தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
சிவபெருமான் போலீஸை அனுப்பினார், பொறுக்கிகள் அலறி ஓடிவிட்டனர்: மீண்டும் சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி சிவபெருமான் போலீஸை அனுப்பினார், பொறுக்கிகளை அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார். புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து போராடி வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம…
-
- 2 replies
- 517 views
-
-
ஜல்லிக்கட்டு : மெரினாவில் நிகழ்த்தப்பட்ட காட்சிகளும், அதன் பின்கதையும்! காட்சி - 1 சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நடுவே திடீரென ‘நான் விலகிக்குறேங்க’ என ஒரு வீடியோ வருகிறது. அதுநாள் வரை ஒன்றாக இருந்த கூட்டம்... சட்டென இருதரப்பாகப் பிரிந்து அடித்துக்கொள்கிறது, ‘நாங்க அப்பவே சொன்னோம்ல போதும்ன்னு’ என ஒரு தரப்பு; ‘இன்னும் நிரந்தரத் தீர்வு கிடைக்கலையே’ என ஒரு தரப்பு. விக்ரமன் படம்போல இருந்த சோஷியல் மீடியாக்கள், ‘பேரரசு’ படம்போல எக்கச்சக்க களேபரங்களுக்கு உள்ளாகின்றன. காட்சி - 2 ‘நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும்’ என அறிவிப்பு வெளியாகிறது. ‘அவ்ளோதான் திரும்பி வாங்க’ என சில நிர்வாகங்கள் தங்கள் மாணவர்க…
-
- 1 reply
- 562 views
-
-
ஜெ., பிறந்த நாளில் புதிய கட்சி தீபா அணி ஆலோசனை தீபா ஆதரவாளர்களின் ரகசிய கூட்டம், சென்னை, அயனாவரத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் கட்சி துவங்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று, ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா, தீவிர அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். தன் அரசியல் பயணம் குறித்த, அடுத்தகட்ட நடவடிக்கையை, ஜெ., வின் பிறந்த நாளான, அடுத்த மாதம், 24ல் அறிவிப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், தீபா ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டம், …
-
- 0 replies
- 478 views
-
-
ஆளாளுக்கு பதவி கேட்டு சசியின் மன்னார்குடி சொந்தங்கள்... குடுமிப்பிடி!: சொத்து குவிப்பு வழக்கு பயம் காட்டி நாடகமாடும் உறவுகள்: ஆதிக்கம் செலுத்தும் தினகரனை வெளியேற்றும்படி நெருக்கடி ஆட்சியிலும் கட்சியிலும் ஆளாளுக்கு பதவி கேட்டு மன்னார்குடியை சேர்ந்த சசிகலாவின் சொந்தங்கள் குடுமிப்பிடி சண்டை போடும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து, சசிகலாவுக்கு பயம் காட்டி நாடகமாடும் உறவுகள், போயஸ் தோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் தினகரனை வெளியேற்றும்படியும், நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின் முழு கட்டுப்பாடும், சசிகலா கைக்கு வந்து விட்டது. முதல்வராக பன்னீர்செல்வம் இரு…
-
- 0 replies
- 389 views
-
-
''நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!'' - மெரினா வைரல் பெண் (Video) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற போது, பரவலாக கவனம் ஈர்த்தார் ஒரு பெண். ’தடை செய்... தடை செய்... பீட்டாவை தடை செய்’ என உணர்வும் குறும்புமாக இவர் பேசிய வீடியோக்கள் சகல தளங்களிலும் பரவியது. ஆனால், முதல் நாள் ஆச்சரிய லைக்ஸ் குவித்தவர் குறித்து, மறுநாள் கட்சி சார்பானவர் என சர்ச்சை கிளம்பியது. ’போராட்டத்தில் ஏன் அரசியல் தலைவர்களை விமர்சிக்கிறாய்..? 'உனக்கு ஏன் தேவையில்லாத வேலை? உடனடியாக மன்னிப்பு கேள்’ என்றும் மிரட்டல்கள் வந்ததாம். பத்தாததுக்கு, எதிர்தரப்பு கட்சிகள் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவர் அனுமத…
-
- 2 replies
- 2.2k views
-
-
போலீஸார் விரட்டியடித்த பின்னரும் மெரினாவில் உறுதியுடன் இருக்கும் இளைஞர்கள் சொல்வது என்ன? மெரினா கடற்கரை விவேகானந்தர் நினைவு இல்லம் அருகில் 7 நாட்களாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வந்த இளைஞர்களை 23 -ம் தேதியான நேற்று, காலை 7.30 மணிக்கு போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் வெளியேற்றும்போது, போலீஸாரின் சமரசத்தை ஏற்க மறுத்த இளைஞர்கள் சுமார் ஆயிரம் பேர் கடற்கரையில் தங்கியிருந்து போராடி வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சந்தித்தோம். கடற்கரையில் போராடிக்கொண்டிருக்கும் வேலூர் கணேஷ் பேசும்போது, ‘அமைதியாக சென்று கொண்டிருந்த மெரினா போராட்டத்தைப் போலீஸார் திசைதிருப்பி விட்டு விட்டனர். கலைந்துபோக...சிறிது நேரம் கேட்டோம். அதற்குள் இளைஞர்களை…
