Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டெல்லியில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியாவிடம் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:- 2013-14 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 37 ஆயிரம் கோடி திட்ட இலக்கை கடந்து தமிழகம் சாதனை படைக்கும். பா.ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கூற முடியாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே எங…

    • 0 replies
    • 434 views
  2. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலிலதா கண்டனம் தெரிவித்தார். அவர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து ராணுவ கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று மாலை அங்கு சென்றனர். அவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென்று குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட மலை ரெயில் முன்பு மறியல் போராட்டத…

    • 0 replies
    • 505 views
  3. கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், போராட்ட குழுவினர் பெண்களை ஆபாசமாக பேசியதாக ஒரு செய்தி பரபரப்பாக உலா வருகிறது. இதற்கு போராட்ட குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த 22 மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அணு உலைக்கு எதிரான போராட்ட குழுவை சேர்ந்த நிர்வாகிகள், பெண்களிடம் அருவருப்பகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசுவது போன்ற செய்தி அடங்கிய சி.டி.க்களை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை அனுப்புபவர் யார்? என்பது தெரியவில்லை. தபால் முத்திரை இல்லாமல் இந்த செய்தி அடங்கிய சி.டி. பார்சலை தபால் ஊழியர்களே பட்டுவாடா செய்து வருகின்றனர். இது போ…

    • 0 replies
    • 654 views
  4. நீலகிரி: குன்னூர், வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இன்று மாலை ராணுவ முகாமை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு கடந்த மாதம் 21ஆம் தேதியில் இருந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது' என மத்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில், இங்கு இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது கண்டனத்துக்குள்ளானது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு தரப்பினரும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளித்து…

  5. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜூன் 3 அன்று எனது 90-வது பிறந்த நாளினை கழக உடன் பிறப்புகள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடினர். தமிழகத்தில் தி.மு.க.வை தாண்டி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், தமிழ் மக்களும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ்க் கவிஞர் பெருமக்களும் எனது பிறந்த நாளையொட்டி பெருமை சேர்த்தனர். இந்தியத்துணை கண்டத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வாழ்த்துச் செய்திகளை கடிதம் மூலமாகவும், தந்தி மூலமாகவும், குறுஞ…

    • 5 replies
    • 658 views
  6. இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தீவுத்திடல் அருகே தென்னிந்திய படை தலைமை அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15533:in-a-demonstration-to-protest-against-the-sri-lankan-army-training&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 593 views
  7. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டு, தமிழக அரசை ``மாற்றாந்தாய்'' மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.இது குறித்து செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:- கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம்! தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை நிறைவேற்ற முயற்சித்தல் சர்க்கரை ஆலைகளின் மீதான கட்டுப்பாட்டை தளர்த்துதல்; குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கொள்முதல் செய்யும் டீசல…

    • 0 replies
    • 398 views
  8. பாகிஸ்தானில் வாஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா கொண்டு வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வருகிற இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‘‘அமெரிக்கா இந்த தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும், இது பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிரானது’’ என்று பிரதமர் நவாஸ் செரீப் சமீபத்தில் கூறினார். இந்த நிலையில், நேற்று அமெரிக்க ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15492:missile-attack-u-s-ambassador-…

  9. புதுச்சேரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. தமிழ் படத்தில் நடித்த திருநங்கை நடிகை கல்கியை இரண்டு மர்ம ஆசாமிகள் இருட்டான பக்குதிக்கு தூக்கிச் சென்று கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்று குமுறியுள்ளார் திருநங்கை நடிகை கல்கி! நர்த்தகி என்ற தமிழ் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இவருக்கு வயது 31. இவர் சிறப்பாக நடித்ததற்காக அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது பெற்றார். இவர் "சகோதரி" என்ற தொண்டு அமைப்பை நடத்தி திருநங்கைகளுக்கு பலவிதமனா சேவைகளைச் செய்துவருகிறார். இதனை பாராட்டி அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டு இவர் கவுரவிக்கப்பட்டார். இவர் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்…

    • 0 replies
    • 470 views
  10. தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை. தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப்பற்றி இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், இலங்கை கடற்படை அதை காதிலே போட்டு கொள்வதே இல்லை. ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே…

