கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
"கார்த்திகை தீபம்" "கார்த்திகை திருநாள் தீபம் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லுது! கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் காரிருளை அகற்றி வெளிச்சம் தருகுது!" "காக்கை வன்னியன் இன்றும் இருக்கிறான் காசுக்கு தன் இனத்தையே விற்கிறான் காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கிறான் காரணம் கேட்டால் எதோ மழுப்புறான்!" "காணும் காட்சிகள் இருளை கொடுக்குது காது கேட்பதும் பொய்யாய் தெரியுது காதல் புரிந்தே கொலையும் செய்கிறான் கார்த்திகை தீபம் உண்மை பரப்பட்டும்!" "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெ…
-
- 0 replies
- 220 views
-
-
'மாலைக் காற்று மெதுவாய் வீச' "மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே !" "பாடும் குயில்கள் பறந்து செல்ல பாதை நிறைய பாசம் விதைத்து பாலைவனத்தை சோலை வானம் ஆக்கி பாடல் ஒன்றை நட்பில் பாடியவளே !" "வெண் புறா மாடத்தில் பதுங்க வெண்நிலா புன் முறுவல் பூக்க வெற்றி மகளாய் இதயத்தில் பதுங்கி வெறுமை நீக்கி உத்வேகம் தந்தவளே !" "வானம் தொடும் வண்ணத்துப் பூச்சியாய் வாசமிகு மலராய் பாசமிகு உறவாய் வான வில்லாய் ஜாலங்கள் புரிந்து வாழ வைக்க தன…
-
- 0 replies
- 1.4k views
-
-
மரண ஓலம் மனதைக் கிழிக்க மனித உடல்கள் சிதறிக் கிடக்க மனிதம் வெட்கி மௌனித்து மரணித்து போன நாளை மறக்க முடியுமா? மானிட வரலாற்றில் எங்கும் கண்டறியா செங்குருதியாறு மண்ணில் பெருக்கெடுத்தோட இருப்பிழந்த இனமொன்றின் இகத்தின் மீது உலகமே சேர்ந்து நெருப்புமிழ்ந்த நாளை மறக்க முடியுமா? மனித உரிமைகள் தமிழருக்கில்லை தமிழர்களெல்லாம் மனிதர்களில்லை தமிழர்களெல்லாம் மனித ஜாதிகளில்லை மிருக ஜாதிகளென்று உலக வல்லரசுகளால் உணர்த்தப்பட்ட நாளை மறக்க முடியுமா? கொட்டும் எறிகணை மழையிலும் கொத்துக் குண்டு வீச்சிலும் கொதிக்கும் இரசாயன குண்டுப் பொழிவிலும் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகளைக் கடந்தபடி உணர்வுகளெல்லாம் மரத்தபடி உயிரைக் கையில் பிடித்தபடி ஒற்றை வரிசையில் நின்றபடி ஒரு குவளை கஞ…
-
- 0 replies
- 478 views
-
-
முதுமையாகிலனோ ——— அப்போ வாய் பொத்தியபடி என் கதை கேட்டவர்களிடம் இப்போ நான் வாய் பொத்தியபடி அவர்கள் கதை கேட்டுக்கொண்டு காலாவதியான பொருள்களைப்போலவே காத்திருக்கிறேன் தூக்கி எறியும் காலம் ஒன்றுக்காக. பா .உதயகுமார் /OSLO
-
- 0 replies
- 1.1k views
-
-
