தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10245 topics in this forum
-
234 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும்: ராமதாஸ் அறிவிப்பு ராமதாஸ். | கோப்புப் படம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் பாமக சார்பில் வேட்பாளர் கள் நிறுத்தப்படுவர் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட பாமக இளை ஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாங்கள் மாறவில்லை பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக இருக்கிறே…
-
- 0 replies
- 648 views
-
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் அறிவிப்பு திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்தார் | படம்: எல்.சீனிவாசன். 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்காக சென்னை வந்த குலாம்நபி ஆசாத் (இன்று) சனிக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், "வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை திமுக - காங…
-
- 1 reply
- 751 views
-
-
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான்! சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதற்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கடலூரில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று(வெள்ளி) பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழகத்தில் தீய ஆட்சிமுறை ஒழிய, தூய ஆட்சி முறை மலர, பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகம் காக்க ‘எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சி’ என்ற பொது முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போ…
-
- 0 replies
- 679 views
-
-
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.12 கோடி! [Saturday 2016-02-13 09:00] திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.12 கோடி வசூலானது.திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பும் போது உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்துவர். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தேவஸ்தானம் அன்றன்றே கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது.அதன்படி புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 2.12 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.12 கோடி வசூலானது.திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துத…
-
- 0 replies
- 617 views
-
-
'அவர் மட்டும் என்ன அன்னிபெசன்ட் அம்மையாரின் அக்கா பொண்ணா...?' - சுளீர் குஷ்பு! ஈரோடு: தன்னை நடிகை என்று பேசும் அதிமுகவினர், 'ஜெயலலிதா அம்மையார் நடிகையாக இருந்துதானே அரசியலுக்கு வந்தார். இல்லை அவர் மட்டும் என்ன மதர் தெரசா குடும்பத்தைச் சேர்ந்தவரா அல்லது அன்னி பெசன்ட் அம்மையாரின் அக்கா பொண்ணா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்' என்று குஷ்பு கொந்தளித்துள்ளார். ஈரோட்டில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குஷ்பு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்," நடிகைகள் பின்னாடி காங்கிரஸ் போகணும் என்று அவசியமில்லை.காங்கிரஸ் கட்சியில் என்னை யாரும் நடிகையாகப் பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டராகத்தான் என்னை எல்லோரும் பார…
-
- 1 reply
- 985 views
-
-
மக்கள் நலக் கூட்டியக்கத்தில் 4 கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு இடமில்லை: வைகோ உறுதி! புதுக்கோட்டை: மக்கள் நல கூட்டியக்கத்தில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை சேர்க்க மாட்டோம் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் அரசியல் மாற்று எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்திய கம்யூ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, 'தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்…
-
- 0 replies
- 699 views
-
-
தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடை நீக்கம் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தமிழக சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசும்போது, ஜெயலலிதாவை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்…
-
- 0 replies
- 408 views
-
-
'திமுக - அதிமுக ஒண்ணா தோத்து பார்த்ததில்லையே... பார்ப்ப!' - ஆஹான் ம.ந.கூ.! தமிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. சீட்டுக்காக கொள்கை கோட்பாடுகளையெல்லாம் மறக்கும் தருணம் இது. திமுகவை பாரதிய ஜனதா நெருங்கி வருகிறது என்றால் திமுக தலைமையோ விஜயகாந்தை நோக்கி வலை வீசுகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி யாருடன் வைக்கலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் 'மக்கள் நல கூட்டணி ' என்ற ஒரு கூட்டணி ஏற்பட்டு முழு வீச்சாக களத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணிக்கு மதிமுக செயலாளர் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கி…
