் கல்வி நிலையத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சில தரப்புக்களால் பல்வேறுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்தப்பிரதேச மக்கள் இந்த கல்வி நிலையம் மாணவர்…
-
- 0 replies
- 564 views
-
-
2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு மேற்கு வலயம் ஏறாவூர் மேற்கு கோட்டப்பிரதேசத்தில் நடைபெறும் 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேசம் இலவச வழிகாட்டி பயிற்சி முன்னோடிப் பரீட்சைகளில் மேற்படி கோட்டப் பிரதேசத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 48மாணவர்களுக்குமான சிறப்பு தயார்படுத்தல் பயிற்சி வகுப்பினை ஆவணி 24ம் திகதி வரையும் நடாத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான தொடர் பயிற்சிநெறி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்கள் அனைவரும் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் தங்கி நின்று கல்வியைப் பெறுகின்றனர். இவர்களுக்கான உணவு இதர அடிப்படை உதவிகளை சோபா நிறுவனம் வழங்கிவருகிறது. நேசம் …
-
- 0 replies
- 665 views
-
-
மூன்று ஆண்டுகளை கடந்து கனடா கணினி நிலையம் வடமராட்சி மருதங்கேணியில் இயங்கி வருகின்றது. எங்களது நோக்கம் அந்த பிரதேசத்தில் இருக்கும் மாணவ சமூகம் கணினி பயன்பாட்டினை ஊக்குவிப்பதேயாகும். இருநூறு மாணவர்களுக்கு மேல் MS Office தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளார்கள்.தற்சமயம் பெரியோர்களும் இதனால் பயனுறுகிறார்கள். இந்த நிலையத்தை பொறுப்பெடுத்து நடத்தும் சூர்யா மற்றும் அணைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள். மே 2016 ஆண்டில் தொடங்கிய இந்த நிறுவனத்திற்கு இதுவரை ருபாய் 1,474,886.70 (Canadian $12,301) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதினை அறிய தருகின்றோம். தொடர்ச்சியாக நிவாரண அமைப்பிற்கு பங்களிக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி! மே 2016 துவக்க நாளில் …
-
- 0 replies
- 620 views
-
-
போரால் பாதிக்கப்பட்ட 5குடும்பங்களுக்கான தொழில்விருத்திக்கான உதவியாக 252500ரூபா (இரண்டு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபா) பண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலிருந்து நேசக்கரம் நீட்டிய நாதன் , பவித்திரன் , MGR அகியோரின் உதவியில் மேற்படி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3குடும்பங்களுக்கான அவசர நிதியாக 50000ரூபா (ஐம்பதாயிரம் ரூபா) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இப்பங்களிப்பை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளை கிழக்கு மாகணத்தில் போரால் பாதிக்கப்பட்ட உதவிகள் பெற்ற குடும்பங்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். உறவுகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :- முகவரி: Nesakkaram e.V Hauptstr …
-
- 0 replies
- 614 views
-
-
தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பின் புதுத் திட்டம் அறிமுகம் திகதி: 03.02.2010 // தமிழீழம் உலகெங்கும் வாழும் எம் இனிய தேசத்து உறவுகளே! கோண்டாவில், யாழ்ப்பாணம், (பெப்ரவரி 01, 2010) - தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு, இன்றைய கால சூழலுக்கு தகுந்தவாறு மீள் உருவாக்கம் பெற்று, "உதவி" எனும் பெயரில் ஒரு புதிய திட்டத்துடன் மீண்டும் எம்மவர் மத்தியில் எமது உறவுகளுக்கான பணியினை ஆரம்பித்துள்ளது. நாலாங்கட்ட ஈழ யுத்தத்தின் கொடூரங்களும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளும் அனைவரும் அறிந்த விடயமே. சொல்லவெண்ணா துயரங்களுக்குள் ஆழ்த்தப்பட்ட எம் இனிய உறவுகளுக்கு ஏழு மாத காலங்கள் ஆன பின்பும் கூட நாளாந்த வாழ்க்கையே ஒரு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தமது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளா …
-
- 0 replies
- 947 views
-
-
