Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொழூஉப் புகுத்தல் - 49 கார் ஆரப் பெய்த கடிகொள் வியன் புலத்துப் பேராது சென்று பெரும் பதவப் புல் மாந்தி நீர் ஆர் நிழல குடம் கட்டு இனத்து உள்ளும் போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இன பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல் மதை இனள் பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் மோரொடு வந்தாள் தகை கண்டை யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு (முல்லைக்கலி 109: 1-8) பொருள் இளங்காளை பூட்டிய தட்டு வண்டியின் மீது அமர்ந்து வரும் யாரும் சற்று நிமிர்ந்து தோன்றுவது போல மதமதப்பாக வருகிறாள் இந்த மோர்க்காரி. இவளது அழகை யாரோடும் ஒப்பிட இயலாது என்று வியக்கின்றனர் ஊரார். குடம் சுட்டு இனம் என்பது மண் சார்ந்த வாழ்வியலை வகுத்துக் கொண்ட குயவர் ஆக இருக்கலாம். குயவர்கள் கைவினைக் கலைஞர்கள் ஆயினும் …

    • 0 replies
    • 1k views
  2. தொழூஉப் புகுத்தல் - 48 https://app.box.com/s/p3k2p4dl41fmbypxfnftva1jgcd0psth நறு நுதால் என்கொல்! ஐங்கூந்தல்உளரச் சிறுமுல்லை நாறியதற்கு குறு மறுகி ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட கொல்லேறு போலும் கதம் (முல்லைக்கலி 105: 53-56) ஒள்நுதால் இன்ன உவகை பிறிது யாய் என்னைக் கண் உடைக் கோலால்அலைத்தற்கு என்னை மலர் அணி கண்ணிப் பொதுவனொடு எண்ணி அலர் செய்து விட்டது இவ்வூர் (முல்லைக்கலி 105: 61-65) பொருள்: எனது கூந்தலில் இருந்து சிறுமுல்லையின் மணம் வந்தது பொறுக்க மாட்டாமல் எனது பெற்றோர் சினப்படுகின்றனர். அந்தச் சினம் அவன் அடக்கிய காளையின் சினத்தை விடவும் கடுமையாக இருக்கிறது என்று தன் தோழியிடம் கூறுகிறாள் ஒரு பெண். அந்த அவன் சூடியது சிறு முல்லைக் கண்…

    • 0 replies
    • 518 views
  3. தொழூஉப் புகுத்தல் - 47 https://app.box.com/s/ermbxprsfpna8gj8jpd0fmk42j4o9a3l அளை மாறிப் பெயர் தருவாய் அறிதியோ அஞ்ஞான்று தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றூற்று அயல் இனமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா என் நெஞ்சம் கனமாக் கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ? நின் நெஞ்சம் கனமாக் கொண்டு யாம் ஆனல் எமக்கு எவன் எளிதாகும்? புனத்துளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பது வோ? அனைத்து ஆக! (முல்லைக் கலி 108: 26-35) பொருள்: என் நெஞ்சத்தைக் களமாகக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறாய்! நீ ஒரு கள்வி என்று கூறுகிறான் காதலன். அது எப்படி எனக்கு எளிதாகும்? உன்னைத் தேடிக் கலங்கினேன். தினைப்புனத…

    • 0 replies
    • 489 views
  4. தொழூஉப் புகுத்தல் - 46 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும் பேர் அமர்உ ண் கண்ணும் நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய சொல்லாட்டி நின்னோடு சொல்லாற்றுகிற்பார் யார்? சொல்லாதி! நின்னைத் தகைத்தெனன் அல்லல் காண்மன் மண்டாத கூறி மழகுழக்கு ஆகின்றே கண்ட பொழுதே கடவரைப் போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீய நின் கொண்டது எவன்? எல்லா! யான் கொண்டது (முல்லைக்கலி 108:15-25) பொருள்: என்னைத் தேர்வு செய்த உன்னைப் பேசி வெல்ல முடியாது என்று கூறுகிறான் காதலன். உன்னைத் தேர்வு செய்த பின் நான் பட்ட துன்பம் பெரிது.முதலில் பார்த்த உடனேயே கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்பது போலப் பண்டம் கேட்டாயே! அப…

