தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
சென்னை: சென்னையில் ஓட்டல் ஊழியர் ஒருவர் 16 வயது சிறுவனால் தெருவில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. குற்றவாளியான சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆயிரம்விளக்கு, அஜ்முல் தெருவைச் சேர்ந்த வினோத் (வயது 32), பாண்டிபஜாரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பெயர் பாரதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, சீட்டு விளையாட்டில் கிடைத்த ரூ.30 ஆயிரத்தைக் கொண்டு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார் வினோத். பின்னர், ஆயிரம்விளக்கு அண்ணாசாலை-பத்தாரி சாலை சந்திப்பில், நண்பர்களுடன் போதை உற்சாகத்தில் அவர் பேசிக்கொண்டிருந்த வினோத்தையும், அவரது நண்பர் தபேலா பாஸ் எ…
-
- 0 replies
- 700 views
-
-
மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை... இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார் ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ. சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச்…
-
- 0 replies
- 752 views
-
-
சிங்கள இனவெறி கிரிகெட் வீரர்களை முழுமையாக தடை செய்யகோரி இன்று 29-09-2013 சென்னையில் அனைவராலும் எதிர்பார்க்க BCCI Annual Board General Meeting நடை பெறும் இடத்தில் அணைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர் . இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு BCCI Board உறுப்பினர்கள் பலர் கந்து கொண்டுள்ளனர் . இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறும் இடம் முன் பெருந்ததிரள் ஆர்பாட்டம்.இந்திய அரசிடமும் BCCI -யிடமும் முன் வைக்கும் கோரிக்கைகள் : 1.சிங்கள வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதி 2.இலங்கையுடன் ODI,டெஸ்ட் மற்றும் ட்வென்டி 20 போட்டிகளை நடத்தாதே 3.ஈழத…
-
- 0 replies
- 771 views
-
-
சென்னையில் 25-9-13 அன்று காலை 10 மணிக்கு வடசென்னை மாவட்ட பகுதி ஆவடியில் தொடங்கி அம்பத்தூர் பாடி வில்லிவாக்கம் பெரம்பூர் திரு.வி.க நகர் புரசை தானா தெரு திருவொற்றியூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் நிறைவடைந்தது இக் கூட்டதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கோவை இராமகிருட்டிணன் கழக துணை பிரசார செயலாளர் சினி விடுதலை அரசு குரு சரவணன் ஆகியோர் உரையாற்றினார். இதில் வடக்கு மண்டல அமைப்பாளர் அண்ணாமலை வடசென்னை மாவட்ட செயலாளர் ஜனார்தனன் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் அருள் ஆவடி பகுதி அமைப்பாளர் நாகராஜ் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் துணை தலைவர் ரவிசந்திரன் சென்னை மாவட்ட இணையதள பொருபாளர் குரு சரவணன் உள்ளிட்ட கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்சென்ற இந்த ஊர்திபயணம் சென்ற…
-
- 1 reply
- 589 views
-
-
இந்தப் படத்தில் உள்ளதே இரண்டே இரண்டு சொற்கள்தான்..இரண்டு சொற்களுமே கொலை செய்யப்பட்டுள்ளன..இந்தாள் செந்தமிழ் மாநாடு நடத்துவது தமிழை வளர்ப்பதற்கா அல்லது அதைச் சாட்டித் தான் கொள்ளையடிப்பதற்கா??..இவரெல்லாம் செந்தமிழ் மாநாடு நடத்தவில்லை என்று யார் அழுதது??..'' சூரியணே'' என்பதைப் பார்த்து சூரியனுக்குக் கோபம் வந்தால் இவர் கதி என்ன?? எழுதியவருக்கே இவரை ''ஓய்வறியா சூரியனே'' என்று எழுத மனம் இடம் கொடுக்காமல் '' ஓய்வரியா சூரியணே '' என எழுதிவிட்டார் போல.. https://www.facebook.com/pongowrie
-
- 2 replies
- 741 views
-
-
சென்னையை அடுத்த, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமை மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளதால், அங்குள்ளவர்கள், கும்மிடிப்பூண்டி முகாமுக்கு மாற்றக் கோரி மனு அளித்தால், அதை, அரசு பரிசீலிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி சிறப்பு முகாமில், இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமை, மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, முகாமில் இருப்பவர்களை, வேறு சிறப்பு முகாம்களுக்கு மாற்றுவது என, அரசு பரிசீலித்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உதவி இல்லாமல், என்னால் வாழ முடியாது. திருச்சி முகாமுக்கு அனுப்பக் கூடாது; கும்மிடிப்பூண்டி …
-
- 0 replies
- 270 views
-
-
