Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இன்று சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இன்று திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்…

  2. குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு பட மூலாதாரம்,Handout கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 30 மார்ச் 2026, 11:06 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்பவர் தான் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர். குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. ட்ரோன் தாக்குதலால் சுவர் இடிந்து விழுந்ததில் ச…

  3. 'அப்பா, ரொம்ப கஷ்டப்படுத்தறேனா': திமுகவால் நீட் விலக்கை சாத்தியமாக்க முடியாதது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் (எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்) செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த மாணவி தேவதர்ஷினிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு பிளஸ்டூ படிப்பை அவர் நிறைவு செய்துவிட்டார். ஆனால், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை மூன்று முறை எழுதியும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தற்கொலையால் உயிரிழந்தார். அவரது பெற்றோ…

  4. சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்! தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், ‘சிரித்துக் கொண்டே அழுவதாக’ ம.தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன. ம.தி.மு.க.,வுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதோடு, ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்…

  5. ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி! பாலியல் குற்றங்கள் குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளன. அவரது பேச்சுக்குப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா நேரடியாகவும் கடுமையாகவும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சர்ச்சைக்குரிய பேச்சு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எஸ்.வி. சேகர், சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருவதாகவும், குழந்தைகளுக்குக் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், அனைத்துத் தவறுகளுக்கும் அரசாங்கத்தையே குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பாலியல் குற்றங்கள்…

  6. வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து! 14 Mar 2026, 6:43 PM கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஞானபீட அமைப்பு வைரமுத்துவுக்கு ஞான பீட விருதை இன்று அறிவித்துள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் 1975-ல் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருதைவிட, தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடமாகவே கருதுகிறேன்” என்றார். கடந்த காலங்களில் ஞானபீட விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்துத் தான் த…

  7. நாம் தமிழரில் எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சீட்? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு ஜாக்பாட் Nantha Kumar RUpdated: Thursday, February 26, 2026, 0:43 [IST] சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்குகிறது. 234 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் எந்தெந்த சமுதாய மக்களுக்கு எவ்வளவு சீட் வழங்கப்பட்டு உள்ளது? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழுவிவரம் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும்படி விஜய் அழைப்பு விடுத்தார். ஆனால் தற்போது வரை எந்த கட்சியும் கூட்டணிக்கு ச…

  8. மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரண வழக்கு - 17 நாட்கள் கடந்தும் போராட்டம் நடைபெறுவது ஏன்? படக்குறிப்பு,ஆகாஷ் டெலிசன் கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடம் தரலாம். மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இதில் தொடர்புடையதாக கருதப்படும் காவலர்கள் மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யக் கோரி அவரது உடலை வாங்க மறுத்து 17வது நாளாக குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே "இறந்த உடலை வைத்து அரசியல் செய்வது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ள உ…

  9. "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு! Vishnupriya RUpdated: Friday, February 27, 2026, 17:14 [IST] சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Also Read இதுகுறித்து சங்கீதா தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது திருமண வாழ்க்கை தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாகவே கடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் கடந்த 2021 செப்டம்பர் டூ 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி கால கட்டத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினே…

  10. படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். 15 நிமிடங்களுக்கு முன்னர் ‘பாலு சத்தம் கேட்கவில்லை, ஏன் சும்மா நிற்கிறீர்கள்’ என சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் சொல்ல, ‘நீ செத்தாலும் பரவாயில்லை. என் சொத்தை வித்தாவது வெளியில் வந்துவிடுவேன்’ எனக் கூறிக்கொண்டே அந்தக் காவல்நிலையத்தின் முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அடித்தார்" என்பது நீதிமன்றத்தில் சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலம். இந்தக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உட்பட ஒன்பது காவலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். தூத்துக்குடி மாவ…

  11. தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. தமிழகத்தையே உலுக்கிய தந்தை - மகன் கொலை குறிப்பிட்ட அனுமதி நேரத்திற்குப் பிறகு கடையை திறந்து வைத்ததாகக்கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸார், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு போலீஸார் நடத்திய தாக்குதலில் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர். கடந்த அதிமுக ஆட்சிக் கா…

  12. தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரதத்திற்கு, இப்போது 'பெட்ரோல்' போடக் கூடப் பணமில்லாமல் என்ஜின் முனகிக் கொண்டிருக்கிறது. “தளபதி வருவார்... மாற்றத்தைக் தருவார்" என்று காத்திருந்த நிர்வாகிகளுக்கோ, இப்போது "கடன் காரன் வருவான்... கழுத்தைப் பிடிப்பான்" என்ற பயமே மேலோங்கி நிற்கிறது. தவெக-வின் தற்போதைய நிலைமையை 'ஆக்‌ஷன்' படம் என்று நினைத்து உள்ளே வந்தவர்களுக்கு, இப்போது அது 'சோகப் படமாக' நீண்டு கொண்டிருக்கிறது. கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியதோடு சரி, அடுத்தகட்ட நகர்வுகளில் தலைமை காட்டும் மந்தகதி அடிமட்டத் தொண்டர்களை அதிர வைத்திருக்கிறது. குறிப்பா…

  13. 5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள் சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026 சென்னை: அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்: தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்: சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சு…

