தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
எழுவர் விடுதலை; 30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 1,007 நாட்கள் ஆகியும் ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமல்ல: ராமதாஸ் ராமதாஸ்: கோப்புப்படம் சென்னை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-வது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவ…
-
- 0 replies
- 473 views
-
-
கரோனாவை தடுக்க ‘நானோ’ தொழில்நுட்பத்தில் நவீன முகக்கவசம்: காமராசர் பல்கலை பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு மதுரை கரோரனாவைத் தடுக்க, நானோ தொழில்நுட்பத்தில் நவீன முகக்கவசத்தை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆரோக்கிய தாஸ், அசோக்குமார் ஆகியோர் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலான ‘நானோ ’ தொழில்நுட்பத்தில் நவீன, புதிய சுவாசக் கருவி(முகக்கவசம்) ஒன்றை தயாரித்துள்ளனர். பல்கலை துணைவேந்தர் எம். கிருஷ்ணன் முன்னிலையில் இக்கருவி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனை நானோ மெட்டீரியல், மின்காந்தவியல் மூலம் தனியாக பிரித்தெடுத்து, சுவாச …
-
- 0 replies
- 409 views
-
-
கரோனா விழிப்புணர்வுப் பணி: விரைவில் ஈடுபட உள்ள 10,000 சென்னை பள்ளி ஆசிரியர்கள் பிரதிநிதித்துவப் படம் சென்னை கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி 10 ஆயிரம் சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாலும் பள்ளிக்கூடங்கள் இதுவரை திறக்கப்படாததாலும் சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கரோனா காலத்தில் மனநல ஆலோசகராக செயல்பட வைக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தமிழக அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பணியைப் பள்ளி கல்வித் துறை வழங்கவிருக்கிறது. மண்டலத்துக்கு 30 ஆசிரியர்கள் வீதம் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் …
-
- 0 replies
- 411 views
-
-
ராயபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் சிறுவர்களுக்கு கரோனா: உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு: சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் சிறுவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அது தொடர்பான செய்திகளை வைத்து, கரோனா தொற்று தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. 36,000 எண்ணிக்கையைக் கடந்து கரோனா தொற்று உள்ளது. சென்னை 26,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்து தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக உள்ளது. அதிலும் சென்னையில் குறிப்பிட்ட 5 மண்டலங்களில் கரோனா தொற்று 2,000 என்கிற…
-
- 0 replies
- 330 views
-
-
I/A3i என்ற புதிய வைரஸ் பரவுகிறதா? By kisukisu On Thursday, June 11 th, 2020 · புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை? தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்தச் செய்தி பெரும் …
-
- 2 replies
- 487 views
-
-
ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி நாட்டிலேயே முதல்முறையாக மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழா நடத்தியது கோவிட் 19 அச்சுறுத்தல் சூழலில் நாட்டிலேயே முதன்முறையாக ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் ராஜலட்சுமி பொறியியற் கல்லூரி மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழாவை நடத்தி பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மாண்புமிகு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தரவரிசையில் இடம்பிடித்து கல்லூரியை பெருமை பெறச் செய்த மாணவர்களை கவுரவித்தார். அஷ்ரிதா கே(ஐடி-12வது இடம்), முத்துவேல் சி(மெக்கானிக்கல்-15வது இடம்), அஷ்வதி எம்(சிஎஸ்இ-19வது இடம்) ஆகியோர் சான்றிதழையும் பட்டத்தையும் பெற்றனர். இந்நிகழ்வில் ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் டா…
-
- 0 replies
- 550 views
-
-
கொரோனா வைரஸ்: I/A3i என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா? புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை? தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இது…
-
- 0 replies
- 520 views
-
-
தமிழ்நாட்டில் ஆன்- லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தாமதமாகிவரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்கள் நடத்திவருகின்றன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் ஆன் லைன் வகுப்புகளைத் தடைசெய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "ஆன்-லைனில் மாணவர்கள் கல்வி கற்கும்போது ஆபாச இணையதளங்களும் குறுக்கிடுகின்றன. இதனால் கவனச்சிதறல் ஏற்படுகிறது. மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இது போன்ற இணையதளங்கள் குறுக்கிடாத வகையில் சட்டங்களை வகுக்…
