தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
700 அரங்குகள், 2000 தலைப்புகள், 5 லட்சம் புத்தகங்கள் என வாசகர்களை அசத்த வருகிறது 37 வது சென்னை புத்தக காட்சி. 37 வது சென்னை புத்தக காட்சிக்கு வாசகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் கொல்கத்தா புத்தக கண்காட்சி மிக பிரபலமானது. சமீப காலமாக இதை விஞ்சும் அளவுக்கு சென்னை புத்தக காட்சி வாசகர்களின் அமோக வரவேற்பில் வளர்ச்சி கண்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவுக்கு வெகு அருகாமையில் நடத்தப்படும் புத்தக காட்சிக்கு, வாசகர்களின் வருகை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தங்கள் அபிமான எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் மற்றும் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் மற்ற துறைகளின் புத்தகங்களை வாங்க அலைய…
-
- 0 replies
- 289 views
-
-
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் சசிகுமார் 28.11.2013 அன்று முதுநகர் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சின்னவிளை கிராமத்தைச் சேர்ந்த பணியடிமை மகன் தார்த்தீஸ் 6.12.2013 அன்று கடலில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டுமரத்திலிருந்து தவறி கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் கிராமம், சாமந்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலு மகன் தவமணி 12.12.2013 அன்று கடல…
-
- 0 replies
- 324 views
-
-
டெல்லி: சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது உகந்ததல்ல என்ற பச்சோரி குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்பதாகவும், பச்சோரி குழுவின் அறிக்கையை, மத்திய அரசும் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கலாம். எதிர்காலத்தில் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். சேது சமுத்திர திட்டத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் எனக்கூறுவது உண்மையில்லை. இந்த திட்டம் வந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாத…
-
- 0 replies
- 397 views
-
-
கிருஷ்ணகிரி நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தற்போது அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப் பட்டு பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரோட்டின் நடுவில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் கூம்பு வடிவம் போல் காட்சியளிக்கும். சாலை அமைக்காத பகுதிகளில் இந்த தொட்டியில் மோதி இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குவதாக பரவலாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் தி.மு.க. பிரமுகர் நாராயணமூர்த்தி மகன் தமிழ் செல்வன் சென்ற மோட்டார் சைக்கிள் தொட்டி மீது மோதியதில் அவர் கீழே தவறி விழுந்தார். அப்போது பின்புறம் வந்த டவுன்பஸ் அவர் தலை மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ…
-
- 0 replies
- 358 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கனிமொழி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘‘2ஜி ஒதுக்கீடு முறைகேடுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் அவர், ‘‘கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு 20 சதவீத பங்கே உள்ளது. நான் அதன் இயக்குனர்களில் ஒருவராக 2007–ம் ஆண்டு ஜூன் மாதம் 6–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இரண்டு வாரமே இருந்தேன். அதன்பிறகு 1½ ஆண்டு கழித்தே 2009–ல் நிதி பரிமாற்றம் நடந்தது. நான் எந்த காசோலை…
-
- 0 replies
- 381 views
-
-
வருகின்ற ஞாயிறு 12-01-2014 காலை 10 மணிக்கு திவ்யோதயா அரங்கில் கோவையில், 12-01-2014 மாலை 5 மணிக்கு திருப்பூரில், பொதுக்கூட்டம். ”தமிழீழ படுகொலை ஒரு இனப்படுகொலையே, மற்றும் இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்தின் பங்கு” மேலும்” பொதுவாக்கெடுப்பு- பிப்ரவரி12 ஐ.நா அலுவலக முற்றுகை”யின் நோக்கம் பற்றிய பிரச்சாரக் கூட்டம். கோவையில் பங்கேற்போர் : தோழர். கு.ராமகிருட்டிணன், தோழர். நெல்லை முபாரக், தோழர்.பாமரன், தோழர். உமர்கயான், தோழர். திருமுருகன். திருப்பூர் : தோழர் ரபீக், தோழர். உமர்கயான், தோழர். திருமுருகன் (மற்றும் இதர தோழர்கள் பெயர்களை உறுதி செய்த பிறகு நாளை பதிகிறோம்..) தோழர்கள் மிகக் குறுகிய காலம் இருப்பதால் சக தோழர்களிடத்தில் செய்தியைப் பரப்பி உதவுங்கள். Thirumurugan Gandh…
-
