Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நியூட்ரினோ திட்டத்தால் தேனி அருகே என்ன பாதிப்பு வரும்? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன? க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES தேனி மாவட்டத்தில் மலையைக் குடைந்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்றும், புலிகள் நடமாட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசு…

  2. கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை! இலங்கைக்கு தாரைவார்க்கப்படடுள்ள கச்சதீவினை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழ் நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். நேற்றைய மாநாட்டில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தார். குறிப்பா…

  3. ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,600 மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகருக்குள் வரக்கூடிய அனைத்து வீதிகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்துவதற்கான பணியிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் …

  4. கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் - ரூ. 100 கோடி நஷ்டத்தை எதிர்கொள்ளும் தமிழக விவசாயிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஏ.எம். சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 18 நவம்பர் 2022 கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை நம்பி தமிழ்நாட்டில் இருந்து தினமும் லட்சகணக்கான ரூபாய் மதிப்புக்கு பூக்களையும் மலர்களையும் அனுப்பி வந்த விவசாயிகள் கடுமையான வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் ரூ. 100 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். என்ன நடக்கிறது அங்கே? விரிவாக படிக்கலாம். தமிழ்நாட்டில்…

  5. தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு மசோதா: மாணவர்களை குழப்புகிறதா மு.க. ஸ்டாலினின் திமுக அரசு? சட்டப்படி சாத்தியமா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 20 நிமிடங்களுக்கு முன்னர் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தாக்கல் செய்ய உள்ளது. ` சட்ட சிக்கல்களை களையும் வகையில் மசோதா அமையுமா என்பதைப் பொறுத்தே இது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவரும்' என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவால் என்ன நடக்கும்? தலைமுடிக்கும் சோதனை இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்கள…

  6. மக்கள் விரும்பாத சசி குடும்பத்தை சுமக்காதீங்க!அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓ.பி.எஸ்., அழைப்பு ''ஜெ., எண்ணத்திற்கு மாறுபட்டு நடக்கும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், உண்மை உணர்ந்து, எங்கள் பக்கம் வர வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அவரது பேட்டி: கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்திற்குள் சென்று விடக்கூடாது என, நாங்கள் வலியுறுத்துவதால், மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இதனால், தினகரன், ஸ்டாலின் ஆகியோருக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்தின் கையில் சென்று விடக…

  7. தீ மட்டும் தான் தி.நகரில் பிரச்சினையா? சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் தீயை அணைக்கும் வீரர்கள். | படம்: க.ஸ்ரீபரத் நண்பன் பிரகாஷின் தந்தை திடீரென காலமானார். மேற்கு மாம்பலத்தில் 40 ஆண்டுகள் வசித்தவர்.அதிகாலையிலேயே உயிர் பிரிந்து விட்டது. எப்படியும் நல்லடக்கத்திற்கு உடலை எடுத்துச் செல்ல நேரம் ஆகும் என்று 10 மணிக்கு வீட்டுக்குச் சென்றேன். அதற்குள் உடலை கண்ணம்மாபேட்டைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நண்பன் திரும்பி வந்த பின் ஆறுதல் கூறிவிட்டு ஏன்டா இவ்ளோ சீக்கிரம் எடுத்திட்டு போயிட்ட என்றேன். "இல்லடா எனக்கு கஷ்டமாதான் இருந்துச்சு, ஆனா 9 மணிக்கு மேல ஆயிடுச்சுன்னா ஏரியாவுல பயங…

  8. ஜெ., ஆதரவு அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா ஏன்? ஜெ.,வால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது, அரசு வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலராக பணியாற்றி, ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடரமணன், முதல்வர் அலுவலக செயலராக பணியாற்றினார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, ஜெ.,க்கு எடுத்துரைத்து, அவருக்கு பெயர் கிடைக்க வழிவகுத்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடும் விமர்சனம் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ.,வின் நம்…

  9. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குரல் பதிவு, டிஜிட்டல் திரையில் பிரச்சாரம்: சந்தைகள், பூங்காக்கள், குடியிருப்புகளில் வாகனங்களை நிறுத்தி வாக்கு சேகரிப்பு தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் திரை பொருத்திய பிரச்சார வாகனங்களை அனுப்பி, அதன்மூலம் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குரல் பதிவை ஒளிபரப்பி பிரச்சாரம் செய்கின்றனர். படம்: பு.க.பிரவீன் கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இத்தேர்தல் பிரச்சாரத்தில் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குரல் பதிவும், டிஜிட்டல் திரைக்காட்சியும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்.6) நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால…

  10. சென்னையில் இருந்து குஜராத்துக்கு 1,000 முதலைகள் பயணம் - வாழ்விட பற்றாக்குறையை பூர்த்தி செய்யுமா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை அருகே மாமல்லபுரத்தில் 1976ல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் முதலை பண்ணை, இடநெருக்கடி மற்றும் நிதிப்பற்றாக்குறை காரணமாக, சுமார் 1,000 முதலைகளை சென்னையில் இருந்து குஜராத்தில் உள்ள ஒரு தனியார் விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் அழிந்து வரும் மூன்று வகையான முதலைகளை பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட மெட்ராஸ் முதலை வங்கி அறக்கட்டளை (Madras Crocodile Bank Trust), தற்போது உப…

  11. தனியார் பாலில் கலப்படம் நடப்பது உண்மையென்றால் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களில் பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறுகிறார், அப்படி செய்தால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு அவருடையது, பாலில் கலப்படம் உள்ளது என்றால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. எனவே பால் கலப்படம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மாடுகள் விற்க தடை விதிக்கப்பட்டிரு…

