தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
ரஜினி, அரசியலுக்கு வந்தால் மோதி பார்க்க தயார்: சீமான் பரபரப்பு பேச்சு பிரதி சென்னை, நவ. 27– திருவொற்றியூர் கங்கா காவிரி திருமண அரங்கில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப்பா என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு‘ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கர வாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை …
-
- 4 replies
- 1k views
-
-
கடந்த 26-11-2014,அன்று சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப்போரில் இன்னுயிர் ஈர்ந்த தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதற்க்கான முயற்ச்சிகளை இன உணர்வோடு முன்னெடுத்த திராவிடர் விடுதலை கழகத்த சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான முழக்கம் உமாபதியை சென்னை அமிராமிபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர்களான இளையராஜா,கலைசெல்வி,மற்றும் கவலர் வடிவேலு,ஆகியோர் கொண்ட குழுவினர் மிகக்கொடூரமாக நாகரிகமற்ற முறையில் தாக்கி இருந்தனர். படுகாயமடந்த உமாபதி சென்னை ராஜிவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இத்தாக்குதலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் நேற்றைய தினம் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு இன்றைய தினம் உமாபதியை நேரில் சென்…
-
- 0 replies
- 566 views
-
-
சென்னை, இந்தி மொழியை திணித்தால் தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழியில்லை என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசினார். பொதுக்கூட்டம் ம.தி.மு.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வைகோ பேசியதாவது:- ஈழ போராட்டத்தை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு, முதலில் அவர்களை மது பழக்கம் இல்லாமல் ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கு பிறகு தான் நம் லட்சியத்திற்கு அவர்களை அழைத்து செல்ல முடியும். ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறுவதா? இலங்கையில் …
-
- 0 replies
- 794 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தஞ்சை விளார்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, ’’பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி உள்ளனர். தமிழ் இனம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிற…
-
- 3 replies
- 733 views
-
-
(facebook)
-
- 5 replies
- 2.6k views
-
-
தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் மீண்டும் தமிழீழம் பிறக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள பௌத்த இனவாத மேலாதிக்கத்தை வலிமையாக நிலைநிறுத்தும் நோக்குடன்இ இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழர்கள் மீது ஏவிய பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று களமாடி தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நன்றியுடனும்இ பெருமையுடனும் நினைவுகூரும் தினம் இன்று. இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் கூறி தடை செய்திருக…
-
- 1 reply
- 1.3k views
-
-
மாற்றம் மாணவர் இளையோர் அமைப்பு சார்பாக தமிழின தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடைய 60 வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவும் இனிப்பும் கொடுத்து கொண்டாடியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள 80 சிறார்களுடன் கொண்டாடி மகிழ்ந்ததோடு இரவு உணவு ஏற்பாடு செய்து கொடுத்து தேசியத் தலைவரின் 60வது அகவை நிகழ்வை சிறப்பித்தனர். http://www.pathivu.com/news/35662/57/60/d,article_full.aspx
-
- 0 replies
- 341 views
-
-
தமிழகத்தில் பள்ளிகளை விட, டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகம்! படிக்கிறதா?, குடிக்கிறதா? அரசு உயர் நிலைப் பள்ளிகளையும், மேல் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையையும் சேர்த்து கூட்டினால் கூட தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மது பான கடைகளின் எண்ணிக்கையை தாண்ட முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைகளையும், டாஸ்மாக் மதுபான கடை எண்ணிக்கையையும் ஒப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்-அப் குரூப்புகளிலும் பரவி வருகிறது. அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதைவிட அது சொல்ல வரும் கருத்து ஆணித்தரமாக உள்ளது. அந்த செய்தி இதுதான்: தமிழ்நாட்டில் மொத்தம் 2739 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன. 2851 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான…
-
- 1 reply
- 1.3k views
-
-
எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். தமிழக பாஜக நடிகர் ரஜினிக்கு வலைவீசிய நிலையில், நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இந்தநிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தனக்கு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை பற்றி வெளியாகும் வதந்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121431&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 3.8k views
-
-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்ய முடியாது என பொடா நீதிமன்றம் கடந்த 2006 ஆம் ஆண்டு மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இதனை எதிர்த்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. http://seithy.com/breifNews.php?newsID=121372&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 420 views
-
-
சபரி மலையில் நடக்கும் பித்தலாட்டங்கள் - நக்கீரன் நேரடி ரிப்போர்ட் - பக்தியில் மூழ்கிய தமிழக மக்களை பணம் காய்க்கும் மரமாக பார்க்கும் கேரளா அரசு. d60b169157c10993920440d80b42b224
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கையில் பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு, இந்திய தூதரகம் தலையிட வேண்டும்! என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (23.11.2014) அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி பாரம்பரியமாக மீன்பிடிக்கும் இடத்தில் மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 தமிழக மீனவர்கள் மீதும் போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடரப்பட்டது. இவர்களுடன் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்டியன், ஞானப்பிரகாசம் துசாந்தன் மற்றும் க…
