தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
வேலூர்: வேலூரில் நேற்று 106 டிகிரிக்கு வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர். வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கடந்த மார்ச் 20ம் தேதி வெயில் 100 டிகிரியை தாண்டியது. பின்பு படிப்படியாக வெயிலின் அளவு 104 டிகிரி உயர்ந்தது. நேற்று காலை முதலே வெயில் கடுமையாக இருந்தது. அனல் காற்று மக்களை திணற வைத்தது. நேற்றைய வெயில் அளவு 106.3 டிகிரி. மாலை வரை வெயில் கொளுத்தியதால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதற்கிடையில் அங்கு அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக மேலும் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் மூடியபடியு…
-
- 0 replies
- 471 views
-
-
அலை செய்திகளின் புதிய முயற்சியாக மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு விவாதக்களம் ! மாணவர்கள் பங்கேற்ற இந்த விவாதக்களத்தில் தொலைக்காட்சியில் பேச முடியாத பல விடயங்கள் இதில் அலசப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் அரசியல் அறிவை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு மாணவர்கள் மிக நேர்த்தியாக தங்கள் பதிலை முன்வைத்து உள்ளனர். ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் ஆய்வாளருக்கு நிகராக மாணவர்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். தமிழக அரசியல், இந்திய அரசியல், சர்வதேச அரசியல் என அனைத்து மட்டங்களிலும் மாணவர்கள் தங்கள் பார்வையை அகலப்படுத்தி உள்ளனர் என்பதற்கு இந்த காணொளியே சான்று . இதில் மாணவர்கள் பேசிய தலைப்புகள் வருமாறு ௧. காங்கிரஸ் வீழ்ச்சி மற்றும் அரசியல…
-
- 0 replies
- 809 views
-
-
லோக்சபா தேர்தல் பிரசாரத் திற்காக, இன்று மாலை, சென்னை வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், நடிகர் ரஜினியும் சந்தித்துப் பேசுகின்றனர். ரஜினி வீட்டில் நடக்கும் இந்த சந்திப்புக்கு பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும், பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி பேசுகிறார். மோடி வருகை, ரஜினி சந்திப்பு காரணமாக, தமிழகத்தில் ஆதரவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பா.ஜ., கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் உள்ள கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ஐ.ஜே.கே., - புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக பா.ஜ., வலியுறுத்தல்: இந்த கட்சிகள் சார்பில், 39…
-
- 0 replies
- 659 views
-
-
தமிழ் இனத் துரோகிகளைத் தோற்கடியுங்கள்! தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு... ஓவியர் வீர சந்தானம் வேண்டுகோள்! அன்புமிக்க தமிழக மக்களே! எதிர்வரும் 24.04.2014ஆம் நாள் இந்தியநாடு தனது 16-ஆம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. நமது தமிழ்நாட்டில் அந்தத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்து அதன் அடிப்படையில் வாக்குவேட்டைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் இந்தத் தேர்தலில், நமது தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக இருக்கும் புதுச்சேரியிலும் யார் யாருக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு, அனுப்பப் போகிறோம் என்பதில் நாம் மிக மிக கவனமாக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. யார் யார் வெற்றிபெற வேண்டும் எ…
-
- 1 reply
- 488 views
-
-
தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான்! டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலக இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான். அவருக்கு அடுத்த பெரிய பணக்காரர் ப.சிதம்பரம். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வாங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரட்டிப்பாகி, ரூ. 10.73 கோடியாக காட்டப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற மத்திய அமைச்சர்களின் சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர…
-
- 1 reply
- 421 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினர் குவிந்தனர். அவருக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும் தொண்டர்கள் கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அடையாளம் தெரியாத ஒரு நபர், கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்தபடியே, 'பளார்' என்று அவரது கன்னத்தில் இரண்டு …
-
- 5 replies
- 646 views
-
-
மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய யாருடனும் 'கை' குலுக்க தயார்: கருணாநிதி. சேலம்: நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய யார் கை கொடுத்தாலும் அவர்களோடு கை குலுக்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: கருணாநிதி தனியாக நிற்கிறார்; அவரை கைவிட்டு விட்டனர் என சிலர் கூறுகின்றனர். யாரும் என்னை கைவிடவில்லை. எதிர்காலத்தில் நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன். மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களை கை குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன். ஜாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்ற கொள்கைகளோடு சிறுபான்மையின மக்களுக்கு …
-
- 3 replies
- 965 views
-
-
