Jump to content

புதுக் கவிதை / நவீன கவிதை: "விடுதலையின் வித்து"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
புதுக் கவிதை / நவீன கவிதை:  "விடுதலையின் வித்து"
 
 
"சரியான நேரத்தில், சரியான மண்ணில்
சரியான விதை போட்டு, உரம் இட்டு
கிருமி நாசினி தெளித்தால்,
மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்!
ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக
போய்விடும்!!"
 
"நாம் வாழ்ந்தோம் இருந்தோம்
என்று இல்லாமல்,
எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம்,
எப்படி வாழ்கிறோம் சற்றுச் சிந்தி
உன் வரலாறு புரியும்
உன் பெருமை தெரியும்
உன் இன்றைய வாழ்க்கைக்கான
விடுதலையின் வித்து அறிவாய்!"
 
"உலகத்தை தூக்கத்திலிருந்து
ஒரு வித்து கிழித்தெறிந்தது
அனைத்து உண்மை இதயங்களிலும்
இரத்தம் சிந்தியது
ஒருமுறை போராடி
உலகுக்கு கொண்டு சென்றான்
விதையை விதைத்தான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
இவன் தான் மாண்டு
தன் இனத்துக்கு  தினை கொடுத்தான்!
விடுதலையின் வித்தாக வீழ்ந்த இவன்!"
 
"ஒருமுறை நீங்கள் கொடுக்க வேண்டிய
அனைத்தையும் கொடுத்தீர்கள்,
பெருமையுடன் அனைத்தையும் கொடுத்தீர்கள்
அது தேர்தல் காலம்!
ஒருமுறை எடுக்கக்கூடிய அனைத்தையும்
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்
அது நீங்கள் தன்னாட்சி அமைத்த காலம்!!
அச்சமும் பசியும் இன்று கூத்தாடுகிறது!
விதை விதைக்க
விடுதலையின் வித்தாக
இனி யார் வருவார்?"
 
"நாம் வாழ்ந்தோம் விதை விதைத்தோம்
அது கனவாகி விட்டது!
நாங்கள் முடிக்கவில்லை இடையில் தடுமாறிவிட்டது
இன்னும் சிலர் எரிகின்றனர்
இன்னும் சில இதயங்களில் இரத்தம் வழிகிறது!!"
 
"நான் இந்த பூமிக்கு ஏக்கத்துடன் வந்தேன்
ஏன் எதுக்கு, என்ன தேவை என்று தெரியாது?
என்னைத் தாண்டிய ஒரு இணைப்புக்காக
பசியோடு வருகிறேன்
ஆன்மீக அம்சங்களுக்காக
திறமையான வாழ்க்கை முறைக்காக
விடுதலை உணவுகளுக்காக
துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் உள்ள ஒரு நாட்டுக்கு வருகிறேன்
இழந்ததும் திருடப்பட்டதும் மறுக்கப்பட்டதும் அனைத்திற்கும்
விதையாக
விடுதலையின் வித்து ஆக வருகிறேன்!"
 
"சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு விதையாக
சுரண்டி வாழ்க்கை வாழ்பவருக்கு அம்பாக
உடைந்த இணைப்புகளுக்கு பூணாக
உங்கள் இதயத் துடிப்பை என் காது கேட்கிறது
உங்கள் வேதனையும்
உங்கள் கண்ணீரும்
என்னை மண்ணுக்கு இழுக்கிறது
விடுதலையின் வித்தாக!!"
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
278646507_10220883336735970_3270250879201127653_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Vvg8tK1lGrIQ7kNvgGK9mJ3&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBohF6W-Gk2q4Zu00Gm5KcB7bLC06GZDTp5f0E6nMpv9w&oe=66429025 278650255_10220883337255983_2753122145277033010_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=myMDuoBs0z4Q7kNvgHsbC9S&_nc_oc=Adj7YBC9u-2_6k-nxa46dNT2iQ0IYhV073hdkaL76esG1df52vTS-P9a87lFekeUVIINCAomXx9lXyjJRYm3DmKV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDNjOGEg3t2g6dUZyxCsfOQiijUS5dzgxCre9QZO7dRqw&oe=6642B5B6 278640460_10220883337775996_3172079906064231560_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LR0l-FG0v8gQ7kNvgGIxlga&_nc_oc=Adin4JhxlQYhrZ17AuQkc6a17dHcfOdwMZ_xyWv3vFlqssV3hrplXQU1TRE492tjRDSaeJ7kAGXzzM84c7c9hXnr&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCtRwGE2BIh0CYjBGhvWfaPh5WLZhj0KplR2n8F79RuSA&oe=6642AABF
 