தாயக உறவுகளுக்கு உதவும் பிரென்சு மனிதநேய அமைப்பு ! தாயக உறவுகளுக்கு உதவும் பிரென்சு மனிதநேய அமைப்பு ! பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் அதிசயம் Chiromission அமைப்பு தாயகத்தில் மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது தமிழர் தாயகத்தில் முகாமிட்டுள்ள இந்த அமைப்பினர், நரம்பு மற்றும் தசை பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள உறவுகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். தாயகத்தின் வேலணை, உரும்பிராய், கைதடி, முல்லைத்தீவு, வல்லிபுரம் ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவையினை இந்த அமைப்பினர் சமீபத்தில் நடாத்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது. https://news.ibctamil.com/ta/internal-affai…
-
- 0 replies
- 771 views
-
-
க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை எமது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியமானது 2013 கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கான 02 நாள் பயிற்சிப் பாசறைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். 6நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு தேவைப்படும் பாடங்களுக்கான மேலதிக விளக்க வகுப்புகளையும் நடாத்தவுள்ளோம். கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்பு சித்தியடையும் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மேற்படி பாடங்களுக்கான சிறப்பு பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். விஞ்ஞான , கணித ப…
-
- 0 replies
- 506 views
-
-
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
-
- 0 replies
- 777 views
-
-
நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ? நேசக்கரம் இலவச கணணிப்பயிற்சி நிலையமொன்றினை 15.12.2012நடராஜா ஆனந்தா வீதி நாவற்குடா கிழக்கு மட்டக்களப்பில் ஆரம்பித்திருந்தோம். நேசக்கரம் கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகளுக்கான உதவியை அமெரிக்காவிலிருந்து தவேந்திரராஜா ஐயா அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். இம்மாதத்தோடு எமது கணணிப்பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகி 4மாதங்களாகின்றது. எமது இலவச கணணிப்பயிற்சியை யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிப்புற்ற குடும்பங்களிலிருந்து 75 மாணவர்களும் வேலை வாய்ப்புத் தேடும் 40 இளைஞர் யுவதிகளும் , தொழில் செய்து கொண்டிருக்கும் பெரியவர்கள் 10 பேரும் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். நிலையத்திற்கான பராமரிப்பு , மின்கட்டணம் போன்றவற்ற…
-
- 0 replies
- 657 views
-
-
வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு கிளிநொச்சி மாவட்ட மாகாண தேன்சிட்டு இசைவிருது 2014 முன்னோடி குரல் தேர்வு 13.12.2014 அன்று கிளிநொச்சி ப்ரண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. யோ.புரட்சி நிகழ்ச்சியை தொகுக்க, பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி இயக்குனர் சவுந்தரராஜா நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். திறன்மிகு கிளிநொச்சி மாவட்ட பாடகர்கள் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர். வசந்தம் பண்பலை நிகழ்ச்சி முகாமையாளர் திரு கிருபா, அறிவிப்பாளர் பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். நடுவர்கள் :- காலாவித்தகர் இரா. சிவராமன் , இசையமைப்பாளர் இ.தேவகுமார் , சங்கீத ஆசிரியை ஜெயந்தி ஆகியோரின் பங்களிப்பானது நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தது. போட்டி மூன்று சுற்றுக்களாக நடைபெற்றது. மூன்றாம் சுற்றில் பக்க வாத…
-
- 0 replies
- 625 views
-
-
ஒக்ரோபர்மாதம் 2011 கணக்கறிக்கை ஒக்ரோபர் 2011 கணக்கறிக்கை கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள். ஒக்ரோபர்மாதம் 2011 கணக்கறிக்கை வளமையாக ஒவ்வொரு 5ம் திகதிக்குள்ளும் வெளியிடப்படும் கணக்கறிக்கை இம்மாதம் 8ம் திகதி வரை தாமதமானதற்காக உறவுகள் மன்னிக்கவும். ஜெகதீஸ்வரனின் மருத்துவத்திற்காக உங்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியின் கணக்கறிக்கையை அவரது அக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இன்றுதான் ஜெகதீஸ்வரனின் அக்காவின் கடிதம் கணக்கறிக்கை கிடைக்கப்பெற்றது. அதனையும் இம்மாத அறிக்கையுடன் இணைத்துள்ளோம். *உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*
-
- 0 replies
- 770 views
-
-
