தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10298 topics in this forum
-
கருணாநிதி, மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட உணவு குழாய் மாற்றப்பட்ட பின்னர் வீடு திரும்புவார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.கருணாநிதி கடந்த 7 மாதங்களாக முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன் தமிழரசு ஆகியோர் அப்போது உடனிருந்தனர். இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் …
-
- 0 replies
- 390 views
-
-
தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் சென்னை மாநகராட்சி அதிகாரியை தாக்கினாரா? மு.க.ஸ்டாலினிடம் என்ன பேசினார்? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,K P SHANKAR FACEBOOK PAGE திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சித் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ''சாலைகளைத் தரம் இல்லாமல் போடுவது தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நான் தாக்கியதாகப் புகார் கொடுத்துவிட்டார்கள். முதலமைச்சரிடமும் நடந்ததை விளக்கிக் கூறியுள்ளேன்,'' என்கிறார் கே.பி.சங்கர். என்ன நடந்தது? தி.மு.க பொதுச…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
தினகரன் அணியை சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது, கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ள நிலையில், அவர்களில், 11 பேர், முதல்வர் பழனிசாமி விரித்த வலையில் விழுந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த, 11 பேரின் குடும்பத்தினருடன், மூத்த அமைச்சர் ஒருவர் நேரில் நடத்திய ரகசிய பேச்சில், இந்த உடன்பாடு உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது மட்டும், கட்சித் தாவல் தடை சட்ட நடவடிக்கை கைவிடப்படலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், கவர்னரிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், 19 பேர் க…
-
- 0 replies
- 996 views
-
-
மு.க.ஸ்டாலின் - திராவிடச் சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.) கருப்பையும் சிவப்பையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை குறித்து 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. …
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோயில் பாதுகாப்பு கருதி ரூ.1.30 கோடி மதிப்பில் 31 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நேற்று முதல் செயல்பட துவங்கியது.தஞ்சை பெரிய கோயில், யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.இந்தநிலையில், கூடுதல் பாதுகாப்பு கருதி கோயில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை பெரிய கோயில் மராட்டா நுழைவு வாயில், கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், விமான கோபுரம், நந்தி மண்டபம், கோயில் திருச்சுற்று என்று 31 இடங்களில் கண்காணிப்ப…
-
- 0 replies
- 537 views
-
-
பேனா நினைவுச்சின்னம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் christopherAug 01, 2023 12:31PM கலைஞர் பேனா நினைவுச் சின்னம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது. இந்த நிலையில், கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, சென்னை தங்கம், நாகர்கோவில் ஆகியோரின் பொதுநல மனுக்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையீட்டு மனு ஆகியவை உச்சநீதிமன்றத…
-
- 0 replies
- 261 views
-
-
ஆகஸ்ட் 15ம் திகதி ஜெயலலிதா வெளியிடும் அதிரடி அறிவிப்பு: பரபரப்பு தகவல்[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:54.03 AM GMT +05:30 ] தமிழகத்தில் இருக்கும் மதுபானக்கடைகளை மூடுவது குறித்த 3 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுவிலக்கு போராட்டம் நடத்தி காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக அரசு மதுக்கடைகளைக் குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து மதுக்கடைகளை அதிரடியாகக் குறைப்பதற்கு, மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு ம…
-
- 0 replies
- 461 views
-
-
நளினியை முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல்!: நீதிமன்றம் கேள்வி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனிலுள்ள தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமனறத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது, நேரில் முன்னிலையாகி வாதிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தை அவர் கோரியிருந்தார். குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்…
-
- 0 replies
- 438 views
-
-
விருதுநகர்: 'ஜீரோ பிரசவ மரணம்' என்ற சாதனை- தமிழ்நாட்டில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விருதுநகர் சுகாதார மாவட்டம் ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் விருதுநகர் சுகாதார மாவட்டம் ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது எப்படி? இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் விரு…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
நீண்ட காலமாக தள்ளிபோடப்பட்ட அந்த மாற்றம் 2026-ல் நிகழுமா?- தென் மாநில மக்கள் தொகை குறைவது குறித்து முதல்வர்கள் கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக மக்கள் தொகையைப் பொறுத்தவரை, கடந்த 200 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்திருக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 22 அக்டோபர் 2024, 03:27 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. ஆந்திரப் பிரதேச மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாய…
-
- 0 replies
- 552 views
- 1 follower
-
-
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை : தி.மு.க தீர்மானம்! ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க தி.மு.கவின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தின்போது, உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க வேண்டும் எனவும் தி.மு.க பொதுக் குழுவில் திருநங்கைகளை சேர்ப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.கவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட…
-
- 0 replies
- 463 views
-
-
சென்னை, தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.16.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. புகார்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று (வியாழக்கிழமை) வரை பொது சொத்தில் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர் கட்டி சேதம் ஏற்படுத்தியதாக பெறப்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 290 புகார்களில், 1 லட்சத்து 88 ஆயிரத்து 599 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ததாக பெறப்பட்ட 77,763 புகார்களில் 69,216 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இதுவரை தேர்தல் விதிகளை மீறியதாக 937 வழக்குகளும், வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக 809 வழக்குகளும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்க…
-
- 0 replies
- 390 views
-
-
அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி! மின்னம்பலம் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லூர் மண்டலங்கள் ஒதுக்கப்பட்டு, பணிகளைக் கவனித்து வந்தார். இதனிடையே கே.பி.அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு செய்திகள் வெளியாகின. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனை போனில் நலம் விசாரித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டார். அத்துடன், மத்திய மனிதவள…