அந்தாதிக் கவிதை / "சமாதானம்" [இரு கவிதைகள்] "சமாதானம் தொலைத்த புத்தரின் பக்தர்களே பத்தர்கள் என்பது காவி உடுப்பதுவா? உடுத்த காவியின் பொருள் தெரியமா? தெரியாத உண்மைகளை தேடி உணராமல் உணர்ந்த மக்களை போற்றி வாழ்த்தாமல் வாழ்த்து பாடி மக்களை ஏமாற்றாதே? ஏமாற்றி குழப்பி துவேசம் பரப்பி பரப்பிய பொய்யில் மனிதத்தைக் கொல்லாதே! கொல்லாமல் இருப்பதுவே புத்தனின் சமாதானம்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................... "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத…
-
- 0 replies
- 632 views
-
-
"மூன்று கவிதைகள் / 08" 'உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்?' உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன் மன்னவனின் மடியிலே மயக்கம் வருவதேன் அன்ன நடையாளின் உடலெல்லாம் பூரிப்பதேன் மென்மையான தழுவல் இன்பம் பொழிய உன்னதமான காதல் வேறெங்கே காண்பேன்? பெண்ணொருத்தி சாய்ந்து படுத்த கோலம் கண்ணிரண்டும் பார்த்து மகிழ்ந்த நேரம் மண்ணில் பிறந்ததின் பயனைக் கண்டேன் விண்ணில் பறந்த உணர்வு கொண்டேன் எண்ணங்கள் எல்லாம் அவள் மட்டுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'மனதைத் தொடும் நினைவுகள்' மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்…
-
- 0 replies
- 187 views
-
-
"போனால் போகட்டும் போடா" "போனால் போகட்டும் போடா மனிதா போதை போனதும் தெரியுது உலகமடா ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!" "ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!" "ஊடல் கொண்டு சென்ற மனைவியை கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல் தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!" "உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்திய…
-
- 0 replies
- 318 views
-
-
கண்ணிற்குள் நின்றவள் கருத்தினில் திரிந்தவள் தூக்கத்திலும் துணையவள் வார்த்தைகளின் வரமவள் கற்பனையின் தாயவள் இன்னொரு பெண்ணினை அணைக்கையிலும் அகலாது நின்றவள்... காமத்திலே பேசாது சிரிப்பாள் சோகத்திலே நான் ஊறங்க மடி தருவாள்! சொற்கள் இல்லை என்னிடம் திருடிச் சென்றவளே நீ எவ்விடம்? பொருள் தேடி நான் போகையிலே இருள் எல்லாம் எனக்குள் கொட்டி அருள் இன்றிப் போனாயடி... இறைக்காத கிணறு போல் பிறக்காத பிள்ளையை எண்ணிக் கலங்கும் தாயைப் போல் வார்த்தைகள் இன்றி தவிக்கிறேனடி... தாயே தமிழே என் தளர்வெல்லாம் போக்கும் கவிதாயினியே இனி என்று வருவாய் என்னிடம்...?
-
- 0 replies
- 1.6k views
-
-
'ஊன்றுகோல்' காத தூரத்தையும் நொடியில் கடந்து காற்றைக் கிழித்து ஓடிய கால்கள் காடு மேடு அளந்த பாதம் காலக் கொடுமையால் துணை தேடுது! பூண் சூட்டிய நுனியைப் பிடித்து கண்ணின் மங்கிய ஒளியில் பார்த்து மண்ணைத் தடவி மெல்ல நடக்கிறேன் வண்ணக் கொடியாளாக இன்று ஊன்றுகோல்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1933 ['ஊன்றுகோல்'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32731437279838163/?