    • 0 replies
    • 557 views
  5. தொழூஉப் புகுத்தல் - 45 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 நிச்சம் தடுமாறும் மெய் இயல் ஆய்மகன் மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு! (முல்லைக் கலி: 110: 09-15) பொருள்: இன்று கன்றுக்குட்டியை ஈன்று விடுவோம் என்று தனது உள் உணர்வினால் அறிந்து கொள்ளும் முதல் கன்று ஈனும் தாய்ப்பசு, அச்ச உணர்வினால் மேய்ச்சலுக்குச் செல்லாமல் தொழுவினுள் சுற்றிவரும் என்ற உண்மையை அழகிய எடுத்துக் காட்டின் வழியே பதிவு செய்துள்ளார் சோழன் நல்லுத்திரனார். மத்தம் பிணித்த கயிறும், கடுஞ…

    • 0 replies
    • 631 views
  6. தொழூஉப் புகுத்தல் - 44 https://app.box.com/s/whiuyavvkda7ciliey8majysk2qxn3sy வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி அண்ண அணிந்து ஊர் ஆயின் நண்பகல் போழ்து ஆயின் கண் நோக்கு ஒழிக்கும் கவின்பெறு பெண் நீர்மை மயில்எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன வெயிலோடு எவன் விரைந்து சேறி? உது காண்! பிடி துஞ்சு அன்ன அறைமேல தடிகண் புரையும் குறுஞ்சுனை ஆடிப் பனிப்பூம்தளவொடு முல்லை பறித்துத் தனிக் காயாம் தன் பொழில் எம்மொடு வைகிப் பனிபடச் செவ்வாய் நும் ஊர்க்கு! இனிச் செல்வெம் யாம் மா மருண்டன்ன சிற்று ஆய்த்தியர் நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை அவை ஆ முனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செவ்வாய் ஓர் கண்கொத்திக் கள்வனை நீ எவன் செய்தி பிறர்க்கு? …

    • 0 replies
    • 688 views
  7. தொழூஉப் புகுத்தல் - 43 https://app.box.com/s/hque5sn1x55esq8fn1ine0co8p0fnb2q நீ நீங்கு ! கன்று சேர்ந்தார் கண் கத ஈற்று ஆ சென்றாங்கு வண் கண்ணள் ஆய் வரல் ஓம்பு! யாய் வருக ஒன்றோ! பிறர் வருக! மற்று நின் கோ வரினும் இங்கே வருக! தளரேன் யான் நீ அருளி நல்க பெறின் (முல்லைக் கலி: 611:08-12) பொருள் இளம் கன்றைஎவர் நெருங்கினாலும் தாய்ப்பசு விரட்டி விரட்டித்தாக்கும். என் பின்னால் நீ தொடர்ந்து வராதே ! கடும் சினத்தொடு என் ஆயி வருகிறாள் உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரிக்கை செய்கிறாள் ஒரு பெண். உன் தாய் வந்தாலும் வேறு எவர் வந்தாலும் வரட்டும்! எனக்கு ஒன்றுதான். உன் அரசனே வந்தாலும் இங்கே வரச்சொல்! நான்அஞ்ச மாட்டேன். நீ மட்டும் என்னை விரும்புவதாக ஒத்துக் கொண்ட…

    • 0 replies
    • 476 views
  8. https://app.box.com/s/tiq0mpoy4ockv05yph6nltobi0nsgusq தொழூஉப் புகுத்தல் - 42 தொழுவினுள் கொண்ட ஏறு எலாம் புலம் புகத் தண்டாச் சீர் வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 104: 60-62) தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 106: 31-33) பொருள்:- முல்லைக் கலியில் ஏறு தழுவுதல் இல்லை. காதலர்கள் தழுவுவது நிறையவே இடம் பெற்றுள்ளது. உரையாசிரியர்கள் ஆரிய வைதிகத்தைத் தழுவி உரைசெய்த படியால் தெரியாமல் ஏறுகளையும் தழுவி விட்டனர் போலும்! இதனை நுட்பமாக ஆய்வு செய்து கழுவி விட வேண்டியது தமிழ் அறிஞர்களின் கடமை.

