தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது சரியல்ல என்கின்றனர். இதனால் பட…
-
- 0 replies
- 686 views
-
-
பெண்களின் பாதுகாப்புக் கருதி Red-Button Robotic COP சேவையை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு! தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ கோப் (Robotic COP) வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் கோப் (Red-Button Robotic COP) என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தப்படவுள்ளது. 24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் வீதியின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் பொலிஸ் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு கொள்ளவும், உடனடியாக பொலிஸ் துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தவும், அருகில் ரோந்து …
-
- 0 replies
- 252 views
-
-
அதிமுக, திமுக, தேமுதிக, தமாகா, ம.ந.கூட்டணி: எந்தெந்த தொகுதிகளில் யாருடன் மோதல்? ஓவியங்கள்: என்.கணேசன் அதிமுக மற்றும் திமுக கூட்டணியுடன் தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி பெருவாரிய இடங்களில் மோதுகின்றன. தேமுதிக - ம.ந.கூட்டணி தமாகா அணியில், தேமுதிக திமுகவை எதிர்த்து 74 இடங்களிலும், மதிமுக 24 இடங்களிலும், விசிக 22 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 21 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 இடங்களிலும், தமாகா 14 இடங்களிலும் என திமுக போட்டியிடும் 174 இடங்களில் போட்டியிடுகின்றன. இதே போல், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேமுதிக 18 இடங்களிலும், தமாகா 9 இடங்களிலும், மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 5 இடங்களிலும், விச…
-
- 0 replies
- 390 views
-
-
தமிழகத்தில் கணிசமான மருத்துவர்கள் தாதியரும் கொரோனாவால் பாதிப்பு! தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 தாதியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 மருத்துவர்களில் இருவர் மாநில அரசின் மருத்துவர்கள் எனவும் இருவர் ரயில்வே மருத்துவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 4 மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 5 தாதியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வரவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/தமிழகத்தில்-கணிசமான-மருத/
-
- 0 replies
- 446 views
-
-
தமிழகத்தில் தொழிற்சாலைகளைப் படிப்படியாக ஆரம்பிக்கத் திட்டம்- முதல்வர் ஆலோசனை by : Litharsan கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சிலவற்றைப் படிப்படியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் தொழில் அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இணைந்திருந்தனர்…
-
- 0 replies
- 371 views
-
-
ஜெயலலிதாவுக்கு ஸ்விட்சர்லாந்திலிருந்து உணவுப் பொருள் தருவிக்கப்படுகிறதா? முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் (பொறுப்பு), மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள், தமிழக எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அகில இந்திய பிரபலங்கள் தொடர்ந்து அப்போலோ மருத்துவனைக்கு வருகை புரிந்து மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். அப்போலோ அறிக்கை மட்டுமே முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் சொல்கிறது. மருத்துவர்களோ, கட்சித் தரப்பினரோ, மருத்துவமனைக்கு வந்து செல்லும் பிரமுகர்களோ ஜெயலலிதா உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளிப்படையாகச் சொ…
-
- 0 replies
- 521 views
-
-
துக்ளக் பத்திரிகையின் முதல் அட்டைப்படம் பின்னணி! #RIPcho "எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!'' - ''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?'' என்ற கேள்விக்குதான் இப்படி பதில் சொன்னார் சோ. ஆமாம். உண்மையில் அவர் சினிமா நடிகராக வர வேண்டும் என்றோ, பத்திரிகையாளராக வர வேண்டும் என்றோ அவர் யோசித்தது இல்லை. நிகழ்காலத்திலே தன் முழு கவனத்தையும் செலுத்தினார். அதுதான் அவரை அடுத்தடுத்த தளத்துக்கு அழைத்துச் சென்று உச்சத்தில் நிறுத்தியது. அரசியல், சினிமா, நாடகம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, 'திக் திக்' மனநிலையில், சசிகலா தரப்பினர் காத்திருக்கின்றனர். அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அவரது மருமகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், 'கிளியர்' ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. க…
-
- 0 replies
- 469 views
-
-