-
- 0 replies
- 359 views
-
-
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாகுமரி சிறுமி: முதியவர்கள், சிறார்கள் கைது ஒரு 12 வயது சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை ஓட்டல் தொழிலாளி. தாய் மன நலம் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறுமியின் தந்தை வெளியூரில் தாம் வேலை செய்துவந்த ஓட்டலிலேயே தங்கிவிட்டார். வறுமையின் காரணமாக உதவி தேடிய சிறுமி இந்நிலையில், அச்சிறுமி அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்கள் கொடுக்கும் சிறு, சிறு வேலைகளை செய்து அதற்கு அவர்கள் தரும் பணம் மற்றும் உணவு பொருட்களைக் கொண்டு தாயையும் காப்பற்றியதோடு, தாமும் உயிர் …
-
- 0 replies
- 485 views
-
-
கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில்; எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து அனைவரும் தேர்ச்சி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை, கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தில், ஏற்கனவே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த பிளஸ்-1 பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மட்டும் மார்ச் 24-ந் தேதி வரை நடைபெற்றன. மார்ச் 26-ந் தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வும், மார்ச் 27-ந் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வும் மாணவர்கள் நலன்கருதி தள்ளிவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி …
-
- 0 replies
- 306 views
-
-
சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற தீர்மானம்! சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 19 கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்காரணமாக வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுதாக கூறப்படுகிறது. இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், சளி மற்றும் காய்ச்சல் என அறிகுறி உள்ளவர்களை இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கவும், தீவிர …
-
- 0 replies
- 307 views
-
-
மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த நபரை கொலை செய்த மர்ம நபர்கள்..! மதுரை மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 5-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் முருகனுக்கு துணையாக இருந்த அவரது மனைவி தேநீர் வாங்க வெளியே சென்றிருந்தார். அப்போது, முருகன் சிகிச்சை பெறும் சிகிச்சை அறைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முருகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதனைத்தொடர்…
-
- 0 replies
- 444 views
-
-
கொரோனாவின் பிடியில் தலைநகர் சென்னை எம். காசிநாதன் / 2020 ஜூன் 08 தமிழகத்தின் தலைநகரான சென்னை, கொரோனா வைரஸ் தொற்றின் பேரிடரில், சிக்கித் தவிக்கும் முக்கிய மாநகரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள, மக்கள், தமது அன்றாட கருமங்களில் ஈடுபடுவதற்கு, 'சாரைசாரை'யாக வீடுகளில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தாலும், தங்களின் உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றமும் பீதியும், அவர்களின் 'முகக்கவசங்களில்' எதிரொலிக்கிறது. 30.6.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தில், அனேகமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஒவ்வொருவரும், பின்பற்ற வேண்டிய தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசின் சார்பில் விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால், சென்னை ம…
-
- 0 replies
- 410 views
-
-
கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் விபரீதம்: சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழப்பு நேற்று நடைபெற்ற சேவல்கட்டு கரூர் கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்.து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசுவில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் சேவல்கட்டு மிக பிரசித்திமானது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சேவல்கட்டில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இருவர் உயிரிழந்ததையடுத்த 5 ஆண்டுகளுக்கு பூலாம்வலசு சேவல்கட்டுக்க…
-
- 0 replies
- 380 views
-
-
தமிழகத்தில் பரவிவரும் தீவிரத்தன்மை கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரையில் மொத்தமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 135 பேரும், திருவள்ளூரில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் ஏ 1, ஏ2, ஏ3, பி 1, பி2 உள்ளிட்ட வகைகள் இருப்பதாகவும், அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கிளேட் ஏ…
-
- 0 replies
- 426 views
-
-
