Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளித் துளியாய்

தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.

தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.

  1. அனந்தியின் உதவித் திட்டங்கள்: காணாமல் போனோர் – சரணடைந்தோர் நலன் பேணல். (Disappeared – contaminator care.) முன்னாள் போரளிகளின் நலன் பேணல் (care of the former Poralikal). பெண்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் (Livelihood support programs for women) நலிவுற்ற குடும்பங்களின் நலன் பேணல் ( Care of indigent families). மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைபடுத்த உங்கள் உதவியை வேண்டி நிற்கிறோம்!! ==================================================================

  2. ‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம். போசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம். வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் வழங்கி விழிப்பணர்வு வாரமாக அனுட்டிக…

    • 0 replies
    • 815 views
  3. ஒருலட்சரூபா முதலீட்டிற்கு மாதம் 5000முதல் 7500ரூபா இலாபத்தைத் தருவோம். எமது கைவினைப்படைப்பாளிகள்(HMC) நிறுவனமானது பெரிய வியாபாரா நிறுவனங்களின் விநியோக முகவராக இணைந்து தொழில் புரியக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளது. இத்தொழிலில் முதலீடு செய்ய விரும்புவோரையும் வரவேற்கிறோம். உங்கள் முதலீடு மூலம் வேலைவாய்ப்பை வழங்குவதோடு உங்கள் முதலீட்டுக்கான இலாபமும் வழங்கப்படும். விநியோக முகவர் மாவட்டம் மட்டக்களப்பு வங்கி உத்தரவாதம் 1000000.00 (பத்துலட்சரூபா) இப்பணம் குறித்த நிறுவனத்திற்கு வழங்கத் தேவையில்லை. எங்களது வங்கியில் வைப்பிலிட்டுக் காட்ட வேண்டும். சுழற்சி முறையில் வியாபார நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்களுக்கு ஏற்ப தேவைகளுக்கு நாங்களே பணத்தைக் கையாள்வோம். மொத்…

    • 9 replies
    • 2.4k views
  4. தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு. மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனாம்வெளி கிராமத்தில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தேன்சிட்டு உளவள அமைப்பின் ஒருநாள் விழிப்பணர்வு செயலமர்வு 06.03.2014அன்று நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் உதயசிறீதர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை , கிராமசேவையாளர் கோகுலன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா , நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பாளர் ரஜிக்காந்தன் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜெனன் அவர்களும் பங்கேற்றிருந்தார்கள். இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்றலில் மிகவும் பின் தங்கிய…

    • 0 replies
    • 572 views
  5. நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும். 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியின் பரீட்சார்த்தமாக சாம்பிராணி உற்பத்தியினையடுத்து மிக்சர் உணவு உற்பத்தியினை 09.06.2012 அன்று ஆரம்பித்திருந்தோம். மிக்சர் உற்பத்தியினை மட்டக்களப்பினைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்திருந்தோம். முதல் கட்டம் 4பிரதான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த இம்முயற்சிக்கு மொத்தம் 336500.00ரூபாவினை முதலிட்டிருந்தோம். அத்தோடு உதவியாளர்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உட்பட 7பேர் பணியில் இணைந்தார்கள். வேலைசெய்வோருக்கான மதிய உணவும் வழங்கியிருந்தோம். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உணவுகளும் வழங்கப்பட்டது. வேலைக்கு ஏற்ப முதல் ஆறுமாதங்களும் சம்பளங்களும் வழங்கப்பட்டு தொழிலில் தொடர்ந்த வெற்றி…

    • 4 replies
    • 985 views
  6. நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள். நேசக்கரம் அமைப்பும் அதன் வளர்ச்சியிலும் தங்கள் ஆதரவை நல்கும் அனைத்து கருணையாளர்களும் இப்பகுதியில் தங்கள் சந்தேகங்கள் கேள்விகளை கேட்க முடியும். உங்கள் கேள்விகளுக்கு பதில்களை வழங்க காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகள் மென்மேலும் நேசக்கரத்தின் வளர்ச்சியில் பாரிய மாற்றத்தையும் பயனையும் தரும். நேசக்கரம் பண உதவிகள் பற்றிய சகல தரவுகளும் மற்றும் உதவுவோரின் உதவிகளை பெறும் பயனாளிகளின் கடிதங்கள் மாதாந்த கணக்கறிக்கைகள் யாவும் எமது இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட விபரங்கள் வெளியிடப்படுவதில்லை பொதுவெளியில். உதவுகிறவருக்கு மட்டும் பயனாளியின் படம் கடிதங்கள் தொடர்பு வசதிகள் வழங்கப்படும். யாழ்இணையம் கருத்துக்களத்தில் கருத்துக்க…

