Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வராததால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 9 பேரை தவிர வேறு யாரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர் செல்வம் கலக்கம் அடைந்துள்ளார். சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவால் முதல்- அமைச்சராக 2 முறை அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், 3-வது முறையாகவும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் முதல்- அமைச்சர் ஆனார். ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செய…

  2. அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்: ஸ்டாலின் ஸ்டாலின் | கோப்புப் படம்: சிவ சரவணன் அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார். மேலும், ஜனநாயக விதிமீறலைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் போராட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறைகாக அறிக்கை தரவில்லை. ஜெயலலிதாவின் …

  3. இந்திய சிறப்பு முகாமில் இருந்த 10 இலங்கை தமிழர்கள் விடுதலை...! தமிழக எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நே்ற்றிரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உள்ளனர். இவர்கள், “பொய் வழக்கில் கைது செய்த எங்களை அந்த வழக்கின் தண்டனை காலம் முடிந்தும் ஏதாவது ஒரு காரணத்தைச் …

  4. ஈழத் தமிழனின் ஆவியிலும் அரசியல் பண்ணும் இந்திய அரசியல்வாதிகள்.. காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டு வாக்காளரை கவர்வதற்கு நயவஞ்சகமான வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்கான முதலாவது துரும்புச் சீட்டை சுதர்சன நாச்சியப்பன் மூலமாக போட்டுள்ளது, அவர் பேசியிருக்கும் பொன் குஞ்சு வாசகங்கள் இவைதான். ” இலங்கை என்பது தமிழர்களுக்கு சொந்தமான பூமி.. அந்தப் புண்ணிய பூமியை விட்டுவிட்டு அதற்கு எதிர்ப்பாக நீங்கள் எதைச் செய்தாலும் நாளைக்கு தமிழ் ஈழம் என்பது கனவாகவே போய்விடும் ” ” நாம் அந்தக் கனவை நனவாக்குவோம், பூமியை முதலில் கைப்பற்றுவோம், இஸ்ரேல் கைப்பற்றப்பட்டது, பாலஸ்தீனம் கைப்பற்றப்பட்டது அதுபோல இலங்கையில் உள்ள தமிழ் பூமியும் கைப்பற்றப்பட வேண்டும் என்ற…

  5. டெல்லியில் ஒரே நேரத்தில் அதிமுக அணிகள் முகாம் - கட்சி எங்களிடம்தான் இருக்கிறது: ஓபிஎஸ் கோப்புப் படம் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மனுத்தாக்கலில், அதிமுக இரு அணிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதே நேரம், ‘‘அதிமுகவில் பிளவு இல்லை. ஒன்றாக அதுவும் எங்களிடம்தான் இருக்கிறது’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டுக் கொண்டார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, …

  6. திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் மோதல்: இலங்கை அகதி கைது 15 அக்டோபர் 2013 திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில், இலங்கை அகதிகளை தடுத்துவைது கண்காணிக்க சிறப்பு முகாம் சிறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 வயதுடைய நிர்மல் ஆனந்த், மற்றும் 32 வயதுடைய இலங்கநாதன், ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது. சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு மண்டை உடைந்தது. தகவலறிந்த சிறை பொலிஸார் நிர்மல்குமாரை மீட்டு, சிறை வளாகத…

  7. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 'அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணம்' - 'இந்து' என். ராம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, என்.ராம் "அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணமெனக் கருதுகிறேன். வரவிருக்கும் தேர்தல்களிலும் தி.மு.கவின் ஆதிக்கம் தொடரும். பா.ஜ.கவை மக்கள் ஏற்கவில்லை" என்கிறார் மூத்த ஊடகவியலாளர் என். ராம். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தி இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் மூத்த பத்திரிகை…

  8. கமலின் அரசியல் எதிர்காலம் ஆர். அபிலாஷ் சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். வெளியே நல்ல மழை. நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர்.…

