Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் நோக்கி படையெடுக்கும் வட இந்திய கோடீஸ்வரர்கள்! இந்தியாவில் நீங்கள் கோடீஸ்வரராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு கொரோனா நோயாளியாக இருந்தாலும் பணம் உங்கள் உயிரைக் காப்பாற்றாது. என்பதை கொரோனா மரணங்கள் அனுபவ பாடமாகச் சொல்கின்றன. சிலிண்டருடன் கூடிய ஒரு படுக்கைக்காக கொரோனா நோயாளிகள் அலைபாய்கிறார்கள். இந்தியா முழுக்க கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்…

  2. தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், ஹவாலா கும்பல் மூலம், பல கோடி ரூபாய் பணத்தை கைமாற்றியது தெரிய வந்து உள்ளது. தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டான். இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷனுக்கு, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம், 50 கோடி ரூபாய், லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி போலீசாரால், சில தினங்களுக்கு முன், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் முகாமிட்டுள்ள டில்லி போலீ சார், பெசன்ட் நகரில், மத்திய அரசு அலுவலக மான ராஜாஜி பவனில், இருவரிடமு…

  3. செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படுள்ளனர். இதில் பலர் மீது வழக்குகள் கூட இல்லை. இருந்தும் இங்குள்ள தமிழர்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றாமல் வெளிநாட்டு வாழ் அகதிகள் சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 5 நபர்களை விடுதலை செய்யவதாக காட்டி மேலும் 10 நபர்களை இங்கு கொண்டு சிறை வைக்கிறது கியூ பிரிவு காவல்துறை. இதனால் இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. தற்போது உள்ள 52 அகதிகளில் பலர் ஏற்கனவே பல முறை உண்ணா நிலை போராட்டம் செய்துள்ளனர். சிலருக்கு விடுதலை உத்தரவும் வந்துள்ளது. இருந்தும் காவல்துறை இவர்களை விடுவிக்காமல் அலைக்கழித…

  4. மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்! ‘‘என்னவோ தெரியவில்லை... இந்த ஆண்டு பிறந்தநாளின்போது கருணாநிதியை எல்லோருக்கும் பிடித்திருந்தது. ட்விட்டரில் #HBDKalaignar94 என்ற ஹேஷ்டாக் அகில இந்திய அளவில் அன்று முழுக்க டிரெண்டிங். எல்லா மீடியாக்களிலும் வாழ்த்து மழைதான்” என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘கருணாநிதியின் சட்டமன்றப் பணிகள் வைர விழாவில் அகில இந்திய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து விட்டாரே ஸ்டாலின்?’’ என்றோம். ‘‘கருணாநிதியின் பிறந்தநாள் விழா, வைர விழாக் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டபடி நடத்திக் காட்டிவிட்டார் ஸ்டாலின். உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் சோனியா காந்தியும், லாலு பிரசாத் யாதவும் வரவில்லை. மற்ற தலைவர்கள் சொன்னபடியே ஆஜராகிவிட்டார்கள். எல…

  5. சென்னை: சென்னையில் கோயம்பேடு உள்பட பல்வேறு இடங்களில் கடைகளை அடைக்கமாட்டோம் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி நாளை தமிழம் முழுவதும் கடையடைப்பு நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையில் எல்லோருக்கும் அக்கறை உண்டு. வியாபாரிகளும் ஆதரவு அளிக்கிறார்கள். அதற்காக கடைகளை அடைத்தால் ஒவ்வொரு கடைக்காரர்களும் தனிப்பட்ட முறையில் நஷ்டப்படுவார்கள். எனவே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், பேரணி நடத்துங்கள். அதற்கு ஆதரவு அளிக்கிறோம். அதை விட்டுவிட்டு கடைகளை அடைக்க யாரும் வற்புறுத்தக்கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர…