16 மணி நேரத்திற்கு முன்பு போராட்டங்களுக்காக தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருந்த தோழர், செப்டம்பர் 30 ஆம் தேதி போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்த தோழர் தீக்குளித்து இறந்தார் என்று நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமரசமில்லாமல் போராடிய ஆதித்தமிழர் பேரவையின் நிதிச் செயலாளர் தோழர் நீலவேந்தன் 26/9/13 இன்று அதிகாலை மரணம் . ஆட்சியாளர்கள் பலரின் வாக்குறுதிகளில் மட்டுமே அருந்ததியர்களின் 6 சதவிகித இடஒதுக்கீடு உள்ள காரனத்தினால .அவ இட ஒதுக்கீட்டை எம் தலித்துகளிலும் தலித்துகளாக இருக்கும் அருந்ததியர் சொந்தங்களுக்கு உடனடியாக அளிக்க வலியுறுத்தி தோழர் நீலவேந்தன் தன்னை எரித்து இன்னும் தூங்கி கொண்டு இர்ருக்கும் எம் மக்களை உசுப்பி உள்ளார் . அண்ணா உம கனவு வ…
-
- 0 replies
- 639 views
-
-
கூட்டத்தில் உளறி தள்ளிய விஜயகாந்த்! அதிர்ச்சியில் மக்கள் தூத்துக்குடியில் தேமுதிகவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜய்காந்த் உளறி தள்ளியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக துவங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து 9வது ஆண்டு விழா கொண்டாட்ட பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் உளறு, உளறு என்று உளறியுள்ளார். டாடா ஆதரித்த டைட்டானியம் டை ஆக்சைட் பிளாண்ட் குறித்து பேச நினைத்த அவர் டாடா நானோ என்று தெரிவித்துவிட்டார். டாடா நானோ பிளாண்ட் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வந்திரு…
-
- 8 replies
- 3.3k views
-
-
திருச்சியில் நாளை நடைபெறும் இளம் தாமரை என்ற பெயரிலான பாஜக மாநாட்டையொட்டி அங்கு வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரபல ஜமால் முகம்மது கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து கல்லூரியை மூடியுள்ளனராம். மேலும் மோடி வருகைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், திருச்சியில் பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை திருச்சியில் பாஜக சார்பில் இளம் தாமரை மாநாடு நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மாநாடு நடைபெறும் ஜவகர் மைதானத்தை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர். போலீஸ் அனுமதி பெற்ற பிறகே யாராக இ…
-
- 1 reply
- 847 views
-
-
சென்னை: தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தில் பெற்ற பெரும் வெற்றி, ராஜபக்சேவுக்குக் கிடைத்த முதல் தோல்வி என்றுதேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை வடக்கு மாகாண தேர்தலில், ஈழத் தமிழர்கள், ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மிகத்தெளிவாக, உணர்த்தி இருக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை, புதிய சட்டங்கள் மூலம், ராஜபக்சே கிடைக்காமல் செய்யக்கூடும் என்பதை கருதி, அதற்கு எள் அளவும் இடம் கொடுக்காமல், ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி செய்ய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு, ஈழத் தமிழர்கள் தந்துள்ள இந்த இந்த வெற்றி, போருக்கு பின், ரா…
-
- 0 replies
- 351 views
-
-
தஞ்சாவூர்: தமிழகத்தில் லோக்சபா தேர்தலின் போது 3வது அணி அமைய வாய்ப்பு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என இரு அணிகள் உறுதி. அத்துடன் 3 வது அணி அமையவும் வாய்ப்புள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது. மாநிலங்களில் மாநிலக் கட்சிகள், இடதுசாரி கட்சிகள் வலுவாக உள்ளன. இதனால் மாநிலக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து 3வது அணியை அமைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. தேர்தலுக்கு முன்போ, பின்போ மூன்றாவது அணியுடன் இணைந்து கூட்டு அமைச்சரவை அமையலாம். தமிழகத்துக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வந்தால் கூ…
-
- 0 replies
- 552 views
-
-
சென்னை: 'நீங்கள் யூகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்' என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வைகோ பேசியது குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: மதிமுக உயர்நிலைக்குழு, ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில்,"லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க எனக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது' என, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்தார். மதிமுகவுக்கு பரிட்சை தேர்தல் கூட்டணி குறித்து, நீங்கள் யூகிக்கும் கட்சிளுடன் தான் அமையும். இந்த லோக்சபா தேர்தல் ம.தி.மு.க.,வுக்கு ஒரு பரீட்சை தான். 2016ல் ஆட்சி நமது இலக்கு, 2016ல் ஆட்சியை பிடிப்பது தான். அதில் நாம் வெற்றி பெறுவோம்…
-
