தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10269 topics in this forum
-
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’தஞ்சையில் வருகிற 15,16,17-ந் தேதிகளில் தனி தமிழ் இயக்கத்தின் 100-வது ஆண்டு விழா மாநாடு, உலக தமிழர் பேரமைப்பின் 9-வது மாநில மாநாடு ஆகியவை நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழர்களின் 60 ஆண்டு கோரிக்கையான குளச்சல் துறைமுக திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் ஆசியாவிலேயே சிறந்த சரக்கு பெட்டகமாக இருக்கும். இந்த திட்டத்துக்கு குரல் கொடுத்த மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். குளச்சல் துறைமுக திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசு முட்டுக்க…
-
- 0 replies
- 405 views
-
-
முல்லை பெரியாறு அணை எந்த வெள்ளத்தையும் தாங்கும் என்று மூவர் குழுத் தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்துள்ளார். தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரியது. ஆனால் கேரள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணை பலவினமாக இருப்பதாகவும், அதனால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமானால் இடித்து கட்ட வேண்டும் என்று தெரிவித்தது. இந்த பிரச்சனை 1978ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 134 அடியாக குறைத்து கொண்டது. தற்போது தமிழக பகுதியில் விவசாய நிலத்துக்கு வறட்சி நிலவி வருவதால் தமிழக அரசு சார்பில் மீண்டும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கோ…
-
- 0 replies
- 695 views
-
-
தேர்தல் முடிவுகளில் நான் செய்த தவறுகள்..! - மனம் திறந்த வைகோ எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகியபோது கூட அவருடன் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருமளவு விலகவில்லை. ஆனால் வைகோ தி.மு.க.வில் இருந்து விலகியபோது 8 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர். தி.மு.க.வில் ஒரு செங்குத்தான பிளவை ஏற்படுத்தியவர் வைகோ. தி.மு.க.வின் கொடி, சின்னத்துக்கு உரிமை கோரி தி.மு.க.வை கிடுகிடுக்கச் செய்தவர். ஆனால், இப்போது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக சற்று நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ம.தி.மு.க. 1993ல் தி.மு.க.வில் இருந்து வெளியேறி பின்னர் ம.தி.மு.க.வை துவக்கிய வைகோ, இந்த 23 ஆண்டுகளில் 5 சட்டமன்ற தேர்தல், 5 நாடாளுமன்…
-
- 0 replies
- 670 views
-
-
லேப்டாப் எங்கே? தாக்கியது யார்? ‘‘கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்தில் இருக்கிறேன்” என்று கழுகாரிடம் இருந்து வாட்ஸ் அப் தகவல் வந்தது. எதற்காக இருக்கும் என்ற குழப்பம் தீருவதற்கு முன்பே கழுகார் வந்து சேர்ந்தார். ‘‘சுவாதி கொலை வழக்கில் உண்மையான விசாரணையே இப்போதுதான் தொடங்கி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால்தான் கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்துக்குப் போனேன். சுவாதி கொலை வழக்கை முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. அதன்பிறகு, அது சென்னை மாநகர போலீஸ் வசம் வந்தது. இப்போது அது என்.ஐ.ஏ என்று சொல்லப்படும் தேசியப் புலனாய்வு ஏஜென்சியின் வசம் ஒப்படைக்கப்படலாமோ என்ற நிலைமை எழுந்துள்ளது. அந்த ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரிகள் சத்தமில்லாமல் இங்கு வந்து விசாரணையை ஆரம…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுவாதி வழக்கு - வழக்கறிஞர் திடீர் விலகல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி ராம்குமார் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஜூலை 18ம் திகதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட இவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிணை கேட்டு ராம்குமார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் பிணை வழக்கில் அவர் சார்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆஜரானார். இவருக்கு பெண் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு தரப்பினரும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ராம்குமார் பிணை வழக்கில்…
-
- 2 replies
- 610 views
-
-
