Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிஸ்டர் கழுகு: நவம்பர் 7, நவம்பர் 8 - தேதிகள் சொல்லும் சேதிகள்! வடகிழக்குப் பருவமழையில் நனைந்த படியே வந்த கழுகார், ‘‘தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் நவம்பர் 8-ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்குமோ என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது’’ என்றபடியே பேச ஆரம்பித்தார். ‘‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி. அதை, கறுப்பு நாளாக அறிவித்திருக்கின்றன காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட 18 கட்சிகள். தி.மு.க சார்பில் அன்றைய தினம், ‘மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில், அந்த நாளை கறுப்புப்பண எதிர…

  2. அகதிகள் முகாமில் அனுமதிக்கக்கோரி உடம்பை கீறிக் கொண்ட இலங்கை வாலிபரால் பரபரப்பு! மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதிக்க கோரி உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொண்டு தர்ணா செய்த இலங்கை வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கொழும்புவில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ்கோடி பகுதிக்கு கள்ளத்தனமாக வந்தவர் அஜாய் (24). போலீஸாரால் பாஸ்போர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை முடிவுக்கு பின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மண்டபத்தில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அஜாய் திடீரென முகாமில் இருந்து மாயமானார்…

  3. எண்ணூர் கழிமுகத்தில் கமல்ஹாசன் ஆய்வு: மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 'ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்' என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் "தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு…

  4. இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டும் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்! இந்திய அளிவில் உள்ள மாநில கட்சிகளின் வரவு-செலவு தொடர்பான விவரங்களை தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. Association of Democratic Reforms (ADR) என்ற அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை விவரம் பின்வருமாறு: இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை மொத்தம் 47-ஆக உள்ளது. இதில் 32 மாநில கட்சிகள் மட்டுமே 2015-16 நிதியாண்டில் முறையான கணக்கு வழக்கை தாக்கல் செய்துள்ளது. மீதமுள்ள 15 மாநில கட்சிகளும் இந்த நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல்…

  5. ரஜினி... கமல்... விஜய்... விஷால் - அரசியலுக்கு யார் ஃபர்ஸ்ட்? ‘வரமாட்டேன்’ என்று சொல்லி வந்த கமல், இப்போது ‘கண்டிப்பாக வருவேன்’ என்கிறார். ‘வருவேன்... வருவேன்...’ என 20 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குக் காட்டிக்கொண்டிருந்த ரஜினியும் இம்முறை வந்துவிடுவார் என்றே தெரிகிறது. விஜய் இப்போதைய அரசியல் கள நிலவரத்தையும், தன் சீனியர்களான ரஜினி-கமல் இருவரின் நகர்வுகளையும் கவனித்து வருகிறார். விஷாலோ தனக்கான காலம் கனியும் எனக் காத்திருக்கிறார். ‘இந்த நால்வரும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்... அரசியலுக்கு வந்தால் கள நிலவரம் அவர்களுக்குக் கைகொடுக்குமா?’ இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியதிலிருந்து... ரசிகர்களின் மனநிலையை ரஜினியிடம் தொடர்ந்து பிரதிபலிக…

  6. இவர்தான் 10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி! #RealMersalDoctor ``சாதாரண அழுக்கு உடையுடனும், உழைத்துக் களைத்த முகத்துடனும் கையில் இருபது ரூபாயுடன், `இவ்ளோதான் சார் இருக்கு. இதுக்குள்ள வைத்தியம் பார்த்துடுங்க'னு வந்து நிப்பாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த இருபது ரூபாயை வாங்கிட்டு ஊசி போட்டு மாத்திரையையும் கொடுத்தனுப்பிருவேன். `எதுக்கு இருபது ரூபா வாங்குறீங்க... சும்மாவே ட்ரீட்மென்ட் கொடுக்கல?’னு நீங்க கேட்கலாம். இலவசமாக் கிடைக்கிற எதுக்கும் மரியாதை இருக்காது... அதோட அடிப்படை மருந்துச் செலவுக்கும், கிளினிக் மெயின்டெனென்ஸுக்காவது பணம் வேணுமில்லையா? அதனாலதான் அவங்களால முடிஞ்ச காசை வாங்கிக்கிறேன்...’’ மிக இயல்பாகப் பேசுகிறார் டாக்டர் ராமசாம…

  7. ‘ஆன்டி ஹ்யூமனாக’ இருப்பது சரியா ஹெச்.ராஜா அவர்களே..! - ஒரு சாமானியனின் கடிதம் Chennai: மரியாதைக்குரிய, மரியாதை தெரியாத ஹெச்.ராஜா அவர்களுக்கு, வணக்கம். ‘என்னடா இது, எடுத்தவுடனே இப்படிச் சொல்லிவிட்டார்களே' என்று நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், அடுத்தவர் மனம் புண்படுமோ என்று அளந்து அளந்து பேசுபவர்கள்தான் தன் மனம் புண்படுவது பற்றிக் கவலைப்படுவார்கள். ஆனால், வெந்த புண்ணில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றுவதுதான் உங்கள் இயல்பு என்பதைச் சமீபகாலமாகப் பார்த்துவருகிறோம். ‘வெந்த புண்' என்று சொல்லும்போதுதான் சமீபத்தில் நீங்கள் தெரிவித்த கருத்து நினைவுக்குவருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நீங்கள் உதிர்க்கும…

