தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை. தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப்பற்றி இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், இலங்கை கடற்படை அதை காதிலே போட்டு கொள்வதே இல்லை. ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே…
-
- 0 replies
- 434 views
-
-
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை! தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப் பற்றி இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும், இலங்கைக் கடற்படை அதைக் காதிலே போட்டுக் கொள்வதே இல்லை. ஆண்டுதோறும் கடலில் மீன் இனப் பெருக்கத்துக்காக 45 நாட்கள் மீன் பிடிக்க விசைப் படகுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கி, கடந்த 1ந்தேதி முதல் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் தொடங்கினர். பொதுவாக விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் விட்டு ஒரு நாள்தா…
-
- 0 replies
- 597 views
-
-
ஜூன் 07, 2013 சேது சமுத்திர திட்டத்தில் அதிமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவுக்கு நற்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவே, முதலமைச்சர் ஜெயலலிதா சேதுசமுத்திர திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 18 மணி நேரமாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு அதிகர…
-
- 0 replies
- 390 views
-
-
உயிர் காக்க..! ஒன்றிணைவோம்…!! மனித இனம் காக்க… நிலம், நீர், காற்று சூழலைப் பாதுகாத்து தலைமுறைகள் தளைத்திட ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடக் கோரி 08.04.2013 திங்கள்கிழமை தூத்துக்குடியில் முழு அடைப்பு. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது (முகநூல்)
-
- 16 replies
- 1.4k views
-
-
தாம்பரம் பகுதியை சேர்ந்த வராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது மரக்காணம் கலவரத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முக்கிய காரணம். மாமல்லபுரம் சித்திரை விழாவில் பா.ம.க தலைவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சால் கலவரம் தீவிரமடைந்தது. எனவே பாமகவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாராயணன் விசாரித்து, தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15407:pmk-to-ban-the-ban-case-hc-notice-to-election-commission&catid=39:cinema&Itemid=107
-
- 0 replies
- 384 views
-
-
இந்திய நடுவண் அரசு மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி வழங்க தீர்மானித்துள்ளது. மலையாள மொழி சுமார் 3 கோடியே 30 லட்சம் பேரால் உலகம் எங்கும் பேசப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் பல உலகத் தரம் வாய்ந்த இலக்கியப் படைப்புக்களை உருவாக்கியுள்ளது. இருந்த போதும் மலையாளம் எவ்வகையில் செம்மொழியாகும் என்ற வினாவை உலகம் எங்கும் உள்ள மொழியியல் வல்லுநர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். மலையாள மொழிக்கு செம்மொழி தகுதியை வழங்கியதை கேரள அரசும், அரசியல்வாதிகளும் வரவேற்று உள்ளனர். மலையாளத்துக்கு செம்மொழி தகுதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர்கள் ஞானபீட விருது பெற்ற ஒற்றபிலாக்கல் நம்பியாடிகள் வேலு குருப் மற்றும் புதுச்சேரி ராமச்சந்திரன் போன்றோரே. ஆனால் மலையாளத்தை செம்மொழி என மலையாள இ…
-
- 0 replies
- 3.8k views
-
-
இலங்கை நோக்கி படகு பேரணி! ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு! இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களையும் விடுதலை செய்ய வற்புறுத்தி, இலங்கை நோக்கி படகுகளில் பேரணி நடத்துவது என்ற போராட்ட அறிவிப்பை ராமேசுவரம் மீனவர்கள் வெளியிட்டுள்ளனர். ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 06.06.2013 அன்று மாலை ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க சம்மேளனத்தின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களையும், படகுகளையும் வருகிற 20-ந்தேதிக்குள் விடுதலை செய்யவேண்…
-
- 1 reply
- 581 views
-
-
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தங்கம் இறக்குமதி சீரற்ற முறையில் உள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைப்பதற்கு வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அனைத்து வங்…
-
- 0 replies
- 577 views
-
-
FILE குட்கா பான்மசாலாவை தடை செய்த அரசு டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும் என்றும் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, வரும் 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வும். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என இதுவரை முடிவு செய்யவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். ஆனால் கருணாநிதி அந்த விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும். அவையில் இ…
-
- 0 replies
- 806 views
-
-
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் திங்கட்கிழமை (10-ந்தேதி) தொடங்குகிறது. ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு தேவை. இதன் அடிப்படையில் பார்த்தால் 5 எம்.பி. பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதில் 4 எம்.பி.க்கள் அ.தி.மு.க.வுக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. 5-வது எம்.பி.யை அ.தி.மு.க.வே வைத்துக் கொள்ளுமா அல்லது கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்குமா என்று தெரிய வில்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 5-வது எம்.பி. பதவியை கேட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவை மீண்டும் எம்.பி. ஆக தேர்வு செய்வதற்காக அந்த கட…