-
- 0 replies
- 410 views
-
-
ஜெயலலிதா சொத்து குவிப்பு பற்றிய கருணாநிதியின் அறிக்கை வீடு வீடாக வினியோகம்! [sunday 2014-11-23 09:00] ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பற்றி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வீடு வீடாக வினியோகித்தார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை விவரத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கை திமுக தலைமை கழகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதை நாடு முழுவதும் திமுகவினர் பொது மக்களிடம் வினியோகம் செய்து வருகிறார்கள். அதன்படி, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழ கன் எம்.எல்.ஏ. நேற்று சேப்பாக்கம் தொகுதி பார்டர் தோட்டம், தி.நகர் பகுதிகளில் வீடு வீடாக மற்றும் கடைகளில் இந்த புத்தகங்களை வினியோகம் செய்தார். ஜெயலலிதா சொத்து குவ…
-
- 3 replies
- 529 views
-
-
ஜெயலலிதா வழக்கில் மூக்கை நுழைத்த பாஜக புள்ளிகள் யார், யார்?- மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் ரெடி பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நீர்த்துப்போக செய்யும் விதமாக அந்த வழக்கின் முன்னாள் அரசு வக்கீல் பி.வி.ஆச்சாரியாவுக்கு பாஜக தலைவர்கள் மூலம் நெருக்கடி தரப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து மத்திய உளவுத்துறை அறிக்கை தயாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது, அரசு வக்கீலாக ஆஜரானவர் பி.வி.ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா தரப்புக்கு எதிராக தீவிரமாக வாதங்களையும், ஆதா…
-
- 1 reply
- 907 views
-
-
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. (Facebook)
-
- 6 replies
- 805 views
-
-
திருச்சி சிறப்பு முகாமில் 26 ஈழத்தமிழர் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் 15.11.2014 காலை 10மணிக்கு ஆரம்பமானது. ஈழ ஆதரவாளர்களின் ஆதரவை விரும்புகின்றோம். https://m.facebook.com/eela.nehru/posts/pcb.741645132540154/?photo_id=741642912540376&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.741645132540154%26photo%3D741642912540376%26profileid%3D100003898785397%26source%3D48%26refid%3D28%26_ft_%3Dqid.6081870332208535251%253Amf_story_key.7444371574749325132%26ftid%3Du_1h_3&mdf=1
-
- 16 replies
- 1.6k views
-
-
சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் வரும் 26ம்தேதி மாவீரர் நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ் இயக்க போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். எழுச்சியுடன் பிறந்தநாளை கொண்டாட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை தமிழகத்தில் கொண்டாட அழைப்பு விடுத்துள்ள வைகோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். தமிழகத்…
-
- 4 replies
- 870 views
-
-
தென்சென்னை மேற்கு மாவட்டத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, விருகம்பாக்கத்தில் 21-11-14 அன்று மாவீரர் நாள் நிகழ்வு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. (Facebook)
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழக கூலி தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூர தாக்குதல் https://www.facebook.com/video/video.php?v=597332500395098
-
- 0 replies
- 454 views
-
-
-
திருச்சி/புதுடெல்லி: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும், டெல்லி வந்துள்ள நிலையில், அவர்களை பிரதமர் மோடியோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 அப்பாவி மீனவர்களுக்கு நேற்று இலங்கை அதிபர் ராஜக்சே பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதையடுத்து, இன்று காலை 8.30 மணிக்கு அவர்கள் அனைவரும் திருச்சிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதனால், அவர்களை வரவேற்க ராமேஸ்வரத்திலிருந்து எமர்சன், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், பிரசாந்த் உள்ளிட்டோரின் உறவினர்கள், …
-
- 0 replies
- 238 views
-
-
கொடுமைகளிலிருந்து தமிழர்களை மீட்பதற்காக ஓர் அவதாரப் புருசராகத் தம்பி தோன்றினார் என்பது வரலாறு - ஓவியர் வீரசந்தானம்
-
- 0 replies
- 676 views
-
-
ஒரு புறநானூற்றுத் தமிழன் எப்படி இருப்பான் என்பதை என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய புறநானூறுப் பரப்பரையின் புதிய அத்தியாயத்தின் அந்த மாவீரன் யார் என்று சொன்னால் அது உலகில் மூலை முடக்கு எங்கும் இருக்கும் தமிழர்களின் நெஞ்சங்களில் இருக்கும் ஒரே தமிழன் பிரபாகரன். அவன் பிறந்த இந்நாள் அதுவே நன்நாள் என இயக்குநர் ரி.ராஜேந்தர் கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தலைவரின் 60-ஆவது அகவை முன்னிட்டு அவர் வழங்கிய சிறப்பு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/35455/57//d,article_full.aspx
-
- 0 replies
- 415 views
-
-
தமிழ்க் குலத்தின் இணையற்ற தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை உலகெங்கும் கொண்டாடுவோம்! வைகோ அழைப்பு தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் தமிழனின் முகவரியை தரணி அறியச் செய்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நான் நெஞ்சால் போற்றும் பிரபாகரன் அவர்களின் 60-ஆவது பிறந்த நாளை 2014 நவம்பர் 26ஆம் தினத்தன்று நெஞ்சமெலாம் பொங்கிப் பிரவகிக்கும் உவகை உணர்வோடு, உன்னதத் திருநாளகக் கொண்டாடுவோம். வீரமும் மானமும் தமிழர் குருதி ஓட்டத்தோடு கலந்த மரபு வழி அடையாளமாகும். உலக வரைபடத்தில் இரத்தக்கண்ணீர்த் துளியாகக் காட்சி அளிக்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்கு மாகாணத்தில் வல்வெட்டித் துறையில் கார்மேகங்கள் மழைபொழியும் கார்த்திகைத் திங்களில் 1954 நவம்பர் 26 ஆம் தேதி அன்று முன்னிரவுப…
-
- 0 replies
- 1.5k views
-
-
உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை. எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே. மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரை படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழாது போயிருக்கும். கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை. அனைவரையும் அழைக்கிறோம். தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மீனவர் குடும்பங்கள் Thirumurugan Gandhi https://www.facebook.com/thirumurugan.gandhi.…
-
- 4 replies
- 455 views
-