தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
தி.மு.க., - மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை தி.மு.க.,வில், சரிவர செயல்படாத மாவட்டச் செயலர்கள் நீக்கப்பட உள்ளதாக, சென்னை யில், நேற்று நடந்த கூட்டத்தில், கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், மாவட்டச் செயலர்கள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை உறுப்பினராக, கருணாநிதி, 60 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அவரது பிறந்த நாளுடன் சேர்த்து, அவரின் சட்டசபை வைர விழாவையும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன், 1முதல், மூன்று நாட்களுக்கு விழா ஏற்பாடுகள் செய்யப்படு…
-
- 0 replies
- 298 views
-
-
தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், ஹவாலா கும்பல் மூலம், பல கோடி ரூபாய் பணத்தை கைமாற்றியது தெரிய வந்து உள்ளது. தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டான். இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷனுக்கு, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம், 50 கோடி ரூபாய், லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி போலீசாரால், சில தினங்களுக்கு முன், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் முகாமிட்டுள்ள டில்லி போலீ சார், பெசன்ட் நகரில், மத்திய அரசு அலுவலக மான ராஜாஜி பவனில், இருவரிடமு…
-
- 0 replies
- 374 views
-
-
எவ்வளவு? குவாரியில் குவித்த பணம் எவ்வளவு? விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கருக்கு சொந்தமான மணல் குவாரியில் நடந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, வருமான வரித் துறைக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படை யில், அவரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த, 7ம் தேதி, விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகரும், ச.ம.க., தலைவருமான சரத்குமார், முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், வரு மான வரித் துறை அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர்,10ம் தேதி ஆஜரானார். மேலும், ச…
-
- 0 replies
- 351 views
-
-
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி ( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் , திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ்.காம் வெளியிடுகிறது. அதில் முதல் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது-- பிபிசி தமிழ்) படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionசமூக நீதிக்கு திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு 100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும். மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அ…
-
- 0 replies
- 373 views
-
-
'எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள்...!' - பகீர் கிளப்பும் நாஞ்சில் சம்பத் டி.டி.வி தினகரன், இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து, தினகரனை அவருடைய அடையார் இல்லத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று, அங்கு விசாரணை நடத்தினர். இதையடுத்து, அடையாறில் இருக்கும் தினகரன் வீட்டுக்கு முன்னால் இருந்து தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'டி.டி.வி.தினகரன் மீதான வழக்கின் விசாரணை முடிந்தவுடன் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது அவர் மட்டுமே. தற்போது அவருக்கு எதிராக நடந்து வரும் விசாரணைக்கு நாங்கள் யாரும் இ…
-
- 1 reply
- 410 views
-
-
தினகரன் கைது: ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுக்குமா? #VikatanExclusive இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகக் கூறி, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட அவரை டெல்லி போலீஸார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, அவரது வீட்டில் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, பெங்களுரு, கொச்சி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்புவரை, தினகரனு…
-
- 0 replies
- 407 views
-
-
‘அமைச்சரவையில் எனக்கு இடமே வேண்டாம்?!’ - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பி.ஜே.பி #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. ‘இன்னமும் தினகரனை துணைப் பொதுச் செயலாளராக முன்னிறுத்துகின்றனர் பழனிசாமி அணியினர். இணைவது போலக் காட்டிவிட்டு, தனி ஆவர்த்தனம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள்' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிகாரப்பூர்வமாக மூன்று அணிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தொலைக்காட்சி விவாதங்களில் இந்த மூன்று அணிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். "சசிகலாவை முழுமையாக நீக்கிவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம்…
-
- 0 replies
- 356 views
-
-
தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ் புதுடில்லி : தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். இவரை விசாரணைக்காக டில்லி போலீசார் இன்று (ஏப்ரல் 27) சென்னை அழைத்து வருகின்றனர். சென்னை விரையும் டில்லி போலீஸ் : இரட்டை இலை சின்னத்தை பெருவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் இரவு தினகரன் கைது செய்யப்பட்டார். இவர் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்…
-