- 0 replies
- 335 views
-
-
சென்னை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– ஆம் ஆத்மி கட்சியின், தமிழ் மாநில தலைமை அலுவலகமானது, கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளை, கட்சியின் தேசிய செயற்குழு தேர்வு செய்துள்ளது. மேலும் கட்சியின் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கிறிஸ்டினா சாமியும் மற்றும் லெனின், டாக்டர் ஆனந்த் கணேஷ், ராஜேஷ் சுரானா, சாமுவேல் நிர்மா, ரோஸ்லின் ஜீவா, நாகராஜன் மற்றும் ராஜ ராஜ சோழன் ஆகியோர் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் என…
-
- 0 replies
- 623 views
-
-
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். புறநகர் பகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான இடம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114361
-
- 1 reply
- 525 views
-
-
சென்னை: மத்திய அரசு நம்பிக்கை அளிக்கும் வகையில் போதுமான அளவுக்கு கண்டிக்காததே இலங்கையின் தொடர் அடாவடிக்கு காரணம் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 275 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் இன்று மீண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீண்டும், மீண்டும் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் சொல்…
-
- 0 replies
- 290 views
-
-
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி யோகேந்திரா யாதவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில்: ஆம் ஆத்மியின் டில்லி வெற்றிக்கு பின்னர் கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு வளர்ந்து வருகிறது. பலரும் சேர ஆர்வம் காட்டுகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான முழு விவர தேர்தல் அறிக்கை இன்னும் 2 மாதத்திற்குள் வெளியிடுவோம். பா.ஜ., மற்றும் காங்., போன்று பெரும் கட்டமைப்பு ஆம்ஆத்மிக்கு இல்லை. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் கட்சியின் நிலை என்ன ? அணு சக்தியை எதிர்க்கிறீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், இந்த ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்ப்பு குரலுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும். அப்பகுதி மக்களின் அச்சம் முக்கியமாக கவனத்தில கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். htt…
-
- 0 replies
- 421 views
-
-
திமுக தலைவர் கருணாநிதி தேமுதிகவோடு தேர்தல் உறவு வேண்டாம் எனக்கூறியதற்காக தனது மூத்த மகன் மு.க.அழகிரியைக் கடிந்துகொண்டிருக்கிறார், அது தனது கட்சியின் நிலைப்பாடல்ல எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பில் அழகிரி இருந்தாலும், கருணாநிதியின் இளையமகன் ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் ஏறத்தாழ கட்சி வந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், அழகிரி எவ்வித நடவடிக்கைகளிலும் பங்கு பெறாமலிருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு மதுரைப் பகுதி திமுக கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதன் பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அழகிரி கட்சியில் தாம் புறக்கணிக்கப்படுவதாகக் குறைகூறினார், அதே நேரம் கருணாநிதியைத் தவிர வேற…
-
- 2 replies
- 516 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியோடு கூட்டணி வைத்து தமிழகஅரசியல் களத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மிகப்பெரிய அங்கீகாரம் பெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி தெரிந்து கொள்ள கிராமங்களிலும், வீடுகள் தோறும் கொடிகள் ஏற்றி சுறு, சுறுப்பாக உழைக்க வேண்டும். த.வா.கவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக வாழ்வுரிமை கட்சி மக்கள் சக்தியாக திகழும். …
-
- 1 reply
- 392 views
-
-
6 ஜனவரி 2014 நடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 58 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது. தீட்சிதர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் மேலரதவீதியில் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சி.செந்தில் தலைமையில் மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 58 பேரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமைய…
-
- 1 reply
- 646 views
-
-
