தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
மகள் வருகை தராதமையினால் ஏமாற்றத்துடன் சிறைக்கு திரும்புகிறார் நளினி லண்டனிலிருக்கும் மகள் வருகை தராதமையினால் அவரது திருமண ஏற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் சிறைக்கு செல்வதனால் நளினி மன வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியரின் மகளான ஹரித்ரா லண்டனில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு, திருமணம் செய்து வைக்கவே ஆறு மாதங்கள் பிணையில் செல்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி அனுமதி கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், கடந்த ஜூலை 25 ஆம் திகதி சிறையிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் வெ…
-
- 0 replies
- 680 views
-
-
'தூக்கிட்டுப் போயிருங்க... இங்கே இருந்தா செத்துருவேன்!' - என்னதான் நடந்தது மியாட் மருத்துவமனையில்? உலகதரச்சான்று பெற்ற மருத்துவமனை என்று பெயர் பெற்று இருந்த மியாட் மருத்துவமனையின் அவல முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது கொட்டித் தீர்த்த கனமழை. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுமார் 18 பேர் (20 முதல் 25 வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது) முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மரணமடைந்திருக்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்தான் இத்தனை உயிர்கள் பலியாகக் காரணம் என்கின்றனர் இறந்தவர்களின் உறவினர்கள். சென்னையில் கனமழை, வரலாறு காணாத வெள்ளம்... மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் …
-
- 0 replies
- 333 views
-
-
கெஜ்ரிவால் முதல் சகாயம் வரை... தனிமனித வழிபாடு சரியா? முன்குறிப்பு: தலைப்பைப் படித்ததுமே ‘சகாயத்தை விமர்சித்து இன்னொரு கட்டுரையா?’ எனக் கொந்தளிக்க வேண்டாம். கட்டுரையை முழுக்கப் படித்த பிறகு ஒரு முடிவுக்கு வரவும்! சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்னும் குரல் ஓரளவு வலிமை பெற்று வருவதைக் காணமுடிகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்ற பெரும்வெற்றியைத் தமிழகத்துக்கு இழுத்து வர சகாயம் உதவுவார் என்று சிலர் திடமாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். அவர் இவர், அந்தக் கட்சி இந்தக் கட்சி, அந்த அணி இந்த அணி என்று திரும்பத்திரும்பப் பார்த்து வெறுத்துப்போன பெரும்திரளான மக்கள், சகாயத்தை ஒரு மாற்றாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். சகாயம் செய்யவேண்டிய சகாயம்…
-
- 0 replies
- 932 views
-
-
https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-tasmac-liquor-scam-three-day-ed-raid-in-chennai-concludes-686211.htmlதமிழகம் அதிர்ந்த டாஸ்மாக் மதுபான முறைகேடு:சென்னையில் 3 நாட்கள் நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு By Mathivanan Maran Updated: Sunday, March 9, 2025, 17:04 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்க…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது! பணிக்கு வருகை தராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையிலேயே தமிழக அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, ஏனைய விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425746
-
- 0 replies
- 250 views
-
-
ஈழ விடுதலைப்பயணத்தில் தடைகளும் நகர்வுகளும் டப்ளின் தொடங்கி ஜெனீவா வரை… கொளத்தூர் மணி உரை -- பெரியார்தளம் நேரம் Tuesday, March 12th 2013. பிரிவு featured, ஈழம், காணொளி, திராவிடர் விடுதலைக் கழகம், முதன்மைச்செய்திகள் [காணொளி] ஈழ விடுதலைப்போர் நடந்தபொழுது கூட நாம் உண்மையான ஈழச்சிக்கலை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை… ஈழ ஆதரவாக நின்றவர்கள் பலபேர் கூட அவர்களின் போர்த் திறனை பாராட்டிக்கொண்டிருந்தார்கள் திரைப்படத்தில் ரஜினியின் சண்டையை பாராட்டுவதைப்போலத்தான் புலிகளின் சண்டையை பாராட்டிக்கொண்டிருந்தார்களே தவிர அதன் பின்னால் இருக்கின்ற நியாயங்கள், தனி ஈழத்துக்கான தேவைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம். அத்தவறு நிகழாவண்ணம் இப்பொழுது நாம் தமிழீழத்திற்கான ப…
-
- 0 replies
- 448 views
-
-
தந்தைப்பெரியாரும் நடிகவேள் எம்.ஆர்.இராதாவும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது. தமிழக தமிழர்கள் இப்பொழுதுதான் விழித்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் தமிழக தமிழர்கள் இன்னும் உறங்கவில்லை விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. தமிழீழ விடுதலை அடையாமல் உறங்கமாட்டோம்..வெற்றி நிச்சயம் என்று திரைப்பட நடிகர் இராதா ரவி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு எடுக்கக்கோரி தமிழக வாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் இன்று (22.03.2013) ஒரு நாள் பட்டினிப்போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் இராதா ரவி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது உரையினை கீழே காணொளியில் காணவும்,,, http://www.sankathi24.com/news/28278/64//d,fullart.…
-
- 0 replies