  9. ‘ஒரு காலத்துல நூற்றுக்கணக்கான பறவைகள் இந்தக் கரிசல் மண்ணில் சுற்றி திரிஞ்சது. ஆனா, இன்னைக்கு எதையும் பார்க்க முடியல. விளைநிலத்தை அழிச்சு, விவசாயத்துக்கு பாடை கட்டிட்டோம். மழையும் இல்லாம போயிருச்சு. மனுஷன் வாழ்க்க மாறும்போது பறவைகள் வாழ்க்கையும் மாறத்தானே செய்யும்!’’ ஆதங்கத்தோடும் வருத்தத்தோடும் மீசை தடவிப் பேசுகிறார் சோ.தர்மன். கரிசல் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு ஆய்வு நூல் என எழுதியிருக்கும் இவர், ‘காணாமல் போன கரிசல் காட்டுப் பறவைகள்’ என்கிற நூலை இப்போது எழுதியிருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் இந்த நூலில், தான் பார்த்த 68 பறவைகளின் முழு விவரணைகளை விளக்கமாகப் பதிவு செய்துள்ளார். ‘‘முன்னாடி இந்தக் கரிசல் காட்டு…

    • 0 replies
    • 531 views
  10. மிஸ் கூவாகம் 2014: விஜயவாடா சாதனா தேர்வு – ராதிகா சரத்குமார் கிரீடம் சூட்டினர். விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் விஜயவாடாவை சேர்ந்த சாதனா ''மிஸ் கூவாகம் 2014" பட்டத்தை வென்றார். விழாவில் நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்கேற்று கூவாகம் அழகிக்கு கிரீடம் சூட்டி பாராட்டினர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகள் வழிபடும் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. சித்திரை திருவிழா. உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் கூடுவது வழக்கம். 18 நாட்கள் திருவிழா. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்த…

  11. மிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி! எதிர்பார்த்த நேரத்துக்கு முன்னதாகவே நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எடப்பாடிக்கு அணை போட ஆரம்பித்துவிட்டது பி.ஜே.பி’’ என்ற படியே, நம் பதிலை எதிர்பார்க்காமல் பேச ஆரம்பித்தார். ‘‘எடப்பாடி ஆட்சியின் காவலன் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு இதுவரை பி.ஜே.பி இருந்தது. 2017 டிசம்பர் 24-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வந்தது. அன்றே, ‘எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை’ என்ற முடிவுக்கு பி.ஜே.பி வந்தது. அதிலிருந்தே இறங்குமுகம்தான். குருமூர்த்தி சர்ச்சை, கவர்னர் காட்டும் அதிரடி என எல்லாமே இதை உணர்த்து கின்றன. பிரதமர் மோடியை அழைத்து விழா நடத்த முடியாமல் தவிக்கிறார் எடப்பாடி.’’ ‘‘ஆமாம்! எம்.ஜி.ஆர் நூற்றாண்டு…

  12. புதுடெல்லி: ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான ஆபாச இணையதளங்களை முடக்க கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, இது போன்ற ஆபாச இணையதளங்களின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளது. இதனால் கட்டுப்படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளன. இத்தகைய பிரச்னைகளை தீர்க்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதனையடுத்து, பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அறிக்கையை 6 வார காலங்களில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http:…

  13. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில், இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றிப் பெற வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் பா.ஜ.க தலைமையில் ஆளும் NDA கூட்டணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் INDIA கூட்டணியும் களமாடி வருகின்றன. பா.ஜ.க - காங்கிரஸ் இந்த நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனம், இந்தியா முழுவதும் மூட் ஆஃப் தி நேஷன் ( Mood of the Nation) என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பு டிசம்பர் 15, 2023 - ஜனவரி 28, 2024 வரை, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், 35,801 பேர…

  14. 02 MAR, 2024 | 05:03 PM சென்னை: திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம். தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள்…

  15. 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமி…

  16. தெலுங்கானாவின் சுற்றுலா, தொழில், நீர் நிலைகளை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன் – தமிழிசை தெலுங்கானாவின் சுற்றுலா, தொழில், நீர் நிலைகளை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகம் மற்றும் தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய தொழில் வர்த்தகச் சங்கம் தூத்துக்குடி சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு 37 சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர் விருதுகளை வழங்கி வைத்தார். …

