துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள். 18.05.2009 அன்று இறுதியுத்த முடிவில் கைதாகிய போராளி. கடந்த 4வருடங்கள் சிறைவாழ்வு. குடும்பத்திலிருந்து 3சகோதரர்களையும் நாட்டுக்காக இழந்தவன். வயதான அப்பா மட்டுமே தனது கடைசிக்காலங்களை மகனோடு கழிக்க காவலிருக்கிறார். இவனது வழக்கை நடாத்துவதற்காக சட்டத்தரணிக்காக வழங்கப்பட வேண்டிய தொகை இலங்கைரூபா 150000ரூபா (அண்ணளவாக 1000€) முற்பணம் 50000ரூபா இரு கருணையுள்ளங்களின் உதவியில் செலுத்தப்பட்டு வழக்கு வெல்லப்பட்டுள்ளது. இன்னும் 6மாதங்களில் குறித்த போராளி விடுதலையாகிவிடுவான். உதவி கிடைக்குமென நம்பி சட்டத்தரணிக்கான பணம் மீதி ஒரு லட்சத்தையும் 5ஆயிரம் ரூபா வட்டிகட்டிக்கப் பெற்று பணத்தைச் செலுத்தியாயிற்று. ஆனால் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை…
-
- 5 replies
- 1.2k views
-
-
100பாலர் பாடசாலை மழலைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கல். மட்டக்களப்பு சவுக்கடி,ரமேஸ்புரம்,ஐயங்கேணி ஆகிய கிராமங்களின் முன்பள்ளி மழலைகள் 100பேருக்கான உளவள பயிற்சிக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேன்சிட்டு நேசக்கரம் உளவள அமைப்பின் களச்செயற்பாட்டாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 100 குழந்தைகளுக்குமான உதவியை 30.03.2015அன்று பிறந்தநாளைக் கொண்டாடிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் வழங்கியிருந்தார். தலா குழந்தையொன்றுக்கு 200ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வுதவியை முன்வந்து உவந்தளித்த பெயர் குறிப்பிட விரும்பாத உறவுக்கு நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. http://nesakkaram.org/ta/nesakkaram.3920.html
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்தக் குரலுக்குரியவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. ஒருவருடத் திருமண வாழ்வில் கிடைத்த இரண்டரை வயதுப் பெண்குழந்தைதான் இவளது நம்பிக்கை. குழந்தை பிறந்து 31வது நாள் இவனது கணவனைத் துப்பாக்கிகள் வவுனியா நகருக்குள் தின்றுபோட்டது. தொழிலுக்குப் போனவன் பிள்ளையின் 31ம் நாள் கொண்டாட்டத்திற்கு பணத்தோடு வருவானென்று காத்திருந்தவளுக்கு அவளது காதல் கணவன் இறந்து போனானென்ற செய்திதான் வந்தது. 2007.10.03 ம்திகதி பிறந்த தனது குழந்தைக்காக பணத்தோடு வருவேனென்றவன் 2007.11.03 அன்று இறந்து போனானென்றது இதயத்தில் இடியையல்ல இவளது வாழ்வில் மாறாத துயராயே முடிந்து போனது. தன் குழந்தை தனது எதிர்காலம் எதையுமே எண்ணிப்பார்க்க முடியாத சூனியத்தில் தொலைந்து போனாள். கிளிநொச்சியிலிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
நேசக்கரம் மே 2011 கணக்கறிக்கை மே2011 கணக்கறிக்கை கீழ் உள்ள இணைப்பில் அழுத்திப் பாருங்கள். கணக்கறிக்கை உதவிய அனைவருக்கும் நன்றிகள். (ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்கிடையில் மாதாந்த கணக்கறிக்கை இணைக்கப்படும்)
-
- 3 replies
- 1.2k views
-
-
நவம்பர் மாதம் கணக்கறிக்கை. நேசக்கரம் நவம்பர் மாதம் உதவிகள் உதவிகள் பெற்ற பயனாளிகளின் பயன்பாடுகள் அடங்கிய முழுமையான அறிக்கையை பாருங்கள். கணக்கறிக்கையை பார்வையிட மேலுள்ள இணைப்பில் அழுத்துங்கள்.