    • 85 replies
    • 7.6k views
  7. சாம்பிராணி உற்பத்திகள் வெற்றியா தோல்வியா ? 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியினை பரீட்சார்த்தமாக ஆரம்பித்திருந்தோம். இதில் உணவு உற்பத்தியாக மிக்சர் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டும் மற்றும் சாம்பிராணி உற்பத்தியினை அம்பாறையிலும் ஆரம்பித்திருந்தோம். 25.05.2012அன்று அம்பாறையில் சாம்பிராணி உற்பத்திக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை நடாத்தி அதில் பயிற்சி பெற்றவர்களை வைத்து செயற்படத் தொடங்கியது நேசம் சாம்பிராணி உற்பத்தி. இதுவொரு சிறு கைத்தொழில் முயற்சியாகையால் ஆரம்ப வருமானமும் உற்பத்திக்கு ஏற்பவே எனும் அடிப்படையில் தொடங்கப்பட்டது. தொழிலில் ஈடுபட்ட 11 பெண்களுக்கும் மாதம் 4ஆயிரம் ரூபாய் வருவாயை தரக்கூடியதாக முதலில் நடைபெறத் தொடங்கியது. இத்தோடு உணவு உற்பத்திகளிலும் 11பேரை…

    • 0 replies
    • 1k views
  8. மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள். மட்டக்களப்பு நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 46கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமமே கோப்பாவெளி எனப்படும் நீர்வளத்தைக் கொண்ட கிராமம் ஆகும். மொத்தம் 114 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் 105 குடும்பங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் 25 விதவைகளும் அவர்களது பிள்ளைகளும் உட்பட 52 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலையும் மீதி குடும்பங்கள் விறகு வெட்டுதல் , மாடுமேய்த்தல் என சில தொழில்களைச் செய்து வருகின்றனர். போரால் பாதிப்புற்ற கிராமங்களில் இக்கிராமமும் மிகவும் பாதிப்படைந்த ஒரு கிராமம். இந்த மக்களிடம் பணம் வசதிகள் எதுவுமில்லை. ஆயினும் அன்றாட வாழ்வை கொண்டு செல்ல தங்களது உடல் உழைப்பை மட்டுமே மூலதன…

    • 24 replies
    • 2.7k views
  9. எழுவான் அமைப்பு மீளச்செலுத்திய கடனுதவி. மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் எம்மர் உருவாக்கப்பட்ட எழுவான் அபிவிருத்திச் சங்கம் ஊடாக 2013ம் ஆண்டு 13குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு கடனுதவி 274905,09ரூபா வழங்கியிருந்தோம். கடனுதவியைப் பெற்றவர்கள் கடந்த வருடம் 60200.00ரூபாவும் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 30ஆயிரம் ரூபாவுமாக இதுவரையில் 90200.00ரூபாவினை மீளச்செலுத்தியுள்ளனர். தொடர்ந்து தம்மால் கடனுதவியை செலுத்த முடியாத நிலமையில் இரு குடும்பங்கள் தொடர்பிலும் இல்லாது விலகிவிட்டார்கள். இவர்கள் தொடர்புக்காக தந்த தொலைபேசியிலக்கம் யாவும் செயலிழந்த நிலமையில் இருக்கிறது. இம்மாதம் மீளக்கிடைத்த 30ஆயிரம் ரூபாவை எமது தேன்சிட்டு ஆ…

    • 0 replies
    • 576 views
  10. நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும். 2009 யுத்த முடிவின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் இயங்கி வருகிறது. எமது அமைப்பானது கடந்த 5வருடங்களில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்றும் நேரடியான குடும்ப இணைப்பு , மாணவர்கள் இணைப்பு மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தாயகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. போரின் பின்னரான மக்களின் தேவைகள் , உளவள ஆற்றுப்படுத்தல்கள் , மீள் கட்டுமானங்கள் உட்பட தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. யானைப்பசிக்கு எங்கள் உதவிகளானது சோளப்பொரியாகவே இருந்திருக்கிறது. எனினும் எங்களால் முடிந்தவரை உதவிகளைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். தொடர்ந்து பணத்தை மட்டும் வழங்கிக் கொண்டிருத்தல் என்பது சமூக மாற்றத்தைய…