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாஞ்ச் ஐயா! இப்ப  பூப்புனித நீராட்டு விழா என சொல்லுறதில்லையாம்.  saree ceremony  எண்டுதான் சொல்லுவினமாம்.
    • கணனியில் இருந்து குறோம் காஸ்ட் பண்ணி தொலைக்காட்சியில் ஊமைப்படம் பார்த்தது போல பார்ப்பேன்.
    • 👍...... ஓமான் அணியில் Kashyap Prajapati என்ற பெயரில் ஒரு வீரர் விளையாடுகின்றார். நமீபியாவிற்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆகினார். Prajapati என்ற பெயரைர் பார்த்ததுமே 'முண்டாசுப்பட்டி' படம் ஞாபகத்திற்கு வந்தது. இவர் உடனேயே அவுட் ஆகினதால், வந்த படம் அப்படியே போய் விட்டது. இவருக்கு குடியுரிமை கொடுத்த மாதிரி மற்ற வெளி ஆட்களுக்கும் கொடுக்கலாம் தானே........... 
    • ச‌வுதி த‌ந்திர‌மாய் செய‌ல் ப‌டுகின‌ம்.......................ஜ‌ரோப்பாவில் கால‌ போக்கில் பெட்ரோல் ஏற்றும‌தி செய்ய‌ ஏலாது க‌ர‌ன்டில் ஓடும் கார் இப்ப‌வே டென்மார்க்கில் ப‌ல‌ர் வேண்டி விட்டின‌ம் என்றால் ஜேர்ம‌ன் போன்ற‌ நாடுக‌ளை சொல்ல‌ வேணும்   ச‌வுதின்ட‌ பிலான் இப்ப‌டி முன்ன‌னி கால்ப‌ந்து வீர‌ர்க‌ளை வேண்டி அவ‌ர்க‌ள் மூல‌ம் உல‌கை த‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌ பார்க்க‌ வைச்சு சுற்றுலா நாடாக்குவ‌து ரொனால்டோ நீய்மார் வென்சிமா இப்ப‌டி புக‌ழ் பெற்ற‌ வீர‌ர்க‌ளை வேண்டி கால்ப‌ந்தை வ‌ள‌த்த‌ மாதிரியும் இருக்கும் த‌ங்க‌ட‌ நாட்டை சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து போகும் நாடாய் ஆக்குவ‌து தான் அவ‌ர்க‌ளின் திட்ட‌ம்.............................   ஓமான் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ முடியும் Qatarஅப்ப‌டி கிடையாது திற‌மையான‌ வீர‌ர் யாராய் இருந்தாலும் ச‌ரி கோடி காசை கொடுத்து த‌ங்க‌ட‌ நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் உதார‌ண‌த்துக்கு கைப‌ந்து விளையாட்டில்  பிரேசில் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஜ‌ரோப்பிய‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ட்டார் தேசிய‌ அணிக்காக‌ விளையாடுகின‌ம்😁..............................................
    • அதே கட்சி, அதே தீவிர இடதுசாரி அரசியல். பெரிதாக மாற்றம் எதுவும் வரப் போவதில்லை என்றே சொல்லலாம். அந் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வகையில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் அந் நாடு பெரும்பாலும் பெரும் போதைப் பொருள், ஆட் கடத்தல் முதலாளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிற்கு மெக்சிக்கோவால் இரண்டு பெரிய பிரச்சனைகள், பல ஆதாயங்களும் இருக்கின்றன. முதலாவது பிரச்சனை மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா உள்ளே வரும் போதைப் பொருட்கள். இரண்டாவது பிரச்சனை அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையூனூடாக அமெரிக்கா உள்ளே வரும் அகதிகள்.  இவை இரண்டுக்கும் எந்த தீர்வோ, முடிவோ இந்தப் புதிய தலைவரால் கிட்டப் போவதில்லை........ 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.