Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராணுவ வீரர் கொலை: திமுக கவுன்சிலர் உள்பட 9 பேரை கைது செய்த போலீஸ் 15 பிப்ரவரி 2023 கிருஷ்ணகிரி அருகே உள்ளூர் கவுன்சிலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயம் அடைந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி திமுக கவுன்சிலர், ஒரு போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்தது என்ன? கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் பிரபு . பிரபாகரனும், அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகி…

  2. மதுபானத்தில் சயனைட்: நீடிக்கும் மர்மம் மதுவில் சயனைட் கலக்கப்படுவதன் மர்மம் குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் மதுபானசாலையொன்றில் விற்பனைசெய்யப்பட்ட மதுவில் ‘சயனைட்‘ கலக்கப்பட்டிருந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த மதுபானசாலையில் விற்பனை செய்யப்பட்ட மதுவைப் பருகிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களது உடலில் சயனைட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதேபோன்று ஒரு சம்பவம் மயிலாடு துறையிலும் பதிவாகியுள்ளது. இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள…

  3. சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? – சீமான் கேள்வி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திருச்சி, சிறப்பு முகாமில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஈழ உறவான ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனத்துயரத்தையும் அளிக்கிறது. சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அவை தீர்ந்துபோய் அதிகாரிகளிடம் முறையிட்டு…

  4. படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புப் படம் மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. 2007ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிவந்த வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தத…

  5. சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ? கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன. தமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. இது குறித்து உண்மை நிலையை அறிய, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர் பழனியப்பனைச் சந்தித்து பதிலைப் பெற முயன்றபோது, அது இயலவில்லை. அவர் ஆய்வுப் பணிகளில் இருப்பதாகவே தகவல் வந்தது. பெருமளவு தண்…

  6. தூய்மையான தமிழகம்: மோடியிடமிருந்து விருது பெற்றார் வேலுமணி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதினைப் பெற்றார் நாட்டின் பல பகுதிகளில் ஓகஸ்ட் 17 முதல் செப்டெம்பர் ஐந்தாம் திகதி வரை 690 மாவட்டங்கள் மற்றும் 17 ஆயிரத்து 400 கிராம பஞ்சாயத்துகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தமிழ்நாட்டிலுள்ள 31 மாவட்டங்கள் உட்பட்ட 800 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தெரிவாகியது.…

  7. 23 JAN, 2025 | 02:17 PM சென்னை: 2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் என சொன்னவர்கள். இப்போது மோடி மூன்றாவது முறையாக பிரதமரான பிறகும் மீட்காமல் இருப்பது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம், நரேந்திர மோடி பிரதமரானால் ஒரு தமிழக மீனவர் கூட தாக்குதலுக்கு உள்ளாகமாட்டார்கள், மீனவர் நலன்களைப் பாதுகாக்க மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று வகைவகையான வாக்குறுதிகளைக் கொடுத்து தேர்தலோடு காணாமல் போன கச்சத்தீவி…

  8. மறுபடியும் முதலிலிருந்தா? தேமுதிக தலைவர் விஜயகாந்த் | கோப்பு படம் சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அரங்கம் இப்போது இருந்ததைப் போலவே பரபரப்பாக இருந்தது. கூட்டணி பேரங்களும் ஊகங்களும் நடந்துகொண்டிருந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி சார்ந்த விவாதங்களின் மையமாக இருந்தார். கூட்டணி விஷயத்தில் அவர் என்ன முடிவெடுப்பார் என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. தேர்தல் முடிவை அவர் தீர்மானித்தவராக இருந்தார். இன்றும் அவரது முடிவு தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் எனக் கணிசமானவர்களால் நம்பப்படுகிறது. திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் அவரது கூட்டணிக்காகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 5 ஆண்டுகளில் விஜயகாந்தின் முக்கியத்துவம் மாறிவிடவ…

  9. படக்குறிப்பு, லண்டன் ஃபேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளமும், அதை நெய்தவரும் மேடை ஏற்றப்பட்டனர். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ''அந்த மேடையில் கையில் கைத்தறி இராட்டை மாதிரியுடன் என்னை நடக்க வைத்து, வார்த்தைகளின்றி சைகைகளால் இவர்தான் அவற்றை நெய்தவர் என்று என்னை அறிமுகம் செய்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். கரவொலி எழுப்பினர். அது எனக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற கைத்தறி நெசவாளர்களுக்கான ஓர் அங்கீகாரமாக இருந்தது!'' லண்டனில் செப்டெம்பர் 21-ஆம் தேதி டிவான்ஷைர் சதுக்கத்தில் (Devonshire Square) நடந்த ஃபேஷன் ஷோவில் ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜாவுடன், கைகளில் இரும்பு கைத்தறி இராட்டை மாதிரி வடிவ…