'சுவாதி கொலைக்கு நான் மட்டும் காரணமல்ல!’ -புழல் சிறையில் குமுறிய ராம்குமார் சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக வெளியாகும் தகவல்கள், காவல்துறையின் புலனாய்வையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. 'நான் மட்டும் குற்றவாளியல்ல. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கின்றன' என புழல் சிறையில் குமுறிக் கொண்டிருக்கிறாராம் ராம்குமார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலை வெட்டிக் கொல்லப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கழுத்தறுபட்ட நிலையில் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராம்குமாரிடம், நெல்லை மாவட்ட மாஜிஸ்திரேட் ராமதாஸ், ரகசிய வாக்குமூலம் வாங்கினார். 'என்ன…
-
- 0 replies
- 842 views
-
-
காதலை நிராகரித்ததுதான் காரணமா? :- சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி எனக் கருதப்படுபவர் கைதுசெய்யப்பட்டாலும் கூட, இந்தக் கொலைக்கான காரணம் முழுமையாக வெளிவராததாலும், பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாலும் மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். பொலிஸுக்கு பெரும் சவாலாக மாறிய இந்த வழக்கில், கொலை நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரைப் பொலிஸார் கைதுசெய்தனர். காதலால் அரியர்ஸ்! ராம்குமார் குறித்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் விசாரித்தோம். “ராம்குமாரின் தந்தை பரமசிவன், தென…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள முசுருதீன் மற்றும் மனைவி, பிள்ளைகளிடம் நுண்ணறிவுக் காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.மேற்கு வங்காள மாநிலம் மிர்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் முசுருதின். இவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி நேற்று விஸ்வபாரதி புகையிரதத்தில் வைத்து புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் முசுருதீனிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாவது, வங்காள மாநிலத்தைச் சேர்ந்த முசுருதீன் 6 வருடங்களாக திருப்பூரில் மளிகைக் கடை நடாத்தி வருவதுடன் ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 சிம் அட்டைகள், 2 போலி வாக…
-
- 0 replies
- 519 views
-
-
வினுப்ரியாவைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் / சிபிச்செல்வன் இரவு சுமார் பத்து மணிக்கு நண்பர் ரவிக்குமாருடன் நானும் அவருடைய கட்சியின் சில முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் சேர்ந்து இளம்பிள்ளைக்குப் போயிருந்தோம்.அந்தத் தெருவில் பெரும்பாலான வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டிருந்த மெத்தை வீடுகள்.அப்படியொரு வீட்டில் அவர் இருக்கலாம் என நினைத்து போனவர்களுக்கு ஒரு பழைய காலத்து ஓட்டு வீட்டின் முன்னால் ஒரு சாமியானா போட்டு வினுப்ரியாவின் போட்டோவை வைத்து ஒரு மாலையைப் போட்டு வீட்டிற்கு வெளியில் துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு வினுப்ரியாவின் பெற்றோர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். இளம்பிள்ளையில் இடங்கணசாலை என்ற பகுதியில் இருக்கிறது வினுப்ரியாவின் வீடு. அது ஒன்றும் பெரிய நகரமோ அல…
-
- 0 replies
- 728 views
-
-
போலீஸார் எங்கே சென்றார்கள்? சுவாதி வழக்கில் அரசுக்கு ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது ஏன் என்றும், சுவாதி கொலை செய்யப்பட்ட பின்பு உடலை கூட மூடாமல் போலீஸார் எங்கே சென்றனர் என்றும் அரசு வழக்கறிஞரிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்விகள் எழுப்பினர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி பட்டப்பகலில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, வாலிபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், ரயில்வே காவல்துறைக்கும், தமிழகக் காவல்துறைக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாலேயே சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை இதுவரை கைது செய்யவில்லை என ஆங்கில நாளேடு ஒன்று…
-
- 16 replies
- 4.5k views
-
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை கைது செய்து காவல் துறை விசாரித்து வருகின்றனர். மேலும் ராம்குமாரின் தங்கை, அம்மா உள்ளிட்ட அவரது வீட்டினரையும் காவல் துறை விசாரணைக்காக கைது செய்தனர். இந்நிலையில் அவரின் தங்கை மதுபாலா தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி அதிர வைத்துள்ளது. அப்போது அவர் பேசியது, ராம்குமாரை கைது செய்ய காவல் துறையினர் இரவு 11 மணிக்கு வந்தனர். ஆனால் ராம்குமார் தான் குற்றவாளி என உறுதிபடுத்தும் முன்னரே பெண்கள் என்று கூட பார்க்காமல் எங்களை விரட்டி விரட்டி போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். எப்படி அவர்கள் எங்களை போட்டோ எடுக்கலாம், உடனடியாக அவர்கள் மீது ந…
