Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மதுரை 144 எதிரொலி : இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது! Feb 4, 2025 திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் போராட்டங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்’ என்ற கோரிக்கையுடன் பிப்ரவரி 4 (இன்று) மாலை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி கட்சி அறிவித்தது. இதனையடுத்த…

  2. சசிகலாவிடம் விசாரணை எப்போது சிறை கண்காணிப்பாளர் தகவல் பெங்களூரு:சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்தும் வழிமுறைகளை, பெங்களூரு மத்திய சிறை தலைமை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தின், 187 இடங்களில், சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், கல்வி நிறுவனங் கள், தொழிற்சாலைகளில், வருமான வரி துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய ஆவணங்கள் மூலம், 1,140 கோடி ரூபாய் மதிப்பில், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலம்…

  3. ’ஜெயலலிதா கைரேகை உண்மைத் தன்மை’: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தலைமைத் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கோரும் மனு ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாகக் கைரேகையுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. ச…

  4. பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024, 08:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது? அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் ‘வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மார்ச் 4 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆள…

  5. பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் தொங்கவிடப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Image captionஅமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் தமிழக அமைச்சர்களின் அலுவலக அறைகள், அரசாங்க அலுவலக கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில், தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவரின் புகைப்படங்கள் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பல்வ…

  6. தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, நான்கு கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி திருவாரூரில் திங்கள்கிழமை (அக். 5) முறைப்படி அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்."மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம்' என்ற பெயரில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை தொடங்கினார். முன்னதாக, அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக வர வேண்டாம் என்று அதிமுகவுக்கும், அதிமுக வரக் கூடாது என்று திமுகவுக்கும் தமிழக மக்கள் வாக்களிக்கின்றனர். இந்த 2 திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று மக்கள் எண்ணுகின்றனர். இந்த மாயை…

  7. இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு March 8, 2024 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகனுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கைத் துணை தூதரகம் சென்று வர அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்தது. இந்த நிலையில், இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் எனது கணவர் முருகன் தங்கவைக்கப்பட்டுள்ளா…

  8. ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும், கரென்ட் கட்... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி. ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டதை அடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிருக்கும், விவசாயத்துக்கும், நீருக்கும் உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தூத்துக்குடி மக்கள் கடந்த 3 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அதுகுறித்து மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளையொட்டி ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் பேரணியாக சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அத…

  9. கர்நாடக சட்டப்பேரைவத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. கோலார் தங்கவயலில் பாஜக எம்.எல்.ஏ ஒய்.சம்பங்கியின் தாயார் ஒய்.ராமக்காவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதோல் தொகுதில் கன்னட மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள் போட்டியிடுகிறார். மளவள்ளி தொகுதியில் குமாரசாமி, கிருஷ்ணராஜ்பேட்டையில் வரதராஜே கெüடா, ஹங்கலில் பசவராஜ் வீரப்பஹிரேமணி, கல்கட்கியில் வீரேஷ், யம்கன்மார்டியில் மாருதி மல்லப்பாஅஷ்டகி, நாக்தானில் நாகேந்திரமாயாவம்ஷி, கம்பளியில் சிவக்குமார், தேவனஹள்ளியில் சந்திரம்மா, மாலூரில் வெங்கடேஷ் கெüடா, ஹெப்ப…

    • 0 replies
    • 316 views
  10. அ.தி.மு.க., கட்சியை முதல்வர் பன்னீர்செல்வம்... கைப்பற்றுகிறார்!: நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பதால் உற்சாகம்: அணி தாவினார் அவைத்தலைவர் மதுசூதனன்: சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவு காரணமாக, உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் அ.தி.மு.க.,வை கைப்பற்றுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று உடனடியாக அணி மாறியதால், சசிகலா தரப்புக்கு, அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு நிர்வாகிகள், சசிகலாவின் …

  11. Chief Minister என்று எழுத தெரியாத தமிழக முதல்வர் எடப்பாடி? தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக-கட்சியைச் சேர்ந்தவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இவர் தலைமையில் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் தவறு இருப்பதாக கூறி சமூகவலைத்தளங்களில் அது தொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதாவது அதில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பி…

  12. தென்னை விவசாயிகள் விரக்தி: கொள்முதல் விலை சரிவு மற்றும் செலவு அதிகரிப்பால் மரங்களை வெட்டும் நிலை மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என் பிள்ளையைப் போல 40 ஆண்டுகளாக இந்த தென்னை மரங்களை வளர்த்தேன். ஆனால் இன்று உரிய விலை கிடைக்காததால் அனைத்து மரங்களையும் வெட்டிவிட்டேன்" என்கிறார் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி ராமலிங்கம். தென்னை விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தனக்கு சொந்தமான 143 தென்னை மரங்களை தானே வெட்டி சாய்த்துள்ளார் ராமலிங்கம். ஆனால் இது ராமலிங்கத்தின் பிரச்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தென்னை சார்பு பொருட்களுக்கு உரிய விலை கிட…