திருப்பதி சர்ச்சை பேச்சு: சிவக்குமார் மீது வழக்கு! மின்னம்பலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'இலக்கியம், ஆரோக்கியம், இல்லறம்' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவக்குமார் 'இன்றுவரை கோயில்களில் தீண்டாமை தொடர்கிறது' என்று குறிப்பிட்டு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, "கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்கிறது. தஞ்சாவூர் கோயிலைக் கட்ட ஆயிரக்கணக்கான சிற்பிகளும், கொத்தனார்களும், சித்தாள்களும் வேலை பார்த்து இருப்பார்கள். இரவு பகலாக கோயிலைக் கட்டிக் கொண்ட…
-
- 0 replies
- 560 views
-
-
சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை வழக்கு: மீண்டும் வெடிக்கும் எதிர்ப்பு சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை ஆன்லைன் விசாரணையில் நடத்தக்கூடாது எனத் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. தமிழக அரசின் நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் விவசாயிகள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் சூரியபிரகாஷிடம் பேசியபோது, தற…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30,000த்தை கடந்தது ARUN SANKAR / Getty தமிழகத்தில் இன்று (ஜூன் 6) புதிதாக 1,458 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 19 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இறந்த 19 நபர்களில் பெரும்பாலானவர்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற…
-
- 0 replies
- 441 views
-
-
சீனா, பாகிஸ்தானின் அத்துமீறல்கள்.. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.. 15 பேர் கைது .! திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்திய எல்லையில் அத்துமீறும் சீனா மற்றும் பாகிஸ்தானை கண்டித்து இரு நாட்டின் பிரதமர்களின் உருவபடங்களை காலணியால் அடித்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய நாட்டின் எல்லை பகுதிகளில் அத்துமீறும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை கண்டித்தும், பாஜகவிற்கு முன்பு ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார…
-
- 1 reply
- 614 views
-
-
பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை- தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்ட…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மனைவி மற்றும் மகளுடன் மோகன். மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் பட…
-
- 2 replies
- 850 views
-
-
தமிழ் சினிமாவில் என்றைக்கும் நிலைத்திருக்கும் பெயர் இயக்குநர் மகேந்திரன். 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' என கிளாசிக் படங்களை இயக்கியவர். இவரும் இவரது மகன் ஜான் மகேந்திரனும் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தங்கியிருந்தனர். அந்நாள்களைப் பற்றிப்பேசினேன். இயக்குநர் பாலா தயாரிக்கும் மலையாள ரீமேக் படமான 'ஜோசப்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதிட்டிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு? ''இயக்குநர் பாலா சாரும், நானும் பக்கத்து வீட்டுக்காரங்கன்றதால எங்களுக்குள்ள நெருக்கம் அதிகம். அடிக்கடி மீட் பண்ணிப் பேசிக்குவோம். நிறைய படங்கள் பற்றின டிஸ்கஷன் எப்பவும் எங்களுக்குள்ள போயிட்டே இருக்கும். பாலா சாரின் 'தார…
-
- 16 replies
- 2k views
- 1 follower
-
-
உங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு -கனிமொழி சென்னை: கருணாநிதியை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது தன் வாழ்க்கையின் பெரும் பேறு என திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.உடன்பிறப்பே என்று கருணாநிதி அழைப்பதும், கூட்டம் அலைகடல் என ஆர்ப்பரிப்பதும் பேரிசையாக இருக்கும் என நினைவுகூர்ந்துள்ளார். கருணாநிதி உயிருடன் இருந்தபோது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சுவையான சில நிகழ்வை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கருணாநிதியை சந்திக்க ஒரு நாள் தலைவரோடு அறிவாலயத்தில் அவரது அறையில் நின்று கொண்டிருந்தேன். மாலை நேரம்; பல ஊர்களில் இருந்து கழகத்தோழர்கள் தலைவரை சந்திக்கக் காத்திருந்தார்க…
-
- 16 replies
- 1.6k views
-
-
`ரஜினியைத் திருப்திப்படுத்தத்தான் இந்த நியமனமா?’- செம்மொழித் தமிழாய்வுமைய விவகாரத்தில் சீமான் தினேஷ் ராமையா சீமான் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அதில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்…
-
- 0 replies
- 778 views
-
-
தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஓரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 5 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டி உள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக அ…
-
- 0 replies
- 389 views
-