- 0 replies
- 435 views
-
-
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்புக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய லலித் மோடியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. மேலும் லலித் மோடிக்கும் சரியான சூடு வைத்தனர் நீதிபதிகள். சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்புக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு இன்று பிற்பகல் 2 மணிளவில் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லலித் மோடியின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில்,இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள் விவகாரம். இதில் கோர்ட் தலையிட முடியாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ச…
-
- 0 replies
- 402 views
-
-
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் வைகோ தலைமையில் கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ம.தி.மு.க. தனது இருபது ஆண்டு கால அரசியல் பயணத்தில், இடைவிடாத போராட்டங்களால், மகத்தான தியாகத்தால், தன்னலமற்ற நேர்மை நெறியால், கணக்கற்ற அல்லல்களையும் இன்னல்களையும் எதிர் கொண்டு, நாட்டு மக்கள் கவனத்தை ஈர்க்கின்ற அரசியல் கட்சியாக இயங்குகிறது. ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்து, அந்த விடியலை இலக்காகக் கொண்டு செயலாற்றுவதால், தமிழகத்திலும் தரணி எங்கும் தன்மானம் உள்ள தமிழர்கள் நெஞ்சில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்று இருக்கிறது. மது எனும் கொடிய…
-
- 0 replies
- 245 views
-
-
திருப்பதி: திருப்பதியில் நடைபெற்று வரும் பந்த் காரணமாக திருமலையில் சுவாமி தரிசனம் செய்யப் போன 50000 பக்தர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்தரா பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திர அரசு ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பதியில் இன்று முழு அடைப்பு நடத்தபடும் என்று போராட்ட குழுவினர் அறிவித்தனர். திருமலைக்கு எந்த வாகனங்களையும் இயக்க அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்தனர். இதனால் பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். போராட்ட குழு அறிவித்தபடி திருப்பதி திருமலையில் இன்று முழு அடை…
-
- 0 replies
- 354 views
-
-
சென்னை: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் மேற்கொள்ள உள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (24.09.2013)சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டு அரசியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக, திராவிட இயக்கத்தின் காலத் தேவைக்கான புதிய பரிமாணமாக வார்ப்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. தனது இருபது ஆண்டு கால அரசியல் பயணத்தில், இடைவிடாத போராட்டங்களால், மகத்தான தியாகத்தால், தன்னலமற்ற நேர்மை நெறியால், கணக்கற்ற அல்லல்களையும் இன்னல்களையும…
-
- 0 replies
- 253 views
-
-
சென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகள் எவை எவை, எதுகுறித்து இந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று பாஜகவின் இணையதளத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலையாய பி்ரச்சினைகள் எவை என்பது குறித்து அனைவரும் தத்தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இணையதளம் மூலம் பகிர்ந்து கொள்ளுமாறும் அது கோரியுள்ளது. மேலும் இதுதொடர்பான கேள்விகள், விளக்கங்கள், விவாதங்களையும் அது வரவேற்றுள்ளது. நரேந்திர மோடி செப்டம்பர் 26ம் தேதி திருச்சியில் நடைபெறும் இளந்தாமரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளார்.இதை பாஜக இளைஞர் மாநாடா…
-
- 0 replies
- 267 views
-
-
காம்மென் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்ககேற்க கூடாது என்று எதிர்வரும் 26 ஆம்நாள் சென்னையில் நடைபெறவுள்ள விளக்க பொதுக்கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றவுள்ளார். எதிர்வரும் 26 ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வினை சங்கதி24 இணையத்தளத்தில் (sankathi24.com)நேர ஒளிபரப்பு செய்யவுள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம் காம்மென் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடாது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் பிரச்சார பயயணம் கடந்த 20.09.2013 முதல் வாகன பிரச்சாரம். பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 20.9.2103 சீர்ககாழியில் நடைபெற்ற பிரச்சார பயணத்தின் இறுதி நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.எ ஜவாஹிருல்லா விளக்கவுரை ஆற்றியுள்ளார் 26.09.2013 சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வை…