-
- 0 replies
- 907 views
-
-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டத்தை சேர்ந்தவர் குணசேகர் மகள் தனலட்சுமி (17). இவர், அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமிக்கு தோல் பாதிப்பு காரணமாக சமீபநாட்களாக தலையில் முடி உதிர்வு ஏற்பட்டு வந்தது. தொடர்ச்சியாக அதிகளவில் முடி உதிர்வு ஏற்பட்டதால் கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலைலோயர் பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு வந்தார். பாட்டி வீட்டில் தங்கி அருகேயுள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் தலைமுடி உதிர்வது தொடர்ந்தது. இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள தனது அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சத்தம் க…
-
- 0 replies
- 745 views
-
-
22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை! பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத். பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழகத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவாதி, வினுப்பிரியாவை தொடர்ந்து சேலம், தெலுங்கனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காணமல் போன குறித்த சிறுமி, அயல் வீட்டில் மூடி வைக்கப்பட்ட சமயல் பாத்திரம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் அதேபகுதியினை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது பொலிஸாரையே அதிர வைக்கும் சில தகவல்களை சந்தேகநபர் கூறிய…
-
- 1 reply
- 600 views
-
-
'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...!'- ராம்குமார் பரபரப்பு தகவல்! சென்னை: சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பியுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24 ம் தேதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலையானார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது…
-
- 1 reply
- 669 views
-
-
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களில் முதல் ஐ.ஏ.எஸ்.! துணை ஆட்சியராக நியமனம் இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ்-ஸில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர் காளிமுத்து. இவரின் முன்னோர், கடந்த 1823 ம் ஆண்டு இலங்கைக்குக் குடி பெயர்ந்தனர். ஆங்கிலேயர்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோரை அழைத்துச் சென்றனர். அதில் இன்பசேகர் காளிமுத்துவின் முன்னோர்களும் அடங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, இலங்கை அரசு இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்…
-
- 0 replies
- 393 views
-
-
சுவாதி கொலை வழக்கில் தொலைக்காட்சியில் வெளியான படத்தை பார்த்து ராம்குமாரிடம் விபரம் கேட்டதாக அவரது தந்தை பொலிஸார் விசாரணையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரிடம் சென்னை தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி, நேற்று சென்னை அழைத்து சென்றனர். சென்னையில் இருந்து நெல்லை வந்த தனிப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஒரு குழுவினர் தொடர்ந்து நெல்லையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவன், தங்கை மதுபாலா …
-
- 0 replies
- 600 views
-
-
570 கோடி கண்டெய்னர் பணம் யாருடையது? சி.பி.ஐ விசாரிக்க உத்தரவு திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, திருப்பூரில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, கடந்த மே மாதம் 13-ம் தேதி திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர…
-
- 0 replies
- 342 views
-
-
சுவாதி கொலை வழக்கில் மர்மம் விலகியது: கொலையாளி ராம்குமார் பிடிபட்டது எப்படி? போலீஸிடம் பிடிபட்ட ராம்குமார் (பழைய படம்) மற்றும் சுவாதி செங்கோட்டை அருகே கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த போலீஸ் படை சுற்றிவளைத்தது சென்னையில் பெண் இன்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் பிடிபட்டது எப்படி என்பது குறித்த பரபரப்புத் தகவல்கள் தெரியவந் துள்ளது. கொலை செய்த பின்னர் செங்கோட்டை அருகே உள்ள தனது சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமத் துக்குச் சென்று ஆடு மேய்த்துக் கொண்டு திரிந்துள்ளார். பிளேடால் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்ற அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாமல் போலீஸார் காத்திருக்கின்றனர். …