    • 0 replies
    • 516 views
  9. https://app.box.com/s/wgp9l95fcza3ubmxfcnqgk8w9hx4s3yb தொழூஉப் புகுத்தல் - 41 தண்ணுமைப்பாணி தளராது எழூஉக பண் அமைஇன் சீர்க் குரவையுள் தெள் கண்ணித் திண்தோள் திறல் ஒளி மாயப்போர் மாமேனி அம்துவர் ஆடைபொதுவனோடு ஆய்ந்த முறுவலாள் மென் தோள் பாராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்தது உரை (முல்லைக் கலி 102: 35-40) போர் ஏற்று அருந்தலை ஏறுஅஞ்சலும் ஆய்ச்சியர் காரிகை தோள் காமுறுதலும் இவ்விரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ எம் கேளே! கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல் கேளா அளை மாறியாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே (முல்லைக் கலி 106:40-45) பொருள்:- தளராத இசையோடு ஒன்றிய ஒரு பெண் எந்த வீரனை விரும்புகிறாள் என்பது அவனது உடல் மொழியாலும், குரவ…

    • 0 replies
    • 701 views
  10. உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது ! அது மொரீசியசு (Mauritius) (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2, ௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.5 தமிழில் ௫) இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரிசியசின் பல பகுதிகளில் ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களை தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் வாழ்கின்றனர்.. இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், …

    • 3 replies
    • 1.5k views
  11. தேசிய தலைவரின் அரிய குடும்ப படம்

    • 18 replies
    • 6.5k views
  12. பின்வரும் இரண்டு வசனங்களுக்கும் கருத்தில் என்ன வித்தியாசம்? இரண்டு வசனத்திலும் ஒரே சொற்கள்தான் உள்ளன ஆனால் ஒழுங்கமைப்பு வேறு. வசனம் 1: இறுதியில் அவன் தான் வெல்வான் வசனம் 2: அவன் இறுதியில் தான் வெல்வான்

    • 6 replies
    • 842 views
  13. தொழூஉப் புகுத்தல் - 40 https://app.box.com/s/sbliny1zot6nfh8k1ajvchpqxsmh3avh அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி கரும்ம்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு மாற்றாரைக் கடக்க எம் மறம்கெழு கோவே! (முல்லைக்கலி 106: 47-50) பொருள்:- தை முதல் நாளில் பிறந்த காளைக்கன்று வளர்ந்து போர்ப் பயிற்சி பெற்றுள்ளது. காதலனையும் தேர்வு செய்தாயிற்று. காளை காதலன் வரிசையில் காடும் போற்றுதற்குரியது ஆகிறது. பெரு வேந்தர்களுக்கு ஏறுகளைத் திறையாகத் தரும் வழக்கம் இருந்துள்ளது. அதனோடு தொடர்பு உடைய ஏதோ ஓர் அரிய அகச்செய்தி இதனுள் புதைந்து கிடக்கிறது. இது முற்றிலும் உயர் ஆய்வுக்கு உரியது. முல்லைக் கலியில் மிகப்பெரிய செய்தியைத் தாங்கியுள்ள மிகச்சிறிய பாடல்…

    • 0 replies
    • 561 views
  14. தொழூஉப் புகுத்தல் - 39 https://app.box.com/s/x8zuxwnvl9cwoxi5gz26qs7eiyjfyvhu மணி வரை மருங்கின் அருவி போல அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்ம்பு போல் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் வளையபு மலிந்த கோடு அணி சேயும் பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும் பெருமலை விடர் அகத்து ஒருங்குடன் குழீஇ படுமழை ஆடும் வரை அகம் போலும் கொடி நறை சூழ்ந்த தொழூஉ (முல்லைக்கலி 103: 11-21) பொருள்:- கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துக் காளைகள் பலவும் களமாடும் காட்சி சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் மலை இடுக்குகளின் இடைவெளியில் ஒன்று கூடி பருவமழை அடித்…