-
- 0 replies
- 163 views
-
-
ஓடி விளையாடு பாப்பா ஓயாமல் படித்துவிடு பாப்பா கூடி விளையாடு பாப்பா குறைக்கூறலாகாது பாப்பா அகிலத்தில் உயர்ந்தது அன்பு அனைவருக்கும் வேண்டும் நற்பண்பு அன்னைக்கு இணையில்லை எதுவும் ஆசானுக்கு தெய்வமும் பணியும் பசிக்கு உணவிடல் தர்மம் பாவத்தால் தொடரும் கர்மம் பாதகத்தைக் களைத்திடு நீயும் பாருக்குள் செழித்திடும் நேயம் ஆதியில் இல்லையடி சாதி அறவாழ்விற்கு வேண்டுமடி நீதி மெய்க்கு துணையாகும் உயிரும் மெய்ஞானத்திற்கு துணயாகி உயரும் பஞ்சப்பூதத்தின் தனித்துவம் செந்தீ பாரதத்தின் அமரத்துவம் பாரதி பெண்ணுரிமைக்கு வித்திட்டான் மகாகவி பெண்கல்விக்கு அவனே இறைவி அறியாமை அகற்றிடு பாப்பா ஆக்கமாய் உழைத்திடு பாப்பா ஆணவம் நிலைக்காது பாப்பா …
-
- 0 replies
- 548 views
-
-
"பாட்டி வாரார் பாட்டி வாரார்" [இரண்டு பாட்டிகளின் கதை] "பாட்டி வாரார் பாட்டி வாரார் பார்த்து படியில் கால் வைத்து பாதியில் நின்று கை காட்டி பாட்டி வாரார் பாட்டி வாரார்" "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் பாலகனுக்கு கலந்து அன்புடன் ஊட்ட பாவம் பாட்டி இந்த வயதிலும் பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" "பாடி ஆடி விளையாட்டு காட்ட பால் கொடுத்து கதை சொல்ல பாயில் அணைத்து சேர்ந்து படுக்க பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்" "பாத்திரம் கழுவி வீடு துடைக்க பானை நிரம்ப சோறு காச்ச பாதை காட்ட நல்ல கதைசொல்ல பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" ****************** "பாட்டி வாரார் பாட்டி வாரார் பாட…
-
- 0 replies
- 174 views
-
-
"பேதையே போதையேன்" "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே சிற்றிடையாள் ஒளவை அன்று கூறினாள் சினம் ஏன் இன்று உனக்கு ?" "பேதையே போதையேன் நானும் கேட்கிறேன் பேரறிவு கொண்ட தலைவனே சொல்லாயோ? பேச்சில் எதற்குத் தையல் மட்டும் பேரொலி உடன் விடலையைச் சேர்க்கையோ?" "தெண்கள் தேறல் மாந்தி மகளிரென தென்னாட்டு மூதை பாட்டுப் பாடினாள் தெளிவாகத் தெரியுது இருவரும் அருந்தினரென" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 609 views
-
-
வெள்ளிக்கிழமை வேலை ---------------------------------------- இன்று வெள்ளிகிழமை, ஏன் வேலை செய்ய வேண்டும் என்று மனம் கேட்கின்றது. உண்மையைச் சொன்னால் அது ஒவ்வொரு திங்கட்கிழமையிலிருந்தும் இதே கேள்வியையே கேட்கின்றது. முன்னர் ஒரு காலத்தில், வேலை செய்ய ஆரம்பித்து இருந்த நாட்களில், நாங்கள் இவ்வளவு வயது பிந்தி வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றோம், வேறு பல நாட்டவர்கள் 21 வயதுகளிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் என்று கவலை கூட பட்டும் இருக்கின்றோம். படித்து முடிப்போம் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்து முடிக்கவே எங்களுக்கு 26 அல்லது 27 அல்லது அதற்கு மேலும் வயதாகி விடுகின்றது. ஆனால், அந்த கூடுதலான ஐந்தாறு வருடங்களாவது நினை…
-
- 0 replies
- 407 views
-
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்! அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்! அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம் ச…
-
- 0 replies
- 370 views
-
-
History Repeats Itself வரலாறுகள் சுழண்டு கொண்டு தான் இருகின்றன அன்று ஒரு நாள் ஈழத்து கிழவன் ஒருவன் சமஸ்டி கேட்டான் இதே காவி உடை கண்டியில் இருந்து வந்த ஊர்வலத்தால் கடைசி வரை துன்பம் தொடர்ந்தது இன்று ஒரு நாள் இன்னும் ஒரு கண்டி ஊர்வலம் இது முஸ்லிமுக்கு மட்டுமல்ல ஈழ தமிழனுக்கும் இது ஒரு எச்சரிக்கை இந்துவும் முஸ்லிமும் இனி இணைந்தால் ஒழிய இலங்கை பெரும் தேசியம் எப்பவும் அடங்காது இரண்டு மாநிலமும் இணைந்த தீர்வு ஒன்று தான் இந்துவுக்கு முஸ்லிமுக்கும் பாதுகாப்பாகும் .