    • 0 replies
    • 435 views
  11. திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை! தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப் பற்றி இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும், இலங்கைக் கடற்படை அதைக் காதிலே போட்டுக் கொள்வதே இல்லை. ஆண்டுதோறும் கடலில் மீன் இனப் பெருக்கத்துக்காக 45 நாட்கள் மீன் பிடிக்க விசைப் படகுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கி, கடந்த 1ந்தேதி முதல் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் தொடங்கினர். பொதுவாக விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் விட்டு ஒரு நாள்தா…

  12. ஜூன் 07, 2013 சேது சமுத்திர திட்டத்தில் அதிமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவுக்கு நற்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவே, முதலமைச்சர் ஜெயலலிதா சேதுசமுத்திர திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 18 மணி நேரமாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு அதிகர…

  13. உயிர் காக்க..! ஒன்றிணைவோம்…!! மனித இனம் காக்க… நிலம், நீர், காற்று சூழலைப் பாதுகாத்து தலைமுறைகள் தளைத்திட ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடக் கோரி 08.04.2013 திங்கள்கிழமை தூத்துக்குடியில் முழு அடைப்பு. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது (முகநூல்)

    • 16 replies
    • 1.4k views
  14. தாம்பரம் பகுதியை சேர்ந்த வராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது மரக்காணம் கலவரத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முக்கிய காரணம். மாமல்லபுரம் சித்திரை விழாவில் பா.ம.க தலைவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சால் கலவரம் தீவிரமடைந்தது. எனவே பாமகவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாராயணன் விசாரித்து, தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15407:pmk-to-ban-the-ban-case-hc-notice-to-election-commission&catid=39:cinema&Itemid=107

    • 0 replies
    • 386 views
  15. இந்திய நடுவண் அரசு மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி வழங்க தீர்மானித்துள்ளது. மலையாள மொழி சுமார் 3 கோடியே 30 லட்சம் பேரால் உலகம் எங்கும் பேசப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் பல உலகத் தரம் வாய்ந்த இலக்கியப் படைப்புக்களை உருவாக்கியுள்ளது. இருந்த போதும் மலையாளம் எவ்வகையில் செம்மொழியாகும் என்ற வினாவை உலகம் எங்கும் உள்ள மொழியியல் வல்லுநர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். மலையாள மொழிக்கு செம்மொழி தகுதியை வழங்கியதை கேரள அரசும், அரசியல்வாதிகளும் வரவேற்று உள்ளனர். மலையாளத்துக்கு செம்மொழி தகுதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர்கள் ஞானபீட விருது பெற்ற ஒற்றபிலாக்கல் நம்பியாடிகள் வேலு குருப் மற்றும் புதுச்சேரி ராமச்சந்திரன் போன்றோரே. ஆனால் மலையாளத்தை செம்மொழி என மலையாள இ…

  16. இலங்கை நோக்கி படகு பேரணி! ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு! இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களையும் விடுதலை செய்ய வற்புறுத்தி, இலங்கை நோக்கி படகுகளில் பேரணி நடத்துவது என்ற போராட்ட அறிவிப்பை ராமேசுவரம் மீனவர்கள் வெளியிட்டுள்ளனர். ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 06.06.2013 அன்று மாலை ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க சம்மேளனத்தின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களையும், படகுகளையும் வருகிற 20-ந்தேதிக்குள் விடுதலை செய்யவேண்…

  17. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தங்கம் இறக்குமதி சீரற்ற முறையில் உள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைப்பதற்கு வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அனைத்து வங்…

  18. FILE குட்கா பான்மசாலாவை தடை செய்த அரசு டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும் என்றும் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, வரும் 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வும். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என இதுவரை முடிவு செய்யவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். ஆனால் கருணாநிதி அந்த விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும். அவையில் இ…

  19. தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் திங்கட்கிழமை (10-ந்தேதி) தொடங்குகிறது. ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு தேவை. இதன் அடிப்படையில் பார்த்தால் 5 எம்.பி. பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதில் 4 எம்.பி.க்கள் அ.தி.மு.க.வுக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. 5-வது எம்.பி.யை அ.தி.மு.க.வே வைத்துக் கொள்ளுமா அல்லது கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்குமா என்று தெரிய வில்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 5-வது எம்.பி. பதவியை கேட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவை மீண்டும் எம்.பி. ஆக தேர்வு செய்வதற்காக அந்த கட…