-
- 0 replies
- 713 views
-
-
ஜெயலலிதாவின் வீட்டில் காணப்படும் பொருட்கள் குறித்த விபரங்கள் வெளியீடு! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் மற்றும் 601 கிலோ வெள்ளி பொருட்கள் காணப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்தார். குறித்த வீட்டை நினைவில்லமாக்கும் முற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி வீட்டில் 4 கிலோ 372 கிராம் எடையுள்ள 14 வகையான தங்க ஆபரணங்கள், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளி பொருட்கள், 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன. …
-
- 0 replies
- 578 views
-
-
சற்று முன் கடும் பாதுகாப்பையும் மீறி லயோலா மாணவர்களுக்கு ஆதரவாக தமிழீழ மாணவர்கள் தமிழர் தாயகமெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதன் முழு விபரம் : எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு...இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது.ஜந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது... நேர்த்தியாக முறைப்படுத்தப்பட்ட இனஅழிப்பு (structural genocide)வல்லரசுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்.. திருமணத்துக்கு கூட இராணுவத்துக்கு முதல்மரியாதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. எமக்கு இங்கு சாப்பிட …
-
- 0 replies
- 621 views
-
-
ராஜினாமா பண்ணு இல்லனா.. கமல் சொன்ன அந்த வார்த்தை மௌனம் கலைத்த மகேந்திரன்
-
- 0 replies
- 1k views
-
-
ஆர்.கே நகரில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு ஆதரவில்லை: இளையராஜா மகன் அதிரடி! on: மார்ச் 24, 2017 ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு தனது ஆதரவில்லை என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் இளையராஜாவின் தம்பியாவார். இந்நிலையில் இளையராஜாவின் இளைய சகோதரர் பாஸ்கரின் மகளான வாசுகி தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த டிவீட்டில் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜாவ…
-
- 0 replies
- 565 views
-
-
கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா: தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு திமுக ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், இந்த விழாவுக்கு அழைப்பது தொடர்பாக திமுக - பாரதீய ஜனதா கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி 1957-இல் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு நடந்த எந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடையாமல், மீண்டும் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபதாண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனை பெரிய அளவில் கொண்டாடுவதற…
-
- 0 replies
- 424 views
-
-
தினகரனுக்கு எம்.எல்.ஏ.,க்கள் மிரட்டல் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன், தினகரன், நேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அமைச்சர் பதவி கேட்டு, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மூவர், தினகரனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, மூன்று அணிக ளாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்படு கின்றனர். ஜனாதிபதி தேர்தலில், மூன்று அணி களும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல், சட்டசபை தொடர் முடிந்த பின், மாவட்ட சுற்றுபயணம் சென்று, கட…
-
- 0 replies
- 433 views
-
-
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது! மத்திய அரசு திட்டவட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012ல் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 14 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்படுவதால் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீ…
-
- 0 replies
- 388 views
-
-
எழுத்தாளர் அம்பைக்கு 2021 இற்கானஆண்டுக்கான இந்திய சாகித்ய அகாடமி விருது ஜனவரி 1, 2022 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக அம்பை இந்த விருதைப் பெறுகிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்நூல், அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு ஆகும். 13 கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை. சி.எஸ்.லட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட அம்பை, புனைவெழுத்தில் பெண் இருப்பைக் காத்திரமாகப் பதிவுசெய்த எழுத்துக்குச் சொந்தக்காரர். ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளின் வழியே இலக்கிய உலக…
-
- 0 replies
- 571 views
-
-
ஸ்லீப்பர் செல்லில் அமைச்சர் நடராஜன்? : சசிகலா புகழ்பாடும் மொபைல் பேச்சு அம்பலம் திருச்சி: 'சசிகலாவை எல்லாம் பதவியை விட்டு எடுக்க மாட்டோம்' என, அமைச்சர் நடராஜன் மொபைல் போனில் பேசியது, 'லீக்' ஆகியுள்ளதால், அவர், தினகரனின், 'ஸ்லீப்பர் செல்'களில் ஒருவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர், சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன். சமீபத்தில், தினகரனை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, இவரது மாவட்ட செயலர் பதவியை பறிப்பதாக, தினகரன் அறிவித்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக மொபைல் போனில், தினகரன் ஆதரவாளருடன் நடராஜன் பேசியது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விபரம…
-
- 0 replies
- 440 views
-
-
`சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..!' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் அறிவிக்கப்பட்டபோது சசிகலா குடும்பம் மொத்தமும் அதை ஏற்றுக்கொண்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சசிகலா சுவீகரித்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். சசிகலாவால் முதல்வர் என்று அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் விரோதியாகி ஓ.பன்னீர்செல்வம் முகாமுக்கு மாறிய பிறகுதான் சசிகலா குடும்பத்தில் மோதல்கள் உருவானது. ''ஆட்சி அதிகாரத்தில் இனி கோலோச்ச முடியாது; டி.டி.வி.தினகரன், ரத்த சொந்தங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் தருவது இல்லை'' என்று அரசல் புரசலாக சசிகலா …
-
- 0 replies
- 591 views
-
-
"குழந்தைக்கான நல்லுணவு தேடல் என் வாழ்வை மாற்றியது" இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண் பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN படக்குறிப்பு, இயற்கை விவசாயி அனுராதா கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் செய்தியாளர் 1 ஏப்ரல் 2023, 10:11 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் குழந்தைக்கான நல்லுணவுத் தேடலே என்னை இயற்கை விவசாயி ஆக்கியது என்கிறார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான அனுராதா. அதற்காக கல்யாண நகைகளை விற்று நிலம் வாங்கிய போது பரிகாசம் செய்…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MK STALIN FB/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 9 ஜூன் 2023, 10:19 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் மேகேதாட்டு அணை விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு. இது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்தின் பின்னணி என்ன? கர்நாடக மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது குறித்த பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு ஓரளவுக்கு ஓய்ந்தது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தி…
-
- 0 replies
- 444 views
- 1 follower
-