  8. ஜெ., மரண விசாரணை: மீண்டும் தாமதம் ஏன்? ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனுக்கு, அலுவலகம் தயாராகாததால், விசாரணை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருந்த, ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்; டிச.,5 இரவு இறந்தார்.அவரது இறப்பில், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, 'ஜெ., மறைவு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு உத்தரவிட வேண்டும்' என, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள்,பொதுமக்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, ஜெ., மறை…

  9. நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் : கமலஹாசன் சென்னை : நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்த கேள்வி பல்வேற கருத்துக்கள் நிலவி வருகிறது. ஆனால் தான் டுவிட்டர் மூலம் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாக கமல் சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில் தனது பிறந்தநாளான நவம்பர் 7 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒது…

  10. இரவு முழுக்க, என் தொலைபேசி அடித்துக்கொண்டே.... இருக்கிறது. - தமிழிசை குமுறல். இரவு முழுக்க தனது தொலைபேசி அடித்துகொண்டே இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் படத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக கிண்டலடித்து மீம்ஸ்களை வெளியிட்டனர். இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் விக்கிப்பீடியா பக்கத்திலும் கைவைத்து சிலர் வேலையை காட்டியுள்ளனர்.இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்வது கருத்துரிமை …

  11. சசிகலா கணவர் நடராஜனுக்காக மூளை சாவு வாலிபரின் உடல் அபகரிப்பு சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல், திருச்சியிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் வரவழைக்கபட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி,பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகாலாவின் கணவர் நடராஜன், 74, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், சென்னை, குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.'நுரையீரல் பாதிப்பும் உள்ளதால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்…

  12. டெங்கு... மெர்சல்... கையில் பெரிய ஃபைலோடு வந்த கழுகார், ‘‘நீர் ‘மெர்சல்’ படம் பார்த்துவிட்டீரா?’’ எனக் கேட்டார். ‘‘கழுகார் சினிமா பற்றிப் பேசுவது அபூர்வமாக இருக்கிறதே?’’ ‘‘ஒரு வாரமாக தமிழக அரசியலே ‘மெர்சல்’ படத்தை வைத்துதானே ஓடிக்கொண்டிருக்கிறது. நான் மட்டும் சினிமா பற்றிப் பேசக்கூடாதா?’’ என்ற கழுகார், ‘‘இவ்வளவு நடந்தும், இந்த சர்ச்சைகள் பற்றி விஜய் வாயைத் திறக்கவில்லை; கவனித்தீரா’’ எனக் கேட்டார். ‘‘ஆம்!’’ ‘‘அது மட்டுமில்லை. முதல்வரில் தொடங்கி தமிழக ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்தும் யாரும் இதுபற்றிப் பேசவில்லை. அவர்கள் இந்த சர்ச்சையால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம், இந்தப் பிரச்னையில் எல்லோரும் டெங்கு அவலங்களை மறந்துவிட்டார்களே!’’ ‘‘தினம் தின…

  13. ‘இங்கிலீஷ்ல இருந்ததால கையெழுத்து போட்டுட்டாங்க!’ - ‘இரட்டை இலை’ விவாதத்தில் நடந்த காமெடி #VikatanExclusive Chennai: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது, போலி அஃபிடவிட்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல்செய்துள்ளதாக தினகரன் தரப்பு வாதிட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், இங்கிலீஷ்ல அஃபிடவிட்கள் இருந்ததால கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொல்லியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க., இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலையை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசி…

  14. ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? - ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகள், அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைக் கண்டறிய முடியாமல் சிபிஐ திணறி வருகிறது. ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அரசு அச்சகங்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு ர…

  15. 'கவலைப்பட வேண்டாம்... அடுத்து விடுதலைதான்!' - பேரறிவாளன் நம்பிக்கை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு பரோலில் வெளியே விட தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கி உடல்நலம் சரியில்லாத அவர் தந்தை ஞானசேகரனை (குயில்தாசன்) கவனித்து வந்தார். ஆனால், அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், தந்தையைக் கவனித்துக்கொள்ள மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மனு அளித்தார். அதுமட்டுமின்ற…

    • 2 replies
    • 816 views
  16. ’எனது நாட்டுப்பற்றை சோதிக்க வேண்டாம்’ - தேசிய கீதம் குறித்து கமல் ட்வீட் நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் குறித்த தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கபட வேண்டும் என்பதும், அவ்வாறு இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு பல விதமான கருத்துகள் வந்தன. அதன் பின்னர் தொடர்ந்து, திரையரங்கில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அண்மையில் இந்த வழக்கை விசாரித்…