  6. தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு: முழு விவரம்! மின்னம்பலம்2022-02-20 தமிழகத்தில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகத் தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 12,838 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 பேர் போட்டியிட்டனர். கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி 21 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 1.37 கோடி ஆண் வாக்காளர்களும், 1.42 கோடி பெண் வாக்காளர்களும், 4,323 திருநங்கைகளும் என மொத்தம் 2.79 …

  7. முதல்வர் பழனிசாமி அரசு, மெஜாரிட்டியை நிரூபிக்க, இந்த வாரம் சட்டசபை கூடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முடிவு செய்ய, கவர்னர் வித்யாசாகர் ராவ், நாளை சென்னை வருகிறார். பலப்பரீட்சையை சந்திக்க, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன. தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், ஆகஸ்ட், 22ல், கவர்னரை நேரில் சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், முதல்வருக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என, எதிர்க்கட்சிகளும், கவர்னரை சந்தித்து வலியுறுத்தின. …

  8. அண்மையில் பாலச்சந்திரன் உள்ளிட்ட சிறுவர்களை போராளிகளாக சித்தரிக்கும் தமிழக திரைப்படமான “ புலிப்பார்வை” யின் வெளியீட்டிற்கு நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்று ஆசிர்வாதம் வழங்கியிருந்ததது மட்டுமல்லாமல் சிறுவர்களை போராளிகளாக புலிகள் வைத்திருந்தார்கள் என தவறாக சித்தரிக்கும் திரைப்படத்தை தடை செய்யச் சொல்லி கோசம் எழுப்பிய மாணவர்களும் மிருகத்தனமாக தாக்கபட்டிருந்தார்கள். “புலிப்பார்வை”யின் சில காட்சிகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கபட்டு சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை வெகு விமர்சையாக ஆரம்பிக்கபட்டுவிட்டது. பாலச்சந்திரன் ஒரு போராளி என்றும் அவன் சண்டையில் கொல்லபடப்டதாகவும் சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை செய்யபட்டுவருகிறது. பாலச்சந்திரன் ஒரு போராளி என்பதை தமிழ்நாடே ஏற்றுக்கொண்டுள…

    • 0 replies
    • 721 views
  9. ராஜீவ் கொலை வழக்கில்... சிறையில் இருக்கும், 7 பேர் விடுதலையில் தலையிட முடியாது- மத்திய அரசு. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் ஆர்டிஐ மூலம் பதில் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்க வேண்டும் என அவரது உறவினர்களும் ,தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. …

  10. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அப்பலோ வைத்தியசாலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் அமர்வுக்கு முன்பு, நேற்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அப்பலோ வைத்தியசாலையில், சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தொடர்பில்லாத ஆவணங்களை கோருகின்றது. மேலும் சிகிச்சை குறித்த ஆவணங்…

  11. ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம்: முடியுமா, தொடருமா? எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 06:10 Comments - 0 ஹிந்தித் திணிப்பு என்பது, மீண்டும் வலுவாகத் தமிழகத்தில் மட்டுமின்றி தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஹிந்தி தினத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பொது மொழியாக, ஹிந்தி வர வேண்டும். ஹிந்திதான் நாட்டுக்கு ஓர் அடையாளத்தை உலக அரங்கில் கொடுக்க முடியும்” என்றார். இந்தப் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், தமிழகத்திலிருந்து முதலில் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம். மீண்டும் எங்களைக் களம் காண வைக்காதீர்கள். ஹிந்திதான் …

  12. 'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்!' - அதிமுக ஏட்டில் வந்த கருத்துக்கணிப்பு! அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்'. ஜெயலலிதாவின் அறிக்கைகள் மற்றும் அ.தி.மு.க.வின் செய்திகளை தாங்கி வருகிறது நமது எம்.ஜி.ஆர். இதில் வரும் கட்டுரைகள், கவிதைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது. இந்த பத்திரிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் நிறைய விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கருத்துக் கணிப்பு. 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும்? என்ற கேள்வி எழுப்பி அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, மற்றவை என மூன்று ஆப்ஷன்களை கொடுத்திருந்தார்கள். விருப்பமானவர்களுக்கு வாக்களிக்க முடி…