-
- 0 replies
- 236 views
-
-
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. பெருந்துறை ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் பிரதீபா (வயது 33). இவர் பெருந்துறை பழைய பஸ்நிலையம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவரது கணவர் சிவகுமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடன் தொல்லை காரணமாக மனைவியை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் பிரதீபா தனது தாயார் சுகுணாம்பாளுடன் ஜீவாநகர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை பிரதீபா தாயாரிடம் பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் மகளின் …
-
- 0 replies
- 589 views
-
-
கடலூர்: ஜெயலலிதா பிரதமர் ஆனால் இலங்கையில் தனி ஈழம் அமையும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட அண்ணா கிராமம் ஒன்றிய அதிமுக சார்பில் நல்லூர்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், 1967ம் ஆண்டு அண்ணா தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸை விரட்டி அக்கட்சிக்கு முடிவுரை எழுதினார். அண்ணா, புரட்சித் தலைவர் வழியில் வந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா விரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் இருந்தே காங்கிரஸை விரட்டி…
-
- 0 replies
- 534 views
-
-
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வரும் மதிமுக அரசியல் ஆலோசனைக்கழு உறுப்பினர், தீர்மானக்குழு உறுப்பினர், தேர்தல் பணித் துணைச் செயலாளர்களை நியமித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த திரு. குட்டி (எ) சண்முகசிதம்பரம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார். அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினர் நியமனம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…
-
- 0 replies
- 414 views
-
-
லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு போதும் இடம்பெறாது என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியதாவது: சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டம் மூலம் முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தல் ஏற்காடு தொகுதியில் கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு எங்கள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால்…
-
- 0 replies
- 389 views
-
-
சென்னை: தமிழ்நாட்டில் மத ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்யும் யாரையும் எனது தலைமையிலான அரசு சும்மா விடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் உரை நிகழ்த்தினார். மாநில முதல்வர்களும் தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினர். …
-
- 0 replies
- 483 views
-
-
பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்காவினை தற்காலிகமாக நீக்கவேண்டும் என்று கோரி தமிழகம் புதுக்கோட்டையில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகம் புதுக்கோட்டையிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டைதோப்புக்கொள்ளையில் அமைந்துள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளை ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் அங்கீகரித்து பெயர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டிலுள்ள அகதிகளை விருப்பத்திற்கு மாறாக சிறீலங்காவிற்கு அனு…
-
- 0 replies
- 408 views
-
-
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தோடு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தேமுதிக கடந்த 2004ம் ஆண்டு துவங்கப்பட்டது. கட்சி தற்போது 9வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த 9வது ஆண்டு கொண்டாட்டம் இன்று மாலை தூத்துக்குடியில் நடக்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் மைத்துனர் சுதீஷ், குடும்பத்தாருடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இது குறித்து தேமுதிக மூத்த நிர்வாகி கூறுகையில், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதாலேயே விஜயகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்றார். சுதீஷ் தனது பிறந்தநாளையொட்டி சாமி கும்பிட விஜயகாந்துடன் சென்றார். மற்றபடி கோவிலுக்கு சென்றதற்கு வேறு எந்த…
-
- 0 replies
- 621 views
-