தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
சசிகலாவுக்கு எதிராகத் திரண்ட 3 சக்திகள்! -தியேட்டர் வில்லங்கமும் தீபக் கொந்தளிப்பும் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். 'சசிகலா குடும்பத்தில் அதிகாரப்போட்டி தலைதூக்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் தினகரனுக்கு எதிராக தீபக் கொந்தளித்தது. இதன் பின்னணியில் மூன்று பெரிய சக்திகள் உள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த 60 ஆட்களுக்குள் அ.தி.மு.கவில் அதிகாரப் போட்டி தலைதூக்கியது. சசிகலா தலைமைக்கு எதிராகப் பேட்டியளித்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். அதன்பிறகு அ.தி.மு.க நிர்வாகிகளும் பன்னீர்செல்வம் பக்கம் வர ஆரம்பித்தனர். எம்.எல்…
-
- 0 replies
- 414 views
-
-
கூவத்தூர் கூத்துக்களா? ஜெ. மருத்துவ அறிக்கையா? ஓ.பன்னீர்செல்வம் இன்று போடப்போகும் குண்டு என்ன? தமிழகமே திரும்பி பார்க்கும் வகையிலான முடிவை பன்னீர் செல்வம் இன்று எடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ள நிலையில் அவரது அறிவிப்பு என்னவாகும் இருக்கும் சென்னை: ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்…
-
- 1 reply
- 272 views
-
-
வெல்ல மூட்டை டு எடப்பாடியார்... பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை! ச.ஜெ.ரவி - படங்கள்: வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார் தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் எடப்பாடி கே.பழனிசாமி. வெல்ல வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கியவரை, அரசியல் தொழில் அதன் உச்சத்துக்கு உயர்த்தியிருக்கிறது. அரசியல் மூலம் பரவலாக அறியப்பட்டதற்கு முன்னரே, ஒரு கொலை வழக்கில் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதியில் அறிமுகமானவர் பழனிசாமி. பங்காளிகள் சூழ வாழ்ந்துவந்தவர் பழனிசாமி. தன் குடும்பத்துக்கும் பங்காளி குடும்பத்துக்கும் பாதை பிரச்னையில் சண்டை மூள... கொலை வரை நீண்டது. இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொலையில் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந…
-
- 0 replies
- 1.4k views
-
-
‘‘ஒரு காருக்காக நீங்களும் ஜெயிலுக்குப் போயிடாதீங்க!’’ - நடராஜனுக்கு சசிகலா அட்வைஸ்! ‘கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’ என்பதோடு ‘கார் வாங்கிப் பார்’ என்பதையும் இப்போது சேர்த்துக் கொள்ள வேண்டும். நடுத்தரவாசிகளுக்கு கார் விஷயத்தில் தவணைத் தொந்தரவுகள் என்றால், பிரபலங்களுக்கு 'ரெய்டு' பிரச்னை. ‘புரியலையே’ என்கிறீர்களா? எல்லாம் வெளிநாட்டு கார் மோகம். பெரும்புள்ளிகள் வெளிநாட்டு கார் விஷயத்தில் ரெய்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் சீஸன் இது. முன்பு ஒருமுறை ஸ்டாலினின் ஹம்மர் காருக்காக CBI ரெய்டு வந்தது. இப்போது CBI ரெய்டில் சிக்கிக்கொண்டு தவிப்பவர், சசிகலாவின் கணவர் நடராசன். இவரைச் சிக்கலில் தள்ளியிருப்பது டொயோட்டா லெக்ஸஸ் CS300 என்னும் 1994 மாடல் கார். …
-
- 0 replies
- 299 views
-
-
பதவிக்கு வர மாட்டேன்; ஆனால்... நடராஜன் திடீர் சபதம் அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் நான் வர மாட்டேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் உறுதியளித்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற பிறந்தநாளில் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் நான் வர மாட்டேன். ஆனால் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்து முடிப்பேன். பதவிக்கு வராமலேயே அ.தி.மு.க.வை பாதுகாப்பேன். ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தம்பி தினகரன் சொல்வதை போல் பிரிந்து சென்றவர்க…
-
- 0 replies
- 323 views
-
-
'ஜெயலலிதா பெயரில் மரம் நடுவிழா!' அரசு விளம்பரத்தின் சர்ச்சை கடந்த ஆண்டு இதே நாள் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளையொட்டி, 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதற்காக அரசு சார்பில் நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும், வனத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவும் இந்த விளம்பரத்தை கொடுத்திருந்தார்கள். "முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மரம் நடுவது வரவேற்க வேண்டியது தான். ஆனால் அதற்காக அரசு செலவில் நாளிதழ்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்பதை ஏற்க முடியாது. தலைமை செயலாளரின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது" என அப்போதே சர்ச்சை எழுந்தது. ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க.வும்…
-
- 0 replies
- 296 views
-
-