-
- 1 reply
- 670 views
-
-
மதுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆரம்பித்தவர் இந்தியாவிலேயே இல்லையாம்! ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாட்டிலும், இலங்கை உட்பட உலகில் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் மும்முரமாக நடைபெற்றன. தமிழக அரசின் அறிவிப்பையடுத்து ஒரு வார காலமாக இடம்பெற்ற இந்தப் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. இந்தப் போராட்டத்தை சமூக வலைதளங்கள் வாயிலாகவே இளைஞர்கள் ஒன்று திரட்டியதும் நீங்கள் அறிந்ததே! இந்த நிலையில், மதுரையில் தமுக்கம் - அழகர்கோவில் வீதியில் நடைபெற்ற ஒரு வார காலப் போராட்டத்துக்கான முதல் அழைப்பை விடுத்தவர் இந்தியாவிலேயே இல்லை என்ற ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கான முதல் …
-
- 1 reply
- 591 views
-
-
'இப்படியொரு அவமானத்தைப் பார்த்ததில்லை!' - மெரினா வன்முறைக்கு விதைபோட்டாரா அமைச்சர்? சென்னை, மெரினா கடற்கரையில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போலீஸ் நடத்திய அராஜகத்திற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர் மாணவர்கள். ‘அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சருக்கு சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே, போலீஸாரால் உச்சகட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 'இதுவே நிரந்தரத் தீர்வுதான்' என ஆளும்கட்சி தரப்பில் பேசி வருகின்றனர். உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்…
-
- 0 replies
- 687 views
-
-
வெற்றியை ருசியுங்கள்! ஒட்டுமொத்த தேசத்தையும் பேசவைத்துவிட்டார்கள் தமிழக இளைஞர்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டம், ஒருகட்டத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கெடுக்கும் போராட்டமாக உருவெடுத்தது. சென்னை மெரினா கடற்கரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியது இப்போராட்டத்தின் வலிமைக்குச் சான்று. இரவு, பகல் பாராமல் நாள் கணக்கில் அறவழியில் நீண்ட போராட்டம் தமிழக அரசைப் போராட்டக்காரர்களின் பக்கம் திருப்பியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு உடன்படுவதைத் தவிர, மத்திய அரசுக்கு வேறு வழியே இல்லாமல் போனது. இ…
-
- 0 replies
- 412 views
-
-
தமிழக அரசியல்வாதிகளே... போராட்டத்தைப் படியுங்கள்! படம்: ஷிவ கிருஷ்ணா தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், மிகுந்த விவாதத்துக்குரிய அம்சங்களில் ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போனது. நம்பகத்தன்மையிழப்பு. கண் முன்னே அரசியலில் ஒரு வரலாறு நிகழும்போது, சமகாலத்தில் களத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் அதில் எந்தப் பங்கேற்புக்கும் இடமில்லாமல் போவது எவ்வளவு பெரிய வீழ்ச்சி! சில ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய அலங்காநல்லூர் போன்ற ஒரு சிற்றூருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் செல்கிறார். உள்ளூர் பிரமுகர்கள் அத்தனை பேருடனும் பேசுகிறார்…
-
- 0 replies
- 516 views
-
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் இருவர் இறந்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. கோப்புப் படம் புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் கிராமத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோரின் முன்னிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது மாடு முட்டியதில் இரண்டு மாடு பிடி வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளாதாகவும் பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ''இன்று காலை புதுக்கோட்டை மட்டத்தில் ராப்பூசல் கிராமத்தில் நான் …
-
- 2 replies
- 795 views
-
-
உலகையே திரும்பி பார்க்க வைத்த, மாணவர்களின், சென்னை, மெரினா போராட்டத்தை, தேச விரோத சக்திகள் தங்களின் விஷமத்தால், கொச்சையாக்கி விட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதி வழியில் நடந்த, ஒரு வார போராட்டத்தை வன்முறையாக்கி, அதில் குளிர் காய்ந்தனர். காவல் நிலையங்கள், குடிசைகளுக்கு தீ வைத்து, கலவரத்தை துாண்டினர். போலீசுக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் மறியல்களால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பெண்கள், பள்ளி மாணவர்கள் பரிதவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, ஜன., 17 காலை, சென்னை, மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லம் முன், மாணவர்கள் அமைதியாக போராட்டத்தை துவங்கினர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கடற்கரையை சுத்தம் செய்தல் உள்ளிட்…