மதுரை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, சினிமா, அரசியலில் ஈடுபட்டார். சினிமாத் துறையில், பல கோடி ரூபாய் சம்பாதித்தார். 1989ல், அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, சட்டசபை தேர்தலில், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்…
-
- 0 replies
- 370 views
-
-
துடிக்குது புஜம்,ஜெயிப்பது நிஜம் ஒட்டுமொத்த பார்வையையும் இன்றைக்கு தமிழக இளைஞர்கள் மீதுதான்.எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மீசைக்கவிஞன் பாரதி பாடியது போல ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரே குரலில் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களும் எழுச்சி கொண்டு நிற்பதை பார்த்து மிரண்டு போயிருக்கிறது அதிகாரவட்டம். சென்னை கடற்கரை இரண்டாவது முறையாக சுனாமி எனும் பேரலையை சந்தித்தது, இந்த சுனாமிக்கு காரணம் மாணவர்கள்தான்.ஒரே ஒரு விஷயம் இந்த சுனாமி அழிக்க வரவில்லை அழிவின் விளிம்பில் இருக்கும் ஜல்லிக்கட்டை மீட்க வந்ததாகும். போலீசாரை வேடிக்கை பார்க்கவைத்துவிட்டு மாணவர்களே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டனர்,போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு குடிதண்ணீர்,உணவு போன்றவைகளை வாங்கிவந்த…
-
- 0 replies
- 710 views
-
-
100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது: காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும்…
-
- 0 replies
- 619 views
-
-
30th May 2013 புதுகோட்டை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறையில் இருந்து மீண்டு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் பலர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தோட்ட வேலைக்காக புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர். ஆலங்குடி அருகே பணியாற்றிய அவர்கள், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், 43 பழங்குடியின மக்களை மீட்டனர். அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. …
-
- 0 replies
- 514 views
-
-
திமுகவின் பொற்கால ஆட்சியில் வெற்றிகள் தொடரட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும்: ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து செய்திப்பிரிவு வைகோ - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 153 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் …
-
- 0 replies
- 590 views
-
-
நளினி முருகன்: உறவினர்களுடன் வீடியோ காலில் பேச அனுமதி! மின்னம்பலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் இருவரும் உறவினர்களுடன் வாடஸ் அப் காலில் பேச அனுமதி அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 30 ஆண்டுகளாக நளினி மற்றும் முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2020 ஏப்ரல் மாதம் இறுதியில் முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்தபோது இறுதிச் சடங்கைக் கூட வீடியோ காலில் பார்க்கத் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா, ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் முருகன், நளினி இருவரும்…
-
- 0 replies
- 629 views
-
-
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் சிங்கள பெளத்த இனவெறி அரசியலின் முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. ராவண பலய்யா என்ற அந்த சிங்கள பெளத்த இன வெறி அமைப்பின் பின்னால் இருப்பது மகிந்த ராஜபக்சாவின் இனவெறி அரசுதான் என்பது இலங்கை அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரக அலுவலகத்திற்குள் இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகளும் சிங்கள இன வெறியர்களும் உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்த முயன்றுள்ளனர். எப்போதெல்லாம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் நிலை உருவாகிறதோ அப்போதெல்லாம்…
-
- 0 replies
- 527 views
-
-
கொடநாடு கொலை விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்த சசி நடப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவினர் இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலையில் கூடியதும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசத் தொடங்கினார். ஆனால், இதற்கு சபாநாயகர் அப்பாவு ஒப்புதல் தரவில்லை. இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பதாகைகளை ஏந்தி அ.தி.மு.கவினர் கோஷங்களை எழுப்பி வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பாக அமர்ந்து கோஷங்களையும் எழுப்பி…
-
- 0 replies
- 339 views
-
-