-
- 0 replies
- 682 views
-
-
சென்னை தரமணி அருகே இன்று அதிகாலை 4.40 மணி அளவில் குடிபோதையில் ஆடி காரை ஒட்டி வந்த மூன்று பெண்கள் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மீது பயங்கரமாக மோதினர். இந்த சம்பவத்தில் முனுசாமி (48) என்ற நபர் 15 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் மற்றொரு வாகனத்தில் விரட்டிச் சென்று ஆடி காரை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்து இறங்கிய மூன்று பெண்கள் குடி போதையில் தள்ளாடியபடி நின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த மூன்று பெண்களையும் உடனடியாக மீட்டுச் சென்றதாகவும், இறந்தவரின் உடல் சுமார் ஒரு மணி நேரம் அளவில் அதே இடத்தில் இருந்ததாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். முனுசாமியின் உடல் தற்போது ராயப்பேட்டை மருத…
-
- 2 replies
- 483 views
-
-
திருநெல்வேலி : பொறியியல் படிப்பை முடிக்காமல் ஜவுளி கடையில் வேலை பார்த்ததால் என் காதலை சுவாதி உதாசீனப்படுத்தினார்.. இந்த ஆத்திரத்தில் சுவாதியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கொலையாளி ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த ராம்குமார், நெல்லையில் நேற்று இரவு சிக்கினார். அப்போது போலீசிடம் இருந்து தப்பிக்க பிளேடால் கழுத்தை அறுத்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிகிச்சையில் முன்னேற்றமடைந்த நிலையில் ராம்குமாரிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றிருக்கின்றனர். அதில் ராம்க…
-
- 5 replies
- 788 views
-
-
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த புகைப்படம் மூலம் போலீசார் துப்பு துலக்கி, நேற்று இரவு கொலையாளியை கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையை முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் காலை சுமார் 6.40 மணியளவில் சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சுவாதி மின்சார ரெயிலுக்கு காத்திருந்த போது அடையாளம் தெரியாத நபரால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எழும்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் பதிவ…
-
- 0 replies
- 701 views
-
-
தலைநகர் சென்னையை ஏன் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர வைத்த செய்தி சுவாதி கொலை சம்பவம். காலை நேரத்தில் பயணிகள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் அனைவரும் பார்க்கும்படி ஓர் இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞன் யார் என்ற செய்திதான் அனைத்து ஊடகங்களிலும் கடந்த 24-ம் தேதி முதல் செய்தியாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. கொலையாளி நெல்லை மாவட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) எனத் தெரியவந்துள்ளது. சுவாதி வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், படுகொலை ஏற்படுத்திய பேரதிர்ச்சி முதல் இதுவரை நடந்த சம்பவங்களின் சிறு தொகுப்பு: 1. ஜூன் 24 காலை 6.35 மணி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடை மேடையில் நின்றிருந…
-
- 0 replies
- 567 views
-
-
சுவாதி கொலையாளி ராம்குமார் மிகவும் ஒழுக்கமானவன் என அவனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்துல்லா என்ற நபர் கூறியதாவது, பொறியியல் படித்துள்ள அவனுக்கு சில பாடங்களில் அரியர் உள்ளதால், சென்னையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தான். இதுவரை எந்த பிரச்சனையிலும் அவன் ஈடுபட்டதில்லை என கூறியுள்ளார். மற்றொரு நபரான கருத்தபாண்டி கூறுகையில், யாருடனும் முகம் பார்த்து கூட பேசமாட்டான், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்தால் ஆடு மேய்க்கும் வேலையை செய்வான், இவ்வாறு ஒழுக்கமாக இருந்த ராம்குமார், ஒரு கொலையை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார். http://news.lankasri.com/india/03/105131
-
- 0 replies
- 619 views
-
-
'சுவாதி வழக்கில் கைதானவரைப் பற்றி என்ன சொல்வது?' -கமிஷனர் பதில் மென்பொறியாளர் சுவாதியை, ராம்குமார் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அவரிடம் பழக முடியாததால் கொலை செய்துள்ளார் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, அவர் கூறுகையில், "கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தனர். அங்கிருந்து எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுவாதி…
-
- 1 reply
- 894 views
-