  13. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,முகமது ஷிஹாப் மற்றும் அவரது மனைவி பாத்திமா பர்சானா மார்க்கர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் தம்பதியின் 13 வயது மகனும் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை சென்றனர். இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, பிபிசி தமிழிடம் பேசிய அப்பெண் தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் தனிப்பிரிவ…

  14. சென்னையில் ஜிலுஜிலு மழை...தென் மாவட்டங்களும் குளிர்கின்றன Posted by: Sudha Published: Friday, February 15, 2013, 10:20 [iST] சென்னை: அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் இன்று காலையிலிருந்து வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு மேல் மெதுவாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மேலும் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை, ராஜாபாளையம், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி திருமங்கலம், திண்டுக்கல், தேனி, சிவங்கை, கொடைக்கானல் உள்ள…

  15. தமிழக மாணவர்களுக்கு இந்தியில் புதிர் போட்டி! மின்னம்பலம் தமிழக மாணவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் புதிர்போட்டி நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் புதிர் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தமிழக அரசு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியது. அதில், “இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி இரவு 12 மணி வரை போட்டி நடக்கிறது. 3 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் போட்டி நடைபெறும். காந்…

  16. புதுக்கோட்டையில் இன்று கலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் ராமதாசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவிடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியினருக்கும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து தலித் அமைப்பினரையும் காவல்துறை கைது செய்தது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13015:viduthalaisiruththai&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 472 views
  17. 1,76,000 கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துள்ளது என்று கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் விசாரிக்க அல்லது சாட்சியம் அளிக்க அழைக்கவில்லை எனபது சர்ச்சை ஆனது . இப்போது அதில் ஏற்பட்ட முநேற்றமாக , 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு அனுமதி அளித்துள்ளது. இந்த ஊழல் புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. இந்த கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்குத் தணிக்கை துறை அதிகாரி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அ…

    • 0 replies
    • 491 views
  18. அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட அடுத்த நாளே, மன்னார்குடி சொந்தங்கள், தங்களின் மிரட்டல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மின் வாரிய டெண்டர்களை, ஆதரவாளர்களுக்கு கொடுக்கும்படி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்து உள் ளனர். சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று, டெண்டர் படிவம் சமர்ப்பிக்க, மற்ற ஒப்பந்ததாரர்களை போலீசார் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மன்னார்குடி சொந்தங்கள் தலையீட்டால், ஏற்கனவே திட்டமிட்டபடி மின் வாரிய ஊழியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நடக்கவில்லை. வெளிப்படையாக நடக்க விரு ந்த இந்த நேர்காணல் நிறுத்தப்பட்டதால், அதற் காக விண்ணப்பித்தவர்…

  19. தி.மு.க., - மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை தி.மு.க.,வில், சரிவர செயல்படாத மாவட்டச் செயலர்கள் நீக்கப்பட உள்ளதாக, சென்னை யில், நேற்று நடந்த கூட்டத்தில், கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், மாவட்டச் செயலர்கள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை உறுப்பினராக, கருணாநிதி, 60 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அவரது பிறந்த நாளுடன் சேர்த்து, அவரின் சட்டசபை வைர விழாவையும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன், 1முதல், மூன்று நாட்களுக்கு விழா ஏற்பாடுகள் செய்யப்படு…

  20. ஈழத் தமிழர்கள் மூன்று பேரை தமிழகத்திலிருந்து வெளியேற்றி இலங்கைக்கு அனுப்பும்படி இந்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய மூவரையும் உடனடியாக நாடு கடத்தப் போவதாக தமிழக காவல்துறையைச் சார்ந்த கியூ பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இம்மூவரும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்து அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ வழக்குகளோ ஏதுமில்லை. ஈழத் தமிழர்களின் சனநாயக உரிமைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து அறவழியில் அமைதி வழியில் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்துவதால் காவல்துறை இவர்களை பொய்வழக்குகளில் கைது செய்வதுண்டு. மற்றபடி கிரிமினல் வழக்குகள் ஏதும் அவர்…

