Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு போதும் இடம்பெறாது என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியதாவது: சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டம் மூலம் முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தல் ஏற்காடு தொகுதியில் கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு எங்கள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால்…

  2. ரஜினி குடும்பத்தின் ஆஸ்ரம் பள்ளி திறப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தாக்கல் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் குத்தகை அடிப்படையில் இடத்தைப் பெற்று எங்கள் சங்கம் சார்பில் ஆஸ்ரம் பள்ளி நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் வரை வாடகை பாக்கி இல்லாதபோதும், நில உரிமையாளர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி பள்ளி நுழைவுவாயிலை பூட்டிவிட்டனர். இதற்காக ரூ. 6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடந்தது. பள்ளி பூட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வழ…

  3. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை கடல் எல்லையில் 5 படகுகளில் 21 மீனவர்கள் மீன்பிடித்துகொண்டிந்த போது இலங்கை கடற்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் 3 மாதத்தில் 551 மீனவர்களை கடல் எல்லையில் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/?q=node/362671

    • 0 replies
    • 521 views
  4. கர்மவீரர் செய்ததை நம் தர்மவீரர் செய்வார்: - பிரேமலதா விஜயகாந்த் [Sunday 2017-11-05 18:00] திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் 35 ஆண்டுகால கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டங்களை உடனே அமல்படுத்த வலியுறுத்தி தே.மு.தி.க சார்பில் இன்று உடுமலைப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உட்பட பலர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். முதலில் பேசிய பிரேமலதா, "விவசாயமும், நெசவும்தான் தே.மு.தி.கவுக்கு முக்கியம். முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கொண்டு வந்த பி.ஏ.பி திட்டத்தின் மூலம், மேல்நீராறு, கீழ்நீராறு, …

    • 0 replies
    • 708 views
  5. மிஸ்டர் கழுகு: 2018- இனி அரசியல் இருவர் கையில்! பிரமாண்டமான கழுகு ப்ளோ-அப் அச்சிட்ட காலண்டருடன் உள்ளே நுழைந்தார் கழுகார். கைகுலுக்கி, ‘‘உமக்கும் ஜூ.வி வாசகர்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்றார். அவர் முன்கூட்டியே சொல்லியிருந்த தலைப்பை வைத்து டிசைன் செய்திருந்த ஜூ.வி அட்டையைக் காண்பித்தோம். ‘‘ஸ்டாலினுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் முக்கியமான ஆண்டாக புத்தாண்டு இருக்கப்போகிறது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நலமின்றி வீட்டுக்குள் இருப்பது போன்ற காரணங்களால், தமிழக அரசியல் 2017-ல் வித்தியாசமாக இருந்தது. இதுவரை அரசியல் பேசாத பலரும் அரசியல் பேசினார்கள். திடீர் தலைவர்கள் உருவானார்கள். ஆனால், 2018-ல் பழையபடி இருதுருவ அரசியலுக்குத் தமி…

  6. வேலூர்: குடியாத்தம் அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் தனியாக கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு-அரக்கோணம் பயணிகள் ரயில் இன்று வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கூடநகரத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதன் என்ஜின் இணைப்பு உடைந்து பயணிகள் பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பயணிகள் பெட்டிகளில் இருந்து என்ஜின் துண்டிக்கப்பட்டது தெரியாமல், ரயில் ஓட்டுநர்கள் குடியாத்தம் வரை வந்தனர். அங்கு வைத்து பார்த்தபோது, பயணிகள் பெட்டிகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் பயணிகள் பெட்டியைத் தேடி சென்றபோது, அந்த ரயிலின் 15 பெட்டிகள் பயணிகளுடன் நடுவழியில் நின்றது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும், ரயில் பெட்டிகளுடன் என்ஜினை இணைக்கு…

  7. தமிழக அரசின் சார்பில் பாரதியாரின் நினைவு தினம் அனுசரிப்பு! Sep 11, 2022 11:11AM IST மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 101-வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) தமிழகம் முழுவதும் மகாகவி நாளாக அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசின் சார்பில் காமராஜர் சாலையில், மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பாரதியாரின் உருவ சிலை மற்றும் அவரது புகைப்படத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாகவி பாரதியார் 1882-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11-ஆ…