-
- 3 replies
- 1.3k views
-
-
'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை! சென்னை: திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி கதை ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், " அ.தி.மு.க. தலைவி வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் எத்தனை பேரின் மகிழ்ச்சியைக் கெடுத்து, மன வருத்தத்தைக் கொடுத்து, அதிலே இன்பம் கண்டார் என்பதை; வேல…
-
- 0 replies
- 526 views
-
-
மக்கள் நலக்கூட்டணி - ஒர் அலசல் மாற்று அரசியலை முன்வைக்கும் கூட்டணி குறித்து ஓர் அலசல்பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவே இன்றும் தேர்தல் களத்தில் முழுமையாக இறங்காத நிலையில், முழுமூச்சில் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி.மதிமுக தலைவர் வைகோ தலைமையிலான இக்கூட்டணியில் பங்கேற்றிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரத்தில் உற்சாகம் மிளிர்கிறது. சமீபத்தில் மதுரையில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திரண்ட கூட்டமும், மாநாட்டில் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் மக்கள் கவனத்தை மக்கள் நலக் கூட்டணியின் மீது திருப்பியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஆன…
-
- 1 reply
- 1.9k views
-
-
அரசியலில் அப்பா, மகன் உறவுக்கு இடமில்லை... கல்யாணத்தில் ஜெ. சொன்ன கதை யாருக்கு தெரியுமா? சென்னை: அரசியலில் அப்பா, மகன் என்ற உறவுக்கு இடமில்லை. அரசியல் பாடத்தை நீங்களாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ஜெயலலிதா, அதற்கு ஒரு அழகான குட்டிக்கதையையும் கூறியுள்ளார். திருமண விழாவில் பேசிய ஜெயலலிதா, மணமக்களை வாழ்த்திய கையோடு, குட்டிக்கதை கூறத்தொடங்கினார். முதலில் பூனை கதை ஒன்றை கூறினார். ஒரு செல்வந்தர் பூனை ஒன்றை வளர்த்தார். அந்த பூனை முதல்நாள் எலி ஒன்றை பிடித்து வந்தது. அதைப்பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார். மறுநாள், செல்வந்தர் ஆசையாக வளர்த்த கிளியை பிடித்தது. இதைப்பார்த்து செல்வந்தர் கவலைப்பட்டார். மூன்றாம் நாள் ஒரு குருவியை பிடித்து வந்தது பூனை. ஆனால் …
-
- 0 replies
- 725 views
-
-
திருவண்ணாமலை கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்த 9 பேர் கைது:பரபரப்பு தகவல்கள்! திருவண்ணாமலை: உலகப் பிரசித்த பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்ததற்காக, வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கைதினைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்களுக்கும் சர்வதேச தீவிரவாத இயக்கத்தினருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோ…
-
- 1 reply
- 411 views
-
-
பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! திருப்பத்தூர் அருகே மரத்தின் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த டிரைவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தில் வசித்து வருபவர் முத்து. பிரபல நகைச்சுவையாளரான இவர், 'அசத்தபோவது யாரு' என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி வையம்மாள் (32). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இந்நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்…
-
- 6 replies
- 2.8k views
-
-
ரஜினி, சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் : பழ. கருப்பையா... நடிகர் ரஜினி மற்றும் கலெக்டர் சகாயாம் போன்றவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று பழ. கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார் . அவர் பேசும் போது “இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக மாற்றியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் அவனை சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாகவே உருவாக்கி இருக்கிறோம். இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகிவிட்டது. பதவியை பிடிக்க வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வர…
-
- 1 reply
- 673 views
-
-
மது பாட்டிலில் பூச்சி... நல்ல "சரக்கு" கொடுக்க துப்பு இல்லாத அரசு.. குடிகாரர்கள் குமுறல்!!!!! திருச்சி: பணம் கொடுத்துதானே மது வாங்குகிறோம். எங்களிடம் கொள்ளை கொள்ளையாக பணத்தை வாங்கிக் கொண்டு பூச்சி மிதக்கும் மதுவை விற்கிறார்கள் என்று திருச்சியில் மது வாங்க வந்தோர் புலம்பி குமுறியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள 10229 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையில் சிலர் மது வாங்கியபோது அதில் பூச்சிகள் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த மது பாட்டிலுக்கு பில் தருமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் கடைக்காரர்கள் தர மறுத்து விட்டனர். இதையடுத்து பல்வேறு பத்திரிகை அலுவலகங்களுக்குப் போன் செய்து செய்தியாளர்களையும், புகைப்படக்…
-
- 0 replies