  14. 'ஓர் அடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் ஆழமான பாறையில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 20 மார்ச் 2026, 12:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்தார். உயிருடன் இருந்த அவரை தீயணைப்பு துறையினர் முயன்றும் மீட்க இயலாத நிலையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ராணுவ வீரர்கள் விடிய விடிய முயற்சி செய்து அதிகாலை 3:30 மணியளவில் உயிருடன் மீட்டனர். தவறி விழுந்த இளைஞரே அங்கிருந்து போனில் பேசி, லொகேஷன் அன…

  15. சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ப.சிவசங்கர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சென்னையில் சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "இந்த மாதிரி திருமணம் செய்வதை என்னால் ஊக்குவிக்க முடியாது, இதை நான் பதிவு செய்யமாட்டேன்," என திருமணத்தை பதிவு செய்ய சென்றபோது விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத் கூறியதாக தெரிவிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன். சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில்…

  16. கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்! கூட்டணி குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். நம் தலைமையில் தான் ஆட்சி என்று இப்தார் நோன்பு திறப்பு விழாவில் விஜய் கூறினார். தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்றார். இப்தார் நோன்பு திறந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு தொழுகையில் அவர் கலந்து கொண்டார். பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டார். நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும், தயவுசெய்து அதை நம்பாதீர்கள். எல்லாம்வல்ல இறைவனின் அரு…

  17. தூத்துக்குடியில் 'பிளஸ் 2 மாணவி கொலை' - 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் மூன்றாவது இடம் பிடித்தாள். பிளஸ் 2 முடித்துவிட்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுதான் அவளுடைய கனவாக இருந்தது. அதற்குள் இப்படியொரு கொடூரத்தை யார் செய்தார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறி அழுகிறார், கொல்லப்பட்ட மாணவியின் சகோதரி. 'மாணவி கொல்லப்பட்டு ஆறு நாட்கள் கடந்த பின்னரும் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படாததால், சடலத்தைப் பெற மாட்டோம்' எனக் கூறி கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை, சாட்சிகளிடம் விசாரணை என வ…

  18. தேசிய அல்லது சர்வதேச மதிப்புள்ள விருதுகளை எப்படித் தோற்றுவிக்கிறார்கள்? By ஆர். அபிலாஷ் March 16, 2026 முதலில் தேசிய விருதுகள். இவை தொடர்ந்து அரசியல் சாய்வாலோ செல்வாக்காலோ மதிப்பிழந்து வந்தாலும் சாகித்ய அகாடெமி போன்றவற்றின் மதிப்பு அடிப்படையில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக சில நல்ல படைப்பாளிகளுக்கு அது விருதளித்துள்ளது, அதை நமது தேசியம் அங்கீகரிக்கிறது என்பதாலே உருவாகிறது. ஒவ்வொருமுறை மோசமான படைப்பாளிகள் தேர்வு செய்யப்படும்போதும் அது மதிப்புக் குறைவதைக் காண்கிறோம். தேர்வு சரியானதும் மதிப்பும் கூடுகிறது. அகாடெமியின் தேர்வுகள் மீதுள்ள புகார்கள், பரிந்துரைகள் நியாயமானவை. அதையெல்லாம் நடைமுறைப்படுத்த நாம் சரியான நபர்களை அரசியலில் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நபர்கள் அகா…

  19. நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சு.. அந்தர் பல்டியடித்த சி.வி சண்முகம் 17 Mar 2026, 4:12 PM நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்பேசுகையில், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே ச…

  20. புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி புதிதாக கட்சியை தொடங்கி உள்ளதாக சசிகலா அறிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்படி, தனது கட்சியின் பெயர் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (All India Puratchi Thalaivar Makkal Munetra Kazhagam) என்று தெரிவித்ததுடன், தனது கட்சியின் சின்னம் தென்…

  21. அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்! சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூ…

  22. எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் - தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் ப.சிவசங்கர் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் "எங்களுக்கு கழிவறைக்குக் கூட செல்ல கூட முடியாத நிலை உள்ளது"- கூட்டம் கூட்டமாக பெட்ரோல் பங்கை நாடி வரும் மக்களுக்கு இடையே பணியாற்றி வரும் பெட்ரோல் நிலைய பணியாளர் ஆஷாவின் வார்த்தைகள் இவை. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், உலக அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதன் அதிர்வலைகள் இப்போது தமிழகத்தின் வீதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. பட மூலாதாரம்,Getty Images உண்மையிலேயே பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? கடந்த சில நாட்களாக சமையல் எரி…

  23. செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது பட மூலாதாரம்,Getty Images 25 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் மதுராந்தகம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் சிறுமி மற்றும் அவரது நண்பர்கள் சென்ற இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த சிலரால் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. காவல்துறை அளித்துள்ள தகவல்படி, மதுராந்தகம் அருகே சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் வாகனத்தை இரண்டு பேர் தங்களின் இருசக்கர வாக…

  24. தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்! தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, சில மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக முறைப்பாடு அளித்தனர். இதேபோன்ற அறிகுறிகள் இருப்பதாக அதிகமான மாணவர்கள் முறைப்பாடு அளித்ததால், அவர்கள் சிகிச்சைக்காக அரசு வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழக அரசுப் பாடசாலை மாணவர்கள் மதிய உணவை சாப்பிட…

  25. ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு. ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெற்றிடமாகஉள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், எதிர்வரும் , 16ம் திகதி நடைபெறும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவிற்கு நான்கு, அதிமுகவிற்கு இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் பதவி கிடைப்பது உறுதியானது. திமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.