- 6 replies
- 1.2k views
-
-
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சில் இழுபறி ஏன்? யார் பெரியவர் என்ற, 'ஈகோ' பிரச்னை தலை துாக்கி உள்ளதால், அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்குவதில், இழுபறி நீடிக்கிறது. இரட்டை இலை : அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைப்பதற் கான சூழல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இரட்டை இலை சின்னம் இருந்தால் தான், வெற்றி பெறமுடியும் என்ற நிலையும் உள்ளது. எனவே, இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்த னர். 'பேச்சுக்கு தயார்' என, பன்னீர்செல்வம் அறிவித்தார்; அதை, சசி அணியினர் வரவேற்றனர். அதை தொடர்ந்து, இருதரப…
-
- 0 replies
- 387 views
-
-
சசிகலா அணியில் கருத்து வேறுபாடு : மா.செ.,க்கள் கூட்டத்தில் மோதல் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக,அ.தி.மு.க., - சசிகலா அணியில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு, சசிகலா அணியில், சிலர் தடையாக உள்ளனர். இதனால், அணி யில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், மூன்று நாட்களாக, மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் நடந்தது. அதில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேசும்போது, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களான, தங்க தமிழ்செல்வ…
-
- 0 replies
- 343 views
-
-
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது! அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 3 நாள்களாக சென்னையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் பிரமாணப் பத்திரம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பிரமாணப் பத்திரத்தில், 'கட்சியை வலுப்படுத்த பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதற்கு உறுதுணையாக இருப்போம்' என்று எழுதப்பட்டு இருந்ததாக ஓ.பி.எஸ். அணிக்கு தகவல் கிடைக்கவே, பேச்சுவார்த்தை பஞ்சாயத்தாக மாற…
-
- 0 replies
- 334 views
-
-
'ஒற்றை தலைமை'யை இழக்கும் அ.தி.மு.க... எதிர்காலம் என்ன? தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட காலம் அது. புதிய கட்சியைத் துவக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். அப்போது கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் தனியாக சந்தித்துப் பேச வைத்தால் பிரச்னை தீர்ந்து விடும் என நினைத்து அதற்கு தூதுவர்களாக சிலர் இயங்கினர். ஆனால் அதை இரு தரப்பினரும் ஏற்கவில்லை. கட்சி உடைந்தது. அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை எம்.ஜி.ஆர். துவக்கினார். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கிய சில ஆண்டுகளுக்குப் பின்னர், அ.தி.மு.க. - தி.மு.க.வை இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. கட்சி பொறுப்பை கருணாநிதியும், ஆட்சிப் பொறுப்பை எம்.ஜி.ஆரும் கவனித்துக்கொள்ளும் ஏற்பாடு அது. ஆனால் இதையும் …
-
- 0 replies
- 366 views
-
-
28 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தினார்களா? “அ.தி.மு.க-வில் ஏற்கெனவே இரண்டு அணிகளாகப் பி்ளவுபட்டுக் கிடக்கும் நேரத்தில் அ.தி.மு.க அம்மா அணியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ-க்கள் தனியாகக் கூட்டம் போட்டுள்ளார்கள்'' என்ற தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ''அப்படி ஒரு கூட்டம் நடைபெறவே இல்லை'' என சில எம்.எல்.ஏ-க்கள் மறுப்பும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளிலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதில், ஓ.பி.எஸ் அணியில் மூன்று எம்.எல்.ஏ-க்கள் தற்போது உள்ளனர். இது தவிர, 28 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார்கள். அதில், மூன்று பேர் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். இந்நிலையில்…
-
- 0 replies
- 217 views
-
-
சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் சசிகலா | கோப்பு படம் அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. சாதாரண குடும்பப் பெண்ணாக இர…
-
- 0 replies
- 307 views
-
-
மும்மூர்த்திகளின் ‘க்ளீன் தமிழ்நாடு’ ஆபரேஷன்! சிக்கலில் அமைச்சர்கள் #VikatanExclusive குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கமுடியும் என்பது மற்றவிஷயங்களுக்கு எப்படியோ இன்றைய தமிழக அரசியல் நிலவரத்துக்கு கனக் கச்சிதமாக பொருந்துகிறது. முடக்கப்பட்ட கட்சிச் சின்னத்தை மீட்க தேர்தல் கமிஷனிடம் ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் 3 நாள் விசாரணைக்குப்பின் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் கட்சியின் பொதுச்செயலாளரானார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்…
-
- 0 replies
- 416 views
-
-
spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்ட, சசிகலா அக்கா மகன் தினகரனை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதித்துள்ளது. தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரி…
-
- 0 replies
- 399 views
-
-
லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1758849 தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது
-
- 4 replies
- 691 views
-
-