-
- 0 replies
- 457 views
-
-
எழுத்தாளர் சுஜாதா எனும் ரங்கராஜன் அவர்களைப் பற்றி அவரது மனைவி சுஜாதா அவர்கள், தனது கணவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தினகரன் நாளிதழுடன் வெளிவரும் வசந்தம் இதழுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா பற்றி ஒரு பிம்பம் உருவாக்கி வைத்து இருந்தவர்களுக்கு இதைப் படிக்கும் போது வருத்தமாகவும் அதை ஜீரணிக்க முடியாமலும் இருக்கிறது. சுஜாதா என்றில்லை எந்த பிரபலத்தின் ரசிகர்களுக்கும் இது பொருந்தும். இதன் காரணமாகவே அந்தப் பிரபலம் தவறு செய்து இருந்தாலும், அதை நியாயப்படுத்தி பேச வேண்டியதாகி விடுகிறது. கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதை புரிந்து கொண்டு அதிகம் அது பற்றி கவலைப்படாமல் இருந்து விடுவார்கள். நானும் ஒரு கணவன், இரு குழந்தைகளுக்கு…
-
- 10 replies
- 770 views
-
-
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது. வைகோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் உடனுக்குடன் பதிலளித்த வைகோ, தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது நம்பிக்கையை கொடுப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகளா என கேட்கையில், என் நெஞ்சால் நேசிக்கின்ற என் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். அவர் இருக்கின்றார். அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்று உறுதியாக பதிலளித்தார். மேலும் கேட்கப்பட்ட பல சூடான கேள்விகளும…
-
- 7 replies
- 970 views
-
-
வயதான காலத்தில் ஏராளமான குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு முதியவர் பற்றி எதற்கு எழுத வேண்டும் என்று சமீப காலமாக நான் கலைஞர் பற்றி எழுதவில்லை. ஆனால் இந்த செய்தி என்னை எழுத வைத்து விட்டது. அவரது பிறந்த நாளுக்கு போப்பாண்டவர் வாழ்த்து தெரிவித்தார் என்று மீண்டும் மீண்டும் கலைஞர் டி.வி யில் செய்தி வெளியிட்டார்கள். போப்பாண்டவர் என்ன இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதற்கு வாழ்த்து அனுப்ப வேண்டும். ஒரு வேளை இப்படி இருக்கலாம். சில கோயில்களுக்கு பணத்தை மணி ஆர்டர் அனுப்பினால், ரசீதோடு விபூதி, குங்குமம் அனுப்பி வைப்பார்கள். அது போல பணம் கட்டி வாழ்த்து வரவைத்திருக்கலாம், அல்லது பேரா…
-
- 0 replies
- 869 views
-
-
பெரம்பலூர் அருகே உள்ள எசனையை சேர்ந்தவர் துரைசாமி இவரது மகள் அமுதா (8), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த அமுதா சிறுவாச்சூர் கோயில் திருவிழாவிற்காக தனது தாய்மாமன் வேல்முருகன் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். சிறுவாச்சூர் கோயில் பகுதியில் கிடா வெட்டி பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றும் பணியை செய்து வருபவர் அதே ஊரைச்சேர்ந்த சோலைமுத்து (55). திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 5 மணியளவில் போதையில் இருந்த சோலை முத்து அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அமுதாவை நைசாக கோயிலுக்கு வடக்கு புறமுள்ள ஏரியின் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகேயிரு…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கூண்டோடு கலைத்தார் ராகுல் காந்தி. டெல்லி: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து விட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். தமிழக மாணவர் காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் பெரும் மோசடிகள், குளறுபடிகள் நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் தேர்தலில் கலையரசன் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மாணவரே இல்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும் கலையரசனை தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் ராகுல் காந்தியின் இந…
-
- 3 replies
- 1k views
-
-
இந்தியாவில் ஆளும் திறன் உள்ள ஒரே தலைவர் கருணாநிதி தான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி கலைஞர் - 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று காமராஜர் அரங்கில் முத்தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கருணாநிதி பார்வையாளர்களில் ஒருவராக இருந்து பார்த்தார். கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தியாவில் ஆளும்திறன் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான். ஒரு காலத்தில் வழிபாடு மற்றும் உணர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மொழி திராவிட இயக்கம் வந்த பிறகு போர்க்கருவியாக மாறியது. அடக்க…
-
- 6 replies
- 1.1k views
-
-
திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திடீரென்று அறிவித்துள்ளார். மரக்காணம் கலவரத்தை அடுத்து திருமாவளவன் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகி அதிமுகவோடு கூட்டணி அமைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இக்கலவரத்தில் பாமகவுடன் திமுக சற்று நெருங்கிய தொடர்பினை மேற்கொண்டு வந்தது. மருத்துவமனையில் ராமதாசை நேரில் சென்று பார்த்து தங்களது தொடர்பினை திமுகவின் தீவிரமாக்கிக் கொண்டிருந்தனர். இதுபோன்ற சூழலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அன்புமணி ராமதாஸ் மிகத் தெளிவ…
-
- 1 reply
- 466 views
-
-