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தியாகதுருகம் அருகே உள்ள பள்ளகசேரியை சேர்ந்த ராமச்சந்திரன்- அஞ்சலை ஆகியோரின் 3 வயது மகள் மதுமிதா. இன்று காலை 9 மணிக்கு ராமச்சந்திரன் தனது மகள் மதுமிதாவுடன் பழனி என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தோட்டத்தில் மதுமிதா விளையாட சென்றுவிட்டார். ராமச்சந்திரன் தனது வேலையை பார்க்க சென்று விட்டார். மூடப்படாத ஆழ்துளை கிணறு இந்நிலையில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மதுமிதா, மூடப்படாத நிலையில் இருந்த 500 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். மகளின் அலறல் சத்தம் கேட்டு ராமச்சந்திரன் ஓடிவந்துள்ளார். மகள் ஆழ்து…
-
- 3 replies
- 691 views
-
-
காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழருவி மணியன் திறந்த மடல்! காலம் முழுவதும் கொடிகள் கட்டியும், சுவரொட்டி ஒட்டியும், மேடை போட்டும், கோஷங்கள் இட்டும் களைத்துப்போய்விட்ட என் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களுக்கு… வணக்கம்! கர்த்தர் தன்னுடைய சீடர்களுக்குக் கதைகள் சொல்லி உண்மையை விளக்கினார். பரமஹம்சர் கதைகளின் மூலமே பரம்பொருள் தத்துவத்தை எளிதாக உணர்த்தினார். நானும் முதலில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல முயல்கிறேன். ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ஓர் அந்தரங்க ஊழியன் பக்கத்திலிருந்து பணிவிடைகள் செய்து வந்தான். சில நாட்களாக அரசன் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்திருப்பதைக் கண்டு, அதற்கான காரணம் கேட்டான் அந்த உண்மை ஊழியன். ‘சகல சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்திய ஓர் இளைஞனின் அழகான ம…
-
- 2 replies
- 757 views
-
-
ராஜீவ் கொலை வழக்கு-சில நியாயங்கள்! சில தர்மங்கள்! ராஜீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகவும் திட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,23 ஆண்டுகள் சிறையிலிருந்ததாலும் கருணைமனு மீது முடிவெடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதாலும் அவர்களின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது. கூடுதலாக தண்டனை அனுபவித்ததால் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களுடன் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையிலிருப்பவர்களையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததையும் அதன்…
-
- 0 replies
- 643 views
-
-
சென்னை: தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதே இந்தநிலை என்றால் கடும் கோடை ஏப்ரல், மே மாதங்களில் வாய் நனைக்கக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பஞ்சம் இந்த ஆண்டு இப்போதே தலை தூக்கிவிட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஆறுகள், ஏரிகள் வற்றிப் போய் விட்டன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் கிராமங்களில் குடிநீருக்கு மக்கள் அல்லல் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி 912 செமீ மழை பெய்ய வேண்டும். வானிலை மாற்றம் காரணமாக …
-
- 1 reply
- 1.6k views
-
-
White Tigers in Vandalur Zoo வெள்ளை புலிகளின் தாயகம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளாகும். வெள்ளை புலிகளும் சாதாரணமாக காடுகளில் காணப்படும் வங்கப்புலி இனமும் ஒரே இனம் தான். ஆனால் மரபணு நிற குறைபாடு காரணமாக வெள்ளை புலிகள் உருவாகின்றன. இந்திய பூங்காக்களில் சுமார் 100 வெள்ளை புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை பெண் புலியுடன் மஞ்சள் நிற புலி (வங்கப்புலி) கலப்பின சேர்க்கையால் கர்ப்பம் அடைந்த வெள்ளைபுலி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 அழகான புலி குட்டிகளை ஈன்றது. ஆனால் வெள்ளை பெண் புலிக்கு பிறந்த குட்டிகள் இரண்டும் மஞ்சள் நிறத்தில் இருந்ததால், இந்த குட்டிகளுக்கு தாய் வெள்ளை புலி பால் தராமல் ஒதுக்கி வைத்…
-
- 0 replies
- 765 views
-
-
விருதுநகர்: மதிமுக வேட்பாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு கட்சியினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சியினரும் மாறி மாறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். விருதுநகரில் பா.ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அதுபோல் அதிமுக சார்பில் சிவகாசி முன்னாள் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து வைகோவுக்கு காலை11 மணிக்கும், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு …
-
- 0 replies
- 606 views
-
-
டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் ஜனவரி 18ல் தீர்ப்பு அளித்திருந்தது. கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு செய்ய பல ஆண்டுகள் ஆனதால் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=85794
-
- 2 replies
- 690 views
-
-
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை கடல் எல்லையில் 5 படகுகளில் 21 மீனவர்கள் மீன்பிடித்துகொண்டிந்த போது இலங்கை கடற்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் 3 மாதத்தில் 551 மீனவர்களை கடல் எல்லையில் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/?q=node/362671
-
- 0 replies
- 521 views
-
-