    • 10 replies
    • 1.3k views
  11. நீங்கள் படித்த நூல்களை எங்கள் மாணவர்களுக்குத் தாருங்கள். வெளிநாடுகளில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அல்லது பல்கலைக்கழகப் படிப்பை முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பழைய நூல்களை (ஆங்கில நூல்கள்) தாயகத்தில் பல்கலைக்கழகப் படிப்பை தொடங்கியிருக்கும் மாணவர்களுக்கு தந்துதவுங்கள். மருத்துவம், எந்திரவியல் துறைகள் தொடர்பான நூல்கள் எமது மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. புதிய நூல்களை வாங்கிப்படிக்கும் வசதி பல மாணவர்களிடம் இல்லை. எனவே உங்களது பாடநூல்களை இம்மாவணவர்களுக்கு வழங்கியுதவுங்கள். நீங்கள் வழங்கும் நூல்கள் சுழற்சி முறையில் மாணவர்கள் பயன்படுத்தி பயனடைவார்கள். நூல்களை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gma…

    • 0 replies
    • 463 views
  12. சரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா ? இச்செய்தியை படியுங்கள். எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் கற்பித்தலில் பயனடைந்து சிறப்பான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10மாணவர்களை இவ்வருட எமது உதவித்திட்டத்தின் கீழ் உள்வாங்கியுள்ளோம். இம்மாணவர்கள் அனைவரும் விஞ்ஞான , இயந்திரவியல் பீடங்களுக்குத் தெரியவாகியுள்ளார்கள். எமது கல்வித்திட்டத்தில் மருத்துவ , இயந்திரவியல் துறைகளுக்கான தமிழ் மாணவர்களை அதிகரிக்கும் வகையில் கடந்த வருடம் (2013)முதல் உதவி வருகிறோம். கடந்த வருடம் அதிகளவிலான மாணவர்களுக்கு உதவ வேண்டியிருந்தும் 11மாணவர்களுக்கு மட்டுமே எமது உதவித்திட்டத்தின் கீழ் உதவ முடிந்தது. காரணம் அதிகளவிலான உதவிகள் கிடைக…

    • 8 replies
    • 1.1k views
  13. ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படும் தமிழ் குழந்தைகள் 3வயதுப் பெண்குழந்தையை ஆயிரம் ரூபாவிற்கு விற்க ஒரு தமிழ்த்தாய் மட்டக்களப்பு காத்தான்குடி சந்தையில் பேரம் பேசிக்கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை காப்பாற்றிக் கொண்டு வந்து தந்த தமிழனுக்கு முதலில் நன்றிகள். 19.01.2014அன்று நேசக்கரம் அமைப்பானது டென்மார்க் அன்னை அறக்கட்டளை அமைப்பின் நிதியாதரவில் குசேலன்மலை (கரடியனாறு) மாணவர்களுடனான பொங்கல் விழாவினைச் செய்திருந்தது. வளமையான வரவிலிருந்து 2பிள்ளைகள் அதிகமாயிருந்தார்கள். 2பிள்ளைகளின் வரவுக்கான காரணத்தை விசாரித்ததில் ஒரு பெண்குழந்தைக்கு நடந்த அவலம் தெரியவந்தது. குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் பணத்திற்காக பல குழந்தைகள் விற்கப்பட்ட விடயமும் வெளிச்சத்துக்கு வந்தது. அது மட்டுமன்…

  14. டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா. 19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இக்கிராமத்து மாணவர்கள் 42பேருக…

    • 4 replies
    • 960 views
  15. ஒட்டுசுட்டான் சின்னச் சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலய மாணவர்கள் அடிப்படை வசதிகளின்றி , தகரக் கொட்டகைக்குள் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். இது பற்றிய பிரதேச மக்களின் தகவலையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று மேற்படி நிலைமையை உறுதிப்படுத்தினார். அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் , தரம் 5 வரை , சுமார் 65 மாணவர்கள் கல்வி கற்கும் ஈஸ்வரன் வித்தியாலயத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அங்கு சென்று நிலைமையை நேரில் அவதானித்ததுடன் அப்பாடசாலை அதிபரையும் சந்தித்து குறைகளின் தரவுகளைக் கேட்டறிந்தேன். அப்பாடசாலையானது பழைய தகரங்களால் அமைக்கப்பட்டுள்ளது. கூரையில் பல இடங்களில் துளைகள் காணப்படுவதால், மழை பெய்யும் போது , கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. கா…