    • 0 replies
    • 459 views
  20. எழுத்தாளர் சுஜாதா எனும் ரங்கராஜன் அவர்களைப் பற்றி அவரது மனைவி சுஜாதா அவர்கள், தனது கணவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தினகரன் நாளிதழுடன் வெளிவரும் வசந்தம் இதழுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா பற்றி ஒரு பிம்பம் உருவாக்கி வைத்து இருந்தவர்களுக்கு இதைப் படிக்கும் போது வருத்தமாகவும் அதை ஜீரணிக்க முடியாமலும் இருக்கிறது. சுஜாதா என்றில்லை எந்த பிரபலத்தின் ரசிகர்களுக்கும் இது பொருந்தும். இதன் காரணமாகவே அந்தப் பிரபலம் தவறு செய்து இருந்தாலும், அதை நியாயப்படுத்தி பேச வேண்டியதாகி விடுகிறது. கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதை புரிந்து கொண்டு அதிகம் அது பற்றி கவலைப்படாமல் இருந்து விடுவார்கள். நானும் ஒரு கணவன், இரு குழந்தைகளுக்கு…

    • 10 replies
    • 773 views
  21. பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது. வைகோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் உடனுக்குடன் பதிலளித்த வைகோ, தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது நம்பிக்கையை கொடுப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகளா என கேட்கையில், என் நெஞ்சால் நேசிக்கின்ற என் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். அவர் இருக்கின்றார். அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்று உறுதியாக பதிலளித்தார். மேலும் கேட்கப்பட்ட பல சூடான கேள்விகளும…

  22. வயதான காலத்தில் ஏராளமான குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு முதியவர் பற்றி எதற்கு எழுத வேண்டும் என்று சமீப காலமாக நான் கலைஞர் பற்றி எழுதவில்லை. ஆனால் இந்த செய்தி என்னை எழுத வைத்து விட்டது. அவரது பிறந்த நாளுக்கு போப்பாண்டவர் வாழ்த்து தெரிவித்தார் என்று மீண்டும் மீண்டும் கலைஞர் டி.வி யில் செய்தி வெளியிட்டார்கள். போப்பாண்டவர் என்ன இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதற்கு வாழ்த்து அனுப்ப வேண்டும். ஒரு வேளை இப்படி இருக்கலாம். சில கோயில்களுக்கு பணத்தை மணி ஆர்டர் அனுப்பினால், ரசீதோடு விபூதி, குங்குமம் அனுப்பி வைப்பார்கள். அது போல பணம் கட்டி வாழ்த்து வரவைத்திருக்கலாம், அல்லது பேரா…

  23. பெரம்பலூர் அருகே உள்ள எசனையை சேர்ந்தவர் துரைசாமி இவரது மகள் அமுதா (8), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த அமுதா சிறுவாச்சூர் கோயில் திருவிழாவிற்காக தனது தாய்மாமன் வேல்முருகன் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். சிறுவாச்சூர் கோயில் பகுதியில் கிடா வெட்டி பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றும் பணியை செய்து வருபவர் அதே ஊரைச்சேர்ந்த சோலைமுத்து (55). திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 5 மணியளவில் போதையில் இருந்த சோலை முத்து அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அமுதாவை நைசாக கோயிலுக்கு வடக்கு புறமுள்ள ஏரியின் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகேயிரு…

    • 0 replies
    • 439 views
  24. தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கூண்டோடு கலைத்தார் ராகுல் காந்தி. டெல்லி: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து விட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். தமிழக மாணவர் காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் பெரும் மோசடிகள், குளறுபடிகள் நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் தேர்தலில் கலையரசன் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மாணவரே இல்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும் கலையரசனை தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் ராகுல் காந்தியின் இந…

  25. இந்தியாவில் ஆளும் திறன் உள்ள ஒரே தலைவர் கருணாநிதி தான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி கலைஞர் - 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று காமராஜர் அரங்கில் முத்தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கருணாநிதி பார்வையாளர்களில் ஒருவராக இருந்து பார்த்தார். கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தியாவில் ஆளும்திறன் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான். ஒரு காலத்தில் வழிபாடு மற்றும் உணர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மொழி திராவிட இயக்கம் வந்த பிறகு போர்க்கருவியாக மாறியது. அடக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.