இசைஞானி இளையராஜா 70 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். நேற்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போதும் இன்றுதான் அவரது பிறந்த நாள் என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார். எனவே இன்று்ம் ராஜா புகழ் பாடலாம்... 1975-ல் அன்னக்கிளி என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே, திரையிசைக்கு புதிய பரிமாணத்தைத் தந்தவர் இளையராஜா. தமிழ் சினிமா எல்லைகளைத் தாண்டி, இந்தியாவின் முக்கிய மொழிகளில் உருவாகும் சினிமாக்களில் பரீட்சார்த்தமான பல இசை முயற்சிகளை மேற்கொண்டவர். Read more at: http://tamil.oneindia.in/movies/specials/2013/06/ilayarajaa-musician-mass-176467.html இசைப் பிரம்மா இளையராஜா பற்றிய சிறு குறிப்புகள் 1)எது நல்ல இசை என்று காலம் சொல்லும்.. நான் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்?' என…
-
- 2 replies
- 2.7k views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைகிறது ; தா. பாண்டியன் வெளியேறுகிறார் ? ம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்லி எம்.பி.யாக இருப்பவர் டி.ராஜா. அவரது பதவிக்காலம் வரும் ஜுலை மாதத்தோடு முடிவடைகிறது. அந்த இடத்தில் புதியதாக யாரை நியமிப்பது என்ற போட்டி ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமை டி.ராஜாவுக்கே மீண்டும் பதவி என்றது. அதற்கு தமிழக பிரிவின் செயலாளராக இருக்கும் தா. பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் ஒருவருக்கே பதவி கொடுக்கும் போக்கு சரியல்ல என்பது அவர் தரப்பு வாதம். இந்திய கம்யூனிஸ் கட்சியில் தற்போது எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிமுக ஆதரவில் ஒரு எம்.பி. சீட்டு கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான பேச்சு வார்…
-
- 0 replies
- 701 views
-
-
சென்னை: 90வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 90 வது பிறந்தநாளையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி்க்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, கருணாநிதியின் 90வது பிறந்தநாள் மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட கருணாநிதி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி. அங்கு தொண்டர்களின் வாழ்த்துக்களை அவர் பெற்றுக் கொண்டு வருகிறார். முன்னதாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இன்று காலை கருணாநி…
-
- 1 reply
- 509 views
-
-
தயாளு அம்மாளுக்கு அல்ஜீமர் மறதி நோய்..: சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல். டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு அல்ஜீமர் எனும் மறதி நோய் உள்ளது. அவருக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. அவர் சாதாரண நிலையில் இல்லை. அவரால் சரியாக பேசவோ செயல்படவோ முடியாது.. திடீரென எதிரில் இருப்பவரை தாக்கிவிடும் நிலையில் உள்ளார். அவரது அன்றாட வாழ்க்கையே பிறரது உதவியால் நடைபெற்று வருகிறது என்று அவரது வழக்கறிஞர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநராக உள்ள தயாளு அம்மாளை சிபிஐ சாட்சிகள் பட்டியலில் சேர்த்திருந்தது. இதற்கான அவர் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆன…
-
- 9 replies
- 645 views
-
-
சென்னை: தமிழக மக்கள் தொகை எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணகெடுப்பு இன்று வெளியிடப்பட்டது அதன்படி , தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975. பெண்கள் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55.ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=15547
-
- 11 replies
- 12.8k views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:- கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் உங்கள் துணைவியார், தயாளு அம்மாளை சாட்சியம் அளிக்க நேரில் வர விலக்கு அளிக்கக் கோரிய மனுவினை தள்ளுபடி செய்து, நேரில் வர வேண்டு மென்று சி.பி.ஐ. நீதி மன்றம் டெல்லியில் உத்தரவிட்டிருப்பதைப் பற்றி? பதில்:- பொதுவாக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி எப்போதும் நான் கருத்து தெரிவிப்பது இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் என் துணைவியார் தயாளு அம்மாளுக்கு உடல் நலம் சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தியாகும். அவரால் விமானத்தில் பயணம் மேற்கொள்வதே முடியாது. ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிக்கு முன்னால் …
-
- 1 reply
- 436 views
-
-
நூறு நாள்' கூலி வேலையில் 'நாளைய டாக்டர்' காயத்ரி! Posted Date : 09:05 (30/05/2013)Last updated : 10:05 (30/05/2013) சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி அடைந்தவர்கள், அடுத்து என்னப் படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தேர்ச்சி அடையாதவர்கள் உடனடி மறு தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வறுமைக்கோட்டின் விளிம்பில் வாழக்கூடிய ஒரு கிராமத்து ஏழை மாணவி, ப்ளஸ் டூ தேர்வில் 1,129 மதிப்பெண் பெற்று, 'மேல்படிப்பு படிக்கவைக்க பெற்றோர்களால் முடியாது' என்பதை உணர்ந்து, தன் தாயோடு 100 நாள் திட்டத்தின்கீழ் கூலி வேலைக்கு போய்க்கொண்டிருகிறார். அந்த ம…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இக்காலக்கட்டங்களில் கடலில் மீன்பிடிக்க தமிழகம் முழுவதும் தடைவிதிக்கப்படும். இந்நிலையில் 45 நாட்கள் தடை காலம் முடிந்து இன்று அதிகாலை முதல் ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 800 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக நேற்று மீனவர் சங்க கூட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் அமிதாபா நந்தி பேசியதாவது:- மீனவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும். சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. மீன்பிடிக்க செல…
-
- 2 replies
- 541 views
-