Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சசி ஆதரவு திண்டுக்கல் சீனிவாசனுக்கு வந்த சோதனை.. வேட்டியை உருவிய மக்கள்! திண்டுக்கல்: சசிகலா ஆதரவு அமைச்சரும், எம்எல்ஏ-வுமான சீனிவாசனை தங்கள் தொகுதிக்குள் நுழைய விடாமல் மக்கள் விரட்டியடித்தனர். இந்த தள்ளுமுள்ளுவில் அவரது வேட்டி அவிழ்ந்தது. திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி மற்றும் வனத்துறை அமைச்சராக உள்ள சீனிவாசன் சசிகலாவின் ஆதரவாளராவார். இதனால் அவரை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க் கொடி உயர்த்தியதும், அவரை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து சசி நீக்கினார். பின்னர் தனது ஆதரவாளரான சீனிவாசனை அப்பதவியில் அமர்த்தினார். கடும் எதிர்ப்பு இந்நிலையில் இத்தனை நாள்கள் கூவத…

  2. சசிகலா - ஓபிஎஸ் அணிகள் மோதலால் நெருக்கடி: உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை இருக்குமா? இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள் கட்சி பிரச்சினையால் உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராகவும், அக் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். இதை யடுத்து, அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும்…

  3. பெங்களூரு சிறையில் இருந்தபடி கட்சியை சசிகலா நடத்த முடியுமா? - லாலு போல் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கருத்து சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்தபடி கட்சியை நடத்தியது போல, தற்போது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவால் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கூறுகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு, பிஹார் முதல்வராக இருந்தபோது, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கினார். இதில் கடந்த 1997, ஜூலையில் முதல்வர் பதவியை அவர் இழக்க நேரிட்டபோது, தனது மனைவி ராப்ரி தேவியை அப்பதவியில் அமர வைத்தார். ராப்ரி பெயரளவில் முதல்வராக…

  4. கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு வீசியுள்ளனர். நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பை வீசியுள்ளனர். இன்று கருணாஸ் தனது தொகுதியான திருவாடனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பிய போது மறைந்திருந்த சில நபர்கள் அவரது கார் மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருணாஸ் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். http://globaltamilnews.net/archives/19078

  5. “நம்ம குடும்பத்தில் ஒருவர் சி.எம் ஆகணும்! - தினகரனுக்கு சசிகலா அட்வைஸ் ‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளது’’ என்று சசிகலாவை விமர்சித்து வருகிறார்கள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அவரை, ‘சிறைக்கு வெளியில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோல்’ எனக் கருதப்படும் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்தபோது நடந்தது என்ன? கடந்த 20-ம் தேதி மாலை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் வந்தனர். அவர்களை கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி அழைத்து வந்தார். சிறை வளாகத்துக்குள் காத்திருந்த இளவரசியின் மகன் விவேக், அவரின் மனைவி கீர்த்தனா மற்றும் உறவினர்களோடு இவர்கள் சிறைக்குள் ச…

  6. சசிகலாவின் கைப்பொம்மை முதல்வரா?' உயிரை விடுவேன்' என்கிறார் கட்ஜு புதுடில்லி, : 'சிறைப் பறவை சசிகலாவின் கைப் பொம்மையாக உள்ள,இடைப்பாடி பழனி சாமியை, தமிழக முதல்வராக ஏற்க முடியாது; அதற்கு பதில், நான் உயிரை மாய்த்துக் கொள் வேன்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், நீதிபதி மார்க் கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:சிறைப்பறவை சசிகலா வின் கைப்பொம்மை, இடைப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப் பட்டுள்ளார். இதைப் பார்த்து, தமிழக மக்கள், எதுவும் செய்யாமல் மவுனம் சாதிக்கின்றனர். சோழர், பாண்டியர், சேரர் உள்ளிட்ட மாப…

  7. அ.தி.மு.க., சண்டைக்கு ஆர்.கே.நகர் முடிவு கட்டும்! தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு கட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலா ஆதரவு அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில்,மற்றொரு அணியும் ,கச்சை கட்டுகின்றன. இரு பிரிவினரும், தாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என கூறி வருகின்றனர். சசிகலா தரப்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். பன்னீர்செல்வம் தரப்பில், குறைந்த அளவிலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள…

  8. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 1972ல் நடந்தது மீண்டும் திரும்புமா? சபாநாயகர் தனபால் மீது, தி.மு.க., கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டால், சட்டசபையில், 1972ல் நடந்த சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., வெளி யேற்றப்பட்ட நேரத்தில், 1972 டிசம்பர், 2ல், சட்ட சபை கூட்டம் கூடியது. கருணாநிதி தலைமை யிலான அமைச்சரவை மீது, நம்பிக்கை யில்லா தீர்மானத்தை,எம்.ஜி.ஆர்., கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக, சபாநாயகர் மதியழகன் செயல்பட்டார். எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், 'முதல்வர் பதவியை, கருணாநிதி ராஜினா…

