தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10298 topics in this forum
-
குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிகரித்து வரும் கருத்தரிப்பு பிரச்னைகள், குழந்தையின்மை - தாமதமான குழந்தை போன்றவற்றால் உருவாகும் சிக்கல்கள் வடிவமாற்றங்கள் அடைந்துகொண்டு இருக்கின்றன என்பதை கடந்த வாரம் வெளியான ஒரு குற்றச் செய்தி ஒன்றின் மூலம் கவனத்துக்கு வந்துள்ளது. சென்னை புழலுக்கு அருகேயுள்ள காவாங்கரையைச் சேர்ந்தவர் யாஸ்மின். திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள யாஸ்மின் இரண்டாவதாக கர்ப்பமடைய, அவருடைய கணவர் யாஸ்மினை விட்டுப்பிரிந்துள்ளார். குழ…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கம் - தேர்வர்கள் அதிர்ச்சி சென்னை, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட பலவகையான தேர்வுகளில் என்னென்ன பாடதிட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் வெளியிடப்பட்டன. இதில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த திருக்குறள் பாடத்திட்ட பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 574 views
-
-
தமிழ்நாடு: திருக்குறள், திருவள்ளுவரை கட்சிகள், ஆளுநர் பயன்படுத்துவது அரசியல் ஆதாயத்துக்காகவா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் எழும் சர்ச்சைகள் புதிதல்ல. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகள் திருவள்ளுவரை தங்களின் அடையாளமாக கூறிக்கொள்வதும் அரசியல் தலைவர்கள் தங்களின் மேடைப் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக திருக்குறள் ஒன்றை கூறி தொடங்குவதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும்பாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழ் மொழியின் தமிழ்நாட்டு மக்களின் அடையாளமாக திகழ்ந்த திருக்குறள், இன்று தேசம் முழுவதும் தேசத்தைக்…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன? பகிர்க படத்தின் காப்புரிமைSHARAD SAXENA/THE INDIA TODAY GROUP/GETTY IMAGES முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. ஆனால், இவர்களில் நான்கு பேர் இலங்கை குடிமக்களாக இருக்கும் நிலையில் விடுதலைக்குப் பிறகு அவர்கள் எங்கு செல்வார்கள்? ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் …
-
- 0 replies
- 757 views
-
-
மதுரையில் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு MAR 12, 2015by அ.எழிலரசன்in செய்திகள் மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கி.பி.அரவிந்தன் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில், வரும் 14ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணியளவில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். இரா.திரவியம் தலைமையில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில், கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, ஓவியர் வீர.சந்தனம் உரையாற்றுவார். நினைவுரையை எழுத்தாளர்கள் பாமரன் மற்றும் ஜெயப்பிரகாசம், கவிஞர் வைகறை, முனைவர் அரணமுறுவல், சி.அறிவுறுவோன், பொன்மாறன், வழக்கறிஞர்கள் ஜெயம்சூலியஸ், ஜெபர…
-
- 0 replies
- 330 views
-
-
ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் – சிலை – தமிழக அரசினை பதிலளிக்குமாறு உத்தரவு February 8, 2019 ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைப்பது தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கொன்றில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனைக் கௌரவிக்கும் முகமாக அவருக்குக் கடலில் சிலை அமைக்க வேண்டும் எனவும் ராஜராஜ சோழன் நினைவிடமானது கும்பகோணத்தை அடுத்த உடையாளூர் கிராமத்தில் பராமரிப்பின்றி இருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். பிற மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி, சர்தார் வ…
-
- 0 replies
- 617 views
-
-
இந்திய அளவில் தனித்துவம் பெற்றுள்ள சென்னை ரயில் நிலையம் சுமார் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது. நாட்டிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் உள்ள ‘வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ (Venkatanarasimharajuvaripeta) என்ற ரயில் நிலையம் முன்னர் அறியப்பட்டிருந்தது. ஆங்கில எழுத்தில் பார்த்தாலும், தமிழ் அல்லது தெலுங்கு எழுத்து வடிவத்தில் பார்த்தாலும் ‘வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ ரயில் நிலையத்துக்கு இருந்த அந்த தனிச்சிறப்பை ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ (Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway …
-
- 0 replies
- 517 views
-
-
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு, குளங்களை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தரக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 27 நீர்நிலைகளும் எங்கே என்பது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 27 கிணறு, குளங்களை காணவில்லை என மனு சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்பு கேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போனதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் நீர்நிலைகளை …