-
- 5 replies
- 1.2k views
-
-
-
Miss. M.DEVAMANOJINI is a Bio Science student of Highlands College, Hatton expecting university entrance in near future, she is suffering from LUMBER DISCECTOMY causing severe compression. AND expecting of Rs.450,000/= for her surgery on or before 27th of this month. The only source of income is from the earning of poor mother running a school canteen. The PPA of highlands college has decided to collect the money for her surgery and medication, the old students, well wishers and donors are requested to help her for immediate surgery. Please forward this message to your friends. Bank Account PPA-HIGHLANDS COLLEGE, SEYLAN BANK PLC, HATTON 039-010222764-001 Cont…
-
- 0 replies
- 1.1k views
-
-
நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்கருதி பிரதேச வாரியாக உப அமைப்புக்களை உருவாக்கி வருகிறோம். உப அமைப்புக்கள் உருவாக்கத்தின் நோக்கம் :- 1) உதவிகள் ஒருங்கிணைப்பு தொடர்பால் இல்லாதிருப்பதால் ஒருவரே பல வழிகளிலும் உதவியைப் பெறுவார். இதனால் உண்மையான பாதிப்போடு உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் செல்லாதிருக்கிறது. இந்த நிலமையை மாற்றி எல்லோருக்கும் உதவிகள் பகிரப்பட உப அமைப்புக்கள் ஊடாக ஒருங்கிணைவை உண்டாக்கும் நோக்கில் உப அமைப்புக்கள் தோற்றுவிக்கப்படுகிறது. 2) ஓவ்வொரு பிரதேசத்தினதும் சரியான நிலமைகளை கண்டறிந்து சரியான தரவுகளை உப அமைப்பின் நிர்வாகத்தினரின் தொடர் கவனிப்பு மூலம் அறிக்கைகளை எமக்குத் தந்துதவுவார்கள். தரவுகள் அ…
-
- 7 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவு - மகாவித்தியாலத்துக்கான மழை நீர் சேகரிப்பு தாங்கி மற்றும் அதற்கான கூரை மீழ் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம் மகாவித்தியாலய மழைநீர் சேகரிப்பு தாங்கி மீழ்புனரமைப்பு வேலைகள் தொடங்கி நடைபெறுகின்றது. இதில் அதிபரின் மதிப்பீட்டின் படி 180 000 ரூபா கேட்கப்பட்டதற்கிணங்க France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் இப்பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது எமது ஊரின் நெடுநாள் சிக்கலான தண்ணீர் பிரச்சினை சார்ந்ததால் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாகம் இதற்கு முன்னுரிமை கொடுப்பதென தீர்மானித்து பணத்தை உடனடியாகவே அனுப்பி வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. …
-
- 6 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேசக்கரம் அமைப்பினால் 2013ம் ஆண்டு சித்த ஆயள்வேத தோட்டம் நிறுவப்பட்டது. 2ஏக்கர் நிலத்தில் உருவான ஆயர்வேத நிலமானது செங்கலடி பிரதேசசெயலர் பிரிவில் பலாச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் வகையிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கவும் எம்மால் உருவாக்கப்பட்டதே சித்த ஆயர்வேத மூலிகைத் தோட்டமாகும். ஆயுர்வேத வைத்திய நிலையத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் சித்த ஆயுர்வேத வைத்தியத்தினை எமது ம…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தினர் தந்துதவிய 163000.00ரூபா (ஒரு லட்சத்து ஆறுபத்து மூவாயிரம் ரூபா) நிதியுதவியில் மன்னார் மாவட்டம் மடுவலயம் ஈச்சலவக்கை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 118மாணவ மாணவியருக்கான அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் 10.05.2013 அன்று வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் ஈச்சலவக்கை அ.த.க.பாடசாலை அதிபர் திரு.பயஸ் , ஆசிரியர்கள் , எழுவான் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நேசக்கரம் பிறைட் பியூச்சர் விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் ஜோன்சன் , மற்றும் துணைத்தலைவர் சுதேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். போரால் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலமையில் கல்விக்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்பு கோரைக்கிழங்கு புடுங்கப்போதல் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன் - பெரிதாக விமர்சனக் கருத்தாடல்கள் வரவில்லை ।। திண்ணைக்கு புதிதாக வந்த சிறுவனுக்கு என்ன துடுக்கு என பெரியவர்கள் எண்ணியிருக்கக் கூடும் . அது போக , இன்றைய தினம் புதுவருடத்தில் இருந்து ஒவ்வொரு கிழமையும் 10 வெள்ளி வீதம் காலியாகிப் போன நெஸ்கபே டின் இல் சேமித்து வருவது என புது வருட தீர்மானம் போட்டு நடைமுறைப்படுத்தி இருக்கிறேன். சேமிக்கும் பணம் யாழ் திண்ணையில் பிரேரிக்கப்படும் ஏதாவது பொது வேலைத்திட்டத்திற்கு கிடைக்கக் கூடியதாக இருக்கும் ( சப்ஜெக்ட் டு கண்டிஷன்ஸ் ப்ரபோஸ்ட் எர்லியர் ) ஆர்வமுள்ளவர்களை சேர்ந்து கொள்ள அழைக்கிறேன் …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு குடும்பத்திற்கு 115€ உதவினால் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். 