  8. கினியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 25 வயது நபர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் எபோலா வைரஸ் தாக்கப்பட்டதான அறிகுறிகள் இருந்ததாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியைச் சேர்ந்த இந்த நபர் நேற்று இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனியான அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவிலிருந்து இந்த நபர் தனது சொந்த ஊரான தேனிக்குச் செல்ல சென்னை வந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் எபோலா வைரஸ் நோய் தலைவிரித்தாடுவதால் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ நிபுணர்கள் அங்கிருந்து வரும் பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை…

  9. வலையில் சிக்கிய சிலைகள்..! ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், சுவாமி சிலைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகேயுள்ள காவிரி ஆற்றில், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு மீனவரின் வலையில் பெரிதாக ஏதோ ஒன்று சிக்கியதுபோல இருந்ததால் அவர் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று வலையை பார்த்த போது வலையில், 2 சிலைகள் சிக்கியிருந்தமை தெரிய வந்தது. இதையடுத்து, மற்ற மீனவர்களின் உதவியுடன் அந்த சிலைகளை கரைக்கு எடுத்துவந்து பார்த்தபோது, அவை, விநாயகர் மற்றும் நடராஜர் சிலைகள் என தெரிய வந்தது. இது குறித்து வாத்தலை பொலிஸாருக்கும், கரியமாணிக்கம் கிராம நிர்வாக அலு…

  10. 'லெக்கின்ஸ்' கட்டுரையும் இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு சேஞ்ச் வலைதளத்தின் ஸ்கிரீன் ஷாட். தமிழகத்தில் இருந்து வாரம் இருமுறை வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில், பெண்கள் லெக்கின்ஸ் அணிவது தொடர்பாக வெளியான கட்டுரைக்கும், அதில் இடம்பெற்ற புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெண்ணியவாதிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எதிராக ஆன்லைன் பிரச்சாரம் ஒன்றை அவர்கள் துவக்கியுள்ளனர். 'லெக்கின்ஸ் ஆபாசம் - எல்லைமீறும் இளசுகள்' என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டர் பத்திரிகையில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில் லெக்கின்ஸ் அணிந்த பெண்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சம்பந்தப்பட்ட பெண்களின் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அந்தப…

  11. ரஜினியின் குரல்: மௌனம் காக்கும் தி.மு.க, அ.தி.மு.க எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 12:56 “பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூணன் போன்றவர்கள்” என்று, ரஜினிகாந்த் பேசியது, தமிழக அரசியலில் பரபரப்பாகி இருக்கிறது. துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ‘கேட்டல், கற்றல், வழி நடத்துதல்’ (Listening, Learning, Leading) என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னையில் நடத்தப்பட்டதே பலரது புருவங்களை உயர்த்தியது. துணைக் குடியரசுத் தலைவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இளம் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும். அப்படிப்பட்ட நூலை எழுதியுள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பகுதிகளை (டெல்டா) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெட்ரோலியம், எரிவாயு, ஹைட்ரோ கார்பன்கள் இருக்கிறதா எனச் சோதனை செய்வது, அவற்றை எடுப்பது தொடர்பாக ஆய்வுகளை நடத்துவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவ…

  13. பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, கோவையில் ஒரு வீட்டில் பாம்பை பிடிக்கும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சந்தோஷ் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 22 மார்ச் 2025, 06:18 GMT கோவையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள பாம்பு பிடிக்கும் நபரான சந்தோஷ், பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். பாம்பு பிடிக்கும் போது உருவாகிற சூழ்நிலையும், அவர்களின் அறியாமையுமே இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பாம்பு பிடிப்பதற்கான முறையான பயிற்சி மற்றும் உபகரணங்களை அளித்து, இவர்களை துறையுடன் சேர்த்து ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வனத்துறையின் தலைவர் சீனிவாச ரெட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். பாம்பு பிடிப்பவர்கள…