  10. தமிழகத்தில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி! மின்னம்பலம் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. திருவிழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோயில்களில் பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. தற்போது திருவிழாக் காலம் என்பதால் பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை இன்று (ஜூலை 20) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்பு உடையதாகவும்…

  11. தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது, திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்திய திருத்தங்களை செய்யாத இந்திய அரசுக்கு கண்டனம் ஆகியவற்றை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் …

    • 0 replies
    • 691 views
  12. சசிகலாவுக்கு 20 கேள்விகள்! பொதுச்செயலாளர் பேச்சு... சசிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன? அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன? 1. ‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயிர் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்? 2. ‘‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத…

  13. கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் சாதனை கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200-க்கு 1121 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கும்பகோணம் சிறியமலர் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராமகோபாலன் பள்ளி அளவில் முதலிடமும், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர் தமிழில் 177 மதிப்பெண்கள் உட்பட மொத்தம் 1121 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ராமகோபாலன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டு மக்களுக்கு ஊழல் அற்ற நிர்வாகம் மூலம் சிறப்பான பணி செய்வதே தமது லட்சியம் என்கிறார் இராமகோபாலன். ht…

    • 0 replies
    • 363 views
  14. 3 நாளில் தமிழக நிலைமை தெளிவாகும்: அட்டர்னி ஜெனரல் எதிர்பார்ப்பு புதுடில்லி: மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.தமிழக அரசியல் சூழ்நிலை 2 அல்லது 3 நாளில் தெளிவாகும் என எதிர்பார்க்கிறேன். இதன் பின்னர் வழக்கமான முதல்வர் செயல்படுவார். இனிமேல், இரண்டு தரப்பும் சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத்தரவிடலாம். அல்லது ஒரு தரப்புக்கு போதிய பலம் உள்ளது என கவர்னர் கருதினால், அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத…

  15. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்..? தமிழக அரசியலில், கடந்த 7-ம் தேதி ஆரம்பித்த சூறாவளிப் புயல் நேற்றைய வாக்கெடுப்பு வைபவத்தோடு கரை கடந்துவிட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களில்தான் எத்தனை எத்தனை திருப்பங்கள், ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்... எது எப்படியோ... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டுவிட்டார்.! தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அசாதாரண சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சில குறிப்புகள் இங்கே...அரசியல் விஷயங்களில், தாங்கள் எந்தப் பக்கம் என்று இதுவரையிலும் உறுதியான அடையாளம் காட்டிக்கொள்ளாத…

  16. "தில்லாலங்கடி தினகரன்..?” தினகரன் வழக்குகள் குறித்த முழுமையான ஆவணங்கள் வெளியீடு! ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 -ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 'தில்லாங்கடி டி.டி.வி.தினகரன் தான், ஆர் கே நகர் வேட்பாளரா ?' என்ற கையேடு ஒன்றை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 'ஹாவாலா தினகரன்தான் ஆர். கே. நகர் தொகுதியின் வேட்பாளரா ?'என்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இப்போது, சட்டப்பஞ்சாயத்து இயக்கமும் தினகரனின் முறைகேடுகள் குறித்து கையேடு வெளியிட்டிருப்பது மேலும் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதுவரை தினகரன் இழுத்தடித்து வந்த வழக்குகள் மற்றும் அந்நியச்செலவாணி மோசடி…

  17. இதில் தொடர்பு கொண்டு censor board க்கு petition இதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு (email) அனுப்புங்க மெட்ராஸ் கபே படத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீங்கனு....சிங்களம் செய்த இனபடுகொலையை ஏன் எடுக்கவில்லை....தமிழ் போராளிகளை எதற்கு தீவிரவாதிகளாக சித்தரித்து உள்ளார்கள் என்று......இந்த படம் மூலம் தமிழர்கள் அழிக்க பட வேண்டியவர்கள் நு சொல்ல வரீங்களா ....அந்த படத்திற்கு அனுமதி கொடுத்து.....அப்படின்னு உங்க கருத்தை email பண்ணுங்க.... அதில் உள்ள தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு உங்க கருத்தை பதிவு செய்யுங்க.... இதை அனைவர்க்கும் பகிருங்கள்.இன்று ஒரே நாள் தான் உள்ளது படம் நாளை (23-08-2013) ஆகஸ்ட் 23 வெள்ளிகிழமை வெளியிட உள்ளார்கள்..அதனால்..உடனே புகார் தெரிவியுங்கள் க…