காரைக்காலில் நிகழ்ந்த பெண்ணின் மீதான வக்கிரம் நிறைந்த பாலியல் வன்முறை, சிறுமி புனிதா மீதான ஈவுஇரக்கமற்ற பாலியல் வன்முறை- கொலையும் மேலும் திருச்சியில் சிறுமி சுல்தானா மீதான கொடூரமான பாலியல்வன்முறை மற்றும் கொலை என தொடரும் நிகழ்வுகளுக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.... பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து நமது குரல் ஒலிக்கப்பட வேண்டும்.. பெண்களை பாதுகாப்பதற்கான சட்டவிதிகளும், அதற்கு முக்கியத்துவம் அளிக்காத அரசினையும் கேள்விக்குள்ளாக்குவதும் அவசியம். இதற்கான சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். தொடர் விவாதங்களும், போராட்டங்களும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவைப்பதற்கான வழியாக அமையும். இதற்கான பணியை நாம் அனைவரும் தொடர்ந்து எட…
-
- 0 replies
- 339 views
-
-
பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையை இன்று (செவ்வாய்கிழமை) திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக…
-
- 0 replies
- 391 views
-
-
டோன்ட் வொர்ரி...: அடுத்த பரபரப்பை கிளப்பும் அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர். சென்னை: மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்பே கலைக்கப்பட்ட நிலையிலும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் அசராமல் திமுக தலைமையுடன் அடுத்த போஸ்டர் யுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியின் பிறந்த நாள் ஜனவரி 30-ந் தேதி வருகிறது. அதனை சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அழகிரி ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டினர். இது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மன்னிப்பு கேட்க வே…
-
- 1 reply
- 761 views
-
-
05.01.2014 விழுப்புரம் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று திண்டிவனத்தில் நடந்த மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேசினார். அரசியல் எழுச்சி மாநாடு திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாடு திண்டிவனம் வ.உ.சி. திடலில் நேற்று மாலை மாநில இளம்பெண்கள் அணி துணை செயலாளர் பொன்.மகேஸ்வரி தலைமையில் நடந்தது. மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா வரவேற்றார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம்பெண்கள் அதிக விதவைகளாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மதுதான். மதுவை குடிக்க சொல்கிற கட்சிகளை அப்புறப்படுத்த…
-
- 0 replies
- 543 views
-
-
05.01.2014 நீலகிரி தமிழக மக்களுக்கான பணிகளை மேலும் நிறைவு செய்ய மக்கள் உறுதுணையோடு இந்திய அளவில் மாற்றம் ஏற்படும் என்று குன்னூரில் நடந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். குன்னூரில் பொங்கல் பரிசு திட்டம், நலத்திட்ட உதவிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மக்கள் என் பக்கம் தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை நான் வழங்கி உள்ளேன். ஏனெனில், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா. என்னைப் பொறுத்தவரை, நேரம் பார்த்து தேவை அறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இது போன்ற உதவ…
-
- 0 replies
- 410 views
-
-
06.01.2014 சென்னை பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா?, தனித்து போட்டியா? என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். சென்னையை அடுத்த பொன்னேரியில் நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:– மக்களை ஏமாற்ற சதி தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிவருகிறது. மக்களை ஏமாற்ற சதி வேலை செய்கிறது. என் மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன். என்றைக்கும் நான் அனாவசியமாக பேச மாட்டேன். எப்போதும் உண்மையைத்…
-
- 0 replies
- 420 views
-
-
சீர்காழி, மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை தனிமைப்படுத்துகிறது என்று சீர்காழியில் சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார். ஆலோசனைக்கூட்டம் நாகை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு அருகில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நாகை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கராத்தே.ஏபி.ராஜா தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் ஐஸ்ஹவுஸ்தியாகு, கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், பொதுச்செயலாளர் கருநாகராஜன், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளி…