-
- 0 replies
- 536 views
-
-
சொந்தக் கட்சியினரே ‛சூனியமா?' ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு பற்றி பன்னீர் சென்னை: என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சொந்தக் கட்சியினரே இப்படி செய்கின்றனரே என, அ.தி.மு.க., மூத்த தலைவர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம், வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின், மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பன்னீர்செல்வம், அதன் பின், ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்னை வந்து, முதல்வர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார். சரியான தூக்கம் இல்லை என்றும் புலம்பிக் கொண்டிருந்த அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்…
-
- 0 replies
- 392 views
-
-
தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாகவும் பதவியேற்று ஆட்சி நடத்திவருகின்றார். கடந்த இரு முறையும் முதலமைச்சராக பதவி ஏற்று பின்னர் அப்பதவியில் இருந்து இறங்கி மீண்டும், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப்பீடம் ஏறினார். இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 5ம் திகதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடாமல் முதலமைச்சராகி தமிழக வரலாற்றில் அவர் சாதித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இது அவருக்கு அதிஷ்டம் என்றும் கூறுவோர் இருக்கவே செய்கின்றனர். இதற்கிடையில் தான் அவருக்கு இன்னொரு வாய்ப்பும் தேடிவருகின்றது. எதிர்வரும் 26ம் திகதி குட…
-
- 0 replies
- 502 views
-
-
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக் களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அமைதி காத்தனர். மெரினாவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அனைத்து வழிகளையும் போலீஸார் அடைத்தனர். இந்தச் சூழலை அறிந்த மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் பெண்களும் உடனடியாக கடற்கரையை நோக்கி படையெடுத…
-
- 0 replies
- 651 views
-
-
தடியடி ஏன் நடத்தப்பட்டது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி அமைதியாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் ஏன் தடியடி நடத்தினர் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் நீதிபதி, போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கொண்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத…
-
- 0 replies
- 539 views
-
-
மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் ட்ராபிக் மற்றும் அங்குள்ள கூட்டத்தை கணக்கிட முடியும். அதன்படி தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ். 2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowd sourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித…
-
- 0 replies
- 498 views
-
-
இன்று இந்தக் கட்டுரையை படிக்க நேர்ந்தது.. கனன்று கொண்டிருக்கும் 'சல்லிக்கட்டு' போராட்டத்தின் காரணிகளை சற்றே அலசியிருக்கிறது..! டெல்லிக்கட்டு! அலுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் இளைஞர்களுக்கு? எல்லோரையும் கும்பல் மனோபாவம் ஆவேசத்தில் தள்ளியிருக்கிறதா? ஒரு வட்டார விளையாட்டாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுவந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எப்படி இவ்வளவு பெரிய களேபரமானது? ஒரு சின்ன கிராமமான அலங்காநல்லூரை மையமாகக் கொண்டு தொடங்கிய போராட்டம் எப்படி சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை என்று தமிழகம் எங்கும் பரவியது?…
-
- 4 replies
- 805 views
-
-
