Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறப்பு முகாம் என்ற பெயரில் சித்தரவதைக்கூடமா?வழக்குகளில் விடுதலை பெற்றோர்,பிணையில் விடுதலை பெற்றோர் என 30 ஈழத்தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். பாழடைந்த பழையகாலக் கட்டிடமொன்றில் எவ்வித வசதிகளுமின்றி சட்ட நெறிகளுக்கு முரணாகச் சிறைவைக்கப்பட்டுள்ள இவர்களில் ஒருவர் தினசரி உணவுக்கான ரூபாய் நூறு வழங்கப்படவில்லையென்றும், அநீதியான சிறைவைப்பென்றும் முழக்கமிட்டு நேற்று (04.02.2019) தற்கொலைக்கு முயன்று உள்ளார்.சிறப்பு முகாம் என்ற அநீதியை அகற்றிடக் குரல் கொடுப்போம்! ஈழத்தை வைத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் கவனத்தில் கொள்ளவும் n

  2. முதல்வரின் அறிவிப்பினை வரவேற்றார் ராமதாஸ்! ஏழைகளுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளமையினை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும். தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜ…

  3. ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறீர்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே,குஷ்பு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளனர். ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கின்றது. 5 ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரவில்லை என்…

  4. சாகும் வரை உண்ணாவிரதம்... ஆளுநருக்கு நளினி உருக்கமான கடிதம் விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டு இருந்தால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, உள்ளிட்ட 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்தது.இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது. இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சட்டமன்றத்தில் சிறப்பு …

    • 2 replies
    • 1.1k views
  5. முருகன் 9வது நாளாகவும் தொடர் உண்ணாவிரதம்! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் இன்று 9வது நாளாகவும் தொடர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாசு குறித்து நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலம் கடத்தி வருகின்றார். இது தொடர்பாக முருகன் கடந்த 31ஆம் திகதி வேலூர் மத்தியசிறை அதிகாரிகள் மூலம் ஆளுநருக்கு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், ‘ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை,…

  6. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் கலை – அறிவியல் கல்லூரி : February 8, 2019 ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக 3,985 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபா நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும் விபத்து மூலம்…

  7. ஆளுனர் கையெழுத்திடும் வரை மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் – அற்புதம்மாள் February 9, 2019 இந்திய முன்னாள பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுனர் கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார் இவர்களது விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்த மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுவரும் அற்புதம்மாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டது தான் சிறைச்சாலை. சட்டத்தின் மூலம் …

  8. படத்தின் காப்புரிமை tndipr இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் நலத் திட்டங்களுக்காக 82,673 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார். இன்று தாக்கல்செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: * தமிழகத்தின் தனி நபர் வருவாய் ஆண்டுக்கு 1,42, 267 ர…

  9. ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் – சிலை – தமிழக அரசினை பதிலளிக்குமாறு உத்தரவு February 8, 2019 ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைப்பது தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கொன்றில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனைக் கௌரவிக்கும் முகமாக அவருக்குக் கடலில் சிலை அமைக்க வேண்டும் எனவும் ராஜராஜ சோழன் நினைவிடமானது கும்பகோணத்தை அடுத்த உடையாளூர் கிராமத்தில் பராமரிப்பின்றி இருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். பிற மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி, சர்தார் வ…

  10. கோயில்சிலை திருட்டு – ஏழு மாதங்களாகத் தலைமறைவாகியிருந்த முன்னாள் செயலர் கைது February 6, 2019 திருச்சி திருப்பராய்த்துறை கோயில் சிலை திருட்டு வழக்கில், ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் செயலர் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையானது திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றிய ஆனந்த்குமார் என்பவரும் மேலும் சலிரும் இணைந்து தொன்மையான அங்காளம்மன் சிலையைத் திருடி விற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தத் தொன்மையான சிலையைப் போன்று புதிய சிலை செய்து கோயிலில் வைத்ததாகவும், அந்தச் சிலை செய்வதற்காகக் கோயிலில் உள்ள தொன்மையான பாத்திரங்களை உருக்கியதாகவும் அவர்…

  11. ஐந்தாவது நாளாகவும் முருகன் உண்ணாவிரதப் போராட்டம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வேலூர் மத்திய சிறையில், இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் நீடிக்கிறது. கடந்த 28 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், தன்னையும் தன் மனைவி நளினியையும், விடுதலைச் செய்யக்கோரி முருகன், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழக ஆளுநரிடம் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு மீது இது…

  12. தாத்தா ரீ.வி கொடுத்தாரு; அப்பா செற்றாப் பாக்ஸ் கொடுப்பாரு' - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பு.! தமிழகம் முழுவதும் திமுக கிராம சபை, ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. இந்தக் கூட்டங்களில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இந்தக் கூட்டங்களில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேநேரம் கடுமையான கேள்விகளையும் ஸ்டாலின் எதிர்கொண்டு வருகிறார். மதுக்கடைகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். அதேபோல் இந்தக் கூட்டங்களில் சில சுவாரஸ்ய சம்பவங்களும…

