Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உடன் மதுரை மேற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உ.வாசுகி | கோப்புப் படம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. பெரம்பூர் …

  2. 'உங்களால் வெயிலில் 10 நிமிடம் உட்கார முடியாதா?' தொண்டர்களிடம் சிடுசிடுத்த வைகோ! தேனி: 'நீங்கள் ஒரு கட்சிக்கு தொண்டர், உங்களால் வெயிலில் 10 நிமிடங்கள் உட்கார முடியாதா?' என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் தொண்டர்களிடம் வைகோ சிடுசிடுத்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போடி தொகுதி வேட்பாளர் வீரபத்ரன் ஆகியோரை ஆதரித்து, தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வைகோ பேசும்போது, ''டாஸ்மாக் கட…

  3. சென்னை : பாமக சார்பில் 117 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று 3ம் கட்டமாக 90 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். இவர் தற்போது தர்மபுரி எம்.பி.,யாக இருந்து வருகிறார். அன்புமணி சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் ஜி.கே.மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். பாமக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விபரம் : 1. பென்னாகரம் - அன்புமணி 2. மேட்டூர் - ஜி.கே.மணி 3. சீர்காழி - பொன்.முத்துக்குமார் 4. தஞ்சாவூர் - குஞ்சிதபாதம் 5. பாபநாசம் - ஆலயமணி 6. பேராவூரமணி - கலைவே…

    • 0 replies
    • 445 views
  4. எல்லாத்தையும் மேல இருக்கவன் பாத்துப்பான்... விஜயகாந்த் சொன்ன குட்டிக்கதை! வேலூர்: வேலுாரில் நடந்த மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரத்தில் திமுக அதிமுக குறித்து விஜயகாந்த் கூறிய குட்டிக்கதையை பொதுமக்கள் ரசித்தனர். திருப்பத்தூரில் தே.மு.தி.க - ம.ந.கூ பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. நான்கு மணி கூட்டத்திற்கு விஜயகாந்த் இரவு 8.10 மணிக்கு வந்தார். அவரது தாமதத்தை டூப் விஜயகாந்த்தை பாட்டு பாட வைத்து சமாளித்தனர் கட்சி நிர்வாகிகள். 8.10க்கு மேடையேறிய விஜயகாந்த் கூட்டத்தை பார்த்து பெரிய கும்பிடாக போட்டுவிட்டு மைக் பிடித்து காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். ஆனால் இடையில் தொண்டர்களிடமிருந்து சத்தம் வர டென்ஷனானவர், “ எங்க கட்சி கட்…

  5. தமிழக அரசியல் களத்தில் வைகோ தவிர்க்க முடியாத நபராக இருந்தாலும் இதுவரை தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவி என்பது கனவாகவே இருந்து வந்துள்ளது. வைகோ திமுகவில் இருந்த போது ஒரு முறைகூட சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து, மதிமுகவை தொடங்கியப் பிறகு கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கினார். எனினும், திமுக வேட்பாளர் ரவிசங்கரிடம் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலோடு இணைந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. அதிலும் அவர் வெற்றி பெறவில்லை. அப்போது ஆளும்கட்சியாக இ…

    • 4 replies
    • 1.3k views
  6. கோவில்பட்டியில் வைகோ, பல்லாவரத்தில் வீரலட்சுமி போட்டி- மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக- தமாகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள தேமுதிக 5வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. ஆனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தமாகா ஆகியவை இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் இன்று தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கிய மதிமு…

  7. திமுக வேட்பாளர்கள் என்.ராஜ்குமார், எம்.ராமச்சந்திரன் அரக்கோணம் (தனி), ஒரத்தநாடு ஆகிய இரு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளர் பவானி நீக்கப்பட்டு, புதிய வேட்பாளராக என்.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக ஏற்கெனவே எஸ்.எஸ். ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு தற்போது புதிய வேட்பாளராக எம்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இரு தொகுதிகளிலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது திமுகவினரிடம் அதிருப்தி எழுந்தது. அரக்கோணம் வேட்பாளர் பவானியை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைப…

    • 0 replies
    • 407 views
  8. ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார்!' அடித்துச் சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி புதுடெல்லி; சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், மே மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும் என்றார். இந்த வழக்கில் ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் அதிகரித்துவிட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் ம…

