Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிஸ்டர் கழுகு: தினகரன் கையில் இரட்டை ரிமோட்! ‘‘அ.தி.மு.க-வின் சுப்ரீம் ஸ்டார் ஆகிவிட்டார் தினகரன். அவர் கையில் இப்போது இரண்டு ரிமோட்கள்’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘விளக்கம் ப்ளீஸ்’’ என்றோம். ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை உள்ளடக்கிய ஐவர் குழுதான் அ.தி.மு.க-வின் நிர்வாகத்தை இப்போது கவனிக்கிறது. இந்தக் குழுவுக்கு மேலே, தினகரன் சுப்ரீம் பவரில் இருக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார். சசிகலா சிறைக்குச் செல்லும்முன், அவரிடமிருந்து கட்சி நிர்வாக ரிமோட்டையும், ஆட்சி நிர்வாக ரிமோட்டையும் தன்வசம் வாங்கிக்கொண்டார் தினகரன், சசிகலா, ஒரு ரகசிய உத்தரவையு…

  2. பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறார்களா வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதன் பிறகு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். பன்னீர்செல்வம் அணியில் தற்போது 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும், 10 எம்.பி-க்களும் பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். குறிப்பாக, அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன் உள்பட முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் அவரது அணியில் உள்ளனர். அதேபோல், தியாகு, பாத்திமா பாபு , நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட நட்சத்திரப்…

  3. எவ்வளவு? குவாரியில் குவித்த பணம் எவ்வளவு? விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கருக்கு சொந்தமான மணல் குவாரியில் நடந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, வருமான வரித் துறைக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படை யில், அவரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த, 7ம் தேதி, விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகரும், ச.ம.க., தலைவருமான சரத்குமார், முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், வரு மான வரித் துறை அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர்,10ம் தேதி ஆஜரானார். மேலும், ச…

  4. ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளையா? - கேரள சாமியாரிடம் 24 மணி நேரம் தீவிர விசாரணை கோடநாடு பங்களா வாயில் | கோப்புப் படம். கோடநாடு காவலாளி கொலை வழக் கில் கேரளாவைச் சேர்ந்த சாமியார் சிக்கியுள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்…

  5. சிறுதாவூர் பங்களாவில் கொல்லப்பட்டது யார்?! - சொத்து வில்லங்கத்தின் அடுத்தகட்டம் #VikatanExclusive ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நேற்று கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஜெயலலிதா பங்களாவின் உள்புறத்தில் காவல் காக்கும் செக்யூரிட்டி போலத்தான் தெரிகிறது. சொத்து விவகாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம்' என்கின்றனர் அப்பகுதி மக்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களாக்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுதாவூருக்கு முக்கிய இடம் உண்டு. அவர் இருந்தவரையில், பங்களாவைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் காவல் காத்து வந்தனர். அவர் இறந்த பிறகு, போயஸ் கார்டன், சிறுதாவூர், கொடநா…

  6. தப்புமா தமிழகம் ? இரும்புக் கோட்டை என வர்­ணிக்­க­ப்படும் அ.தி.­மு.க.வின் அஸ்­தி­வா­ரத்தை அக்­கட்­சி­யி னரே தற்­போது ஆட்டம் காண வைத்­துக்­ கொண்­டி­ருக்­கின்­றனர். பதவி மோகம், அதி­கார ஆசை என்­பன ஜெய­ல­லி­தாவின் கனவு உழைப்பு வலிமை என்­ப­ன­வற்றால் கட்­ட­மைக்­கப்­பட்ட அ.தி.­மு.க. ஆட்­சியை சீர­ழித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. தமி­ழக முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு ஆத­ர­வாக உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களைவிட அவ­ருக்கு எதி­ராக உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் எதிர்­த்த­ரப்பு சரி­யான காய்­ந­கர்த்­தல்­களை தற்­போது மேற்­கொண்டால் எடப்­பாடி தலை­மை­யி­லான ஆட்சி எப்­போது வேண்­டு­மா­னாலும் கவிழ்க்­கப்­ப­டலாம் என்ற நிலை தம…

  7. கேள்விக்கென்ன பதில் - 02.12.2017 ஜெ. மகள் என்பது உண்மையா...? பதிலளிக்கிறார் அம்ருதா.கேள்விக்கென்ன பதில்...