ஆந்திரமும் தெலுங்கானமும் இணைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவை மீண்டும் ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாக பிரிக்க ஒப்புதல் நல்கியுள்ளது. இந்தியா 125 கோடி மக்கள் வாழும் மிகப் பெரியதொரு தேசமாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியா ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பலம் பொருந்திய பொருளாதார சக்தியாக உருமாறி இருக்கின்றது. ஆன போதும் இந்தியா இன்னமும் கல்வி, உள்கட்டுமானம், சுகாதாரம், மருத்துவம், சுற்றுச்சூழல் போன்ற விடயங்களில் பாரிய முன்னேற்றத்தை எட்ட வேண்டியும் இருக்கின்றது. இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையே அதன் அதீத மக்கள் தொகைப் பெருக்கம் தான். இவ்வாறான அதிகளவு மக்கள் தொகையை கொண்ட ஒரு தேசத்தில், சாமன்ய இந்திய குடிமகனுக்கும், அரசு…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிங்கள அரசின் கைக்கூலி சந்தோஷ் சிவன் - வைகோ கடும் தாக்கு! இனம் படம் பற்றி கடுமையான எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டுள்ள வைகோ, படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன் சிங்கள அரசின் கைக்கூலி என்று கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை வருமாறு: ‘இனம்’ எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார். ‘பயங்கரவாதி’ என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது. இப்பொழுது அவர் இயக்கிய ‘இனம்’ எனும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குநர் புகழேந்தி தங்கராசு என்னிடம் அது குறித்து விவரித்தபோது, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளான…
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்திய மீனவர்களுக்கு இனிப்பு, மென்பானம் வழங்கி இன்பஅதிர்ச்சி கொடுத்த இலங்கை கடற்படை! – கச்சதீவில் மீன்பிடிக்கவும் அனுமதி. [Monday, 2014-03-31 09:17:41] இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்துள்ள நிலையில் இந்த அதிசயம் நிகழந்துள்ளது. நேற்று கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அன்பாக உபசரித்தனர் என தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடிக்க அனுமதித்ததுடன் இலங்கைக் கடற்படையினர் இனிப்பு மற்றும் மென்பானம் வழங்கி மீனவர்களை உபசரித்தனர் என குறிப்பி…
-
- 0 replies
- 369 views
-
-
புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்: - தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு [saturday, 2014-03-29 14:02:01] புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்தியாவின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும் என அவர் …
-
- 1 reply
- 612 views
-
-
சென்னை: நன்றி மறந்தவர்கள் மகனாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் தி.மு.க. மன்னிக்காது என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறினார். திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6 மணி அளவில் சென்னை சிந்தாதிரி பேட்டையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய கருணாநிதி, திராவிட இயக்க வரலாற்றில் சென்னைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்றார். தொடர்ந்து பேசிய அவர், மதச்சார்பற்ற அரசை காண திமுக பாடுபடுவதாக கூறினார். மூன்றெழுத்து கொண்ட தி.மு.க., திராவிடர்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் இயக்கம் திமுக. தொண்டர்களை சந்திப்பதில் எனக்கு இறுமாப்பு கிடையாது. நான் திராவிடர்களின் தலைவன்…
-
- 4 replies
- 984 views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எனவே மாநில அரசுக்கு 7 பேரையும் விடுவிக்க அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி மரணதண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பி…
-
- 0 replies
- 337 views
-
-
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் : கலைஞர் அதிரடி அறிவிப்பு. திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார். ’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது. நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர். திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதை அழகிரி கடுமையாக சாடினார். இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை…
-
- 1 reply
- 609 views
-
-
Breaking News Update: வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி! புதுதில்லி: வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஜனவரி 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ம…
-
- 3 replies
- 599 views
-
-
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றாலும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்தியாவின் இலங்கை கொள்கையில் மாற்றம் வரும் என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்டிருக்கும் தீர்மானம் அடுத்தவாரம் ஐநா மன்றத்தின் மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட இருக்கும் சூழலில், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள், குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம் சூடுபிடிக்கத்துவங்கியிருக்கிறது.முன்பு சியாரோலியோன் விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறை இலங்கையிலும் கடைபிடிக்க வேண்டுமென பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இவரது இ…
-
- 0 replies
- 819 views
-