    • 0 replies
    • 507 views
  15. தொழூஉப் புகுத்தல் - 38 https://app.box.com/s/9bt4976dpxbb8gl4f7k800ctu6jt5c43 மெல் இணர்க் கொன்றையும் மென் மலர்க் காயாவும் புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர் பல ஆன் பொதுவர் கதழ்விடை கோள் காண்மார் முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லர் பெருமழைக் கண்ணர் மடம் சேர்ந்த சொல்லர் கடரும் கனம் குழைக் க்ஆதினர் நல்லவர் கொண்டார் மிடை (முல்லைக்கலி 103: 1-9) பொருள்:- கொன்றை மலர், காயாம்பூ, வெட்சி, பிடவம், தளவம், கஞ்சா, குருந்த மலர், கோடல், பாங்கர் போன்ற மணமுள்ள மலர்களைக் கண்ணியாகத் தொடுத்து ஏறுகளோடு மோதும் வீரர்கள் அணிந்து கொண்டனர். அழகிய இளம் பெண்கள் மேடைகளில் இடம் பிடித்தனர். '…

    • 0 replies
    • 465 views
  16. தொழூஉப் புகுத்தல் - 37 https://app.box.com/s/x3sldzhrfoaypkbbb9jwj52ldfidzctv முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாதுஎரு மன்றத்து அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 103: 56, 62) பொருள்:- ஆற்று நீர்த்துறை, பெரிய ஆலமரம், பழமையான மரங்கள் உள்ள இடங்கள…

    • 0 replies
    • 538 views
  17. செம்மொழியால் தமிழ் கண்ட நன்மை... 'செம்மொழியான தமிழ் மொழியே' என்ற பாடல் சிலருக்கு சங்க நாதமாகவும், சிலருக்கு சகிக்க முடியாத இரைச்சலாகவும் பாடப்பட்டு, 5 வருடம் முன்பு தொடங்கப்பட்ட செம்மொழி மாநாடு சாதித்தது என்ன ? தமிழ் செம்மொழி ஆன பின், 'ஆகா... ஓஹோ...!' என வானுயர குதித்தார்கள். இனி தமிழுக்கு ஏற்றம்தான் என்றார்கள் .கண்டது ஏமாற்றம் தான். தமிழை அறிவித்த பின் அப்போதைய காங்கிரஸ் அரசு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளையும் அறிவித்து, தமிழ் மொழிக்கு செம்மொழி என்று தனி பெருமை ஒன்றும் கிடையாது என்பது போல் குறுக்கி விட்டார்கள். முந்தைய காங்கிரஸ் அரசு மலையாள மொழிக்கும் தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளாம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என அறிவித்ததால் …

  18. இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு. அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்விழாமலும் எக்குத்தப்பாகச் சொல்விழாமலும் காத்து வருகின்றனர். வாழ்த்துச் சொன்னவர்களை…

    • 0 replies
    • 569 views
  19. இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள். தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது… இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர் “இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்” என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார். அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர…

    • 2 replies
    • 987 views
  20. தொழூஉப் புகுத்தல் – 32 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 எல்லா! இது ஒன்று கூறும் குறும்பு இவர் புல் இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம் கொல் ஏறூ கோடல் குறை எனக் கோவினத்தார் பல் ஏறு பெய்தார் தொழூ உ (முல்லைக் கலி. 107: 1,4) விலை வேண்டார் எம் இனத்து ஆயர் மகளிர் கொலை ஏற்று கோடு இடைத் தாம் வீழ்வார் மார்பின் முலை இடைப் போலப் புகின் (முல்லைக் கலி. 103:71,73) பொருள்:- கோவினத்தார் தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு புல்லினத்தார், குடம்சுட்டவர் ஆகியோர் தமது ஏறுகளை வென்று அதன் வழியே கோவினத்து ஆயர் மகளிரை அடைந்து விடக் கூடாது என்று திட்டமிடுகின்றனர். அதற்காக மிகுதி…

