தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10296 topics in this forum
-
சசிகலாவுக்கு சிறப்பு வசதி இல்லை கர்நாடக சிறை துறை தகவல் பெங்களூரு:'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை' என, சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சிறையில…
-
- 0 replies
- 329 views
-
-
கண்ணீர்விட்ட பன்னீர்... பழைய அஞ்சாநெஞ்சன் மது! ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவதாக முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வாக்குறுதி கொடுத்திருந்தனர். சொன்னபடி அதே நாளில், ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் தீபா. ஆனால், ஓ.பன்னீர்செல்வம்? காலையிலேயே ஓ.பி.எஸ் வீட்டில் ஊடகங்கள் குவிந்துவிட்டன. காலை 7 மணிக்கெல்லாம் பளிச் வேட்டி - சட்டையுடன் சிரிப்பும் கும்பிடுமாய் ஆதரவாளர்களின் அரவணைப்பில் திணறிக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ‘‘அண்ணே, இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திடணும்’’ என்று குரல் கொடுத்தவர்களை உதட்டில் கைவைத்து அமைதிகாக்கச் சொன்னார். ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 862 views
-
-
'தினகரன் என்றால் யார்? அப்படி ஒரு பெயர், எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் இல்லையே... அவர் பெயரில் எங்களுக்கு ஏன் கடிதம் மூலம் விளக்கம் அளிக்கிறீர்கள்?' என, சரமாரியான கேள்விகள் அடங்கிய நோட்டீசை, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அனுப்ப, தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அ.தி.மு.க., வில் ஏராளமான அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன; இருப்பினும், மிக முக்கியமான கேள்வியாக தற்போது உருவெடுத்து நிற்பது, பொதுச் செயலர் நியமனம் செல்லுமா, செல்லாதா என்பது தான்.சசிகலாவை பொதுச் செயலராக நியமிக்க முடிவெடுத்த போது, முதல் எதிர்ப்பு குரலை, ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா எழுப்பினார்; தேர்தல…
-
- 0 replies
- 436 views
-
-
இருவர் அணியால் மிரளும் அமைச்சர்கள்! - தினகரனுக்கு எதிராக சீறும் நிர்வாகிகள் #VikatanExculsive பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளை சசிகலா கண்காணித்துவந்தாலும், டி.டி.வி.தினகரனைச் சுற்றியுள்ள இருவர் அணியின் கெடுபிடிகளால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சீனியர் அமைச்சர்கள். 'அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில், இருவர் அணியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. கட்சியை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 'சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை' என்ற உத்தரவு வந்த நொடியே, கட்சியை வழிநடத்த டி.டி.வி. தினகரனைக் கொண்டுவந்தார், சசிகலா. அதற்கேற்ப, துணைப் பொதுச்செயலாளர்…
-
- 0 replies
- 318 views
-
-
அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை டிடிவி.தினகரன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகி களுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன்பு, டி.டி.வி.தின கரனை துணைப் பொதுச் செயலா ளராக நியமித்தார். தினகரன் நியமனத்துக்கு கட்சியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தினகரனை ஏற்க மாட்டோம் என கூறியுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஜெ.தீபா அ…
-
- 0 replies
- 325 views
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் கையில் இரட்டை ரிமோட்! ‘‘அ.தி.மு.க-வின் சுப்ரீம் ஸ்டார் ஆகிவிட்டார் தினகரன். அவர் கையில் இப்போது இரண்டு ரிமோட்கள்’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘விளக்கம் ப்ளீஸ்’’ என்றோம். ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை உள்ளடக்கிய ஐவர் குழுதான் அ.தி.மு.க-வின் நிர்வாகத்தை இப்போது கவனிக்கிறது. இந்தக் குழுவுக்கு மேலே, தினகரன் சுப்ரீம் பவரில் இருக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார். சசிகலா சிறைக்குச் செல்லும்முன், அவரிடமிருந்து கட்சி நிர்வாக ரிமோட்டையும், ஆட்சி நிர்வாக ரிமோட்டையும் தன்வசம் வாங்கிக்கொண்டார் தினகரன், சசிகலா, ஒரு ரகசிய உத்தரவையு…
-
- 0 replies
- 926 views
-
-
சிறை குற்றவாளியை அமைச்சர்கள் சந்திக்கலாமா? பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவை, தமிழகத்தை சேர்ந்த நான்கு முக்கிய அமைச்சர்கள் சந்தித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை சந்திக்க, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர், நேற்று காலை, சென்னை யில் இருந்து பெங்களூரு வந்தனர். இதன்பின், கூட்டுறவு து…
-
- 0 replies
- 486 views
-
-
ஜெ., சொத்து வழக்கு செலவு வசூலிக்க கர்நாடகா தயாராகிறது பெங்களூரு:''ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செலவு விபரங்களை, கர்நாடக அரசு சேகரித்து வருகிறது. பணி முடிந்ததும், வழக்கு செலவு தொகையை ஒப்படைக்க, தமிழக அரசிடம் கோரப்படும்,'' என, கர்நாடக சட்டத்துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார். கர்நாடக சட்டத் துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா, பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெ., சொத்து குவிப்பு வழக்குவிசாரணை செலவை வழங்கும்படி, உச்ச நீதி மன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், கர்நாடக அரசும் ஏராளமாக செலவு செய்துள்ளது. அந்த விபரங்கள் சேகரி…
-
- 0 replies
- 361 views
-
-