  9. தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிபோனால், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். பன்னீர்செல்வம், மார்ச் 1ல், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அ.தி.மு.க.,வினர், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, இரண்டாக பிரிந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க, பன்னீர்செல்வம் முடிவு செய்தார். ஆனால், சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க் களுக்கு ஆசை வார்த்தை கூறி, தங்கள் விசுவாசியான இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, ஆட்சியை தங்கள் வசமாக்கிவிட்டனர்.…

  10. யார் அந்த கறுப்பு ஆடு? கட்சியில் தேடுகிறார் ஸ்டாலின் சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடு குறித்த விபரங்களை, ஆளுங்கட்சி தரப்புக்கு, 'போட்டுக்' கொடுத்த, கறுப்பு ஆடு யாராக இருக்கும் என்ற விசாரணையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் துவக்கியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனி சாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும் பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் வித்யா சாகர் ராவ் உத்தரவிட்டார். தி.மு.க., நிலைப் பாடு குறித்து ஆலோசிக்க, சென்னையில், அக் கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், பிப்., 17ல் நடந்தத…

  11. மிஸ்டர் கழுகு: 121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ! ‘‘ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...’’ என்ற பழைய சினிமா பாடலைப் பாடியபடியே அறைக்குள் நுழைந்தார் கழுகார். ‘‘புரிகிறது... எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களில், இடம் மாறத் துடிக்கும் அந்த ஆறு பேர்தானே?’’ ‘‘ஆமாம். ஆறு பேர் தாவினால், அ.தி.மு.க-வின் மெஜாரிட்டி போய்விடும். எடப்பாடியின் முதல்வர் நாற்காலி தடதடக்கும். அதனால், எடப்பாடியை ஆதரிக்கும் 121 எம்.எல்.ஏ-க்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டுகிறது. இந்த சீசன், அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பொற்காலம் என்றே சொல்லித் திரிகிறார்கள். எடப்பாடியின் மெஜாரிட்டி ‘வீக்னஸை’ நன்றாகவே புரிந்துவைத்திருக்கும் இந்த எம்.எல்.ஏ-க்கள், காலரைத் தூக்கிவிட்டபடி உலா வர ஆரம்…

  12. வெறிச்சோடிய ஜெயலலிதா சமாதி... ஜெயலலிதா பிறந்தநாளில் அ.தி.மு.க.வினர் எங்கே? ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட அமளிதுமளியானது அந்தக் கட்சியை மட்டுமல்லாமல், தமிழகத்தையே பெரும்பாடுபடுத்திவிட்டது. பின், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, ''இந்த வருடம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகுவிமர்சிகையாக நடத்த வேண்டும்'' என்று அறிவித்திருந்தார். அதன்பின் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்ததுடன், பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டார். இருப்பினும், 'அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவின் பிறந்தநாளை விமர்சியாகக் கொண்டாட வேண்டும்' என அந்தக் கட்சிக்குள் பேச்சு நடந்தது. ஆனால், ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (24-02-17) …

  13. ஜெ. மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்! ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் சூளுரை ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டதுதான் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் நம்மிடத்தில் தந்து விட்டு ஜெயலலிதா மறைந்து இருக்கிறார். யாருடைய குடும்பத்தில் கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என்று எண்ணி அவர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அவர்களையெல்லாம் வீட்டை விட…

  14. டி.டி.வி.தினகரனை ஏற்க மாட்டோம்! அதிரடியை கிளப்பும் ஜெ.அண்ணன் மகன் தீபக் டி.டி.வி.தினகரன் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருப்பது அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தீபக் அளித்த பேட்டியில், ''ஜெயலலிதாவின் மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். விசாரணை கமிஷன் அமைத்தால் அனைத்தும் தெரியவரும். மருத்துவ சிகிச்சைகள் குறித்து பற்றி பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பவில்லை. ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்றுதான் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை கடன் வாங்கி கட்டுவோம். போயஸ் கார்டன் இல்லத்துக்க…

  15. ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு: கொடி, நிர்வாகிகள் இன்று மாலை அறிவிப்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்தார். இதையடுத்து, இப்பேரவையின் கொடி, நிர்வாகிகள் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவை அரசியலுக்கு வரும்படி அ.தி.மு.க. தொண்டர்கள் வற்புறுத்தி வந்தனர். தினமும் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் தியாகர…

  16. ஜெ. பிறந்தநாளில் ஆடல் பாடல்; நலத்திட்ட உதவிகளுடன் கலக்கும் பன்னீர்செல்வம் அணியினர்! ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த ஆதரவாளர்கள், சென்னையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திவருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சசிகலா, பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் தரப்பு ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர். பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் சென்னை தண்டையார்பேட்டை மணிக்கூண்டில், ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், ஏழை எளிய மக்களுக்கு சைச்கிள், பைக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பன்னீர்செல்வம் வழங்க இருக்கிறார். …

