தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10299 topics in this forum
-
கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான்: அரிமாவளவன் பேச்சு Posted by: Vadivel Published: Monday, March 25, 2013, 11:56 [iST] கரூர்: கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான் என தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தெரிவித்துள்ளார். மணப்பாறை நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழீழம் கோரி உண்ணாவிரதம் இருந்தனர். மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரின் வீதிகள் வழியாக தமிழீழம் ஒன்றே தீர்வு என்று முழக்கமிட்டு நகர்வலம் வந்தனர். அவர்கள் மத்தியில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் பேசியதாவது, ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாக அவன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு செய்த …
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் மீனவ குடும்பத்தினர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட இவர்கள் இலங்கை போலீஸார் மூலம் மல்லாஹம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் 26 பேரையும் வரும் 11ஆம் தேதி வரை சிறைவைக்க மல்லாஹம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து 634 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி பெற்றிருந்தன. ஆனாலும் இலங்கை கடற்படையினர் மீதுள்ள அச்சத்தால் 300…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது யாருக்கு நஷ்டமோ தெரியாது. ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பெருத்த நஷ்டம். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், சிதம்பரம் தீராத சோகத்தில் இருக்கிறார்’ - சிவகங்கை காங்கிரஸ் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாப்பிக். இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ்காரர்கள், ''மத்திய அரசில் முக்கிய இடத்தில் இருந்தும் ஈழப் பிரச்னையில் ப.சிதம்பரம் உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கோபம் தொகுதி மக்களிடம் இருக்கிறது. அந்தக் கோபம்தான் கடந்த முறை அவரைத் தட்டுத்தடுமாறி ஜெயிக்கவைத்தது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், தி.மு.க. அணியில் நின்றாலாவது திக்குத் திணறிக் கரை ஏற வா…
-
- 0 replies
- 666 views
-
-
சென்னை: புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் Prevention of Food Adulteration Act 1954-ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்க…
-
- 0 replies
- 518 views
-
-
இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமார் என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு ஒரு சிறிய ஜாமின் தொகை கட்டி பிணையில் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகை கட்டப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். விஜய் குமார் இதற்கிடைய…
-
- 0 replies
- 321 views
-
-
தேனியில் ஓ.பி.எஸ். கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தேனி: தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அருகே உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர். மேலும் இந்த தாக்குதலில் ஓ.பி.எஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வே…
-
- 0 replies
- 349 views
-
-
போயஸ்கார்டனின் நிலை... காஸ்மோ பாய்ஸ்... எங்கே செல்கிறார் கரன் சின்ஹா..? #NewsChat போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்க ஆளில்லை... போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்கக்கூட யாருமில்லையாம்! இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? ஜெயலலிதாவின் உதவியாளர்கள் விழிபிதுங்கி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புவரை, போயஸ்கார்டன் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அங்கு கட்சியின் வி.ஐ.பி-க்கள் வரவே பயப்படுகிறார்கள். குறிப்பாக, சசிகலா குடும்பத்தினர் வரத் தயங்குகிறார்கள். காரணம்..ஜெயலலிதாவின் ஆவி இங்கே நடமாடுகிறது என்ற வதந்தி பரவியது தான். மாடியில் உள்ள ஜெயலலிதா, அறை பூட்டப்பட்டு கிடக்கிறது. ஜெயலலிதா ஆசையாக …
-
- 0 replies
- 535 views
-
-
பி.ஜே.பி-க்கு 'செக்': தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி? தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணி வைரவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருப்பது பி.ஜே.பி-க்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.. சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில், இதுவரை இல்லாதவகையில் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக அணி திரண்டு, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்கள். அத்துடன் அவர்கள், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் திறமைகளை எடுத்துரைத்ததுடன், 'விரைவில் தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவார்' என்றும் குறிப்பிட்டனர். தமிழக அரசியல்களத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு, …
