தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
சென்னை: முன்னொரு காலத்தில் சென்னையின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த டிராம் ரயில் சேவையை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தத் திட்டத்தை மத்திய அரசே முழுமையாக செயல்படுத்தவுள்ளது. அதேசமயம், மாநில அரசின் ஒத்துழைப்பும் இதில் கோரப்படவுள்ளதாம். சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களின் முக்கிய அங்கமாக திகழ்ந்தது டிராம் சேவை. சென்னையில் இந்த டிராம் சேவை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த டிராம் சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. சென்னையில் மெட்ராஸ் டிராம்வேஸ் என்ற பெயரில் டிராம் …
-
- 0 replies
- 673 views
-
-
கொன்று குவிக்கப்பட்ட ஈழஉறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம்சகோதரிகளுக்கும் நீதிகேட்டு தமிழக மாணவர்களினால் மிதிவண்டி பயண போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தொடங்கப்பட்ட இந்த மிதிவண்டி பயணத்தின்போது திருச்சி பகுதியினை சேர்ந்த ம.தி.மு.க கட்சியின்னர்,நாம்தமிழர் கட்சியினர் ,மனிதநேயமக்கள் கட்சியினர்,உள்ளிட்ட தமிழ்உணர்வு அமைப்புக்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று திரண்டு இந்த மாணவர்களின் மிதிவண்டி போராட்ட பயணத்தினை தொடக்கியுள்ளார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை வைகோ,சீமான்,எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். எதிர்வரும் 23 ஆம் நாள் இந்த மிதிவண்டி பயண போராட்டம் ச…
-
- 11 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் ஞாயிறு, 29.09.2013 அன்று சுவிஸ் Schaffhausen மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி விழாவில் அறப்போர் ஆவணப்படம் திரையிடபடவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறித்தருகின்றேன்.
-
- 0 replies
- 660 views
-
-
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்க ரூ.86 லட்சம் செலவில் மலேசியாவில் இருந்து லக்கேஜ் ஸ்கேனர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம், மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு தினமும் 75,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வேறு இருந்து வருகிறது. இதனால் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்கள…
-
- 1 reply
- 617 views
-
-
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓடும் நதியான பாலாறு முற்றாக வறண்டு போவதிலிருந்து காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வறண்டு போன நிலையில் பாலாறு கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற முடியாத ஒரு சூழலும் ஏற்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார், வேலூர் மாவட்ட பாலாறு நதி பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜமுனா தியாகராஜன். கர்நாடகா…
-
- 0 replies
- 442 views
-
-
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் குடும்பத்துடன் திரளாக பங்கேற்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் 135-ஆவது பிறந்த நாள், அண்ணாவின் 105-ஆவது பிறந்த நாள், திமுகவின் 65-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு முப்பெரும் விழா திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. வேலூரில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா, தொடர் மழை காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெரியார் சமுதாயச் சீர்திருத்தச் சிற்பி என்றால், அண்ணா அரசியல் மறுமலர்ச்சி ஆசான். பெரியாரும் அண்ணாவ…
-
- 0 replies
- 467 views
-
-
தாது மணல் எடுக்கப்பட்ட கடற்கரை (ஆவணப்படம்) தமிழக அரசு மாநிலத்தில் கடற்கரை கனிமங்களைத் தோண்டி எடுக்கும் பணியினை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட் டம் வேம்பார், வைப்பாறு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாக அண்மையில் புகார்கள் எழ, தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்தவென வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் இரண்டு கட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு தூத்துக்குடியில் சட்டவிரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை தோண்டி எடுக்கப்படுவது குறித்த ஆய்வறிக்கையினை இன்று (செவ்வாய்) அரசிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில், வெளியிடப்பட்…
-
- 0 replies
- 441 views
-
-
சேது சமுத்திரம்: தடையை நீக்க மத்திய அரசு மனு… பழைய வழித்தடத்திலேயே திட்டத்தை தொடர முடிவு. டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள மத்திய அரசு, அத் திட்டத்தை பழைய வழித்தடத்திலேயே செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை விதிக்க கோரியும் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ராமர் பாலம் வழியாக சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை சேதப்…
-
- 5 replies
- 970 views
-
-
திமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ரூ 200 கோடி அளவு முறைகேடு என்ற புகாரில் முகாந்திரம் இருப்பின் அது குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. திமுக தலைவர் மு கருணாநிதி கோவையில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு பலரின் கவனத்தை ஈர்த்தது. வழக்கறிஞர் ரமேஷ்குமார் தான் அம் மாநாட்டுச் செலவுகள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது அக்கௌண்டட் ஜெனரல் அலுவலகம் ரூ 151.22 கோடி செலவழிக்கப்பட்டதாக தெரிவித்தது, ஆனால் அம்மூன்றுநாள் மாநாட்டிற்காக 350 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக அன்றைய முதல்வர் மு கருணாநிதி சட்ட…