முதல்வர் மாவட்டத்தில் எதிர்ப்பு அதிகரிப்பு அரசு விழா நடத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது தாக்குதல் முயற்சி தொடர்வதால், முதல்வர் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், பொதுக்கூட்டங்களை நடத்தவும், நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த வர், முதல்வர் பழனிசாமி. அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது. முதல்வரின்மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது செருப்பு மாலை வீச்சு, முற்றுகை போராட்டம் நடத்தி, பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.…
-
- 0 replies
- 187 views
-
-
நாடு நலம் பெற தமிழகத்தை தியாகம் செய்யலாம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி இல.கணேசன் கருத்து புதுச்சேரி: நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இல.கணேசன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கும் பொருத்தமானதாகும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால், அந்த மாநிலத்திலோ அல்லது நாடு தழுவிய …
-
- 5 replies
- 781 views
-
-
பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சசிகலா?! அமைச்சர்கள் சிறை சந்திப்பின் பின்னணி #VikatanExclusive பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். டிசம்பர் மாதத்தில் நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தீர்மான நகல், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டன. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்க…
-
- 0 replies
- 303 views
-
-
ஜெயலலிதா கைநாட்டும் சசிகலா பதவியும்...! - ஆணையத்தை நெருக்கும் பன்னீர்செல்வம் தரப்பு #VikatanExclusive தேர்தல் ஆணையத்தை எதிர்கொள்வது குறித்துத்தான் சசிகலா உறவினர்கள் தீவிர ஆலோசனை நடத்திவருகின்றனர். ' அ.தி.மு.க-வின் சட்டவிதிகளுக்கு மாறாக, பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்தார் சசிகலா. ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க என்ன நிலையில் இருந்ததோ, அப்போது இருந்த கட்சியின் நிலையைத்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கில் எடுத்துள்ளனர். இது, சசிகலாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளால் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. இதுகுறித்து …
-
- 0 replies
- 677 views
-
-
தமிழகத்தின் புதுக்கோட்டை கீரமங்கல நெடுவாசல் போராட்டத்தை மாநிலம் தழுவிய ரீதியில் மாற்றப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் நிலத்திலிருந்து எரிவாயுவை பெறுவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் நிலத்தடிநீர் வளம் குறைவடையும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி முதல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுடைய போராட்டங்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில், இப…
-
- 0 replies
- 426 views
-
-
பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், வேலூர் அரச வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து இந்திய மத்திய மாநில அரசாங்கங்கள் இழுத்தடித்து வருகின்றன. இதனால் 25 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன், வேலூர் அரச வைத்தியசாலையில் திடீரென எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் வைத்தியசாலையைச் சுற்றி …
-
- 0 replies
- 436 views
-
-
தவறான நட்பால் வீழ்ந்த ஆலமரம் ஜெயலலிதா! ஜெயலலிதா... இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். திரைப்பட நடிகையாகத் தொடங்கிய இவரது வாழ்க்கை, அரசியலுக்குள் நுழைந்ததும் பல அதிர்ச்சியான திருப்பங்களுடன் நகர்ந்தது. அ.தி.மு.கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியதையே தனது பலமாக மாற்றிக்கொண்டார். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வரானார். ஆனால், அவரின் வாழ்க்கை முடிவு இனிமையாக இல்லை. இறப்புக்குப் பிறகு அவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் கூறிவிட்டது. வரலாற்றில் இருந்து நீங்காத கறையாக இது அமைந்துவிட்டது. பணம், புகழ் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஜெயலலிதாவை இந்த இடத்துக…
-
- 8 replies
- 1.1k views
-
-
'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறி, அரசியல் கட்சி துவக்கியுள்ளவர்கள், மாணவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, உண்மையான போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். தங்களுக்கு கட்சி துவக்கும் திட்டம் எதுவும் இல்லை என, வெளிப்படுத்திய அவர்கள், புதிய கட்சி துவக்கியோரின் பின்னணி குறித்தும், சந்தேகம் கிளப்பி உள்ளனர். தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஜன., 17ல், சென்னை, மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் துவக்கினர். முதலில், ௫௦ பேருடன் துவங்கிய போராட்டம், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆதரவால், பெரிய அளவிலான போராட்டமாக மாறியது. அரசியல் கட்சித் தலைவர்களை …
-
- 0 replies
- 301 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு: முதல்வர், தலைமைச் செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டசபை செயலாளர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். மேலும், சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 15 …
-
- 0 replies
- 274 views
-
-