சிறுநீரகங்களை இழந்த ஜெகதீஸ்வரனுக்கான மருத்துவ உதவிக் கணக்கறிக்கை இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஜெகதீஸ்வரனின் மருத்துவ உதவியினை அவரது குடும்பத்தினர் புலம்பெயர் உறவுகளிடம் வேண்டியிருந்தனர். அவர்களது வேண்டுதலை ஏற்று உதவிய உறவுகளுக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள். ஜெகதீஸ்வரனுக்கு மருத்துவ உதவி கணக்கறிக்கை ஜெகதீஸ்வரனின் அக்கா எழுதிய நன்றிக்கடிதம் வருமாறு :-
-
- 0 replies
- 988 views
-
-
புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள். 25.08.2013 அன்று 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளது. எமது அமைப்பானது ‘நேசம்’ இலவச கல்வித்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு (2013) 5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கென வடகிழக்கு பகுதிகளில் 15000 மாணவர்களை உள்வாங்கி இலவச வழிகாட்டடிகளையுத் தயாரித்து வழங்கியும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பயிற்சிப் பாசறைகளையும் நடாத்தியுள்ளோம். இவ்வாண்டு 03 வழிகாட்டிகள் வருமாண்டு 06 வழிகாட்டிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். வழிகாட்டி கையேடுகள் பயிற்சிப்பாசறைகள் நடாத்த ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் மாணவர்கள் பெற்றோர் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நேசம் இலவச கல்வித் இத்திட்டத்தை எம்மால் உருவா…
-
- 0 replies
- 611 views
-
-
“அக விழி திறப்போம்” இது ஒரு மாணவ சமூகத்தை நல்வழிபப்டுத்தும் செயற்திட்டமாகும் மது பாவனை, போதை வஸ்து, புகைத்தல், பாலியல்து துர்நடத்தை ஆகியவற்றில் இருந்து மாணவ சமூகத்தை நல்வழிபப்டுத்தும் செயற்திட்டம்” அண்மையில் (2016.11.07) திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையத்தின் ஏற்பாட்டில் கனடா வாழ் தேசத்து உறவான செந்தில் குமரனின் நிதி பங்களிப்பு ஊடாக அகவிழி திறப்போம் என்னும் கருப்பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ கருத்தரங்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதற்கட்ட்மாக கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 150 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் தாயக மாவட்ட்ங்…
-
- 0 replies
- 441 views
-
-
யுத்தத்தின் விளைவுகளால் தனது கால் ஒன்றினை இழந்து மற்றைய காலும் செயலிழந்து போகும் நிலையில் வாழ்வாதாரத்திற்காக துடிக்கும் முன்னால் பெண் போராளி. தந்தை நோய்வாய்பட்ட நிலையில் தாயும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் தனது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி அலைந்தும் கால்கள் இல்லை என்ற காரணத்தினால் வேலை ஏதும் கிடைக்காத நிலையில் போராடும் இளம் பெண். உதவும் நல் உள்ளம் கொண்டோரே உதவிக்கரங்கள் கொடுத்திடுங்கள். தொலைபேசி இலக்கம்; 0773256776 வங்கி கணக்கு இலக்கம் கிஸ்ணபிள்ளை துரைசிங்கம் 70580467 இலங்கை வங்கி கிளிநொச்சி இலங்கை - See more at: http://www.canadamirror.com/canada/30236.html#sthash.X2GQDnnv.dpuf
-
- 0 replies
- 681 views
-
-
இரத்ததானம்: பொது நலமும் சுய நலமும் 80களில் (அப்பொழுது மட்டுமல்ல இன்றுவரை) குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரியளவிலும் தெற்கில் ஒரளவிலும் இரத்தம் மிகவும் தட்டுப்பாடாக இருந்த காலங்கள் அவை. ஏனெனில் அந்தளவிற்கு நாள்தோரும் செல் அடிகளும் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கி சுடுகளும் பொம்பர் அடிகளும் நடைபெற்ற நேரங்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆகவே தமது உறவினர் யாருக்காவது இரத்தம் தேவை எனின் பிற உறவினர்கள் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக இருந்தது. அப்பொழுதுதான் குறிப்பிட்ட உறவினருக்கு இரத்தம் வழங்கி அவரைப் பாதுகாப்பார்கள். இல்லாவிட்டாலும் பாதுகாப்பார்கள். ஆனால் இரத்ததானம் வழங்குவதை ஊக்குவிப்பதற்கு அ…
-
- 0 replies
- 575 views
-
-
போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை. ------------------------------------------------------------------------------------------------------- போரில் தாயை அல்லது தந்தையை அல்லது தாய்தந்தை இரவரையும் இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மடு வலயத்தில் உள்ள 16 பாடசாலைகளின் கல்வி கற்கும் 251 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களான கொப்பிகள் , எழுதுகருவிகள் ஆகியவயை தேவைப்படுகிறது. இம்மாணவர்கள் உறவினர்களின் பாதுகாப்பிலும் பலர் வயதான அம்மம்மா , அப்பம்மா ஆகியோருடனும் வாழ்ந்து வருகின்றனர். போரின் காயங்களிலிருந்து மீள எழுகிற மடு வலயத்தில் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்வியை மேம்படுத்த புலம்பெயர் தமிழர…
-
- 0 replies
- 408 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான கிரிமிச்சையோடை கிராம மக்களுக்கு லண்டன் செல்வ விநாயகர் ஆலய நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக ஞாயிற்றுக்கிழமை மாலை உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட உதவிப்; பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர். இதன்போது பேரவை பிரதி நிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப் உணவுப் பொதியில் அரிசி சீனி தேயிலை கோதுமை மா பருப்…
-
- 0 replies
- 441 views
-
-
இனிய வாழ்வு இல்லத்தில் சிறப்புற இடம்பெற்ற கலை விழா! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சிறப்புற இயங்கி வருகின்ற மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் காப்பகமாக இருக்கின்ற இனிய வாழ்வு இல்லத்தின் மாபெரும் கலை விழா நிகழ்வு நேற்று காலை முதல் மிகவும் சிறப்பாக இடம்பெற்று நிறைவு பெற்று உள்ளது. இனிய வாழ்வு இல்ல சிறார்களின் கலை அம்சங்களை வெளிக்கொணரும் முகமாக இனிய வாழ்வு இல்ல நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் கலை விழாவில் கலை விழா பரிசளிப்பு விழா இனியவள் என்கின்ற மலர் வெளியீட்டு விழா என்பன இடம்பெற்றன. http://www.hirunews.lk/tamil/picture-story/443
-
- 0 replies
- 519 views
-
-
01.12.10 அன்று கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் தாய் தந்தையரை இழந்து அடிப்படை வசதிகளற்ற 15மாணவ மாணவியர்களுக்கான மாதாந்த பண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு 3000ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. 15மாணவர்களுக்குமாக மொத்தம் 45000ரூபா வழங்கப்பட்டுள்ளது. மற்றும் ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு மற்றும் உடுப்பு வகைகள் உட்பட இலங்கைரூபா இரண்டு லட்ச ரூபா பெறுமதிக்குரிய கொடுப்பனவினை நேசக்கரம் அங்கத்தவர் ஒருவர் நேரடியாகச் சென்று வழங்கியுள்ளார். இவற்றோடு எட்டுக்குடும்பங்களிற்கான சுய தொழில் ஊக்குவிப்பு உதவிகளாக 370000 ரூபா வழங்கப்பட்டது. சுயதொழில் ஊக்குவிப்பு உதவியைப் பெற்றவர்கள் யாவரும்…
-
- 0 replies
- 1k views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அரச சார்பற்ற நிறுவனமான சர்வோதயம் ஊடாக 2014 இல் மட்டும் ..
-
- 0 replies
- 515 views
-
-
-
சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு சித்தாண்டி 1,2,3,4 பிரதேச குடும்பநல உத்தியோகத்தர் ஆலோசனைக்கும் திட்டமிடலுக்கும் அமைய ‘நேசக்கரம் தேன்சிட்டு’ உளவள அமைப்பின் ஏற்பாட்டில் குடும்பலநல உத்தியோகத்தரால் இனங்காணப்பட்ட 720 குழந்தைகளுக்கு 01.01.2015 அன்று சத்துணவு வழங்கப்பட்டது. கனடாவில் வாழ்ந்து வரும் கிருபாகரன் , றோகினி தம்பதிகளின் செல்வக்குழந்தை சேயோன் 24.12.2014 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். சேயோனின் முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் சத்துணவு வழங்குவதற்கான உதவி கிடைக்கப் பெற்றோம். 01.01.2015 அன்று முதல் முயற்சியாக நடைபெற்ற சத்துணவு வழங்கல் திட்டத்திற்கு ஆதரவு தந்த குழந்தை சேயோனின் குடும்பத…
-
- 0 replies
- 522 views
-
-
நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளும் பிரத்தியேக தயார்படுத்தல் வினாத்தாள் பகிர்வும் 18.02.2013 ஆரம்பமாகியுள்ளது. 10ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மார்ச் மாதத்துக்கான மாதாந்த இலவச வழிகாட்டி வினாத்தாள்கள் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை ,மன்னார் ஆகிய மாவட்டங்களில் போரால் பாதிப்புற்ற அடைவுமட்டம் குறைந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் புலமைப்பரிசில் ஆவணி2013 பரீட்…
-
- 0 replies
- 707 views
-
-