-
- 0 replies
- 409 views
-
-
சென்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருவதாகவும், தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார். ரூ.51.60 கோடி மதிப்பில்... சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ரூ.51.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில் இருப்பு பாதையை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் எண்ணூர் துறைமுக நிறுவனத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வரவேற்புரையாற்றினார். இதில் இந்திய கடல் சார் பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக்வர்தன் ஷெட்டி, சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் அதுல்ய மிஸ்ரா, எண்ணூர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார், தென்னக ரெயில்வே…
-
- 0 replies
- 321 views
-
-
சென்னை சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் கட்சியின் மாநில மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். சென்னை அலுவலகம் திறப்பு டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ‘ஆம் ஆத்மி’ கட்சி தடம் பதிக்க தொடங்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்த கட்சியில் சேருவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வரும் வேளையில், சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆத் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கட்சியில் புதிய உறுப்பினராக ஆர்வம் காட்டுபவர்களுக்கு வசதியாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கணினி மூலம் உறுப்பினர் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று ஏராளமானோர் வந்திருந்து ‘ஆம் ஆத்மி’ கட்சியில் பு…
-
- 0 replies
- 455 views
-
-
இடம்: சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலம் 7.01.2014 செவ்வாய் காலை 10. மணி தலைமை: திரு. பழ.நெடுமாறன் அவர்கள், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு. இந்தியக் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்சி அவர்கள் 20.12.2013 அன்று சென்னை இலயோலாக் கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறை யினர் ஈழ ஆதரவுத் தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் வேலையில் இறங்கினர். 20.12.2013 நள்ளிரளிவு 2.00 மணிக்கு திரைப்பட இயக்குநர் வ. கவுதமன் அவர்களை அவரது இல்லத்தில் கைது செய்து, எங்கே கொண்டு போகிறோம் என்று அவருடைய குடும்பத்தினருக்குச் சொல்லாமல் அழைத்துச் சென்றுவிட்டனர். கைது செய்த உடனே திரு கவுதமன் அவர்களின் கைப்பேசியைக் கா…
-
- 1 reply
- 529 views
-
-
அவசர வேண்டுகோள் :: நாளை காலையில் தோழர். தமிழ் மகா பிரபாகரன் கைது தொடர்பாகவும், அவரது பாதுகாப்பு, விடுதலை , தாயகம் அழைத்தல் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து பேச அனைத்து இயக்க-கட்சி தோழர்களையும், பத்திரிக்கையாளர் , வழக்கறிஞர் நண்பர்களையும் அழைக்கிறோம். இரவு நெடுநேரம் ஆகிய காரணத்தினால் பலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை… தலைவர்களையும், இதர தோழர்களையும் காலையில் தான் தொடர்பு கொள்ளமுடியும் என நினைக்கிறோம்..இத்தகவல் தெரிந்த தோழர்கள் தங்களது சக அமைப்புகளுடனோ, தலைவர்களுடனோ பேசி ஒரு குழுவாக சென்று சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் இதே முயற்சியை மேற்கொள்ள முயலுகிறோம். நாம் அனைவரும் இணைந்து இயக்க-கட்சி வேறுபாடு மறந்து ஒன்றாக தோழர். …
-
- 29 replies
- 2k views
-
-
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரிக்கு கடந்த சில நாட்களாக கட்சியில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் மதுரை மாவட்ட தி.மு.க. அமைப்பு ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டது. புதிய பொறுப்புக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. நீக்கப்பட்டவர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என்பதும், புதிய பொறுப்புக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், மு.க.அழகிரி இன்று காலை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஜயகாந்த் தற்போது எல்லா கட்சிகளுடனும் பேரம் பேசி வருகிறார். விஜயகாந்தை ஒரு அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை. அவரிடம் அரச…
-
- 0 replies
- 1.5k views
-