  14. UK இன் முப்படைகளும் மூன்றாம் உலக யுத்தத்தை எதிர்கொள்ளத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

  15. மக்கள் நலக் கூட்டியக்கத்தில் 4 கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு இடமில்லை: வைகோ உறுதி! புதுக்கோட்டை: மக்கள் நல கூட்டியக்கத்தில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை சேர்க்க மாட்டோம் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் அரசியல் மாற்று எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்திய கம்யூ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, 'தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்…

  16. ஒரு பிரகடனத்தோடு இந்தக் கட்டுரையைத் தொடங்க விரும்புகிறேன். நான் ஒரு தேசியவாதி அல்ல. குறிப்பாக, இந்த அரசு உருவாக்கியுள்ள தேச அடையாளத்தை பொறுத்தவரை நான் தேசப்பற்றாளன் கூட அல்ல! இந்த அரசியல் அமைப்பைக் கேள்விக்குள்ளாக்காத அதன் விசுவாசமான சேவகனாக என்னால் இருக்க இயலாது! டி.எம்.கிருஷ்ணா இந்த அரசு தன் அடையாளங்களாக காட்டிக்கொள்ளும் எவற்றின் மீதும் அளப்பரிய வியப்பேதும் எனக்கில்லை. அனைத்து வகையான கொலைக் கருவிகளும் பகட்டாக ஊர்வலம் விடப்படும் குடியரசு தின விழா நேரடி ஒளிபரப்பைக் காண்பதில் துளியும் மகிழ்ச்சியோ, விருப்பமோ எனக்கு என்றுமே இருந்ததில்லை. பயங்கரவாதிகளாக இருப்பினும் மரண தண்டனை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும், நான் இந்த மண்ணுக்குரியவனே! இந்த …

    • 0 replies
    • 472 views
  17. எல்லாத்தையும் மேல இருக்கவன் பாத்துப்பான்... விஜயகாந்த் சொன்ன குட்டிக்கதை! வேலூர்: வேலுாரில் நடந்த மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரத்தில் திமுக அதிமுக குறித்து விஜயகாந்த் கூறிய குட்டிக்கதையை பொதுமக்கள் ரசித்தனர். திருப்பத்தூரில் தே.மு.தி.க - ம.ந.கூ பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. நான்கு மணி கூட்டத்திற்கு விஜயகாந்த் இரவு 8.10 மணிக்கு வந்தார். அவரது தாமதத்தை டூப் விஜயகாந்த்தை பாட்டு பாட வைத்து சமாளித்தனர் கட்சி நிர்வாகிகள். 8.10க்கு மேடையேறிய விஜயகாந்த் கூட்டத்தை பார்த்து பெரிய கும்பிடாக போட்டுவிட்டு மைக் பிடித்து காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். ஆனால் இடையில் தொண்டர்களிடமிருந்து சத்தம் வர டென்ஷனானவர், “ எங்க கட்சி கட்…

  18. சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வெறும் 24,383 ஓட்டு வித்தியாசத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக கிடைத்துள்ளனர். அக்கட்சி ஆட்சி அமைக்க இதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த தொகுதிகள் இவை தான்: 1) ராதாபுரம் - 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி. 2) கோவில்பட்டி - 428 3) கரூர் - 441 4) தென்காசி - 462 5) ஒட்டப்பிடாரம் - 493 6) பெரம்பூர் - 579 7) திருப்போரூர் - 950 8) பர்கூர் - 963 9) பேராவூரணி - 964 10) கிணத்துக்கடவு - 1332 11) ஆவடி - 1395 12) அரியலூர் - 1753 13) சிதம்பரம் - 1945 14) மொடக்குறிச்சி - 2222 15) விருகம்பாக்கம் - 2333 16) ஊத்தாங்கரை - 2613 17) கெங்கவள்ளி - 2622 18) அறந்தாங்கி - 2837 http://www.dinamalar.…

    • 0 replies
    • 438 views
  19. ' சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை ஏன்?' - பேரறிவாளனுக்கு வந்த திகைப்பான பதில்! இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் எழுப்பியுள்ள கேள்விகளால் அதிர்ந்து போயிருக்கிறது மும்பை, எரவாடா சிறை நிர்வாகம்.'உங்கள் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்' என அதிர வைக்கிறது எரவாடா சிறை நிர்வாகம். மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பா…