சசிகலா, டி.டி.வி. தினகரன் நீக்கம்? - மா.செ. கூட்டத்தில் கிரீன் சிக்னல் ர் சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை நீக்க யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று கட்சித் தலைமை கழக நிர்வாகி கேள்வியை எழுப்பி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகள் அ.தி.மு.க.வில் உருவாகின. இது, அ.தி.மு.கவில் கடும் களேபரத்தை ஏற்படுத்தியது. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இர…
-
- 0 replies
- 364 views
-
-
'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு புதுடில்லி: தி.மு.க., வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட், ஜூலை, 15ல், தீர்ப்பளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. காங்., தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். சி.பி.ஐ., விசாரணை அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. '2ஜி' ஸ்பெக்…
-
- 0 replies
- 359 views
-
-
சசி கையில் ‛குடுமி': இணைப்பு சாத்தியமா சென்னை: சிறையில் சசிகலா இருந்தாலும், டில்லி போலீஸ் பிடியில் தினகரன் சிக்கினாலும், உண்மையில் கட்சியும் அதிமுக அம்மா அணியின் தலைவர்களின் குடுமியும் சசிகலா கையில் தான் இருக்கின்றன. நியமன புது பதவி: அதிமுகவின் விதிமுறைப்படி, தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா அப்படி செய்யப்படாமல், பொதுக்குழு மற்றும் செயற்குழு சேர்ந்து நியமன பொதுச்செயலாளர் என்ற புதுபதவியை உருவாக்கி, அவரை அமர வைத்தனர். அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும், பொதுச் செயலாளர் என்ற பதவியின் அனைத்து அதிகாரங்களும் அவரிடமே உள்ளன. இதன் அடிப்படையிலேயே பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம், அவைத்தலைவராக இருந்…
-
- 0 replies
- 400 views
-
-
‘தி.மு.கவைப் புதிதாகத்தான் தொடங்க வேண்டுமா?’ - மா.செக்களிடம் கடுகடுத்த ஸ்டாலின் #VikatanExclusive தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியின்போது, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளால் அதிர்ந்து போய்விட்டார் ஸ்டாலின். எனவே, கட்சியை சீரமைப்பது குறித்த ஆய்வுக்காக மாவட்டச் செயலாளர்கள் வர இருக்கின்றனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். சென்னை, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அவரிடம் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டவர்கள் வாழ்த்து பெறும் படங்கள் மட்டுமே வெளியாயின. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏ…
-
- 0 replies
- 366 views
-
-
தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை... ‘சமாதிகளின் பூமி’ என்றழைக்கப்படும் டெல்லியில் டி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்க்கை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலையை மீட்கத் துடித்த தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், அ.தி.மு.க-வில் அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச ஆதிக்க சக்தி, ஆட்சியில் அவருக்கு இருந்த எச்சசொச்ச செல்வாக்கு, சமீபமாக அவருக்குள் வளர்ந்திருந்த அரசியல் கனவுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது தொடங்கிய தினகரனின் அரசியல்... டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டதில் ‘அஸ்தமனம்’ ஆனது வரையிலான கதை... தினகரனின் போயஸ் கார்டன் ‘என்ட்ரி’! …
-
- 0 replies
- 522 views
-
-
டாஸ்மாக் கடையை துவம்சம் செய்த பொதுமக்கள்! அதிர்ந்துபோன திருப்பூர் போலீஸ் திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை, பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அடித்து நொறுக்கினார்கள். இதில், ஏராளமான பெண்களும் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டன. ஏற்கெனவே, நீண்ட நாள்களாக தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியில், டாஸ்மாக் கடை ஒன்று இருந்து வருகிறது. …
-
- 0 replies
- 407 views
-
-
அடுத்தது இவர்கள்தான்! அதிரவைக்கும் ஹெச்.ராஜா ஃபேஸ்புக் பதிவு டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து அ.தி.மு.க அமைச்சர்கள் என்று அதிரவைத்துள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. அ.தி.மு.க பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ள நிலையில், அதனை கைப்பற்றும் முயற்சியில் பன்னீர்செல்வம் அணியினரும், பழனிசாமி அணியினரும் இறங்கியுள்ளனர். இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தை பெறும் முயற்சியில் டி.டி.வி.தினகரன் இறங்கியுள்ளார். இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். முதல் கட்டமாக பத்து கோடி ரூபாய் கொடுத்துள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் அளித்த வாக்கும…
-
- 0 replies
- 392 views
-
-
மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்? ‘பேச்சுவார்த்தைக்குத் தயார். அலுவலகத்தில் இருக்கிறீர்களா?’ என கழுகாரிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. கொஞ்ச நேரத்திலேயே, கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘என்ன இது புதுப்பழக்கம்?” என்றோம். ‘‘அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பித்தானே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். அம்மா அணியின் குழுத் தலைவர் வைத்திலிங்கம், புரட்சித்தலைவி அம்மா அணியின் குழுத் தலைவர் கே.பி.முனுசாமிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொல்லி இருந்தாரே!” ‘‘பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது?’’ ‘‘இரண்டு அணிகளும் இணையுமா என்பது சந்தேகம் தான். ‘இரண்டு நிபந்தனைகள்’ என்று வெளியே சொன்னாலும், வெ…
-
- 0 replies
- 1k views
-