  17. உயிரோடு இருப்பவர்களின் படங்களுடன் பேனர் வைப்பதைத் தடைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களின் படங்களுடன் பேனர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகளை, பதாகைகளை வைப்பதற்கு தடைசெய்யும் வகையில் விதிகளை உருவாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption(கோப்புப் படம்) …

  18. கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். 4 பேரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (திங்கள்கிழமை) தீக்குளித்தனர். இது குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோப…

  19. இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும் தமிழின் பெருமை பற்றி பேசும் ராகுல் இலங்கையில் இனஅழிப்பு போர் நடத்தியதற்கு காங்கிரஸ் துணைபோன போது எங்கே போனார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு குஷ்பு பதிலளித்துள்ளார். குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏன் மேடம், அரைச்ச மாவே திரும்ப திரும்ப அரைக்கறீங்க. இதில் மெர்சலைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதனால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன சம்மந்தம். நிஜப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம். எங்களிடம் மோடி இருக்கிறார், டிரம்பால் கூட எங்களை எதுவும் செய்ய…

  20. ஆன்டி இந்தியன்... தமிழ் பொறுக்கீஸ்... ஜோஸப் விஜய்... பதில் சொல்வாரா பிரதமர் மோடி?! இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இந்தியாவின் பலம் வேற்றுமையில் ஒற்றுமை; இந்தியன் என்ற உணர்வால் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்று பள்ளிப் பாடப்புத்தகங்கங்கள் நம் குழந்தைகளுக்குப் போதிக்கின்றன. ஆனால், இந்த கொள்கைகளுக்கு முரணாக இருக்கின்றன, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்களின் பேச்சுக்கள். பொறுப்புமிக்க தலைவர்கள் உதிர்க்கக்கூடிய சொற்களாக அவை இல்லை என்பது வருத்தத்துக்குரியது. ஜோஸப் விஜய்! ‘மெர்சல்’ படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நீக்கம் குறித்த வசனங்கள் இடம்பெற்றதற்காக, நடிகர் விஜய்மீது பி.ஜே.பி-யினர் பாய்கிறார்கள். அவரை, …

  21. நீலத் திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் ஒருவனுக்குத் “தற்கொலை கூடாது” என்று தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், நடுவண் – மாநில அரசுகளின் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்ற விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அனிதா! எந்த அனிதா?... பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 196.75 தகைவு மதிப்பெண் (cut-off) பெற்ற அனிதா!... தன் ஊர் மொத்தத்தின் மருத்துவக் கனவையும் ஒற்றை ஆளாய்ச் சுமந்த அனிதா!... இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதா!... உண்மையில் இது தற்கொலையா? இல்லை, தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் அந்த வருங்கால மரு…

  22. கோவை: இலங்கைப் பயணியின் வயிற்றிலிருந்து 20 தங்கத் துண்டுகள் பறிமுதல்! கோவை விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர், 20 தங்கத் துண்டுகளை வயிற்றில் வைத்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, விமான நிலையத்திலிருந்து கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு நேரடியாக விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்புவிலிருந்து, கோவை விமானநிலையம் வந்தவர்களில், இலங்கையைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவரின் நடவடிக்கையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மருத்துவச் சோதனை செய்த…

  23. விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை..! ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு விளக்கம் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவு விளக்கமளித்துள்ளது. விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் விஷால். இவரது தயாரிப்பில் அண்மையில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இன்று வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வெளிவந்தது. திரைப்பட கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியானது. http://www.vikatan.com/news…

  24. இரட்டை இலை சின்னம் வழக்கில் இழுபறி நீடிப்பு: மறு விசாரணை 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக அ.தி.மு.க.வின் இரு அணிகளிடம் தலைமை தேர்தல் கமிஷன் நடத்திவரும் விசாரணை வரும் 30-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வ…

  25. மெர்சலை விடுங்கள்... இந்தப் புள்ளிவிவரங்களுக்கு அரசிடம் பதில் இருக்கிறதா? தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தனதாக்கியிருக்கும் படம் 'மெர்சல்'. படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்' ரிலீஸ் முதலே பரபரப்பு பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. 'ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம்' என்ற விவாதத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கியதென்றால், அதன் பின் வெளிவந்த டீஸரிலோ, ''ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்'' என்ற அழுத்தமான வசனமோ அரசியல் அரங்கில் கடும் அனலைக் கிளப்பியது. விலங்குகள் நல அமைப்பிடம் அனுமதி வாங்காதது, படத் தலைப்பு பிரச்னை என ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை உடைத்தெறிந்துதான் திரையரங்குகளில் வெளியானது 'மெர்ச…

    • 3 replies
    • 929 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.