2013 ஆனி மாதம் 8ம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குசேலன்மலை(கரடியனாறு) கிராமத்தின் குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட கற்பித்தல் செயற்பாடானத ஒருவருடத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது. எமது கற்பித்தல் செயற்பாட்டில் மேற்படி கிராமத்தில் வாழும் 27குடும்பங்களிலிருந்தும் பிள்ளைகள் தொடர்ந்து பங்கேற்று அடைவுமட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இம்மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாகும். இவர்களது பிரதான தொழில் மீன்பிடி , விவசாயம் ஆகும். இவர்களால் பிடிக்கப்படும் மீனை சந்தைப்படுத்தவோ தொழிலுக்கான வலைகள…
-
- 3 replies
- 1.1k views
-
-
மார்ச் 2011 கணக்கறிக்கை மார்ச் 2011 கணக்கறிக்கை கீழ் உள்ள இணைப்பில் அழுத்திப் பாருங்கள். மார்ச் 2011 கணக்கறிக்கை உதவிய அனைவருக்கும் நன்றிகள். (ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்கிடையில் மாதாந்த கணக்கறிக்கை இணைக்கப்படும்)
-
- 0 replies
- 1.1k views
-
-
கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள். செப்ரெம்பர் 2011 கணக்கறிக்கை இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை – 10 இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை – 07. நேரடியாக பயன்பெறும் குடும்பங்கள் மாணவர்கள் எண்ணிக்கை இங்கு சேர்க்கப்படவில்லை. *உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*
-
- 2 replies
- 1.1k views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து கல்வி கற்கும் 15மாணவர்களுக்கான கல்வியுதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. மீள்குடியேறியுள்ள கிராமங்களில் வாழும் இம்மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டைத் தொடர்வதற்கான பொருளாதார உதவிகளை இழந்து நிற்கின்றனர். ஒரு மாணவருக்கு 10€ (அண்ணளவாக இலங்கை ரூபா 1500ரூபா) தேவைப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் முன்னாள் போராளிகளிலிருந்து 5மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான உதவிகளை எம்மிடம் வேண்டியுள்ளனர். 2மாணவிகளும் 3மாணவர்களும் உறவுகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ளனர். ஒரு மாணவருக்கு தலா 4ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. உதவ விரும்பும் உறவுகள் கீழ் வரும் விபரங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உதவிகளை…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருகோணமலை மாவட்டம் சந்தணவெட்டைக் கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள்
-
- 0 replies
- 1.1k views
-
-
தலைவர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அன்புடையீர் வணக்கம். மலசலகூடம் அமைப்பதற்கு உதவி புரிந்தமைக்கான நன்றி மடல். கிருஸ்னராஜா சந்திராதேவி என்ற மாவீரர் குடும்பத்திற்கு மலசலகூடம் அமைப்பதற்காக ரூபா 45000.00 (ரூபா நாற்பத்து ஐந்தாயிரம்) நிதியுதவி வழங்கியமைக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பில் - நிதியுதவி வழங்கிய மனிதநேயமுள்ள திரு.சிவராஜா- மார்கண்டு அவர்களுக்கும் சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பிலும் பயனாளி குடும்பத்தின் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சியையும் கூறுகின்றோம். போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் நலன் கருதி தங்களினால் முன்னெடுக்கப்படும் புனித கங்கரியங்களுக்கும் மனித நேய தொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான (சித்திரை,வைகாசி,ஆனி) மாதங்களிற்கான கணக்கறிக்கை. நேசக்கரம் அமைப்பினால் உதவித் திட்டங்களினால் இரண்டாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். நேசக்கரம் 2010 சித்திரை,வைகாசி,ஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கையினைப் பார்க்க இங்கு அழுத்துங்கள் 1)கல்விகற்கும் மாணவர்கள் , பயனடைந்தோர் 137 மாணவர்கள் வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சீருடைகள் சப்பாத்துக்கள் சத்துணவு என்பன வழங்கப்பட்ட பாடசாலைகள். மணற்காடு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை , பருத்தித் துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் , வவுனியா காமினி மகாவித்தியாலயம். 2)குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்கள் பயனடைவோர…