  16. http://nesakkaram.org/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2013/ தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை. 2013ம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி நேசக்கரத்தின் உப அமைப்புகளில் ஒன்றாக தேன்சிட்டு உளவள அமைப்பினை ஆரம்பித்திருந்தோம். போருக்குப் பின்னர் அதிகரித்துள்ள தற்கொலைகள் , சமூகச்சீர்கேடுகள் , மன அழுத்தப் பாதிப்பு என பல்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் உளவள ஆரோக்கியத்தை மேம்படுத்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பினால் 50இற்கும் மேற்பட்ட பாலர்கள் பயனடைந்துள்ளார்கள். 01.08.2013 அன்று அம்பாறையில் 2 கிராமங்க…

  17. நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்கருதி பிரதேச வாரியாக உப அமைப்புக்களை உருவாக்கி வருகிறோம். உப அமைப்புக்கள் உருவாக்கத்தின் நோக்கம் :- 1) உதவிகள் ஒருங்கிணைப்பு தொடர்பால் இல்லாதிருப்பதால் ஒருவரே பல வழிகளிலும் உதவியைப் பெறுவார். இதனால் உண்மையான பாதிப்போடு உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் செல்லாதிருக்கிறது. இந்த நிலமையை மாற்றி எல்லோருக்கும் உதவிகள் பகிரப்பட உப அமைப்புக்கள் ஊடாக ஒருங்கிணைவை உண்டாக்கும் நோக்கில் உப அமைப்புக்கள் தோற்றுவிக்கப்படுகிறது. 2) ஓவ்வொரு பிரதேசத்தினதும் சரியான நிலமைகளை கண்டறிந்து சரியான தரவுகளை உப அமைப்பின் நிர்வாகத்தினரின் தொடர் கவனிப்பு மூலம் அறிக்கைகளை எமக்குத் தந்துதவுவார்கள். தரவுகள் அ…

    • 7 replies
    • 1.1k views
  18. எமது யாழ்கள உறவுகளிடம் உதவி கோருகிறேன். இவ்வருடம் ஆனிமாதத்திலிருந்து மட்டக்களப்பு குசேலன்மலை பிரதேசத்தில் வாழும் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 41 பிள்ளைகளுக்கான கற்பித்தல் வகுப்பினை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் நடாத்தி வருகிறோம். இத்திட்டத்திற்கு அமெரிக்காவிலிருந்து திரு.தவேந்திரராசா ஐயா அவர்கள் முன்வந்து உதவிக் கொண்டிருந்தார். இது மட்டுமன்றி கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகள் கொள்வனவுக்கான உதவிகளுடன் தொடர்ந்து மாணவர்களின் கல்விக்காக தனது உதவியை வழங்கி வந்த திரு.தவேந்திரராசா ஐயா அவர்களின் தொடர்பு கடந்த 2மாதங்களாக இல்லாதுள்ளது. தவேந்திர…

    • 21 replies
    • 2.9k views
  19. நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மருத்துவ , இயந்திரபீட மாணவர்களின் நிர்வாக வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் சிறந்த வழிகாட்டலில் 2013 ஆண்டு க.பொ.த.சாதாரணதரம் தோற்றிய மாணவர்களிற்கான கணித விஞ்ஞான பாடங்களுக்கான பயிற்சி வகுப்புக்களை ஒரு மாதம் வரையில் 4 நிலையங்களில் நடாத்தியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதியில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட கரடியனாறு , உன்னிச்சை, புல்லுமலை, கோப்பாவெளி, உறுகாமம், கித்துள், இலுப்பட்டிசேனை, கரடியனாறு, பன்குடாவெளி, கோரகல்லிமடு, சந்திவெளி, கிரான், கறுவாக்கேணி, முதலைக்குடா,முனைக்காடு, மகிழடித்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 4…