-
- 0 replies
- 1.1k views
-
-
நவீன கவிதை / "காதலற்ற கோடைக் காலம்" "ஏழு வர்ண அழகு தொலைத்து எங்கும் விரிந்து பரந்த நீல ஆகாயமே விண்மீன்கள் சிமிட்டாத வானமே கனவுகள் தொலைத்தேன் மகிழ்ச்சி இழந்தேன் நீண்ட பகல் கோடையே வரட்ச்சி தந்து வாழ்வை கடினமாக்கி இதயத்தை வலியால் நிரப்புவது ஏன்?" "காய்ந்த இலைகள் சருகாகி வறண்ட மண்ணில் விளையாடுது வெப்பம் தாங்காது குருவிகள் கூட்டுக்குள் உறங்குது …
-
- 0 replies
- 2.1k views
-
-
🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” / In English & Tamil அமைதியான வடக்கின் கரைகளிலும் காற்றுவீசும் கிழக்கின் சமவெளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேதி வருகிறது அது புனிதமானது, நிலையானது அது மையால் எழுதப்படாத நாள் அது நவம்பர் இருபத்தியேழு! மறைந்து போக மறுத்த மக்களின் இரத்தம் கண்ணீராலும் சுவாசத்தாலும் எழுதப்பட்ட நாள்! பல்கலைக்கழகங்களைக் கனவு கண்ட மகன்கள் வகுப்பறைகளில் கவிதைகளைப் பேசும் மகள்கள் கதிரவனுடன் உதித்த விவசாயிகள் தாலாட்டுப் பாடல்கள் பாடும் தாய்மார்கள் பனைமர நிழலின் வயல்களில் சாய்ந்த தந்தைகள் வாழ, பேச, வாக்களிக்க, சமமான மனிதர்களாக மதிக்கப்பட சாதாரண உரிமைகளைக் கேட்கும் சாதாரண மனிதர்களே இவர்கள்! அவர்களின் அமைதியான நம்…
-
- 0 replies
- 177 views
-
-
புதுக் கவிதை / நவீன கவிதை: "விடுதலையின் வித்து" "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டு, உரம் இட்டு கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!" "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்றுச் சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!" "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் ச…
-
- 0 replies
- 445 views
-
-
அரசியல் ஆதிகாலம் தொட்டு எம்மை ஆட்டுவிக்கும் அரசியல் வேதனைக்குள் மக்கள்தன்னை விட்டுவிட்ட அரசியல். சாதியென்ற சகதியுள்ளே தாழ்ந்து விட்ட பேயரை மோதவிட்டி லாபம்காண முயலுகின்ற அரசியல் கட்சியென்ற பேரில்சேரும் கள்வர்தம்மை ஆட்சியில் எச்சரிக்கை ஏதுமின்றி ஏற்றிவைக்கும் மக்களை உச்சநிலை வறுமைக்கேற்றி ஒன்றுமற்ற கையராய் பிச்சையேற்க வைத்திடும் ப…
-
- 0 replies
- 737 views
-
-
ஒரு தேன்கூடு வீட்டில் கட்டப்பட்டுவிட்டது. தேனீக்களை குறை சொல்வது நியாயம் இல்லாத ஒரு செயல். இங்கு என்றும் எங்கும் பூக்கள். தேனீக்கள் பூக்களை காய்களாக்கின்றன. அவை பழங்கள் ஆகின்றன. அதிலிருந்து பறவைகள் காடுகளை உருவாக்குகின்றன, பூமி வாழத் தகுந்த இடமாக தொடர்ந்தும் இருக்க தேனீக்களும் பறவைகளும் விடாமல் பாடுபடுகின்றன. கூட்டைக் கட்டிய தேனீக்கள் பக்கத்து வீட்டில் கட்டியிருந்தால் நல்லாயிருக்குமே என்றும் தோன்றுகின்றது. வீட்டில் இருவருக்கும் தேனீக்கள் கொட்டிவிட்டன. புளியா அல்லது சுண்ணாம்பா என்ற விஞ்ஞான விளக்கம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. வீக்கமும், நோவும் நின்று, பின்னர் மூன்று நாளில் போனது. கொல்லப்படக்கூடாத பிறவிகள் இவை. மெதுவாக தண்ணீர் அடித்தால் ஓடி விடும் என்றனர். தண்…