    • 1 reply
    • 668 views
  21. தொழூஉப் புகுத்தல் - 36 https://app.box.com/s/36iyxisru0pdpj4nyat7w6f99cm1oldn தளி பெறு தண்புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று முளிமுதல் பொதுளிய முன் புற பிடவமும் களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று ஞெலியுடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் மணிபுரை உருவின காயாவும் பிறவும் அணிகொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் மாறு எதிர் கொண்ட தம் மைந்துடன் நிறுமார் சீரு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ ஏறு தொழூஉப் புகுத்தனர் இயயைபு உடன் ஒருங்கு (முல்லைக் கலி 101: 1-9) பொருள்:- முல்லைக் கலியின் முதற் பாடல், தளியென்பது கோயில் ஆகிய அரண்மனை. அங்கு பெய்யும் முதல் மழை நாட்காட்டியின்படி அமையும். அன்று பிடவ மலர் அரும்பு விடும். அதைச் சேர்த்து வைத்துக் கண்ணியாக ம…

    • 0 replies
    • 463 views
  22. சமீபத்தில் வெளியான "A concise History of South India" ஆசிரியர் நொபுரு கராசிமா என்னும் புத்தகத்தில் திராவிட தெலுங்கர் திரு. சுப்பராயலு என்பவர் கல்லணை கட்டியது கரிகாலன் அல்ல. வெள்ள நீர் வடிவதற்குண்டான அமைப்பையே கரிகாலன் செய்தான் என் கிறார். இது நிகழ்கால தமிழரின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக தமிழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம். கரிகாலன் தான் கல்லணையை கட்டினான் என்பதற்குண்டான ஆய்வுகள், அதாரங்களை தமிழர்கள் பதிவிடுங்கள். http://www.thehindu.com/books/books-reviews/fresh-perspectives-on-south-indian-history/article6926001.ece

    • 17 replies
    • 24.3k views
  23. ஒலிபெயர்ப்புப்போர்வையில் தமிழைச் சிதைக்கும் முயற்சி: அதிர்ச்சியில் தமிழறிஞர்கள்... கணிப்பொறியில் தமிழில் ஓரிடத்தில் அடிப்பதை அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது ஒருங்கு குறி (யூனிகோடு). இதனைப் பயன்படுத்திக் கிரந்தத்தைப் புகுத்தச் சிலர் முயன்றனர். தமிழ்க் காப் புக்கழகமும் பிற தமிழமைப்புகளும் தமிழறிஞர்களும் கடுமையாக எதிர்த்த தால் இது கைவிடப்பட்டது. உண்மையிலேயே கைவிடப்பட்டதா, அல்லது சமயம் பார்த்து நுழைய காத்து இருக்கிறதா என்ற ஐயம் தமிழறிஞர்களிடையே இன்னமும் இருக்கிறது.. இது தொடர்பாக தமிழ்க் காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம். கணிப்பொறி மூலம் ஒருங்குகுறி என்னும் சீருருவைப் பயன்படுத்தித் தமிழைச் சிதைக்கும் முயற்சிகள் ஓய்ந…

    • 1 reply
    • 905 views
  24. தொழூஉப் புகுத்தல் - 35 https://app.box.com/s/m3vf15ei1qxu28qa1cmbl7zptgem8xot பார் முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்கு சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் (திருமுருகு 45-46) வென்வேல் விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் ஓரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறை வாய் நிலை இய மலர் வாய் மண்டிலத்தன்ன... -அறத்துறை நின்னே! (புறம் 175: 5-9) பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் இரங்கு முரசின் இனம் சால் யானை நிலம் தவ உருட்டிய நேமியோரும் (புறம் 270: 1-3) கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் (புறம் 185: 1-2) பொருள்: சூர்ப்பு எனப்படும் வளிமண்டல உள் இழுப்பினால் உலக உருண்டையின் ஆட்டை தளர்வதைக் கண்டு அறிந்து, அவ…

    • 0 replies
    • 667 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.