'அ.தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க விட மாட்டேன்!’ - ஆவேச வைகோ சுவாரஸ்யமான திருப்பங்கள், சம்பவங்களை நிகழ்த்துவதன்மூலம் தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருப்பவர்களில் ஒருவர், வைகோ. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கூட்டணிக் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தபோது, அந்தத் திட்டத்தை ஆதரித்து கூட்டணியைவிட்டு வெளியேறியவர். இப்போது, மிகப்பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேசிவரும் நிலையில், அதற்கு மாறான பேச்சு, அறிக்கையின்மூலம் கவனிக்கப்பட்டு வருகிறார் வைகோ. சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானது, சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக இயங்கியது, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைப்பு என கடந்த சில தின…
-
- 1 reply
- 784 views
-
-
-
சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா! ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப்கான் வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள். ‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற்களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன்…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி 'நான், திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று, ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்' என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'எம்ஜிஆர் மறைந்த காலத்திலேயே ஜெயலலிதாவால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவன் நான். பிறகு, ஜெயலலிதாவால் 1999-ம…
-
- 2 replies
- 644 views
-
-
ஜெயலலிதா மரண வழக்கில், அப்போலோ முக்கிய பதில் மனு தாக்கல்! புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால், அவரது படத்தை வெளியிடவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை பதில் மனு தாக்கல்செய்துள்ளது. சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதி…
-
- 1 reply
- 429 views
-
-
உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்டுவாரா பன்னீர் மதுரை:தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை, வரும் மே 14க்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சசிகலா அணி மீதான பொதுமக்கள் அதிருப்தியை ஓ.பி.எஸ்., அணி அறுவடை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். சிறப்பாக செயல்பட்ட அவரை சசிகலா குடும் பத்தினர் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பன்னீர்செல்வம் பதவியை இழந்தாலும், பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவை பெற்றார். அதுவரை அ.தி.மு.க.,வை எதிர்த்து வந்தவர்கள் கூட, பன்னீர்செல்வத்தை ஆதரிக்க துவங்கினர். தற்போது அவருட…
-
- 0 replies
- 308 views
-
-
'கைதி'க்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு : ஜெ., பிறந்த நாள் பேனரில் சசி படத்துக்கு 'தடா' பெங்களூரு சிறை கைதி சசிகலாவுக்கு, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொண்டர்களை திருப்திபடுத் தும் வகையில், ஜெ., பிறந்த நாள் பேனர்களில், சசிகலா படமின்றி, அச்சிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க., பொது செயலர் பதவியை சசிகலா கைப்பற்றினார். இதற்கு, கட்சியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. குறிப்பாக, பெண்கள், ஜெயலலிதாவின் மரணத்துடன் சசிகலாவை ஒப்பிட்டு பேசத் துவங்கினர். 'சதி'கலா …
-
- 0 replies
- 531 views
-
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு http://www.dinamalar.com/ சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி! உச்ச நீதிமன்றம் அதிரடி சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 1991-1995 வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அதன் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்…
-
- 67 replies
- 7.3k views
-
-
“அவைக்குள் நுழைந்த ஐ.பி.எஸ்.கள்... இனி போலீஸ் வேலை பார்க்க முடியாது!” நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றுவதற்காக, தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நுழைந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றுவதற்காக சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில், ஒன்பது போலீஸ் அதிகாரிகளை தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் நுழைய அனுமதிக்கிறேன்’ என தமிழக சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு அனுப்பிய கடித நகல் வெளியானது. இதில், மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், இணை கமிஷனர்களான சந்தோஷ்குமார், ஜோஷி நிர்மல்குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர…
-
- 0 replies
- 1.2k views
-
-
'முதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன்?'- ஆளுநர் வித்யாசாகர் ராவ்! அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது ஏன்? என்பதற்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, www.dailyo.in என்ற ஆங்கில இணையதளத்தில் வித்யாசாகர் ராவ் தெரிவித்திருப்பதாவது:- "அண்மையில், தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் சூழ்நிலைகளின் போது, ஊடகங்களிலும், செய்திகளிலும் பரபரப்பாக எனது பெயர் விமர்சனத்திற்கு உள்ளானதைப் போன்று, 45 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் இதுவரை விமர்சிக்கப்…