பன்னீருக்கு நெருக்கடி பதவி விலக பன்னீருக்கு மறைமுக நெருக்கடி ஜல்லிக்கட்டு போராட்டம் நீடிப்பதன் பகீர் பின்னணி ஜல்லிக்கட்டு போராட்டத்தை பயன்படுத்தி, முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக, அ.தி.மு.க., வில் ஒரு தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதன் மூலம், அவரை பதவி விலகச் செய்து, சசிகலாவை முதல்வராக்க காய் நகர்த்துவதாக வும், தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக, ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்த முடியவில்லை. 'இந்த ஆண்டு தடையை நீக்கி விடுவோம்' என, மாநில அரசு உறுதி அளித்தது; மத்திய அமைச்சர்களும் உத்தரவாதம் கொடுத்தனர். ஆனாலும், தடை நீக்கப்படவில்லை…
-
- 0 replies
- 372 views
-
-
பிரதமரை சந்திக்க முடியாத அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கடந்த வியாழனன்று, பிரதமரை சந்திக்க தீவிரமாக முயன்றும் முடியாமல், ஆறுதலுக் காக வெள்ளியன்று உள்துறை அமைச்சரை சந்தித்த, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கடைசியாக வெள்ளியன்று ஒரு திருப்திக்காக, ஜனாதிபதி யையும் சந்தித்து தமிழகம் திரும்பியுள்ளனர். வறட்சி நிவாரண நிதி கோரிக்கைக்காக ஏற்கனவே கேட்டிருந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் வரச் சொன்னதால், முதல்வர் பன்னீர்செல்வம் டில்லிக்கு வந்திருந்தார்.இந்த சந்திப்பை, தமிழகத்தில் பற்றி எரியும் ஜல்லிக்கட்டு பிரச்னைக்காகவும் முதல்வர் பயன்படுத்தப்போகிறார் என்பதை அறிந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் உத்தரவு…
-
- 0 replies
- 486 views
-
-
சென்னை:தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க, தன்னெழுச்சி யாக திரண்டுள்ள மாணவர் கூட்டத்தை, திசை திருப்பும் வேலைகளில், தேச விரோத சக்திகள் களம் இறங்கியுள்ளதாக, தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இசை அமைப்பாளருமான, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி கூறியுள்ளார். அதனால், 'சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்' என, மாணவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன், கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் உதடுகளும், ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை உச்சரிக்க கருவியாக இருந்தது, 'ஜல்லிக்கட்டு... ஜல்லிக்கட்டு..'என்ற ஆல்…
-
- 0 replies
- 314 views
-
-
புது கட்சி துவங்காவிட்டால்... தீபாவுக்கு ஆதரவாளர்கள் கெடு வேலுார்:'உடனடியாக தனிக் கட்சியை துவங்கா விட்டால், வேறு அணிக்கு சென்று விடுவோம்' என, தீபாவுக்கு, அவரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில், அதிகளவு ஆதரவு உள்ளது. ஆம்பூரில் துவங்கப்பட்டுள்ள தீபா பேரவையில், இதுவரை, இரண்டு லட்சம் பேர் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தீபா தனிக் கட்சி துவங்குவார் என, அவரது தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தனிக் கட்சி துவங்காத தால் ஏமாற்றம் அடைந்தனர். தீபா பேனர் வைத்தவிவகாரத்தி…
-
- 3 replies
- 630 views
-
-
தமிழர்களின் உயரிய கலாச்சாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும், மத்திய அரசு தமிழர்களின் கலாச்சார விருப்பங்களை காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். நரேந்திர மோதியின் ட்விட்டர் செய்தி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி குறிப்பிடுகையில், 'தமிழகத்தின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து நாம் பெருமையடைகிறோம். தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் செய்தியில், 'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. மேலும் பல முன்னேற்றங…
-
- 0 replies
- 614 views
-
-
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினா போராட்டம் தொடரும்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்; 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர் சங்கர் மற்றும் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினாவில் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று அப்போராட்டத்தில் பங் கேற்று வரும் இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், சென்னை மெரினாவில் நடத்தி வரும் …
-
- 0 replies
- 318 views
-
-
மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்: முதல்வர் ஓபிஎஸ் பேட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: பிடிஐ மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற பிரதமர் உறுதி அளித்தார். அவரின் உறுதியைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்…
-
- 0 replies
- 273 views
-