குட்கா விவகாரத்தில் சிக்கிய, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக் களை, வருமான வரித்துறை முடக்கியதால், அவரது அமைச்சர் பதவிக்கு, மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் பணம் வினியோகம் நடந்ததாகக் கூறி, வருமான வரித் துறையினர் அவர் வீட்டில், 'ரெய்டு' நடத்தியபோதும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இப்போது, அவரை அமைச்சர வையில் இருந்து வெளியேற்றும்படி, கட்சி யினரிடமிருந்தே, முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அரசியல் குழப்பங்கள் தீர்ந்த பின், முதல்வர் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், சுகா…
-
- 0 replies
- 621 views
-
-
பா.ஜனதா தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசிய வைகோ, பாராளுமன்ற தேர்தலில் 250–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறினார். பா.ஜனதாவுடன் கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இதற்காக டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த வைகோ, கூட்டணிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில், கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று டெல்லி சென்ற வைகோ, மீண்டும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாள…
-
- 0 replies
- 486 views
-
-
நடிகர் சிவாஜி கணேசனின் சொத்து விவகாரம் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சிவாஜியின் மகள்களான சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங…
-
- 0 replies
- 255 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: “இது ஒன்றும் இறுதித்தீர்ப்பு அல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இது. தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது. இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷடவசமானது” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “தீர்ப…
-
- 0 replies
- 689 views
-
-
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணி வெற்றிபெறாது என்கிற பார்வை தமிழக அரசியல் களத்தில் ஒரு சாராரிடம் உண்டு. பல தேர்தல்களில் வைகோ இடம்பெற்ற கூட்டணிகள், தோல்வியையே தழுவியுள்ளன. அதனால், வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது என்கிற சென்டிமென்ட் பொதுவாக உண்டு. `வைகோ சென்டிமென்ட்’ என்று சொல்லி, மாற்றுக்கட்சிகளின் மேடைகளிலும், சமூகவலைதளங்களிலும் வைகோவைக் கிண்டல் செய்யும் நிலையும் இருந்துவந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்கிற ஓர் அணியை அமைத்தனர். அதில் தே.மு.தி.க-வையும் த.மா.கா-வையும் கொண்டுவருவதில் வைகோ பெரும் பங்க…
-
- 0 replies
- 989 views
-
-
காளான் வளர்ப்பில் கல்லா கட்டும் இன்ஜினியர் பெரம்பலூர்: காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத்தாவர உயிரினம். பலநாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பலதரப்பட்ட சூழல்களி லும் வளரக்கூடியது. எப்போதாவது இடியிடித்து மழைபெய்தால் அபூர்வமாக முளைக் கும் காளான்களை சமைத்து உண்பதில் ஆர்வம்காட்டும் இந்தியர்களினவ் முக்கிய உணவுப் பொருளாக காளான்கள் அசைவ உணவுக்கு மாற்றாக மாறி வருகிறது. இதில் சிப்பிக்காளான், பால் காளான், பட்டன் காளான் என ஆயிரக்கணக்கான வகைகள் காளான்களில் இருந்தாலும், சிப்பிக் காளான்களுக்கும், பால் களான்களுக்கும் மட்டுமே மவுசு அதிகரித்துள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே ஆடம்பர உணவாகக் காணப்பட்ட காளான்கள் இப்போது நடுத்த…
-
- 0 replies
- 673 views
-
-
81 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள். தஞ்சாவூர் மீன்பிடித் தடைக்காலம், கரோனா ஊரடங்கு ஆகியவற்றால் 81 நாட்கள் கடந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் சுமார் 150 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமை என வாரத்தில் 3 நாட்களும், மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், கரோனா காரணமாக…
-
- 0 replies
- 405 views
-
-
வீரப்பன் வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ???- வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் .............!!! இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய…
-
- 0 replies
- 1.5k views
-
-
இடிக்கப்படும் மற்றுமொரு பழமையான மதுரை திரையரங்கு மதுரை நகரில் உள்ள கீழவெளி வீதியில் அமைந்துள்ள பழமையான திரையரங்கமான சிந்தாமணி திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுவருகிறது. மறையும் மற்றுமொரு மதுரை சினிமா திரையரங்கு- சிந்தாமணி 1930களின் இறுதியில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்டது. அதற்குப் பிறகு ஜவுளி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்ட இந்த திரையரங்கம், சரக்குகளை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்தத் திரையரங்கத்தை இடிக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. மதுரை நகரின் பல பழமையான திரையரங்குகள் இடிக்கப்பட்டோ அல்லது மூடப்பட்டுவிட்ட நிலையில்,…
-
- 0 replies
- 468 views
-