  21. மிஸ்டர் கழுகு: கார்டன் சுவர்கள்... காட்டன் கவர்கள்! ‘‘‘பாகுபலி பார்ட்-2’ பார்த்தேன். ‘தமிழ்நாடு பார்ட்-2’ மாதிரி இருந்தது’’ என்றபடி அமர்ந்தார் கழுகார். சினிமா கதையையும் நாட்டு நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, செய்திகளுக்குத் தாவினார். ‘‘இரட்டை இலைக்கு விலை பேசிய வழக்கில் டெல்லி போலீஸிடம் சிக்கிய தினகரன், சென்னைக்கும் டெல்லிக்கும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்தபோது அவரது அடையாறு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மற்றபடி மூன்று நாட்களும் அவர் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில்தான் உட்கார வைக்கப் பட்டிருந்தார். சென்னை வந்த டெல்லி போலீஸிடம், தினகரன் பற்றிய பல விவரங்களை நிறையப் பேர் கொடுத்துள்ளனர். எனவே, த…

  22. "ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன்!"- ரகசியம் சொல்லும் சீமான்! "என்னை பி.ஜே.பியின் ‘பி' டீம் என்பவர்கள்தான் மெயின் டீமாக இருக்கிறார்கள்." - சீமான் 'இந்துத்துவ அஜென்டாபடிதான் சீமான் செயல்படுகிறார்' என்கிற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றனவே? ‘‘அதெல்லாம் சும்மா கிளப்பிவிடுவது. நான் இறை நம்பிக்கையற்று நீண்டகாலம் பயணம் செய்தவன். இன மீட்சி என்று வரும்போது தமிழர் வழிபாட்டை மீட்பதற்காக சில வேலைகளைச் செய்தேன். உடனே, ‘பாருங்கள், சீமான் இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்' என விமர்சனம் செய்கிறார்கள். நான் என் மெய்யியல் கோட்பா…

  23. தமிழகத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் பேர்ணாம்பட்டு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேல…

  24. இலங்கைக்கு கடத்தப்படவிருந்த.. கிருமி நாசினி பொலிஸாரினால் பறிமுதல்! தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக மஞ்சள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் பொலிஸார் அவற்றை சுற்றி வளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கியூ பிரிவு பொலிஸார் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சுரேஷ் கந்தசாமி,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரி, தலைமை காவலர் ராமர், முதல்நிலைக் காவலர் இருதய ராஜ் குமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் இன்று (புதன்கிழமை) காலை தீவிர ரோ…

  25. Started by நவீனன்,

    * வௌ்ளிக்கிழமை இரவு, சென்னை வருகை * சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில், 'ஹால்ட்' * இரவு, 'செம மப்பு!' வீட்டில் சிலரை அழைத்து, குசலம் விசாரிப்பு; அவர்களிடம், 'முக்கியஸ்தர், துணை முக்கியஸ்தர்' பற்றி, சகட்டு மேனிக்கு சாடல் * சனிக்கிழமை காலை, வீட்டிலிருந்து புறப்பட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்கை * சனிக்கிழமை பிற்பகல் வீடு திரும்பல். உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் சந்தித்து உரையாடல். வெளியில் பலர் சந்திக்க முனைந்தது நடக்கவில்லை * ஞாயிறு காலை, தி.நகரிலிருந்து புறப்பட்டு, மருத்துவனைக்கு மதியம், 12:40 மணிக்கு செல்கை. நெருங்கிய உறவினரைப் பார்த்து விட்டு, 1:30 மணிக்கு கிளம்பி, வீடு திரும்பல் * கடந்த டிசம்பரில் மறைந்தவரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.