  17. சசிகலாவுக்கு எதிராகத் திரண்ட 3 சக்திகள்! -தியேட்டர் வில்லங்கமும் தீபக் கொந்தளிப்பும் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். 'சசிகலா குடும்பத்தில் அதிகாரப்போட்டி தலைதூக்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் தினகரனுக்கு எதிராக தீபக் கொந்தளித்தது. இதன் பின்னணியில் மூன்று பெரிய சக்திகள் உள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த 60 ஆட்களுக்குள் அ.தி.மு.கவில் அதிகாரப் போட்டி தலைதூக்கியது. சசிகலா தலைமைக்கு எதிராகப் பேட்டியளித்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். அதன்பிறகு அ.தி.மு.க நிர்வாகிகளும் பன்னீர்செல்வம் பக்கம் வர ஆரம்பித்தனர். எம்.எல்…

  18. கூவத்தூர் கூத்துக்களா? ஜெ. மருத்துவ அறிக்கையா? ஓ.பன்னீர்செல்வம் இன்று போடப்போகும் குண்டு என்ன? தமிழகமே திரும்பி பார்க்கும் வகையிலான முடிவை பன்னீர் செல்வம் இன்று எடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ள நிலையில் அவரது அறிவிப்பு என்னவாகும் இருக்கும் சென்னை: ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்…

  19. வெல்ல மூட்டை டு எடப்பாடியார்... பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை! ச.ஜெ.ரவி - படங்கள்: வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார் தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் எடப்பாடி கே.பழனிசாமி. வெல்ல வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கியவரை, அரசியல் தொழில் அதன் உச்சத்துக்கு உயர்த்தியிருக்கிறது. அரசியல் மூலம் பரவலாக அறியப்பட்டதற்கு முன்னரே, ஒரு கொலை வழக்கில் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதியில் அறிமுகமானவர் பழனிசாமி. பங்காளிகள் சூழ வாழ்ந்துவந்தவர் பழனிசாமி. தன் குடும்பத்துக்கும் பங்காளி குடும்பத்துக்கும் பாதை பிரச்னையில் சண்டை மூள... கொலை வரை நீண்டது. இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொலையில் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந…

  20. ‘‘ஒரு காருக்காக நீங்களும் ஜெயிலுக்குப் போயிடாதீங்க!’’ - நடராஜனுக்கு சசிகலா அட்வைஸ்! ‘கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’ என்பதோடு ‘கார் வாங்கிப் பார்’ என்பதையும் இப்போது சேர்த்துக் கொள்ள வேண்டும். நடுத்தரவாசிகளுக்கு கார் விஷயத்தில் தவணைத் தொந்தரவுகள் என்றால், பிரபலங்களுக்கு 'ரெய்டு' பிரச்னை. ‘புரியலையே’ என்கிறீர்களா? எல்லாம் வெளிநாட்டு கார் மோகம். பெரும்புள்ளிகள் வெளிநாட்டு கார் விஷயத்தில் ரெய்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் சீஸன் இது. முன்பு ஒருமுறை ஸ்டாலினின் ஹம்மர் காருக்காக CBI ரெய்டு வந்தது. இப்போது CBI ரெய்டில் சிக்கிக்கொண்டு தவிப்பவர், சசிகலாவின் கணவர் நடராசன். இவரைச் சிக்கலில் தள்ளியிருப்பது டொயோட்டா லெக்ஸஸ் CS300 என்னும் 1994 மாடல் கார். …

  21. பதவிக்கு வர மாட்டேன்; ஆனால்... நடராஜன் திடீர் சபதம் அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் நான் வர மாட்டேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் உறுதியளித்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற பிறந்தநாளில் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் நான் வர மாட்டேன். ஆனால் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்து முடிப்பேன். பதவிக்கு வராமலேயே அ.தி.மு.க.வை பாதுகாப்பேன். ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தம்பி தினகரன் சொல்வதை போல் பிரிந்து சென்றவர்க…

  22. 'ஜெயலலிதா பெயரில் மரம் நடுவிழா!' அரசு விளம்பரத்தின் சர்ச்சை கடந்த ஆண்டு இதே நாள் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளையொட்டி, 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதற்காக அரசு சார்பில் நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும், வனத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவும் இந்த விளம்பரத்தை கொடுத்திருந்தார்கள். "முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மரம் நடுவது வரவேற்க வேண்டியது தான். ஆனால் அதற்காக அரசு செலவில் நாளிதழ்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்பதை ஏற்க முடியாது. தலைமை செயலாளரின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது" என அப்போதே சர்ச்சை எழுந்தது. ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க.வும்…

  23. 'அ.தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க விட மாட்டேன்!’ - ஆவேச வைகோ சுவாரஸ்யமான திருப்பங்கள், சம்பவங்களை நிகழ்த்துவதன்மூலம் தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருப்பவர்களில் ஒருவர், வைகோ. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கூட்டணிக் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தபோது, அந்தத் திட்டத்தை ஆதரித்து கூட்டணியைவிட்டு வெளியேறியவர். இப்போது, மிகப்பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேசிவரும் நிலையில், அதற்கு மாறான பேச்சு, அறிக்கையின்மூலம் கவனிக்கப்பட்டு வருகிறார் வைகோ. சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானது, சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக இயங்கியது, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைப்பு என கடந்த சில தின…

  24. கேள்வி கேட்க உரிமையில்லை: கருணாஸ்

  25. சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா! ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப்கான் வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள். ‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற்களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.