-
- 0 replies
- 380 views
-
-
சசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? பரபர பின்னணி #VikatanExclusive சிறையிலிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராக பொறுப்பு ஏற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. இதற்கு சில காரணங்களை சொல்கின்றனர் பழனிசாமியின் ஆதரவாளர்கள். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் நிகழ்ந்த களேபரங்களால் கலக்கத்தில் இருந்தனர் கட்சியினர். ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி, முதல்வராகிவிட்டார். அதே நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் சிறைக்குச் சென்று விட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது தமிழகத்தில் கண்ணீர் காவியத்தை அரங்கேற்றிய அ.தி.மு.க.வினர், சசிகலாவுக்காக ஒரு சொட்டு கண்ணீ…
-
- 0 replies
- 892 views
-
-
சசிகலாவுக்கு பக்கத்து அறை 'சயனைடு' மல்லிகா, வேறு சிறைக்கு ஏன் மாற்றப்பட்டார்? சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் 'சயனைடு ' மல்லிகா என்ற பெண் கொலையாளியும் அடைக்கப்பட்டிருந்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல் நாள் சசிகலா அடைக்கப்பட்டபோது, அடுத்த அறையில் சயனைடு மல்லிகா இருந்தார். சயனைடு கலந்த தண்ணீரைக் கொடுத்து பெண்களைக் கொலை செய்து நகைகளை அபேஸ் செய்வது மல்லிகாவின் ஸ்டைல். இதனால் மல்லிகா என்ற பெயருடன் 'சயனைடு' ஒட்டிக் கொண்டது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை 6 பெண்களை 'சயனைடு' மல்லிகா கொன்றுள்ளா…
-
- 1 reply
- 787 views
-
-
சந்தி சிரித்த சட்டசபை : 18 கேள்விகள் !
-
- 0 replies
- 396 views
-
-
நெருப்பாய் கொதிக்கும் தொகுதி மக்கள் நெருங்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் அவரது போட்டோ வுடன் விமர்சனம் வந்துள்ளது. செங்கோட்டையன் படத்தின் மேல், 'கண்ணீர் அஞ்சலி' என, குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'செங்கோட்டையன், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின், வேலைக் காரனுக்கு ஆதரவாக ஓட்டளித்த தால், தொகுதி மக்களின் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை கோ…
-
- 0 replies
- 442 views
-
-
ராஜாவின் பதிலடியால் கிடுகிடுத்த கோர்ட் '2ஜி' வழக்கல், நீதிபதியின் சரமாரியான கேள்விகளால், திணறிய, சி.பி.ஐ., வழக்கறிஞர், ''அதிர்ஷ்டம் இருப்பவர்கள் வெற்றி பெறட்டும்,'' என, கூறியதும்,''ஆவணங்களையும், சட்டத் தையும் நம்புகிறேன்; அதிர்ஷ்டத்தை அல்ல,'' என, தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ராஜா பதிலடி தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர் பாக, சி.பி.ஐ., தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பிலும், வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், டில்லி பாட்டியாலா கோர்ட்டில், இறுதிகட்டமாக, சுருக்கமான வாத பிரதிவாதங் கள், துவங்கியுள்ளன. நேற்று நடந்த வ…
-
- 0 replies
- 495 views
-
-
தி.மு.க போராட்டத்தில் முதல்வர் பங்கேற்பு தி.மு.க சார்பில் புதுச்சேரியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். பிப்ரவரி 18--ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதனைக் கண்டித்து, தி.மு.க சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களும், தி.மு.க தலைவர்களும் மாநிலம் முழுவதும் போராட…
-
- 4 replies
- 2.5k views
-
-
சென்னை: உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற …
-
- 0 replies
- 314 views
-
-
சேகர் ரெட்டி... எடப்பாடி... ஊழல் டீலிங்! - ‘அறப்போர்’ அதிரடி! சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனைப் பெற்ற சூழலில், அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார், எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்ட சூழலில், அவர்மீது அதிரடி ஊழல் புகார் ஒன்று பரபரப்பாக வலம் வரத் தொடங்கியுள்ளது. கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டவுடன், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து ராவுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பற்றி தகவல் வெளியானது. அதோடு, சேகர் ரெட்டிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருந்த தொடர்பு உள்ளிட்ட விவகாரங்…
-
- 0 replies
- 924 views
-
-
ஜெ. வைத்த துளசி மாடம்... சுற்றிவந்த சசிகலா... டி.வி பார்க்கும் இளவரசி... மிரட்டும் சுதாகரன்! பரப்பன அக்ரஹாரா ஜெயில் வாழ்க்கை தமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான். ‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள். சசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்துகொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது. ஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டுகொண்டது. அதன்பின், அவர்களுக்கான …
-
- 0 replies
- 859 views
-