-
- 1 reply
- 482 views
-
-
விருதுநகர்: தன் குடும்பத்திற்காக, அண்ணாதுரையின் கொள்கைகளை கருணாநிதி குழிதோண்டி புதைத்துவிட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், திமுக உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாவின் பிறந்நாளை ஒட்டி விருதுநகரில் மதிமுகவின் மாநாடு நேற்று நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் முக்கியத் தலைவர் பேசினார்கள். மாலையில் சிறப்புரையாற்றிய வைகோ கூறியதாவது: விருதுநகர் மண், திராவிட இயக்கத்தை வளர்த்தது. கடந்த 20 ஆண்டாக நாங்கள், பல்வேறு துன்பங்களால் அவதிப்பட்டு வருகிறோம். 2014 லோக்சபா தேர்தல், கதவை தட்டுகிறது; நாம் இலக்கை சரியாக நிர்ணயிக்க வேண்டும். சட்டசபை தேர்தலை புறக்கணித்தோம். ஆனால், லோக்சபா தேர்தலில் போ…
-
- 0 replies
- 447 views
-
-
விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்! விருதுநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவரம் : * காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 9½ ஆண்டுகளாக வரலாறு காணாத ஊழல்களில் ஊறி திளைத்து வருகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல், ராணுவ ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் புகார்களுக்கு ஆளான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பதவியில் இருந்து அகற்றுவதுதான் நாட்டின் எதிர்கால நலனை விரும்புகின்ற ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே வருகிற 201…
-
- 34 replies
- 2.1k views
-
-
சென்னை: மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் நரேந்திர மோடிக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்போதுதான் மத வெறி ஆபத்தை எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரத்துக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கும் காரணமானவர் அவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாகவே அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இந்நிலையில் அவரை அத்வானி போன்ற தலைவர்கள…
-
- 2 replies
- 1.5k views
-
-
பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது மாணவ- மாணவிகள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்திருந்தும் செல்போன்களை மாணவர்கள் கொண்டுதான் செல்கிறார்கள். செல்போன்கள் மூலம் மாணவர்கள் ஆபாச படங்கள் பார்ப்பதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனால், அவர்களின் கவனம் வேறுவிதமாக சென்று வாழ்க்கையை வீணாகும் அளவுக்கு போய்விடுகிறது. வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே மாணவர்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். இதனால் பாடத்தில் கவனம் சிதறுவதோடு, தேர்வில் தோல்வி அ…
-
- 0 replies
- 509 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தமது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பித்ததன் பின்னர், இலங்கையில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் நடத்தப்படுகின்ற இந்த கருத்துக் கணிப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு கருத்துக் கணிப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைய சர்வதேச ரீதியாக வாழ்கிற தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது மிகவும் அவசியமானது என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டி…
-
- 0 replies
- 374 views
-
-
தனித்தமிழீழம் அமையும் வரைக்கும் மாணவர்களாகிய நாங்கள் அண்ணான் செந்தில்குமரனின் உடல்மீது உறுதிகொண்டு நாங்கள் பயணம் செய்கிறோம் எட்டுத்திக்கும் பரவுவோம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் ஜோ.பிரிட்டோ தெரிவித்துள்ளார்(காணொளி) பாலச்சந்திரன் படுகொலையினை பார்த்து மாணவர்கள் வீதியில் இறங்கி போராடினார்களோ அதைபோன் ஆதங்கத்தையும் கோபத்தையும் நெருப்பையும் எங்கள் மனதிற்குள் செந்தில்குமரன் ஏற்றியிருக்கின்றார். எங்களின் விடியல் வெகு தொலைவில் இல்லை செந்தில் குமரன் அண்ணாவின் மீது உறுதிகூறி சொல்லுகின்றோம் திருச்சியில் இருந்து சென்னை வரை சையிக்கில் பயணமா செல்லவுள்ளோம். இனப்படுகொலைக்கு நீதிகேட்டு வீதிவீதியாக செல்லவுள்ளோம் தமிழ் தங்கைகளுக்கு தாய்க்கு முன்னால் எதுநடந்ததே தந்தைக்கு முன…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறியை கண்டிப்போம்! இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த தமிழ் குடும்பத்திடம் இவர்கள் இந்தியில் திட்டி உள்ளனர். இதை புரிந்து கொண்ட மலேசியா தமிழ் குடும்பத்தினர் , இவர்களை திரும்ப திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்தியர்கள் , தமிழ…
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கை அகதி வி.எம்.பி.நேரு என்ற ஈழ நேரு திருச்சி அகதிகள் முகாமில் உள்ளார். அவரது விருப்பத்துக்கு மாறாக அரசு அவரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தடைவிதிக்க கோரி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரித்து, ஈழ நேருவின் விவகாரத்தில் தற்போதய நிலையே நீடிக்க வேண்டும், அவரை நாடு கடத்த கூடாது. வழக்கில் மத்திய, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து இலங்கை அகதி செந்தூரானை நாடு கடத்த தடை கோரி வக்கீல் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து, செந்தூரானை நாடு கடத்த தடை விதித்தது. இதை தொட…