    • 0 replies
    • 590 views
  20. கனடாவில் உள்ள வாழவைப்போம் அமைப்பினரால் புதுக்குடியிருப்பு கைவேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கைவேலி கணேச வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீ.கனகசுந்தரம் கலந்துகொண்டு இந்த கொடுப்பனவை வழங்கிவைத்தார். இதில் குறித்த பிரதேசசத்தைச் சேர்ந்த 12 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=101447&category=TamilNews&language=tamil

  21. கிளிநொச்சி திருநகரில் உயிரிழந்த சிறுவன் நிதர்சனின் குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் அமைப்பினால் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. லண்டன் வாழ் தாயக தமிழர்களால் நடாத்தப்படும் ர்நளொழர ஐளளாiசெலர கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்சியாளர் றென்சி கந்தையா இரவீந்திரன் அவர்களால் வழங்கப்பட்ட உதவித் தொகையை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் குறித்த சிறுவனின் தாயிடம் நேரில் சென்று கையளித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=466692573313820907

  22. ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கான தங்கராசாவின் நன்றிக்கடிதம். இவ்வுதவியை முன் வந்து வழங்கிய பிரித்தானியா நிவேதா அவர்களுக்கு மிக்க நன்றிகள். குறித்த உறவால் கடிதம் எழுதும் திறன் இல்லாமையால் பிறிதொரு நபர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் ரமேஷ் அவர்கள் ஒப்பமிட்டுத் தந்துள்ளார். தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/ http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%…

    • 0 replies
    • 489 views
  23. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை மன்னார் மாவட்டத்தின் பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் தொடர்ந்தும் வழங்கி வருகின்றார் . - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றக் கிராமங்களான சன்னார் , ஈச்சளவக்கை , பெரிய மடு ஆகிய மூன்று கிராமங்களுக்கும் கடந்த 30 ஆம் திகதி விஜயம் செய்த பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் சுமார் 500 மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதி வய்ந்த பாடசாலை உபகரணங்களை பங்கீடு செய்து வழங்கி வைத்தார் . இந்த நிலையில் நேற்று முந்தினம் மன்னார் நூறு வீட்டுத்திட்டம் மற்றும் மன்னார் முப்பது வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களுக்குச் சென்ற வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் சுமார் 50…

  24. கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான M.அரியராஜா என்பவர் தனது 60 வது பிறந்ததினத்தில் வன்னியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு உதவுவதன் மூலம் கொண்டாடினார். கண் ஒன்றை இழந்த பெண் ஒருவருக்கு கை கொடுக்கும் வகையில் ரூபா ஒரு இலட்சம் வழங்கியுள்ளார். இந் நிதியினை பெறுப்பேற்ற வலிவடக்கு பிரதேசசபை துணைத்தவிசாளர் ச. சஜீவன் அவர்கள் அப் பணத்தினை குறித்த பெண்ணிடம் கையளித்துள்ளார். பிறந்த நாட்களை நட்சத்திர விடுதிகளில் கொண்டாடி வரும் மக்கள் மத்தியில் திரு M. அரியராஜாவின் இச் செயற்பாடு வரவேற்கத் தக்கது. ஏனைய புலம்பெயர் உறவுகளும் யுத்தால் பாதிக்கபட்ட தமது மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ முன்வரவேண்டும். போரினால் அவயங்களை இழந்த எம்மவர்களுக்கு புலம் பெயர் உறவுகள் கைகொட…

  25. பளை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த நூற்றி இருபத்துநான்கு முன்பள்ளி மற்றும் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 13.30 மணியளவில் பளை வீமன் காமமம் கிராம அலுவலர் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் லயன்ஸ் எஸ் . சுந்தரேஸ்வரன் தலைமையில் நடை பெற்றது . மானிப்பாய் நகர லயன்ஸ் கழகம் கிராம அபிவிருத்தி சங்கத்துடன் இனைந்து மேற்க்கொண்ட இந்நடவடிக்கைக்கான நிதியை சுவிஸ் நாட்டில் இருந்து வந்த லயன்ஸ் எஸ் . மகேந்திரன் மற்றும் அவருடைய பாரியார் திருமதி ம . விஜயகுமாரி வழங்கி இருந்தார்கள் . மங்கள விளக்கினை லயன்ஸ் பிராந்திய ஆலோசகர் லயன்ஸ் வைத்தியகலாநிதி வி . தியாகராசா மாகாண பிரதி செயலாளர் லயன்ஸ் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.