  20. சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார். 2006ல் ஆட்சியில் இருந்த திமுக, 2011ல் தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலிலும் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது, பேரவைத் தலைவராக இருந்த ஜெயக்குமாரின் அறையில் தனியாக சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு சட்டப்பேரவை லாபிக்கு மட்டும் கருணாநிதி அவ்வப்போது வந்து கையெழுத்திட்டுச் சென்றார். சட்டப்பேரவைக்குள் வந்தது இல்லை. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த மே 26ஆம் தேதி நடந்த எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி பங்க…

  21. மதுரை அருகே கள்ளிக்குடி பெரிய உலகாணி எனும் கிராமத்தில் குண்டாற்றின் மேற்கரையில் எட்டாம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு மதுரை அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன், இளம் ஆய்வாளர் உதயகுமார் கூறியதாவது: கப்பலுாரில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைகழக உறுப்புக் கல்லுாரி இளநிலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவா் கண்ணன் மற்றும் அவரது துறைப் பேரராசிரியா் சங்கையா (தமிழ்த்துறை) கொடுத்த தகவலின் படியும் இக்கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெடுத்த சிலையை ஆய்வு செய்ததில் இந்த சிலை எட்டாம் நுாற்றாண்டினைச் சார்ந்த பாண்டியா் கால சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. இக்காலக்கணக்கீடானது சிற்பத்தின் தன்மை, அமைப்பு, அவற்றில் உள்ள ஆயுதங்க…

  22. 'நான் தி.மு.க-வை ஆதரிக்கவில்லை... வைகோ அ.தி.மு.க-வை ஆதரிக்கவில்லை!' திருமாவளவன் தமிழக அரசியலில் தற்போதைய ‘லைம்லைட்’ அரசியல்வாதி திருமாவளவன்தான். எதிர்க்கட்சிகள் எல்லாம் கனத்த மௌனத்துடன் இருந்தபோது, அப்போலோவுக்கு முதல் ஆளாகப் போய், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரித்தார். அதன் பிறகுதான், ராகுல் காந்தி முதல் வைகோ வரை வந்தனர். அப்போலோ, தமிழகத்தின் அரசியல் களமாக மாறியது. மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் எல்லாம், தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை விமர்சித்துக் கொண்டிருந்தபோது, அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவித்து ம.ந.கூ-யில் சலசலப்பை ஏற்படுத்தினார். இப்படிப் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் திருமாவளவனை அவருடைய கட்சி அலுவலகத்தில் சந்திதோ…

  23. தமிழீழத்தை வென்றெடுக்க தமிழகத்தில் புதிய இயக்கம்! [saturday, 2013-03-16 08:51:39] இலங்கையில் நீதி மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்குத் தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என சபதம் ஏற்று தமிழீழத்தை அமைக்க புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கி பாயும் புலியாகப் பொங்கியெழுந்துள்ளனர் தமிழக மாணவர்கள். "தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு' என்ற பெயரில் உதயமாகியுள்ள இந்த இயக்கமானது வெகுவிரைவில் தனது செயற்பாடுகளை விஸ்தரிக்கவுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டதில் குதிக்குமாறு மேற்படி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=78194&category=TamilNews&language=tamil

  24. அண்ணாவின் மரணமும் ஜெயலலிதாவின் மரணமும்! - மருத்துவர்கள் எழுப்பும் சந்தேகங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வலம் வருகிறது. 'பூரண நலத்துடன் முதல்வர் இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இதயத் துடிப்பு நின்று போனது ஏன்?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் மருத்துவர்கள். அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து 75 நாட்கள் நடந்து வந்த சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 5-ம் தேதி மரணமடைந்துவிட்டார். அவரது மரணம் அ.தி.மு.கவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ப…

  25. பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காதது அநீதி: ராமதாஸ் கண்டனம். எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: “பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுஇ 12 நாட்களாகியும் அதுகுறித்து இன்றுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.