"மூன்றில் ஒரு பங்குதான் கொடுத்தார்கள்!" - முடிவுக்கு வராத கூவத்தூர் கணக்கு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பதற்காக, எம்.எல்.ஏக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார் சசிகலா. 'நாங்கள் யாரும் பன்னீர்செல்வம் அணிப் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதில் இரண்டு பங்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க அரசியல் வரலாற்றில் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் வரிந்து கட்டிக் கிளம்பிய மறுநாளே எம்.எல்.ஏக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் சசிகலா. 11 நாட்களாக தொடர்ந்து பிரேக்கிங் …
-
- 0 replies
- 490 views
-
-
சசிகலா இல்லாத அ.தி.மு.க! - சீனியர்களை வளைக்கும் பன்னீர்செல்வம் #VikatanExclusive பெங்களூரு சிறையில் இருந்துகொண்டே தமிழக அரசியல் நிலவரங்களைக் கவனித்துவருகிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவுக்கு வெற்றி கிடைத்துவிட்டால், சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்குவந்துவிடும். அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளை பன்னீர்செல்வம் அணியை நோக்கி இழுக்கும் முயற்சிகளும் வேகம் பெற்றுள்ளன' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பாளர்கள். 'ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன்' என்ற அறிவிப்பின் மூலம், கார்டன் வட்டாரத்தை கதிகலங்கவைத்திருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. 'அப்போலோவில் நடந்த சம்பவங்களுக்கு விசாரணைக் கமிஷன் தேவை' எனக் கூடு…
-
- 0 replies
- 471 views
-
-
அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில், நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், பதவியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு ஓட்டம் பிடித்து வருகின்ற னர். தங்களது கூடாரம் காலியாவதால், சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியலை, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி. ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்து போராடினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும், கட்சி பதவியில் நியமிக்கப்பட்டது கிடையாது. ஆனால், ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., தற்காலிக பொதுச்ச…
-
- 0 replies
- 221 views
-
-
'ஸ்டாலின் புகார் எதிரொலி'!காங்.தலைவர் திருநாவுக்கரசர் மாற்றம்? தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குறித்து வலுவான புகார் அளித்துள்ளார்.இதனால் அவர் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து சத்திய மூர்த்தி பவன் தரப்பினர் நம்மிடம் கூறுகையில்,"தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட நாள் முதலே அவரின் அ.தி.மு.க. சார்பு நிலை தெளிவாகத் தெரிந்தது.அப்போதே கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து டெல்லி…
-
- 0 replies
- 472 views
-
-
முதல்வருக்கு எதிராக நீதிபதி போராட்டம்? புதுடில்லி:'தமிழகத்தில் அமைந்துள்ள, சிறையில் இருந்து நடத்தப்படும் பினாமி ஆட்சி நீக்கப்படும் வரை என் போராட்டம் தொடரும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'தமிழன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப் படுகிறேன்' என, நேற்று முன்தினம், 'பேஸ்புக்' சமூகவளைதளத்தில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தன் கருத்தை வெளியிட்டி ருந்தார், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. இந்த நிலையில், நேற்று பதிவிட்டுள்ள மற்றொரு செய்தியில், அவர் கூறியுள்ளதாவது: தமிழர் குறித்து நான்கூறியுள்ள கருத்துக்கு வந்துள்ள பதில்கள், …
-
- 0 replies
- 508 views
-
-
ஜெயலலிதா மரணம்: ஜனாதிபதியை சந்தித்து சிபிஐ விசாரணை கோர ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து முறையிட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அதற்கு முன்பாக 75 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிக…
-
- 0 replies
- 321 views
-
-
எனது பிறந்த நாளில்... "பொன்னாடைக்கு" பதிலாக, புத்தகங்களை வழங்குங்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள். தனது பிறந்த நாள ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சால்வை, பொன்னாடைக்கு பதில் புத்தகங்களை வழங்குங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிறந்தநாள் விழாக்களை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாமென்றும், மக்களுக்குப் பயன் தரும் வகையில் ரத்ததானம், நலத்திட்ட உதவிகள், இயற்கையைப் போற்றும் விதத்தில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கழகத் தோழர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வேண்டுகோள் விடுத்து வருகிறேன். அத்துடன் பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்ற பொது மக்களுக்கு அதிருப்தி ஊட்டும் பிறந்…
-
- 1 reply
- 501 views
-
-
“எம்.எல்.ஏ-க்களை இழுக்க முடியாதா என்று கேட்கிறார்கள்!’’ – ஸ்டாலின் கலகல சட்டமன்றத்தில் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப் பட்டதைக் கண்டித்து, கடந்த 22-ம் தேதி தமிழகம் முழுவதும், தி.மு.க சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னையில் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தார்கள். இந்தப் போராட்டத்துக்காக, முதல் நாள் இரவே திருச்சி வந்துவிட்ட ஸ்டாலின், உண்ணாவிரதப் பந்தலுக்கு காலை 8.40 மணிக்கு வந்தார். 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தி.மு.க மாநிலங்களவை உறுப…
-
- 0 replies
- 1.3k views
-