-
- 0 replies
- 481 views
-
-
சென்னை நகரின் குடிநீர் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ஐந்தாவதாக நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு காத்திருக்கும் மக்கள் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் இருக்கும் இரு பெரிய ஏரிகளை ஒன்றாக இணைத்து நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் 330 கோடி ரூபாய்கள் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு டி எம் சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று அரச தரப்பு கூறுகிறது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மேம்படும் எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. உபரி நீரைத் தேக்க உதவும் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஒரு தொடர…
-
- 0 replies
- 457 views
-
-
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் போலீஸ் தடையை மீறி விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று இந்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்தும் எரிபொருட்களின் விலையுயர்வினை தீர்மானிக்க கூடிய அதிகாரம் விலையினை நிர்ணயிக்கும் அதிகாரம் எரிபொருள் நிறுவனங்களுக்கு வளங்கப்பட்டிருப்பதை இந்தியஅரசு இரத்து செய்யவேண்டும் எரிபொருள் விலைஉயர்வினை திரும்ப பெறவேண்டும் கச்சதீவினை மீட்கவேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் வற்புறுத்துகின்றது சிறீலங்காஅரசிற்கு போர்கப்பல்களை வழங்கும் இந்தியா அரசின் திட்டத்தினை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பதாகவும் திருமாவளவன் …
-
- 0 replies
- 502 views
-
-
சென்னை: கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகப்படுத்த முடியாது என்று என்று இந்து அறநிலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் இந்து அறநிலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பப்பட்டுள்ளது அதில் கோவில் சொத்துகளை நாத்திகர்கள் பயன்படுத்தவோ, வாடகைக்கு உபயோகிக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகத்திற்கு விடப்படாது என்றும், இறைச்சி, மதுபானம் போன்றைவை பரிமாறப்படும் விருந்துகளும் அந்த மண்டபங்களில் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னால், திருவாரூர் மாவட்டத்தில…
-
- 2 replies
- 429 views
-
-
சென்னை: அரசியலில் அதிகம் ஆர்வம் உள்ளதாகவும், நல்ல அரசியல் கட்சியில் சேர விரும்புவதாகவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார். நடிகை நமீதா சமூக சேவையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். கண்தானம், ரத்ததான முகாம் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் கண் தானம் செய்வதை வலியறுத்தி சென்னையில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார். நமீதா இது போன்ற சமூக சேவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நமீதா ஒரு பைசா கூட வாங்குவதில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நமீதாவை புகழந்து தள்ளுகிறார்கள். வெளிநாடுகளில் தெருவுக்கு தெரு பெண்கள் கழிப்பிடங்கள் இருப்பது போன்று நம் ஊரிலும் பெண்கள் கழிப்பிடங்கள் இருக்க வேண்டும் என்று நமீதா ஆசைப்படுகிறார். இதையடுத்து சென்னை ராய…
-
- 0 replies
- 465 views
-
-
கோவை: கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில், அசோக்கு…
-
- 0 replies
- 448 views
-
-
இடிந்தகரை: மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைக் கைப்பிடித்த கையோடு இடிந்தகரை போராட்டக்களத்திற்குப் போயுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். புது மனைவியுடன் வந்த சீமானுக்கு இடிந்தகரை மக்கள் சிறப்பான வரவேற்பும், கல்யாணப் பரிசும் கொடுத்து அசத்தி விட்டனர். இந்த நிகழ்ச்சியில் அணு உலைக்கு எதிரான அமைதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மனைவி கயல்விழியுடன் சீமான் மேற்கொண்ட முதல் பயணம் இதுதான்.திருமணம் முடித்த கையோடு சீமான், தங்களைப் பார்க்க வந்ததால் இடிந்தகரை மக்கள் குறிப்பாக போராட்டாக்குழுவினர், கிராமத்து மக்கள், பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தன சிறப்பான வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்று கேக் வெட்டச் சொல்லினர் இடிந்தக…
-
- 4 replies
- 1.6k views
-
-
”மதச்சார்பற்றவர் என்று கலைஞர் சொல்லிக்கொண்டு ரம்ஜானுக்கு மட்டும் நோன்புக்கஞ்சி குடிக்கிறாரே? பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை சாப்பிடத் தயரா?” என்று இந்துமுன்னணி இராம. கோபாலன் ஒருமுறை சவால் விட்டார். “இராம. கோபாலன் கொடுத்தால் கொழுக்கட்டை சாப்பிடத் தயார்” என்று கலைஞர் பதிலளித்தார். அடுத்து வந்த விநாயகர் சதுர்த்தியின்போது இராம. கோபாலன் கொழுக்கட்டையோடு அறிவாலயம் சென்றார். கலைஞரும் ஒரு பிடி பிடித்தார். :d
-
- 6 replies
- 857 views
-
-
சென்னை: இலங்கையில் தமிழர் வாழும் பகுதியை பிரித்து தமிழீழம் அமைப்பதுதான் தீர்வாக அமையும் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும், ஆனால் இலங்கையை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு இணை அமைச்சர் நாராயணசாமியும் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம். சுதந்திர தமிழீழம் என்பது அனைவரது கனவு. அந்த கனவு நிறைவேற வேண்டுமெனில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமியோ, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்த ஒப…
-
- 4 replies
- 662 views
-