  13. அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார விவாதம்: பாஜ கூட்டணிக்கு உள்ளே எதிர்ப்பா? பட மூலாதாரம்,ADMK TWITTER 4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று நடந்த அ.இ.அ.தி.மு.கவின் நிர்வாகிகள் கூட்டத்தில் காராசாரமான விவாதங்களும் உள்ளே நடந்துள்ளன. கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை வலுவான நிலையில் எதிர்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் இன்று காலை பத்து மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்…

  14. மக்களின் ஒத்துழைப்பே... வைரஸ் தொற்றினை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர் அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியமையினால் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி ஊடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் 2 வார காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியமையாலும் சுகாதார நடைமுறைகளை இற…

  15. புதுச்சேரி சொகுசு விடுதியில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் சந்திப்பு: ஓரிரு நாட்கள் காத்திருப்போம் என தகவல் புதுச்சேரி ரிசார்ட்டில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் டிடிவி தினகரன். - படம்: எம்.சாம்ராஜ் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்எல்ஏக்களை யாரும் இங்கு அடைத்து வைக்கவில்லை என்று கூறிய தினகரன், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கப் போவதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் புதுச்சேரி அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கடந்த 12 நாட்களாக தங…

  16. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கண்ணகி முருகேசன் 25 நிமிடங்களுக்கு முன்னர் ஜூலை 8, 2003. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு. எப்போதுமே ஆள் அரவம் இல்லாத அந்தக் காட்டிற்குள் அன்று ஊரே கூடியிருந்தது. குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசனும், அவரது சித்தப்பாவும் கை கால்கள் கட்டப்பட்டு கிழே தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சற்று தள்ளியிருந்த ஒரு மரத்தில், கண்ணகி கட்டப்பட்டிருந்தார். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். எழுத்தில் விவரிக்க முடியாத சித்திரவதைக்குப் பிறகு, முருகேசன், கண்ணகி ஆகியோரின் மூக்கு மற்றும் காதுகளில் விஷம்…

  17. தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தல் : பிரசார நடவடிக்கைகள் நிறைவு! தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன. இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆயிரத்து 824 வாடர்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7 ஆயிரத்து 411 வார்டுகளிலும், நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தமிழக பொலிஸாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் இராணுவத்தினரும், ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1267574

  18. திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் நடமாடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் வடக்குரத வீதி, கச்சேரி தெருவில் எண்ணெய் விற்பனை கடைகள், காய்கறி, மளிகை கடைகள் இருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் பொது மக்கள் அதிகளவில் நடமாடியதாலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் எச்சரிக்கையை மீறி கொரோனா வைரஸின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் ப…

  19. பிரதமருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரிக்கை! புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக இன்று (14-ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு டெல்லி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து டெல்லியிலுள்ள தமிழக இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா, சற்று நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டிற்கு சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்…

  20. சென்னை: உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற …

  21. விமானங்களில் விஷ ஜந்துக்கள்: "சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகள் துவங்க காலதமாதமாகும்" சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார். விமான நிலையத்தின் ஓடுத்தளங்களில் வெள்ளம் வடிந்துள்ளபோதும், அதன் முழுமையான பாதுக்காப்புத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே சேவைகள் தொடங்கப்படும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்களில், பாம்புகள் உள்ளிட்ட எண்ணற்ற விஷப்பூச்ச…

  22. ஒவ்வொரு தேர்தலிலும், ஒரே நாடகத்தை நாம் பார்க்கிறோம். பாஜக அதிமுகவுடன் கைகோர்க்க வலியுறுத்துகிறது. அதிமுக நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றார்கள். எந்தக் காலத்தில் நடக்காது என்றார் தவழ்பாடி. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய். வெற்றி பெறத் தவறிய பிறகும் கூட, தமிழ்நாட்டு மக்கள் அவர்களை தெளிவாக நிராகரித்த பிறகும் கூட கூட்டணி ஏன்? பாஜக ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டணிக்காக துடித்தது? காரணம் என்ன தெரியுமா? இது தமிழ் நாட்டு மக்களின் நலனுக்கான தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. இது ஒரு சதி வலை. பின்னுவது பிஜேபி. அடிமைக்கூட்டம் கைகட்டி மெய் வாய் மூடி தலையைக் கூட ஆட்டாமல் தமிழர்களைக் காவு கொடுக்க உதவி செய்கிறது. அதிமுகவை படிப்பட…

  23. பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர் சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தாங்கள் தாக்கப்பட்டதாக ஆளுநரிடம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்திருந்தார், அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக பேரவை செயலாளர் ஜமாலுதீன், விளக்க அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விளக்க அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் ஆளுநர் தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/…

  24. ஹைட்ரோகார்பன் திட்ட கூட்டம் ஏன்? தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப் படம் மன்னார்குடி தாலுகாவில் பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் இணைப்பு பணிகள் தொடர்பாக முத்தரப்புக் கூட்டத்திற்காக திருவாரூர் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் விடுத்திருந்த அழைப்பு இரண்டே நாட்களில் ரத்தாகியது. அந்த கூட்டத்தை நடத்துவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் கூட்டம் பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்ற ஆட்சியரின் மறு அறிவிப்பு பரபரப்பை அதிகரித்துள்ளது. அறிவிக்கப்பட்ட …

  25. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி சுப்பிரமணியன் சுவாமி. | கோப்புப் படம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார். ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து? மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.