  13. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் …

  14. பயணியர் விமானமா..? மாட்டு வண்டியா..? தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் திக்.. திக்.. அனுபவம்..! பழுதான தனியார் விமானத்தை பயணிகளுடன் ஓட்ட முயன்று ரன்வேயில் குதி குதியென குதிக்க விட்டு மாட்டு வண்டி போல் ஓட்டி பயணிகளை அலறச் செய்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. கடந்த புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 70 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. அப்போது விமானத்தில் ஏதோ கோளாறு. கம்ப்யூட்டரில் சிறு கோளாறு தான் என்று கூறி விமானத்தை ரன்வேயில் ஓட்டியபோது மாட்டு வண்டி போல் குதித்து, குதித்து ஓடி பாதி ரன்வேயில் நின்று விட்டது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறியுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று விமானத்தை மீண்டும் …

  15. பாஜக ஆபீசுக்குள் கால் வைக்க கூடாது.. எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்ட தமிழிசை. சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்துக்குள் எஸ்.வி.சேகர் வரக்கூடாது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 'தண்டனை' கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தமிழக தலைவராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். ஆனால் பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர் இவரை அப்பதவியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார்கள். அதில் பலரும் பிரதமர் நரேந்திர மோடி வரை பழக்கமானவர்கள் என்றபோதிலும்கூட, இதுவரை அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, பாஜக பொதுக்கூட்…

  16. உயர் நீதிமன்ற தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் – அற்புதம்மாள் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். தாய் என்ற முறையில் தமது புதல்வன் விடுவிக்கப்பட வேண்டும் என தாம் கோரவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்தநிலை சிறையடைக்கப்பட்டுள்ள எவருக்கும் நேரக்கூடாது எனவும் கோரியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்ப…

  17. படத்தின் காப்புரிமை Getty Images தாய்லாந்திலிருந்து சென்னை வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி இருந்ததை அடுத்து சுங்க அதிகாரிகளால் அவர் தடுக்கப்பட்டார். அவரது பையில் பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டி இருந்தது. வழக்கமாக அவரை சோதனை செய்யும் போது, அவரது பையிலிருந்து வித்தியாசமான ஒலி வருவதை அதிகாரிகள் கேட்டனர். இதனை அடுத்து அவரது பையை சோதனையிட்டபோது அதில் ஒரு கிலோ எடை உள்ள சிறுத்தை குட்டி இருந்தது. இவர் பாங்காக்கிலிரு…

  18. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக, கே.எஸ். அழகிரி நியமனம் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக செயற்பட்ட திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளதா காங்கிரஸ் தலைமை நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எஸ்.ஆழகிரி இரண்டு தடவைகள் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்ட …

  19. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்த அறிக்கை செப்டம்பர் மாதம் தாக்கல் February 2, 2019 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கையினை தாக்கல் செய்யவுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் இடம்பெற்ற போராடத்தின் கடைசி நாளன்று, கடற்கரையில் வன்முறை வெடித்திருந்தது. இது குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் வி…

  20. யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் அதிக பிரகாசமுள்ள மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபை உறுப்பினர் கே.எம் நியாஸின் ஏற்பாட்டில், யாழ் சோனகத்தெரு கல்லூரி வீதி, லெயிடன் சந்தி, பொம்மைவெளி, நாவாந்துறை போன்ற இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனை யாழ் . மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன், மாநகர சபை உறுப்பினர் நிலாம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அமைச்சர் ரிசாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …

  21. சீகிரிய மலைக்குன்றின் அகழிகள் அமைந்துள்ள பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயமாக இயங்கவுள்ளது.நேற்று தொடக்கம் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த வலயத்திற்குள் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது. இங்கு பிஸ்கட்டை கொண்டு செல்லாம். ஆனால் அதற்குரிய பொலித்தீன் பொதிகளை அப்புறப்படுத்தல் கட்டாயமானது. குடிநீர் போத்தல்களின் மூடிகளிலுள்ள பொலத்தீன்களையும், வெளியில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அவற்றை கொண்டு செல்வதற்கு புதிய பையை அறிமுகம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.…

  22. படத்தின் காப்புரிமை FACEBOOK / GOWSI SHANKAR ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில், "அம்ப…

  23. ராஜீவ்காந்தி கொலை விவகாரம்: வாகனப் பேரணி நடத்த பரிசீலனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இரு சக்கர வாகனப்பேரணி நடத்த அனுமதி கோரும் மனுவை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவிடுமாறு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவென்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிபதி மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக டிஜிபியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டுமென்றும், அந்த மனுவை டிஜிபி மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்ற…

  24. ஆர்.மணி மூத்த பத்திரிகையாளர் படத்தின் காப்புரிமை Getty Images (இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட…

  25. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயற்படுகிறதா? – உயர்நீதிமன்றம் கேள்வி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயற்படுகிறதா? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன், மதுரை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொலிஸார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருவதாக மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தூத்துக்குடி பொலிஸ் உத்தியோகத்தர் முரளிரம்பா முன்னிலையானார். இதனையடுத்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.