  18. நிருபர்:இறுதி போரின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தீடிரென்று ஏன் ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்?அல்லது எந்த அடிப்படையில் போர் நின்றுவிட்டது என்று உலகக்கு அறிவித்தார். மே 17 திருமுருகன் பதில்: கருணாநிதியின் இந்த உண்ணாவிரதத்திற்க்கு பின் மிகப்பெரிய ஒரு நாடகம் நடந்திருக்கிறது.அது என்னவென்றால் ஏப்ரல் 23’ 2009 அன்று போரில் நெருக்கடி அதிகமாகிறது.அதாவது 2009 ஏப்ரல் இராண்டாவது வாரத்தில் தாக்குதல் என்பது மிகக்கொடூரமாக நடக்கிறது பல்லாயிரக்காண மக்கள் கொல்லப்படுகிறார்கள்.இந்த நிலையில் அமெரிக்காவின் தூதர் பெர்லே இந்தியாவின் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் M.K.நாரயணன் ஆகியோரை கூப்பிட்டு இலங்கையில் உடனே போர் நிறுத்ததை கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்.அதற்க்கு இவர்கள் இத…

  19. சென்னையின் மைய பகுதியான ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ, மணிக்கூண்டுக்கு அருகில், பரபரப்பான பாரதி சாலையில், காலை 6:00 முதல் 8:30 மணிவரையும், மாலை 5:30 முதல் 6:30 மணி வரையும், ஆயிரக்கணக்கான கிளிகள், 30 கி.மீ., தூரம் பயணித்து வந்து ஒரு வீட்டில், பசியார வருகின்றன. பசியாற்றுபவர், கேமரா சேகர். அவரிடம் பேசியதில் இருந்து... *உங்களை பற்றி? நான், கேமராக்களின் காதலன்; பறவைகளின் காவலன். தர்மபுரி, என்னைப் பெற்றெடுத்தது; சென்னை, என்னை வளர்த்தெடுத்தது.பழைய, தனித்துவமான கேமராக்களை தேடி சென்று வாங்கி, சேகரிக்க துவங்கினேன். இப்போது, மகாத்மா காந்தியை படமெடுத்த, ஜெர்மனி கேமரா, இந்தியசீன போரை படமெடுத்த வீடியோ, ஸ்டில் கேமரா, தண்ணீருக்குள் இருந்து படம் எடுக்கும் தனித்துவமான கேமரா, 160 வ…

    • 0 replies
    • 1.3k views
  20. சிலை கடத்தல்: புதுவை அருகே ஒரே கடையில் பதுக்கிவைத்த 7 பழங்கால சிலைகள் மீட்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,POLICE படக்குறிப்பு, மீட்கப்பட்ட சிலைகள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு கைவினை பொருட்கள் கடையில் இருந்து ஏழு பழங்கால சிலைகளை, சிலைகடத்தல் பிரிவு கைப்பற்றியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பழங்ககால சிலைகளை கடை உரிமையாளர் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தததை அடுத்து நடந்த சோதனையில், சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. சிலை மீட்பு தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சிலை கடத்தல் தடுப்புத் துறை, சட்டவிரோதமாக பழங்கால…

  21. மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையைப் பார்ப்போம்; என் ரசிகர்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டாம்: ரஜினி ஆவேசம் நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடையே திடீரென பேசினார். அப்போது தனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தரவேண்டாம் என்றும் மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையை பார்ப்போம் என்றும் கூறினார். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்கு பின் தமிழக அரசியலில் இறங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் கடந்த டிச.31 அன்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். கட்சி தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் பிக…

  22. ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் எனப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்களில் 16 வயதுக்குட்பட்ட அணியினர் இன்று தமிழகம் வந்தபோது அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இங்குள்ள மைதானத்தில் அவர்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஜூனியர் கிரிக்கெட் அணியினரின் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய நேரத்தில், தமிழகத்தில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. எனவே, தமிழகத்தில் இவர்களுக்கு தனியாக பாதுகாப்பு வழங்குவது கடினம் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். த…

  23. ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய யூ டியூப் சேனல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அரசியல் அறிவிப்புக்கு பின் கட்சி தொடங்கும் வேலைகளில் ரஜினிகாந்த் இறங்கியுள்ளார். அந்த வகையில் மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகளை நியமித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அவரது செய்திகள் இடம் பெறும்…

  24. இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக எதிர்வரும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதேவேளை இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தேர்தலுக்கான …

    • 0 replies
    • 459 views
  25. படக்குறிப்பு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை பிபிசி தமிழ் குழுவினர் நேரில் சந்தித்தனர் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 30 ஜூன் 2023, 14:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 11ஆம் தேதி இரவு. அன்றைய இரவு சுதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கமான சராசரி இரவாக அமையவில்லை. அன்றிரவு திடீரென அவரது குடியிருப்புப் பகுதியில் சரசரவென காவல்துறை வாகனங்கள் வருவதைப் பார்த்து சுதா பதற்றமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சுதா குறவர் இனத்தைச் சேர்ந்தவர். ''எங்களிடம் போலீசார் எதுவும் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.