Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கீழடி பொருள்களை அருங்காட்சியகமாக அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வந்துள்ளேன். உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் விரைவில் கீழடியில் அமையும். அதற்கான இடம் பார்த்துக்கொண்டுள்ளோம். இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்புக்கு முன்னோட்டமாக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு சார்பாக ``சீன - இந்திய சந்திப்பு" என்கிற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில், தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், இருநாட்டுத் தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் க…

    • 0 replies
    • 710 views
  2. தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, சென்னை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 2 ஆயிரம் பேர், ஜின்பிங் போன்று முகமூடியை அணிந்து வரவேற்றுள்ளனர். சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில் இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, இருதலைவர்களுக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் பரத நாட்டிய…

    • 0 replies
    • 498 views
  3. சென்னைக்கு கொண்டுவரப்பட்டது சீன ஜனாதிபதியின் கார் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் கார், தனி விமானம் ஊடாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டுவரப்பட்ட குறித்த காரினூடாகவே இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சீன ஜனாதிபதி செல்லவுள்ளார். இந்த கார், சீன ஜனாதிபதிக்காகவே அவர்கள் நாட்டில் எஃப்.ஏ.டபிள்யு (FAW) என்ற சீன நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கார் அவருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். சீன ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக, எந்த ரக துப்பாக்கி குண்டுகளும் துளைக்க முடியாத கண்ணாடிகள் இந்த காரில் உள்ளன. அத்துடன் ஆடம்பரமான காரான இது 6 தானியங்கி வசதிகளைக் கொண்டது. இதில் 110 லீட்டர் வரை பெற்றோல…

  4. சிறையின் விதிமுறைகளை சசிகலா மீறியுள்ளார்- விசாரணைக்குழு பெங்களூர்- பரப்பன அக்ரஹாரா சிறையின் விதிமுறைகளை அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மீறியது உண்மையென விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு சிறையின் விதிமுறைகளை மீறி சசிகலா வெளியே சென்றதாகவும் அவருக்கு சிறையில் பிரத்தியேக வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரியாக பணியாற்றிய ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. குறித்த விசாரணைக்குழு இவ்விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து வந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. …

  5. சுபஸ்ரீ உயிரிழப்பு: 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தந்தை மனுதாக்கல் சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவுக்கு வழக்குகளை மாற்ற வேண்டும் என்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த மாதம் பல்லாவரம் துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பனர் காரணமாக தனது மகள் உயிரிழந்தார் என்றும் இந்தச் சம்பவத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்படும் பனர்களை அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று…

  6. போதுமான குடிநீர் இருப்பு: ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் நிறுத்தம் சென்னையில் போதுமான குடிநீர் இருப்பு இருப்பதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் இன்றுடன் நிறுத்தப்பட்டது. சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீரைக் கொண்டு வர தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி உத்தரவிட்டார். இதையடுத்து, இத்திட்டத்துக்காக 65 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், சென்னை நகர மக்களுக்குப் பருவமழை கைகொடுத்து வருவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த …

  7. தமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்? தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனை அடுத்துதான் அவர் பாஜகவின் தேசிய தலைவரானார் என்பது நம்பிக்கை.தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதே கோவிலில் சிறப்பு யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் யாருக்கு அப்பதவி கிடைக்கும் என நாள்தோறும் விவா…

  8. இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வருகையையொட்டி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் செல்லவும், இறங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு சமீபத்தில் சென்று இருந்தபோது இந்தியாவிற்கு வருமாறு சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்ற சீன அதிபர் ஜின்பிங் வரும் 11ம் தேதி இந்தியா வருகிறார்.இவர்களின் சந்திப்பு தமிழகத்தில் புராதன நகரமான மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில் வர்த்தகம், எல்லை பிரச்னை, இரு நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச தீவிரவாதம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் பேசுகின்றனர். இதற்காக பி…