- 669 views
-
-
அரசியல் நாகரிகம் முளைக்கிறதா, மீண்டும் தழைக்கிறதா? திமுக, அதிமுக தலைவர்களிடம் தென்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுகவின் முன்னணித் தலைவர்களான தம்பிதுரையும் ஜெயக்குமாரும் நேரில் சென்று நலன் விசாரித்த செய்தி இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் அரும்பத் தொடங்கியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று. அடிப்படையில் ராஜாஜியும் பெரியாரும் இருவேறு துருவங்கள். ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். ஆனால், சித்தாந்தப் பின்புலங்களை…
-
- 0 replies
- 396 views
-
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயற்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 862 views
-
-
3 வழக்குகளிலும் ஜாமீன்: புழல் சிறையில் இருந்து அன்புமணி ராமதாஸ் விடுதலை பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அன்புமணி, திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி திண்டிவனம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த திண்டிவனம் கோர்ட், அன்புமணிக்கு இன்று ஜாமீன் வழங்கியது. சென்னை தி.நகரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதேபோல…
-
- 0 replies
- 447 views
-
-
சசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? பரபர பின்னணி #VikatanExclusive சிறையிலிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராக பொறுப்பு ஏற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. இதற்கு சில காரணங்களை சொல்கின்றனர் பழனிசாமியின் ஆதரவாளர்கள். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் நிகழ்ந்த களேபரங்களால் கலக்கத்தில் இருந்தனர் கட்சியினர். ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி, முதல்வராகிவிட்டார். அதே நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் சிறைக்குச் சென்று விட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது தமிழகத்தில் கண்ணீர் காவியத்தை அரங்கேற்றிய அ.தி.மு.க.வினர், சசிகலாவுக்காக ஒரு சொட்டு கண்ணீ…
-
- 0 replies
- 892 views
-
-
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி ( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் , திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ்.காம் வெளியிடுகிறது. அதில் முதல் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது-- பிபிசி தமிழ்) படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionசமூக நீதிக்கு திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு 100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும். மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அ…
-
- 0 replies
- 368 views
-
-
அதிகாலை வடபழனி பயங்கரம்.. மின்கசிவால் தீவிபத்து.. உறக்கத்திலேயே பலியான நால்வர். வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதில் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் மூச்சுத்திணறி உறக்கத்திலேயே விழிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து இரு சக்கர வாகனங்களுக்கு பரவியது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.இன்று அதிகாலை 4.54 மணிக்கு கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 இரு சக்கர வாகனங்கள் எரிந்து…
-
- 0 replies
- 680 views
-
-
அதிகாலை நேரம். சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இருந்து காரில் பயணம். கண்ணை மறைத்துத்தான் அழைத்துச் சென்றார்கள். சுமார் முக்கால் மணி நேரம் கழித்து கார் ஓரிடத்தில் நின்றது. அது ஒரு அரிசிக் கிடங்கு. அழைத்துச் சென்ற நண்பர் அங்கிருந்த பெரியவரிடம் நம்மைப் பத்திரிகையாளர் என்றே அறிமுகப்படுத்தினார். உடன் நைஜீரிய நாட்டுக்காரர் ஒருவரும் இருந்தார். “நண்பர் உங்களைப் பற்றி நிறையச் சொன்னார். போதை மருந்து தொடர்பாக என்ன தகவல் வேண்டுமானாலும் கேளுங்கள்.’’ என்று ஆரம்பித்த அந்தப் பெரியவர், “அதற்கு முன்பாக நான் கொஞ்சம் ‘சில்வர்’ எடுத்துகொள்ள வேண்டும்’’ என்றபடியே தனது பர்ஸிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார். மின்விசிறியை அணைத்துவிட்டு மிக ஜாக்கிரதையாக டேபிளின் மீது வைத்து பொட்டலத்தைப் பி…
-
- 0 replies
- 861 views
-
-
சசிகலா குடும்பம்குறித்து ஜெயலலிதா பேசியது என்ன? குறுந்தகடுகளை வெளியிட்டு அதிரவைத்த அமைச்சர் 2011-ம் ஆண்டு, அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா குடும்பம்பற்றி ஜெயலலிதா பேசியது என்ன என்பதுகுறித்த குறுந்தகடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் பழனிசாமி அணியும் இணைந்த பிறகு, கட்சியையும் சின்னத்தையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதே நேரத்தில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துக் கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 582 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கனிமொழி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘‘2ஜி ஒதுக்கீடு முறைகேடுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் அவர், ‘‘கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு 20 சதவீத பங்கே உள்ளது. நான் அதன் இயக்குனர்களில் ஒருவராக 2007–ம் ஆண்டு ஜூன் மாதம் 6–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இரண்டு வாரமே இருந்தேன். அதன்பிறகு 1½ ஆண்டு கழித்தே 2009–ல் நிதி பரிமாற்றம் நடந்தது. நான் எந்த காசோலை…