-
- 0 replies
- 516 views
-
-
ஒரே வாரத்தில் 40 தமிழக மீனவர்கள் கைது; இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் - அன்புமணி 09 Dec, 2024 | 11:52 AM சென்னை: “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் வி…
-
- 0 replies
- 238 views
-
-
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்? மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக மீன்பிடி அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின்…
-
- 0 replies
- 133 views
-
-
பட மூலாதாரம், X/rajprathaban படக்குறிப்பு, (கோப்புப்படம்) கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை மாநகரின் மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இப்போதுவரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் இரண்டு பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். இதற்குப் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
பிரதமருடன் அ.தி.மு.க எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று திடீரென சந்தித்து பேசினர். கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கடையினர் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் தினேஷ், அரவிந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா- இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 388 views
-
-
பொதுச் செயலாளர் பதவிக்கு எம்.ஜி.ஆர் வைத்த ‘செக்’! - சீனியர்களை வளைக்கும் சசிகலா போயஸ் கார்டனில் கட்சியின் சீனியர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் சசிகலா. 'அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு எதிரான மனநிலை உள்ளவர்களை சமாதானப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என்கின்றனர் அ.தி.மு.க. நிர்வாகிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அ.தி.மு.கவில் அதிகாரம் பொருந்திய பொதுச் செயலாளர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. இரண்டாவது நாளாக நேற்றும் போயஸ் கார்டனில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். 'தன…
-
- 0 replies
- 549 views
-
-
ஒரு மாதம் அவகாசம் கொடுப்பார் ஆளுநர்!' - ஓ.பன்னீர்செல்வத்துக்கு டெல்லி நம்பிக்கை #VikatanExclusive #OPSvsSasikala 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், 131 பேர் கலந்து கொண்டனர்' என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன். ' நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வரும்போது எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளனர். மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.கவின் மாநிலங்களவைக்குள்ளும் பிளவு ஏற்பட்டுவிட்டது' என அதிர வைக்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். தமிழக அரசியல் வரலாற்றில் நேற்றைய பொழுதை அ.தி.மு.க தொண்டர்களால் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் அதிரடியைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 450 views
-
-
கூவத்தூர் ரிசார்ட்டில் இப்போது என்ன நடக்கிறது? - லைவ் ரிப்போர்ட் #VikatanExclusive கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்குள் தங்கியிருக்கும் சசிகலா அணி எம்.எல்.ஏ.க்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை எப்படி உள்ளது என்று விசாரிக்க அங்கு பயணித்தோம். அப்போது கிடைத்த தகவல்கள் ருசிகரமானது. 'அல்வா'வுக்கு பெயர் பெற்ற ஊரிலிருந்து சென்னை வந்திருக்கும் எம்.எல்.ஏ. அவர். ஏதோ பிக்னிக் ஸ்பார்ட்டுக்கு வந்ததைப் போல ரிசார்ட்டுக்குள் செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்தார். அரசியல் பரபரப்பும், தொகுதி மக்கள் குறித்த எந்தவித அக்கறையும் அந்த எம்.எல்.ஏ.க்கு இல்லை. 'மகிழ்ச்சி' என்று ரஜினியின் கபாலி டயலாக்கை சக ஆதரவாளர்களுடன் சொல்லிக் கொண்டு இருந்தார். அடுத்து…
-
- 0 replies
- 707 views
-
-
வருமான வரித்துறை அலுவலகத்தில் அடுத்தடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜர்! சென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் அவ…
-
- 0 replies
- 369 views
-
-
பன்னீர்செல்வத்தை மிஞ்சும் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசம்..! - தாமரையில் கரைகிறதா இரட்டை இலை? குடியரசுத் தலைவருக்கான தேர்தலை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. 'தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசின் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்த இருக்கிறார் பிரதமர் மோடி. அதன் ஒருபகுதியாகத்தான் சேகர் ரெட்டியிடம் பணம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த பட்டியலை அனுப்பி வைத்தனர். மாநில அரசை தங்கள் பிடிக்குள் வைப்பதற்காக இந்த ஆயுதம் ஏவப்பட்டது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, பன்னீர்செல்வத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பியது பா.ஜ.க. அதற்கே…