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே ! என் மனதில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு திட்டத்தினை உங்கள் முன் வைக்கின்றேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். எமது தாயகத்திலுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே. ஒவ்வொரு நாளும் இணையங்களிலும் சமூக வலைதளங்களிலும் உதவி வேண்டி பல உருக்கமான வேண்டுதல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ( இவற்றில் உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களையும் நாம் இனம் காண வேண்டியுள்ளது) இவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாலும் என்னால் ஒரு பெரிய தொகை வழங்குவதற்குரிய வல்லமை இல்லை. ஆனால் என்னால் மாதம் கூடியது ஒரு £50 வழங்க முடியும். என்னை போன்றே உங்களிலும் பலர் இங்குமிருக்கலாம். தாயகத்திலுமிரு…
-
- 10 replies
- 1.1k views
-
-
http://www.vvtuk.com/archives/2756 பூரணம் முதியோர் உதவிதிட்டம்-முதியோர் கௌரவிப்பு-2012 Posted On Monday, January 30, 2012 By admin. Under முக்கிய செய்திகள், வல்வை செய்திகள் ஒரு சமூகத்தின் இன்றைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பனவற்றுக்கு பின்னால் மௌனமாக நின்றுகொண்டிருப்பது அந்த சமூகத்தின் வயதில் மூத்த மக்கள் ஆகும். முதுமையிலும்,தள்ளாமையிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்கள்தான் இன்று நாம் வசதியாக நடப்பதற்குரிய சமுதாய பாதையை செப்பனிட்டவர்கள் ஆவர்.அவர்களையும் அவர்களின் பணியையும் என்றென்றும் நன்றியுடன் நினைத்துக்கொண்டே இருப்பதுதான் உண்மையான ஒரு நாகரீக சமூகத்தின் கடமைஆகும். அந்த அடிப்படையில் எமது ஊரில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் முதியோரில் வசதியும், …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆனந்தகுமாரசாமி முகாம் மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 08.07.2011 ஆம் திகதி செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி புனர்வாழ்வு முகாமில் கல்வி கற்கும் மாணவர்களில் 244 மாணவ மாணவியர்களுக்கான கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தரம் 5இல் கற்கும் 120 மாணவ மாணவியருக்கும் , தரம் 11இல் கற்கும் 82 மாணவர்களுக்கும் , தரம் 12,13இல் கற்கும் 42மாணவர்களுக்கும் அப்பியாசக்கொப்பிகள் , பேனாக்கள் , கொம்பாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 1. தரம் 5இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள் (ஒருவருக்கு) - 3 (ஆ) பேனாக்கள்(ஒருவருக்கு) – 3 2.தரம் 11இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள்(ஒருவருக்கு) – 5 (ஆ) கொம்பாஸ் பெட்டி (ஒருவருக்கு) – 1 (இ…
-
- 3 replies
- 1.1k views
-
-
எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம். உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம். உதவிகோரும் 36 மாணவர்களின் விபரங்கள் 1) சுரேஸ்கண்ணா கோபாலராசன் கலைப்பீடம் 1ம் வருடம் 2) …
-
- 1 reply
- 1.1k views
-
-
புங்குடுதீவில் அம்பலவாணர் கலையரங்கம் திறப்புவிழா அழைப்பிதழ்
-
- 6 replies
- 1.1k views
-
-
சரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா ? இச்செய்தியை படியுங்கள். எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் கற்பித்தலில் பயனடைந்து சிறப்பான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10மாணவர்களை இவ்வருட எமது உதவித்திட்டத்தின் கீழ் உள்வாங்கியுள்ளோம். இம்மாணவர்கள் அனைவரும் விஞ்ஞான , இயந்திரவியல் பீடங்களுக்குத் தெரியவாகியுள்ளார்கள். எமது கல்வித்திட்டத்தில் மருத்துவ , இயந்திரவியல் துறைகளுக்கான தமிழ் மாணவர்களை அதிகரிக்கும் வகையில் கடந்த வருடம் (2013)முதல் உதவி வருகிறோம். கடந்த வருடம் அதிகளவிலான மாணவர்களுக்கு உதவ வேண்டியிருந்தும் 11மாணவர்களுக்கு மட்டுமே எமது உதவித்திட்டத்தின் கீழ் உதவ முடிந்தது. காரணம் அதிகளவிலான உதவிகள் கிடைக…
-
- 8 replies
- 1k views
-