    • 0 replies
    • 471 views
  9. தமிழ் மெல்ல சாகடிக்கப்படுகிறதா?: ஒவ்வொரு தேர்வுகளிலும் புறக்கணிப்பு......தாய்மொழிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது தொடர்கதையாகிறது எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்ற தமிழர்களின் முழக்கம், அதன் தொன்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபகாலமாக தமிழுக்கு ஆபத்து வந்து விட்டது. ஏதோ தெரியாமல் செய்த பிழை என்பதெல்லாம் போய், மத்தியில் உள்ள பாஜ அரசு, ‘பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும்’ கலையை செய்ததெல்லாம் போய், இப்போது பகிரங்கமாகவே தமிழை புறக்கணிக்கும் போக்கை கடைபிடிக்க தயாராகி விட்டது என்று தமிழ் ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். நீட் தேர்வில் ஆரம்பித்தது தமிழ் புறக்கணிப்பு; போராடி பின்னர் தமிழில் எழுதும் உரிமை மீட்கப்பட்டது. ஆனால், ரயில்வே தேர்வில் ஆரம்பித்து…

    • 0 replies
    • 444 views
  10. கருணாநிதிக்கு அருங்காட்சியம்... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம். ! சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.திமுக தலைவராகவும், முதுபெரும் அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும், திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்ட…

  11. கன்னியாகுமரி: பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் சூழல் விரைவில் உருவாகும். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜ ஆதரவு அளிக்கும் என்றார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530965 பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி பேசுவது, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காக கூட இருக்கலாம்: கமல்ஹாசன் சென்னை: பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி…

    • 0 replies
    • 493 views
  12. தூய்மையான தமிழகம்: மோடியிடமிருந்து விருது பெற்றார் வேலுமணி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதினைப் பெற்றார் நாட்டின் பல பகுதிகளில் ஓகஸ்ட் 17 முதல் செப்டெம்பர் ஐந்தாம் திகதி வரை 690 மாவட்டங்கள் மற்றும் 17 ஆயிரத்து 400 கிராம பஞ்சாயத்துகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தமிழ்நாட்டிலுள்ள 31 மாவட்டங்கள் உட்பட்ட 800 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தெரிவாகியது.…

  13. தமிழை ஆட்சி மொழியாக்கி பெருமைப்படுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் தமிழை, இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி அதனை பெருமைப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாவின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க.வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய, இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு உள்ளது. ஆகையால் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும். அந்தவகையில் சென்ன…

    • 1 reply
    • 501 views
  14. விஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைதுநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் இர்பானின் தந்தை முகமது சஃபி கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கு நீட் எனும் தகுதி தேர்வு எழுதுவது இந்தியா முழுவதும் கட்டாயமாகும். இந்த தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் பிளஸ் 2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு தமிழகம் உள்ளிட்ட மாநில மாணவர்களுக்கு குதிரை கொம்பாக உள்ளது. வினாத்தாள் கடினமாக இருக்கிறது. அதிலும் மாநில பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இதனால் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிற…

    • 2 replies
    • 681 views
  15. ஜெயலலிதா பேரவை -அம்மா சாரிடிபிள் டிரஸ்ட் மூலமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடத்தி வரப்படுகிறது. இன்று ப்ளஸ்டூ மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மதுரை வேலம்மாள் கல்லூரியில் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மாணவர்கள் மன தைரியம், நம்பிக்கையோடு பொதுத்தேர்வை, போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவர்களுக்கு உதவும். விவசாயியாக பிறந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடியார், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்க…

    • 0 replies
    • 461 views
  16. கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன்...! -மு.க.ஸ்டாலின் மடல் .! சென்னை: கீழடியை நேற்று நேரில் பார்வையிட்ட நிலையில் தனது அனுபவத்தை திமுக தொண்டர்களுக்கு மடலாக எழுதியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில் கீழடியின் பெருமைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவருக்கு அங்கிருந்த தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு குறித்து விவரமாக விளக்கியதாகவும், அதனை தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய மடலில், கீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போலே வான் வரை பறந்து உயர்ந்த…