-
- 0 replies
- 496 views
-
-
தொடர் சந்திப்பு: சிறையில் சசி 'பிஸி' ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து, பா.ஜ., மேலிடத்திடம் சமரசம் செய்து கொள்ளலாம் என, சசிகலாவும், தினகரனும் கணக்கு போட்டனர். அக்கணக்கு, தற்போது தவிடு பொடியாகி உள்ளது. 'பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி, கட்சித் தலைமை முடிவு செய்யும்' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி பேசி, ஆதரவை உறுதி செய்துவிட்டார். இதன் மூலம், அ.தி.மு.க., - சசிகலா அணியின் தலைமை, முதல்வர் பழனிசாமி தான் என்பதை, பா.ஜ., வெளிப்படுத்தி உள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கக் கூடாது இதை தொடர்ந்து…
-
- 0 replies
- 341 views
-
-
15/12/2013 திருப்பூர்: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் மீது துளி கூட அக்கறை இல்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''பகை நாடாக உள்ள பாகிஸ்தான் கூட மீனவர்களை சுட்டுக் கொல்வது இல்லை. ஆனால் நட்பு நாடு என்று பெயர் கொண்ட இலங்கை, தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வது, சுட்டுக்கொல்வது போன்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசுக்கு போர்க்கப்பல்களை பரிசாக இந்தியா வழங்குகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை. வருகிற தேர்தலில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு காங்கிரசின் அதிகாரத்த…
-
- 0 replies
- 466 views
-
-
தமிழன் ஆள்வான், ரஜினி அரசியல், அமெரிக்காவில் அவமரியாதையா..? பதிலளிக்கிறார் A.R. Rahman
-
- 0 replies
- 502 views
-
-
எம்.ஏ.எம். ராமசாமி பதினெட்டு வருடங்களுக்கு முன்பு செட்டிநாடே திருவிழாக் கோலம் காண நடந்தது அந்த வைபவம். ஊருக்கெல்லாம் விருந்து வைத்து, ஒக்கூர் சேக்கப்பச் செட்டியார் மகன் ஐயப்பனை முத்தையாவாக்கி சுவீகாரம் எடுத்துக்கொண்டார் தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். அப்படி சுவீகாரம் கொண்ட மகனே இப்போது வளர்ப்புத் தந்தைக்கு எதிராக வரிந்து கட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. எம்.ஏ.எம்.ராமசாமியின் கொள்ளுத் தாத்தா முத்தையா செட்டியார் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் தனக்கென ஒரு செல்வாக்கை தக்க வைத்திருந்தார். தங்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்ட அவருக்கு ‘ராஜா சர்’ பட்டத்தை வழங்கியது பிரிட்டிஷ் அரசு. அதுமுதல் அந்தக் குடும்பத்தை ‘ராஜா வீடு’ என்று அழைத்தே பழகிப்போனது செட்டிநாட்டுச் சீமை. செட்…
-
- 0 replies
- 2.9k views
-
-
தீபாவளியன்று இரவு 8-10 மணிக்குள்தான் பட்டாசு வெடிக்கலாம்.. ஆன்லைன் விற்பனைக்கு தடை: உச்சநீதிமன்றம். தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நாடு முழுக்க புகை காரணமாக மாசு அதிகரித்துள்ளதாகவும், எனவே பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நவம்பர் 6, 7ஆம் தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பட்டாசு விற்பனைக்கு முழு தடை விதிக்கவில்லை என்றபோதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 212 views
-
-
08 NOV, 2023 | 11:17 AM இந்தியாவின் நிலவு மனிதர் என்று புகழப்படும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் ‘பெரியாரும் அறிவியலும்’ எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா 2023, கடந்த 5ம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ‘பெரியாரும் அறிவியலும்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தன்னுடைய வளர்ச்சிக்கு பெரியாரின் கருத்துக்கள்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இவரது வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. …
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Reuters தமிழக அரசு சரியான வாதங்களை முன்வைக்காததால்தான் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது என்று ஆலை எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டியும், அந்த ஆலையை மூட வலியுறுத்தியும் மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆலை எதிர்ப்புப் போராட்டம் ஒன்றின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பொதுமக்க…
-
- 0 replies
- 538 views
-
-
காதல் திருமணம் செய்து ஈழப் பெண்ணை கைவிட்ட அதிமுக பிரமுகர்: மந்திரி என் பக்கம் என மிரட்டல் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் உள்ள சானார்பட்டி ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளரான நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்த கருணாகரன். இதன் அருகே உள்ள தோட்டநுத்து அகதிகள் முகாமில் வசித்து வரும் ஈழத் தமிழரான லதா என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். கருணாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, துளசி என்ற மனைவி உள்ளார். துளசி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். துளசிக்கு குழந்தை இல்லை என்பதால் 2வது திருமணம் செய்ததாக கூறி வந்தார். லதாவும், கருணாகரனும் திண…
-
- 0 replies
- 879 views
-