-
- 0 replies
- 509 views
-
-
"அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"
-
- 0 replies
- 353 views
-
-
அந்தாதிக் கவிதை / "நல்லதே நடக்கும்" "நல்லதே நடக்கும் நன்மை செய்வோம் செய்வது எதுவும் பெருமை கூட்டட்டும் கூட்டுவதும் கழிப்பதும் இயற்கையின் விளையாட்டு விளையாடல் இல்லையேல் வாழ்வு இனிக்காது இனிப்பது எதிலும் கவனம் எடுத்திடு!" "எடுத்த அடியை பின்னோக்கி வைக்காதே வைக்காதா தீர்வால் நேரத்தை வீணாக்காதே வீணாக்கும் எதுவுமே திரும்பி வராதே வராததை மறந்து செய்திடு நல்லது நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 629 views
-
-
"பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன்" "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன் ஆர்வம் கொண்டு ஆவலாய் பார்த்தேன் கர்வம் தொலைத்த கருணை கண்டேன் மார்பில் என் மாயவனை ஏற்றினேன்!" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களின் பேச்சில் கன்னியும் கலங்கினாள் மண்ணின் வாசனையில் மலர்ந்த அவனை பண்பின் மகள் பல்லாண்டு வாழ்கவென்றாள்!" "விழிகளின் நடனத்தில் வித்தைகள் கண்டு மொழியின் அழகில் மொத்தத்தையும் கேட்டு ஆழியின் அலையாய் ஆடி ஓய்ந்து எழில் கொழிக்கும் என்னவனுடன் சேர்ந்தேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 427 views
-
-
அம்மாவும் போராளிக் கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரையும். . எங்கள் வீடு எப்பவும் போராளிகளுக்கு நிழலாக இருந்தது. என் அம்மாவும் அப்பாவும் போராளிகளையும் தங்கள் பிள்ளைகளாகவே அரவணைத்தார்கள். கவிதை ஈடுபாடுள்ள என் பெற்றோர் புதுவை இரத்தினதுரை மீதும் அவரது கவிதைகள்மீதும் பெருமதிப்பு வைத்திருந்தனர். போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்தபோது போராளி நண்பர்கள் பலர் என் அம்மாவைப் போய்பார்த்து நலம் விசாரித்த சேதியை தம்பி பாரதிதாசன் மூலம் அறிந்து நிமதியடைந்தேன். எனினும் சக கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரை இன்னும் அம்மாவைப் போய்ப் பார்க்கவில்லை என்கிற சேதி கவலை தந்தது. . அந்த நாட்க்களில் கொங்கு நாட்டு காட்டாறான கொடுங்கரை ஆற்றுக்கு ஓசை காழிதாசுடன் சென்றிருந்தேன். நி…
-
- 0 replies
- 967 views
-
-
"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை" [ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும், நீதிமானும், இறையியலாளருமான இவரின் புகழ் பெற்ற கவிதை "I choose to love you in silence" யின் தமிழாக்கம் இதுவாகும்.] "நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை மௌனத்தில் நிராகரிக்க முடியாது என்பதால் நான் தனிமையில் காதலிக்கிறேன் உன்னை தனிமையில் நான்மட்டுமே சொந்தம் என்பதால் நான் தூரஇருந்து மெச்சுகிறேன் உன்னை தூரம் அன்புவலிக்கு கவசம் என்பதால் நான் காற்றில் முத்தமிடுகிறேன் உன்னை காற்று உதடைவிட மென்மை எ…
-
- 0 replies
- 319 views
-