  17. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புலியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக சீனாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்திலிருந்து கல்வி, வர்த்தகம், மற்றும் வேலைக்காக சென்றவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய அரசு சீனாவில் உள்ள இந்தியர்களை மருத்துவ பரிசோதனை செய்து பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31 முதல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் புலியூர், வெள்ளையபுரம், பழங்குளம், வில்லாரேந்தல் ஆகிய ஊர்களை …

    • 0 replies
    • 700 views
  18. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உடன் மதுரை மேற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உ.வாசுகி | கோப்புப் படம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. பெரம்பூர் …

  19. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், காவல்துறையால் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு, 25 ஆண்டு கால சிறைத்தண்டனையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கும் வாகனப் பேரணி, வேலூரில் இருந்து சென்னைக் கோட்டையை நோக்கி கிளம்ப இருக்கிறது. நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி, கலையரசன், இயக்குநர்கள் ரஞ்சித், நவீன் உள்ளிட்டவர்கள், பேரறிவாளன் விடுதலைக்கான வாகனப் பேரணிக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர். இந்நிலையில், இதுபற்றி விரிவாகப் பேசிய இயக்குநர் ராம், " நீங்களும் நானும் வாழும் இந்த ஊர் நல்லா இருக்கணும்கிறதுதான் நம்முடைய ஆசை. 'அநீதி தோற்கணும் நீதி ஜெயிக்கணும்' னு நினைக்கின்ற வெகுளியானக் குழந்தைகள்தான் நாம். தினம்தோறும் செய்திக…

  20. அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா திட்டங்கள் பற்றி ஒரு பெரிய பட்டியல் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுநர் உரையை பொறுத்த வரையில் இது அரசினுடைய உரைதான் என்பது வெளிப்படுகிறது. இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் ஆளுநர் உரையிலே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எடுத்து சொல்லி இருக்கிற அதே நேரத்தில் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்த விளக்கமும் அதில் இடம்பெற…

  21. கொரோனா பரவல் அதிகரிப்பு : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - முதலமைச்சர் ஆலோசனை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது பதிவு: ஜூன் 24, 2020 10:54 AM சென்னை அரியலூர், திருப்பூரை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூரில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகரித்துவரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம்? சிசிச்சை விவரங்கள்? ஊரடங்கில் கட…

  22. ஒகேனக்கலில் சீறிப் பாய்ந்து வரும் காவிரி நீர் (கோப்புப் படம்) காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற வலியுறுத்தலின்பேரில் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி காவிரி நீரை திறக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. நேற்று முன்தினம் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, “3 மாதங்களாக நீரின்றி தவிக்கும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட முன்வர வேண்டும். எக்காரணம் கொண்டும் கர்நாடகா, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறுவதை அனுமதிக்க முடியாது’’…

  23. மிஸ்டர் கழுகு: நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே... ‘‘இரண்டு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைக்காத காட்சிகள் எல்லாம் இப்போது சட்டமன்றத்தில் நடக்கின்றன’’ என்ற பீடிகையோடு உள்ளே நுழைந்தார் கழுகார். அவர் ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த ‘நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...’ என்ற தலைப்பை வைத்து உருவாக்கப்பட்ட ஜூ.வி அட்டையை எடுத்து நீட்டி, ‘‘இதைத்தான் சொல்கிறீர்களா?” என்றோம். ‘‘ஆம்! ‘ஜெயலலிதா இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் தி.மு.க அதகளம் செய்துவிடும்; கேள்விகளால் முதல்வரைத் துளைத்தெடுப்பார்கள்’ என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மெரினாவில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போலீஸ் தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை ச…

  24. கட்சி பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது: நவநீதகிருஷ்ணன் சென்னை:''அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில், நீதிமன்றமோ, தேர்தல் கமிஷனோ தலையிட முடியாது,'' என, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: ஜெ., மரணம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவை யில் இருக்கும் போது, அதுகுறித்து பேசக் கூடாது. இது தொடர்பாக, பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருப்பது, சட்டப்படி தவறு; நீதிமன்ற அவமதிப்புக்கு ஆட்பட வாய்ப்புண்டு. ஜெ., மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள் உடன் இருந்தவர். முதல்வராக இருந்த இரண்டு மாதங்கள், ஏன் மவு…

  25. ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு கலவரம் வெடிக்கும் அபாயம் ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.