  17. மகனுக்குத் திருமணம் – ரொபர்ட் பயஸ் பரோல் மனு தாக்கல் September 26, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்தற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்து…

  18. குதிரையை வைத்து அச்சுறுத்தியதாக கனடா பெண் முறைப்பாடு – குதிரையோட்டி கைது! சுற்றுலா நோக்கில் இந்தியாவுக்கு சென்றிருந்த கனடா பெண்ணொருவர் குதிரையில் சவாரி செய்த போது கீழே வீழ்ந்து காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது பிறிதொரு குதிரையோட்டி தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனை தான் பயணித்த குதிரை மிரண்டு போய் தன்னை கீழ் தள்ளிவிட்டு ஓடியதாக அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இந்த குதிரையை வைத்து கனடா பெண்ணை அச்சுறுத்தியதாக கூறப்படும் குதிரை ஓட்டியான செந்தில் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டை சேர்ந்த டொய்னா கட்டான என்ற பெண் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தப…

  19. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கேரள – தமிழக முதல்வர்கள் சந்திப்பு September 25, 2019 கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு, பரம்பிகுளம் – ஆழியாறு நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வரும் தமிழக முதல்வரும இன்று (செப்டம்பர் 25) நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நதிநீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்…

  20. அடுத்தகட்ட அகழாய்வு பணிக்கு அனுமதிக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் கோரிக்கை தமிழகத்தில் அடுத்தகட்ட அகழாய்வு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கே.பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்று வரும் 3-வது பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கிவைத்தார். இதன்பின்னர், மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங் படேலை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட அறிக்கையினை மத்திய அமைச்சரிடம், அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்கினார். மேலும், கீழடியின் தமிழர் பெருமைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகை…

  21. தமிழக தேர்தல் : விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டி? தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபைக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க இளைஞர் அணியின் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விருப்ப மனுவை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பிரதான கட்சிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில…

  22. ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம்: முடியுமா, தொடருமா? எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 06:10 Comments - 0 ஹிந்தித் திணிப்பு என்பது, மீண்டும் வலுவாகத் தமிழகத்தில் மட்டுமின்றி தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஹிந்தி தினத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பொது மொழியாக, ஹிந்தி வர வேண்டும். ஹிந்திதான் நாட்டுக்கு ஓர் அடையாளத்தை உலக அரங்கில் கொடுக்க முடியும்” என்றார். இந்தப் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், தமிழகத்திலிருந்து முதலில் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம். மீண்டும் எங்களைக் களம் காண வைக்காதீர்கள். ஹிந்திதான் …

  23. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  24. தெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்ல.. வெறுப்பை கக்கும் ராதாரவி!! தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும்பங்கு வகிப்பது தெலுங்கு இனம் தான். தேனி, திண்டுக்கல், சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் தெலுங்கு மக்கள் தான் போட்டி போடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள் தான் தமிழ்நாட்டில் வென்றிருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை வளர்ந்திருக்காது. நாங்கள் திராவிடம் என்கிறோம். நீங்கள் எங்களை வேறு இனம் என்று கூறுகிறீர்கள். நான் …

  25. நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின்படி ஊழலில் தமிழகம் முதலிடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஊழல், லஞ்சம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. எஸ்டிஜி - 2018 தரவுகளை ெகாண்டு, நிதி ஆயோக் புள்ளி விவரங்களின்படி, பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் லஞ்சம், ஊழல் முறைகேட்டில் மூன்றாமிடம் இடத்தில் உள்ளது. இம்மாநிலம் 1,677.34 குறியீடுகள் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஒடிசாவும், அடுத்தடுத்த இடங்களில் சட்டீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களும் உள்ளன. தமிழகத்தின் ஊழல் குறியீடு ஒரு கோடி மக்கள் என்ற அடிப்படையில், 2,492.45 ஆகவ…

    • 0 replies
    • 442 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.