    • 1 reply
    • 500 views
  9. ஜெயலலிதாவை பார்க்க 6 மணி நேரம் வெயிலில் தவித்த பெண்கள்: சாக்குப்பை துணிகளை தலையில் அணிந்து சமாளிப்பு அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் கொளுத்தும் வெயிலில் பெண்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தனர். குளுக்கோஸ், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக வழங்கப்பட்டன. விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 14 தொகுதி களைச் சேர்ந்த அதிமுக மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக் கோட்டையில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். விருத்தாச்சலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் 4 பேர் வெயிலுக்கு இறந்ததால் நேற்று அருப்புக்கோட்டை பொதுக்கூட்டத்தில் முன்னெச்சரிக்கையாக நடமாடும்…

    • 1 reply
    • 391 views
  10. அதிமுக, திமுக, தேமுதிக, தமாகா, ம.ந.கூட்டணி: எந்தெந்த தொகுதிகளில் யாருடன் மோதல்? ஓவியங்கள்: என்.கணேசன் அதிமுக மற்றும் திமுக கூட்டணியுடன் தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி பெருவாரிய இடங்களில் மோதுகின்றன. தேமுதிக - ம.ந.கூட்டணி தமாகா அணியில், தேமுதிக திமுகவை எதிர்த்து 74 இடங்களிலும், மதிமுக 24 இடங்களிலும், விசிக 22 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 21 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 இடங்களிலும், தமாகா 14 இடங்களிலும் என திமுக போட்டியிடும் 174 இடங்களில் போட்டியிடுகின்றன. இதே போல், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேமுதிக 18 இடங்களிலும், தமாகா 9 இடங்களிலும், மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 5 இடங்களிலும், விச…

  11. 'வைகோவைவிட விஜயகாந்த் எவ்வளவோ மேல்...!' -கம்யூனிஸ்ட்டுகள் நொந்து போன கதை மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, வைகோவின் அதீத செயல்பாடுகளால் அதன் தலைவர்கள் ரொம்பவே அதிருப்தி அடைந்தனர். 'வைகோவைவிட விஜயகாந்த் எவ்வளோ மேல்' என நொந்து போகும் அளவுக்குத்தான் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆறு கட்சிகள் போட்டியிடுவதால், தொகுதிப் பங்கீட்டில் இயல்பாகவே சிக்கல் வரும் என்பதால், கடந்த பத்து நாட…

  12. வேட்பாளரை மாற்றக் கோரி கருணாநிதி வீடு முற்றுகை: கோபாலபுரத்தில் பரபரப்பு! சென்னை: பாளையங்கோட்டை தொகுதியின் வேட்பாளரை மாற்றக் கோரி, நெல்லை மாவட்ட திமுகவினர் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் கோபாலபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவுசெய்து,வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகம் முழுவதும், பல்வேறு தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றக்கோரி, திமுகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் அறி விக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க…

  13. சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி 'அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர வைக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். 'களத்தில் சீமானை அவ்வளவு எளிதாக முதல்வர் புறக்கணித்துவிடவில்லை' எனவும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள் அவர்கள். " நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. 'தமிழனை தமிழனே ஆள வேண்டும்' என்ற ஒற்றைக் கோஷத்தோடு சீமான் களமிறங்குகிறார். அவரது முழக்கம் எடுபடுமா? என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், இதுவரையிலும் சீமான் முன்னெடுத்த எந்தப் போராட்டத்தையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?…

  14. தொகுதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிராக மதிமுகவில் கலகக்குரல்: கிருஷ்ணகிரி மா.செ.மாதையன் ராஜினாமா ! கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மாதையன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.சட்டசபை தேர்தலை மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்துடன் சந்திப்போம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகோ அறிவித்ததார். இந்த அறிவிப்பு அந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மதிமுகவின் மாநில பொருளாளராக இருந்த மாசிலா மணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்டச் செயலாளர் கு.சீ.வெ. தாமரைக் கண்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட மு…

  15. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தலைவர்கள் | கோப்புப் படம். மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக ஒதுக்கிய தொகுதிப் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டார். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு 29 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளை தேமுதிக ஒதுக்கியது.வைகோ இந்தப் பட்டியலை வெளியிட…

    • 0 replies
    • 300 views
  16. கருணாநிதியுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு! சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி திடீரென சந்தித்து பேசினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வை, தி.மு.க தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தார். இதனை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, தி.மு.க.வில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி தெரிவித்த கருத்து தி.மு.க தலைமையை கலங்கடித்தது. இதனால் அழகிரி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 2014ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி இந்த அதிரடியை முடிவை தி.மு.க தலைமை எடுத்…