  8. "குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EYESWIDEOPEN தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலையின் முதலாம் ஆண்டில் பள்ளி செல்லும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் குறைந்தது 511 பேருக்குத் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது என்கிறது, சமக்ரா சிக்‌ஷா அபியானின் சமீபத்திய புள்ளிவிவரம். சமக்ரா சிக்‌ஷா அபியான் என்பது பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆகஸ்ட் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை எடு…

  9. `இப்பிரச்னை முடிவுற்றதாகக் கருதுவோம்!’ - ஹெச்.ராஜா வேண்டுகோள் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக் கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் வருகைதந்து, ஜீயரை சந்தித்து மன்னிப்புக் கோரினார். இதுகுறித்து ஹெச்.ராஜா தன் ட்விட்டர்மூலம் கருத்து தெரிவித்துள்ளார். தினமணி நாளிதழ் ராஜபாளையத்தில் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை வாசித்தார். அது, தினமணி நாளிதழிலும் வெளியானது. அதில், ஆண்டாள் பற்றி வெளிநாட்டவர் எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைணவர்கள், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், வைத்தியநாதன், வைரமுத்துவுக்…

  10. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி உறுப்பினர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP / GETTY IMAGES (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (22/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களுக்கு இலவசங்களை வழங்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பெரும் வி…

  11. ”மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது என தடைகள் விதிக்கப்படுகின்றன” -கமல்ஹாசன் பேச்சு 'நான் மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது எனப் பல தடைகள் விதிக்கப்படுகின்றன' எனப் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார். திருவள்ளூர் அடுத்த பொன்னேரியில் தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “மாணவர்கள் படித்து முடித்துவிட்டு எங்கே செல்லப்போகிறார்கள் என்ற சந்தேகம் பெற்றோருக்கும், பேராசிரியர்களுக்கும் இருக்கக் கூடாது. அதற்கு நாடு மாற வேண்டும். அதை மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. நான் பல பள்ளிகளுக்கும், க…

  12. கோவில்பட்டி பள்ளிக்குள் புகுந்து சாதியைச் சொல்லி திட்டி, தலித் மாணவனைத் தாக்கியதாக இரு பெண்கள் மீது வழக்கு படக்குறிப்பு, சிதம்பரம்பட்டி பள்ளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவில்பட்டி அருகே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை சாதியை கூறி சக மாணவியின் பெற்றோர் திட்டி அடித்ததாக எழுந்த புகாரை அடுத்து இரண்டு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டியை சேர்ந்த பேச்சுப் பாண்டி மனைவி மாரியம்மாள் (30). இவரது மகள் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மீது அதே பள்ளியில் படிக்கும் 7-…

  13. பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,பரணி தரன் பதவி,பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால வரம்புக்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் அவர்களுக்கு குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை நிறைவேற்றிய தனித்தீர்மானம் போல, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக கேரளா…

  14. படத்தின் காப்புரிமை SPUKKATO கோவை துடியலூர் பகுதியில் காணாமல்போன ஐந்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அனைவரும் தேடியுள்ளனர். …

  15. தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவிகரம் நீட்டுகிறது கேரள அரசு! தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை கருத்திற்கொண்டு கேரள அரசு 20 இலட்சம் லீட்டர் தண்ணீர் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழக முதலமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று குடிநீர் வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு 20 இலட்சம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தி.மு.க அரசு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்ப…

  16. திராவிடக் கட்சிகளை அகற்றுவதே குறிக்கோள் – அண்ணாமலை! திராவிட அரசியலை அடியோடு ஒழிப்பதற்கு 2026 தேர்தல்தான் சரியான தருணம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தொிவித்துள்ளாா். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபேதாதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். அத்துடன், பிரதமர் மோடியைப்போலவே நடந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசைப்படுவதாகவும், இரண்டு திராவிடக் கட்சிகளை அகற்றவே தன்னை மாநிலத் தலைவராக நியமித்து உள்ளனர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், 2024 தேர்தலில், ஒரு மாற்றுச் சக்தியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா நிரூபித்துள்ளது எனவும், கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை ப…

  17. தண்ணீர் தொட்டி+ ( தே.தீட்ஷித் ) திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் ஏறிய சில மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசி சென்றதை அந்த பகுதி மக்கள் கவனித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த அந்த பகுதி வார்டு கவுன்சிலர் தண்ணீரில் இருந்தது என்ன என்று பார்த்தபோது, அது மனித கழிவு என்பது தெரியவந்தது. இந்த நிலையில், திருச்சி மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு வீசியவர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி …

  18. கொரோனா தாக்கம் : சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் இரத்து! கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் 10 விமானங்களை விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. இதன்படி குவைட், ஹொங்கொங் செல்லும் 10 விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக குவைத், ஹொங்கொங், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித …

  19. இந்தியக் கலாசாரம் குறித்து ஆராயக் குழு: தென் இந்தியர் இடம்பெறாதது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 18 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், HINDUSTAN TIMES கடந்த 12 ஆயிரம் வருட இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழுவில் தென்னிந்தியரோ, சிறுபான்மையினரோ, ஒடுக்கப்பட்டவர்களோ இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில், இந்தியக் கலாசாரத்தின் துவக்கம் மற்றும் பரிணாமம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு குழு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. …

  20. இன்றைக்கு தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டுள்ள மாணவர் போராட்டங்களின் ஒரு பகுதியை இது! (-) சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை 10 மாணவர்கள் அடையாறில் நடத்திக் கொண்டுள்ளனர். (-) சென்னை செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தனஞ்செழியன், சுதன், கிங்ஸ்லி பால்ராஜ், கோபி, சதீஷ்குமார், ராஜா, மகேஸ்வரகுமார், ஜான்சன் உள்பட 18 பேர் நேற்று மதியம் 1 மணி முதல் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முன்பு அமைக்கப்பட்டுள்­ள சாமியான பந்தலில் அனைவரும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. பூந்தமல்லி - செங்கல்பட்டு சிறப்பு முகாம்களை இழு…

    • 0 replies
    • 549 views
  21. பெரம்பலூர் அருகே உள்ள எசனையை சேர்ந்தவர் துரைசாமி இவரது மகள் அமுதா (8), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த அமுதா சிறுவாச்சூர் கோயில் திருவிழாவிற்காக தனது தாய்மாமன் வேல்முருகன் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். சிறுவாச்சூர் கோயில் பகுதியில் கிடா வெட்டி பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றும் பணியை செய்து வருபவர் அதே ஊரைச்சேர்ந்த சோலைமுத்து (55). திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 5 மணியளவில் போதையில் இருந்த சோலை முத்து அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அமுதாவை நைசாக கோயிலுக்கு வடக்கு புறமுள்ள ஏரியின் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகேயிரு…

    • 0 replies
    • 440 views
  22. கவர்னரிடம் பன்னீர்செல்வம் வைத்த 5 கோரிக்கைகள்... 6 கோப்புகள்! #OPSVsSasikala தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் சசிகலாவும், பன்னீர் செல்வமும்... முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ், அதை வாபஸ் பெற்று, மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார். 128 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்திருக்கும் சசிகலா முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடப் போராடிக் கொண்டிருக்கிறார். யாருக்கு வெற்றி என்பது தற்காலிகமாக கவர்னரின் கையில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ‘இருதலைக்கொல்லி’ நிலையில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓ.பி.எஸ், வி.கே.எஸ் என இருவருக்கும் ஒரே நாளில் அப்பாயின்ட்மென்ட் கொடு…

  23. முதல்வர் ஆகிறாரா செங்கோட்டையன்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ' நேற்று முழுவதும் மிகுந்த குழப்பத்துடன் இருந்தார் சசிகலா. எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசும்போதும், அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா அளித்த தீர்ப்பை இன்று உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தீர்ப்பு நாளில் எதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை தீர்ப்பு வெளியான நேரத்தில், கூவத்தூரில் கட்சி நிர்வ…

  24. சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:சட்ட நிபுணர்கள் கருத்து சட்டசபையில், முதல்வர் கோரிய நம்பிக்கை தீர்மானம் செல்லுமா என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டசபையில் நேற்று, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க., சார்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சபாநாயகர் சம்மதிக்கவில்லை. தி.மு.க.,வினரின் ரகளையை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்…

  25. 'முதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன்?'- ஆளுநர் வித்யாசாகர் ராவ்! அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது ஏன்? என்பதற்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, www.dailyo.in என்ற ஆங்கில இணையதளத்தில் வித்யாசாகர் ராவ் தெரிவித்திருப்பதாவது:- "அண்மையில், தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் சூழ்நிலைகளின் போது, ஊடகங்களிலும், செய்திகளிலும் பரபரப்பாக எனது பெயர் விமர்சனத்திற்கு உள்ளானதைப் போன்று, 45 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் இதுவரை விமர்சிக்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.