-
- 0 replies
- 366 views
-
-
வேகம் எடுக்கும் ‘ஃபெரா’... அச்சத்தில் சசிகலா! வழக்குகள்... வாய்தாக்கள்... தண்டனைகள்... சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் புதிதல்ல. அப்படித் தொடங்கி, 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்புதான், சசிகலாவைச் சிறைக்கு அனுப்பியது. அதைப் போல 22 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சிக்கலான அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள், வெட்டுக்கிளிகளைப் போல் மொத்தமாகக் கிளம்பி சசிகலா குடும்பத்தை அலைகழிக்கத் தொடங்கி உள்ளன. இதனால் அச்சத்தில் இருக்கிறார் சசிகலா. ஜெ.ஜெ டி.வி, சசிகலா, தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் மீது 1995-96 காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ‘ஃபெரா’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 …
-
- 0 replies
- 910 views
-
-
நீலகிரி: இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் இடமாற்றம் - அரசியலாக்கப்படுவதன் பின்னணி என்ன? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா, இடமாற்றம் செய்யப்பட்டாலும் அதுகுறித்த விவாதம் தொடர்ந்தபடியே உள்ளது. `யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது இடமாற்றத்தை அரசியலாக்க வேண்டியதில்லை' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த ஜெயல…
-
- 0 replies
- 490 views
- 1 follower
-
-
''அ.தி.மு.க-வில் இப்போது நடப்பதெல்லாம் நாடகம்தான்!'' - போட்டுடைக்கிறார் ஈ.ஆர். ஈஸ்வரன் ப்ரேக்கிங் நியூஸ்களால் மறுபடியும் ஊடகத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க அணிகள். 'கட்சிக்கும் ஆட்சிக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தலைமை' என்று அமைச்சர்கள் அறிவித்த அடுத்த நொடியே, அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை அறிவிக்கிறார் டி.டி.வி தினகரன். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்போ, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிறார். 'ஓவியாவுக்கு என்னதான் ஆச்சு?' என்று விடைதெரியாமல் அவஸ்தைப்பட்டு வரும் தமிழக மக்கள் மத்தியில், 'இப்போது அ.தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது?' என்ற குழப்பக் கேள்வியும் சேர்ந்துள்ளது. இந்த நிலையில், ''அ.தி.மு.க-…
-
- 0 replies
- 489 views
-
-
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2000ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, கடந்த 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் நிராகரித்தார். கருணை மனு நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் மரண தண்டனையை ரத்…
-
- 0 replies
- 253 views
-
-
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று மீண்டும் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான். 160 அடி ஆழம் குழந்தை சுஜித் விழுந்துள்ள ஆள்துளை கிணறு அமைந்துள்ள இடம் ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த ஆழ்துளை கிணறு 160 அடி ஆழம் உடையது என்றும், குழந்தை சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ள நிலையில், இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்…
-
- 0 replies
- 396 views
-
-
ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை! Chennai: ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேக்சிஸின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும் அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாகவும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. மேலும், விதிமுறைகளின்படி சுமார் 600 கோடிக்கு மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக்கு ப…
-
- 0 replies
- 350 views
-
-
இலவசங்கள், ஃப்ரீபிக்கள் என்பது பொருத்தமல்ல; அவை ஏற்றத்தாழ்வை போக்கும் சீர்திருத்த கருவிகள்: ஜெ. ஜெயரஞ்சன் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மாநில அரசுகள் மக்களுக்கு விலையில்லாப் பொருட்கள், இலவசத் திட்டங்களை அறிவிப்பது குறித்த விவாதம் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்தத் திட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்தும் இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமை குறித்தும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சனிடம் உரையாடினார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
ஸ்டெர்லைட் படுகொலைகள்: ஒரு புலி, ஹிட்லர் மற்றும் ராஜபக்ஷே ஆர். அபிலாஷ் தூத்துக்குடி படுகொலைகளின் அதிர்ச்சி விலகாத நிலையில் ஒரு நண்பரிடம் தொடர்ச்சியற்று பலவிசயங்களைப் பற்றி பேசி புலம்பியபடி இருந்தேன். நண்பர் என்னிடம் சட்டெனக் கேட்டார், “மெரினாவில்ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளின் போது போராளிகளை இந்த அதிமுக அரசு நடத்தியதற்கும்இதற்குமான தொடர்பை கவனித்தாயா?”. கவனித்தேன், நியூஸ் 18 டிவி விவாதத்தின் போது ஆரூர்ஷாநவாஸும் அதைக் குறிப்பிட்டார். நான் சொன்னேன், “இரண்டு சம்பவங்களிலும் என்னை ஆச்சரியப்படுத்தியது, ஒருவிதத்தில்வேதனையடைய செய்தது, இதை தவிர்த்திருக்கலாமே எனும் எண்ணம். அரசுக்கு இதனால் நேரடியாய் பயன்இல்லையே, இருந்தும் ஏன் செய்கிறது எனும் ஐய…