-
- 0 replies
- 380 views
-
-
நளினியை விடுவிக்க முடியாது! - தமிழக அரசின் திடீர் விளக்கம் Chennai: எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு 10 ஆண்டு, 20 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வரும் 25-ம் தேதி விடுவிக்க கடந்த1-ம் தேதி தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்த…
-
- 0 replies
- 564 views
-
-
சேலம் மாவட்டத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் தீபாஜினி என்ற கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று நாம் முகநூல் நண்பர்களிடம் கோரிக்கை வைத்தோம். செய்தியை பார்த்த நண்பர்கள் சிலர் மாணவியின் கல்வித் தொகைக்கு உடனடியாக உதவி செய்து அவர் கட்ட வேண்டிய கட்டணத்தை அனுப்பி வைத்தனர். இதன் மூலம் மாணவி கல்லூரி கட்டணத்தை செலுத்தி இப்போது அதற்கான பற்றுச் சீட்டை நமக்கு அனுப்பி உள்ளார். நண்பர் சிவராம் Sivaram Vikraman ரூபாய் 10,000 அனுப்பினார், Ravi Kannan Arjun ரூபாய் 5000, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பேராசிரியர் ரூபாய் 5000 அனுப்பினார். Sivaraj Velayutham ரூபாய் 1000 அனுப்பினார். பணம் அனுப்பி மாணவியின் கல்விக்கு உதவிய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ! ம…
-
- 0 replies
- 503 views
-
-
தமிழ்க் குலத்தின் இணையற்ற தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை உலகெங்கும் கொண்டாடுவோம்! வைகோ அழைப்பு தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் தமிழனின் முகவரியை தரணி அறியச் செய்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நான் நெஞ்சால் போற்றும் பிரபாகரன் அவர்களின் 60-ஆவது பிறந்த நாளை 2014 நவம்பர் 26ஆம் தினத்தன்று நெஞ்சமெலாம் பொங்கிப் பிரவகிக்கும் உவகை உணர்வோடு, உன்னதத் திருநாளகக் கொண்டாடுவோம். வீரமும் மானமும் தமிழர் குருதி ஓட்டத்தோடு கலந்த மரபு வழி அடையாளமாகும். உலக வரைபடத்தில் இரத்தக்கண்ணீர்த் துளியாகக் காட்சி அளிக்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்கு மாகாணத்தில் வல்வெட்டித் துறையில் கார்மேகங்கள் மழைபொழியும் கார்த்திகைத் திங்களில் 1954 நவம்பர் 26 ஆம் தேதி அன்று முன்னிரவுப…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிரமமான சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள் : ராஜீவ் கொலை வழக்கு : சாந்தன் கடிதம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட எழுவரும் விடுதலைக்காக போராடி வருகின்றனர். இந் நிலையிலேயே சாந்தன் தன்னை விடுதலை செய்ய கோரி தனது வழக்கறிஞர் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை அமைச்சருக்கு 4 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். சாந்தன் கடிதத்தில், “நான் சுதேந்திரராஜா என…
-
- 0 replies
- 438 views
-
-
7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் மௌனம் காப்பது ஏன்? – வேல்முருகன் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மௌனம் காப்பது ஏன் என, வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர் “பேரறிவாளன் மற்றும் நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரத்தை சட்டப்பிரிவு 1612 இன் கீழ் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். தமிழக அரசும் அவர்களை விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கு அனுமதி பெறும் வகையில் தீர்மான கடிதத்…
-
- 0 replies
- 645 views
-
-
சென்னை: அம்பேத்கார், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை ஐ.ஐ.டி. முன் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பேராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் மாட்டிறைச்சிக்கு தடை, அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது உள்ளிட்ட கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வந்த பெரியார்-அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
மதுரை - 1945 https://www.facebook.com/Thoongamadurai/videos/315401605780448/UzpfSTEwMDAxOTM2MjM2NTg0MDo0NDI0NzYwMjk2NjA5MTc/
-
- 0 replies
- 625 views
-
-
தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது – வேல்முருகன் திட்டவட்டம்! தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த செயல் மூலம் பாரதீய ஜனதாக் கட்சி மனித விடுதலைக்கு எதிரான கட்சி என்பதை நிரூபித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இந்தியாவின் இறையான்மை மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக விடுதலைப்புலிகள் செயற்படுவதாகவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவைப் பெருக்கும் முயற்சியில் சிலர் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், இந்த…
-
- 0 replies
- 413 views
-