    • 3 replies
    • 634 views
  17. ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் திமுகவின் சிம்லா முத்துசோழன் யார்? சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக முதல்வர் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளி வந்ததில் இருந்தே, அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று மாலை திமுக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது.இதனையடுத்து சிம்லா முத்துசோழன் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்லா முத்துசோழன் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமக…

  18. கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 173 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. கொளத்தூரில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மக்கள் தே.மு.தி.க., பெருந் தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவபடை, தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் தரப்பட்டுள்ளது. கட்சி தலைவ…

  19. விஜயகாந்த், திருமாவை கடுப்பேற்றிய வைகோ...! -விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வைகோவின் பிடிவாதத்தால் விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்ததால், கடுப்பில் இருக்கிறார்கள் தலைவர்கள். மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா இணைந்ததையடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில், கடந்த இரண்டு நாட்களாக முட்டி மோதி வருகின்றனர் கூட்டணியின் ஆறு தலைவர்களும். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இன்று அதிகாலை 2 மணியைக் கடந்தும் தொகுதியை முடிவு செய்ய முடியாமல் தவித்துள்ளனர் கூட்டணிக் க…

  20. கோவை : நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து, தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டுவருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார். கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, "நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. ஓட்டு கேட்டு வரவில்லை. 4 ஆண்டுகள் படித்தோம். இப்போது தேர்வுக்கு நிற்கிறோம். நாங்கள் ஓட்டு கேட்டு வரலை. எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையை கேட்டு வருகிறோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. குறை தீர்க்க வந்திருக்கிறோம். பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது என்ன பிரச்னை என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இவ்வளவு நாள…

  21. ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்- குஷ்பு அதிரடி காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதியிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. கடந்த 4ம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துள்ள அவர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தி.மு…

  22. ஜெயலலிதா இப்படிதான் நடப்பார்... நடித்து காட்டிய விஜயகாந்த்! சென்னை: ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் என்று நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என தேர்தல் பிரசார கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ''கொள்ளையடிப்பதில் அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இத்தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்" என்றார். மேலும், மேடைகளில் ஜெயலலிதா இப்படி தான் நடப்பார், பேசுவார் என்று விஜயகாந்த் நடித்துக்காட்டினார். அதன்பின் மீண்டும் தனது பேச்ச…

  23. தமிழகத்தேர்தல் திருவிழாவும், சீமானின் நாம் தமிழர் கூத்தும் : :வி.இ.குகநாதன் மே மாத நடுப்பகுதியில் மக்கள் முள்ளிவாய்க்கல் அவலங்களின் ஏழாவது ஆண்டு நிறைவின் துயரநினைவுகளில் மூழ்கியிருக்கும் அதே காலப்பகுதியில், புலத்தில் அவ் நினைவுதினக்கொண்டாட்ட உரிமைக்கான பாகப்பிரிவினைச் சண்டையில் புலம்பெயர் வியாபார அமைப்புக்கள் ஈடுபட்டிருக்கொண்டிருக்கும் அதே காலப்பகுதியில், தமிழகத்தில் தொப்புள்கொடி உறவுகள் தம்மை அடுத்த ஐந்து வருடங்களிற்கு யாரிற்கு குத்தகைக்கு விடுவது என்பதனைத் தீர்மானிக்கும் தேர்தல் திருவிழாவில் ஈடுபட்டிக்கொண்டிருக்கப்போகிறார்கள். இத்தேர்தல் திருவிழாவில் அதிமுக, திமுக, மக்கள்நலக்கூட்டணி, பாமக, பாரதிய ஐனதா, நாம் தமிழர் ஆகிய ஆறு பிரதான முகாம்கள் போட்டிபோடுகின்றன. …

    • 1 reply
    • 1.9k views
  24. பலம்மிக்க கூட்டணியை உருவாக்கிய வைகோ வாக்குச்சேகரிப்பில் வெற்றி காண்பாரா? 1989 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் போன்றில்லாமல் தற்போதைய தேர்தல் களம் மாறு பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதில், இந்த முறை நமக்கான வாய்ப்பு என்று கணக்கிட்டிருந்த திமுகவிற்கு தற்போதைய தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையுள்ளவர்களின் வாக்குகள் திமுகவிற்கே வந்து சேரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இடையில் புகுந்திருக்கும் தேமுதிக மக்கள்நலக்கூட்டணி, திமுகவிற்குக் கடும் சவாலாக இருக்கும் . திமுக காங்கிரசுக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடுநிலைய…

    • 3 replies
    • 444 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.