-
- 0 replies
- 933 views
-
-
மிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி! - டெல்லி நெக்ஸ்ட் பிளான் கழுகார் வந்ததுமே அலுவலக நூலகத்துக்குள் போனார். பழைய ஜூ.வி ஃபைல்களுடன் வந்தவர், ‘‘தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சத்தமில்லாமல் நடந்துவருகின்றன. சட்டமன்ற அலுவலகத்தில் சீனியர் அதிகாரிகள் சிலர் இதற்காகத் தனியாக உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள். எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், அநேகமாக இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ‘சட்ட மேலவையை மீண்டும் அமைப்பதற்கான மசோதா’ அறிமுகம் செய்யப்படலாம்’’ என்றார். ‘‘அவ்வளவு வேகமாகவா வேலை நடக்கிறது?’’ ‘‘ஆமாம். ஜெயலலிதா உறுதியாக எதிர்த்த சட்ட மேலவையை, பி.ஜே.பி-க்காக மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியி…
-
- 0 replies
- 1k views
-
-
"சாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்கிறார்கள்" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக அரசு செய்யும் பணிகளைப் பல்வேறு மாநில மக்களும் தலைவர்களும் பாராட்டுவதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து, "நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் உலவிக் கொண்டிருப்பவர்கள், நம…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை ARUN SANKAR அதிகாலை …
-
- 0 replies
- 372 views
-
-
இறந்ததாக நினைத்த இந்திய மீனவர் 23 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை யூடியூப் அலைவரிசையில் தோன்றிய அதிசயம் கடந்த 1996 ஆம் ஆண்டு மே மாதம் 5ந் திகதி தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகிய நான்கு பேர் மீன்பிடிக்கு கடலுக்கு சென்ற நிலையில் மறுநாள் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை திரும்பாததால் இவர்கள் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் பல நாட்களாக தேடிய நிலையில் மீன்பிடித் துறை சார்பாக கடலில் மாயமானவர்கள் பட்டியலில் இந்த நான்கு பேரும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீன்பிடித்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடயே கடந்த மே மாதம் 9ஆம் திகதி இலங…
-
- 0 replies
- 755 views
-
-
இலை மலர்ந்தது... ஆனால் ஈழம் மலர வில்லை... குமரியில் ஒலித்த ஈழத் தமிழர் குரல்! நாகர்கோவில்: விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்ட ஈழத் தமிழர் மகேந்திரன் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தபட்டார். பலத்த பாதுகாப்போடு அவரை திருச்சி காவல்துறையினர் அவரை அழைத்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் வந்தபோது திடீரென மகேந்திரன், பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை, நிவாரண வசதிகள் எதும் இல்லை, பெண்கள் கருமுட்டை விற்று வாழும் சூழலே அகதிகள் முகாமில் உள்ளது என கோஷமிட்டவரே வந்தார். குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜரான மகேந்திரன் வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது…
-
- 0 replies
- 596 views
-
-
கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 173 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. கொளத்தூரில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மக்கள் தே.மு.தி.க., பெருந் தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவபடை, தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் தரப்பட்டுள்ளது. கட்சி தலைவ…
-
- 0 replies
- 546 views
-
-
தமிழகத்தில் புதிதாக 2.86 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்: வாக்காளர் எண்ணிக்கை 5.82 கோடியை தாண்டியது - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 பேர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 138 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலி…
-
- 0 replies
- 251 views
-
-
30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மர…
-
- 0 replies
- 332 views
-
-
அம்மா.... அப்போலோ... அ.தி.மு.க.... ரத்தத்தின் ரத்தங்களின் மனநிலை!? #JVBreaks (வீடியோ!) ஜெயலலிதாவின் அப்போலோ வாசம் 40 நாட்களைக் கடந்துவிட்டது. அரசு இயந்திரம் வழக்கம்போலச் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அமைச்சர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், தொண்டர்களின் மனநிலை என்ன தெரியுமா ? ரத்தத்தின் ரத்தங்கள் தெளிவாக இருக்கிறார்களா அல்லது தங்களது தலைமை பற்றித் தெரியாமல் இருக்கிறார்களா ? ஒருபக்கம், காவடி... பால்குடம்... மறுபக்கம், அலகு குத்துதல்... மண்சோறு... என தங்களது பிரார்த்தனைகளை ஆரம்பித்துவிட்டார்களே? இவைதானே கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு விசாரணையின்போதும் நடந்தது. இதில் என்ன வித்திய…
-
- 0 replies
- 509 views
-