- 585 views
-
-
பேரறிவாளனை விடுதலை செய்தால்... தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது! [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 01:11.36 AM GMT ] பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன. 2014, பெப்ரவரி மாதம் 19-ம் தேதி காலையில், அமைச்சரவையைத் திடீரெனக் கூட்டிய ஜெயலலிதா, “23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பால் புலனாய்வு செய்யப்பட்டு,…
-
- 0 replies
- 484 views
-
-
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" ------------------------------------------------------------------------------------------- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தனர். திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் தலையில் கட்டப்பட்டிருந்த பட்…
-
- 2 replies
- 736 views
-
-
மதுரையில் அரசு பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 14 பேர் பலி; 45 பேர் காயம் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி மதுரை அருகே அரசுப் பேருந்தும், சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திருநெல்வேலியில் இருந்து அரசுப் பேருந்து இன்று குமுளிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து இன்று மாலை 4.15 மணி அளவில் மதுரை மாவட்டம், ட…
-
- 0 replies
- 540 views
-
-
சென்னை: கடற்கரை நகரில் 'காற்று வியாபாரம்' இந்தியாவில் பெருநகரங்களில் காற்று மாசடைந்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது. மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதா என்ற கவலைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தல்…
-
- 0 replies
- 507 views
-
-
ஜெ. மீதான 'பிறந்தநாள் பரிசு வழக்கு' 4 வாரங்கள் ஒத்திவைப்பு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைகேடாக பிறந்தநாள் பரிசு பெற்றதாக தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் இறுதிக்கட்ட விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கின் விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா தரப்பிலான வாதத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு பதியப்பட்டது என்றும், அதிலும் காலம் கடந்தே அந்த வழக்கு பதியப்பட்டது என்றும் கூறப்பட்டது. மேலும், இதே காரணங்களை ஏற்றக்கொண்டே, முன்னதாக உயர்நீதிமன்றமும் …
-
- 0 replies
- 489 views
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார்: அற்புதம்மாள் நம்பிக்கை [ Monday,1 February 2016, 06:20:46 ] தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்திபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார் என்றும் அந்த அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வரும் என நம்புவதாக பேரறிவாளனின்தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஈரோட்டில் நேற்று பொதுக்கூட்டம்நடைபெற்றபோது அற்புத்தம்மாள் இவ்வாறு தெரிவித்துள்ளார். ’கடந்த 25 ஆண்டுகளாக செய்யாத குற்றத்துக்காக என் மகன் பேரறிவாளன் சிறையில் உள்ளார். பேரறிவாளனிடம் வாக்கு மூ…
-
- 0 replies
- 706 views
-
-
இலை மலர்ந்தது... ஆனால் ஈழம் மலர வில்லை... குமரியில் ஒலித்த ஈழத் தமிழர் குரல்! நாகர்கோவில்: விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்ட ஈழத் தமிழர் மகேந்திரன் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தபட்டார். பலத்த பாதுகாப்போடு அவரை திருச்சி காவல்துறையினர் அவரை அழைத்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் வந்தபோது திடீரென மகேந்திரன், பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை, நிவாரண வசதிகள் எதும் இல்லை, பெண்கள் கருமுட்டை விற்று வாழும் சூழலே அகதிகள் முகாமில் உள்ளது என கோஷமிட்டவரே வந்தார். குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜரான மகேந்திரன் வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது…
-
- 0 replies
- 590 views
-
-
நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டுக்கு அத்தியாவசியமான சக்தி : சத்யராஜ்
-
- 0 replies
- 628 views
-
-
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் பழ.கருப்பையா: தமிழக அரசு மீது சரமாரி புகார்! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, கழிவு நீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சமாக பெருந்தொகை தரும் சூழல் உள்ளது என்றும், இயற்கை வளம் சூறையாடப்படுகிறது என்றும் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பழ.கருப்பையாவை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கினார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பழ.கருப்பையா இன்று செய்தியாளர்களை சந…
-
- 0 replies
- 815 views
-
-
அதிமுகவில் இருந்து பழ.கருப்பையா எம்எல்ஏ நீக்கம்! சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் …
-
- 0 replies
- 686 views
-