    • 0 replies
    • 266 views
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 11 அக்டோபர் 2023, 02:19 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மருத்துவ இடங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி கிடையாது என தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டை எப்படி பாதிக்கும்? இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், புதிதாக மருத்துவக் கல்லூரியைத் துவங்க வேண்டும் என்றாலோ, ஏற்கனவே உள…

  13. தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?! அரசுக்கு அடுத்த நெருக்கடி?! தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்க, எதிர்க்கட்சியான தி.மு.க முடிவெடுத்து விட்டது. அவை உரிமைக்குழு கூட்டத்தில், குட்கா பிரச்னையைக் காரணம் காட்டி, தி.மு.க. உறுப்பினர்களை நீக்கம் செய்தால், ஒட்டுமொத்தமாக அனைத்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலையிலான அரசு அறுதிப் பெரும்பான்மையை இழந்து, 'மைனாரிட்டி' அரசாகி விட்டது என்று தி.மு.க குற்றம…

  14. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை - மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு! கேரளா மனு தள்ளுபடி! டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையில் 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு விளக்கம் கோரிய கேரளாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரளா அவசர சட்டம் நிறைவேற்றியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமி…

  15. சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு தூது அனுப்பிய எம்.எல்.ஏ-க்கள்! #VikatanExclusive #OPSVsSasikala சசிகலா முகாமிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் 13 ஆக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொட்டும் உறைப்பனியிலும் தமிழக அரசியலின் பரபரப்பு கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்துக்கு நேற்று வருகைத் தந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் சந்தித்தார். அடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சந்தித்தார். இதன்பிறகு குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகம…

  16. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதம் - சென்னை போராட்டத்தில் முதல்வர்-துணை முதல்வர் பங்கேற்பு அ-அ+ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றுள்ளனர். #CauveryManagementBoard சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த …

  17. நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது? சே.பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பச்சிளம் குழந்தைகள் வீதிகள் வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய வ…

  18. ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரை செல்ல போராடும் தொழிலாளர்கள்: லாரிகளில் லிப்ட் கேட்டும், நடந்தும் 275 கி.மீ கடந்தனர் பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லப் போராடும் தொழிலாளர்கள் நடந்தும், காய்கறி லாரிகளில் லிப்ட் கேட்டும் 275 கி.மீ கடந்தனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 25ம்தேதி அதிகாலை தொடங்கி இதுவரை எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு திரும்ப வாகன வசதியின்றி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து வருகின்றனர்.இதேபோல் நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் டீக்கடை, ஹோட் டல்களில்…

  19. ஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள்விகள்! வருங்கால தமிழக முதல்வராக கனவு காணும் அரசியல்வாதிகளில் உங்கள் கனவுதான் நனவாக வாய்ப்பு அதிகம். உத்தரபிரதேசத்தில் 45 வயதில் அகிலேஷ் யாதவ் முதல்வராகிறார். அங்கே அவரது தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. இங்கே உங்கள் தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறதோ இல்லையா உங்கள் தமையனுக்கு தட்டிக் கொடுக்கும் மனப்பக்குவம் நிச்சயமாக இல்லை. 'நமக்கு நாமே...' என்று ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும் நீங்கள்' உங்கள் வீட்டில் இருந்து அதனை தொடங்குவதுதான் சரியானதாக இருக்கும். கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த உங்களுக்கு, துணை முதல்வர் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. நிச்சயமாக தமிழக வர…

  20. சென்னை நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்த இந்திய உயர் நீதிமன்றம்! சிறுவர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும் அவற்றை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்திருப்பதும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் குற்றமாகும் என்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் செயல்பாட்டில், டிஜிட்டல் சாதனங்களில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்தது. சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம் குறித்த முக்கிய தீர்ப்பில் இந்திய உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்தது. 28 வயது இளைஞர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் சிறுவர் ஆபாச படங்களை பதி…

  21. கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்! - மு.க.ஸ்டாலின் பேட்டி படம்: பிரபு காளிதாஸ் - படம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார். திரும்பிப் …

  22. பட மூலாதாரம்,TNSWA படக்குறிப்பு, சென்னையில் சதுப்பு நிலங்கள் 85% குறைந்துவிட்டதாக, உலக காட்டுயிர் நிதியம் குறிப்பிடுகிறது. எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது, காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வெளியிடும். சமீபத்தில் உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள அத்தகைய ஓர் அறிக்கையான 'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024), தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கட…

  23. சூழலியலாளர் சாந்தலா தேவி: "என்னை போலவே உடைந்திருந்த தடாகம் பள்ளத்தாக்கை மீட்க விரும்பினேன்" மோகன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMED FAZIL படக்குறிப்பு, சாந்தலா தேவி கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக 18 வயதான சாந்தலா தேவி ஆய்வு செய்து தயாரித்திருக்கும் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது. கோவை மாவட்டம் தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தலா தேவி. இவரின் தந்தை மருத்துவர் ரமேஷ். கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த இரு சக்கர சாலை விபத்து ஒன்றில் ச…

  24. கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது. அணு மின் நிலையம், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், அதிகாரிகளின் குடியிருப்பு பாதுகாப்புக்காக சுமார் 500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 8 மணி நேரச்சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அணு மின் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவுனரிடையே நேற்று நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் நேரச்சுழற்சி அடிப்பட…

  25. சென்னையை அடுத்த, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமை மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளதால், அங்குள்ளவர்கள், கும்மிடிப்பூண்டி முகாமுக்கு மாற்றக் கோரி மனு அளித்தால், அதை, அரசு பரிசீலிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி சிறப்பு முகாமில், இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமை, மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, முகாமில் இருப்பவர்களை, வேறு சிறப்பு முகாம்களுக்கு மாற்றுவது என, அரசு பரிசீலித்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உதவி இல்லாமல், என்னால் வாழ முடியாது. திருச்சி முகாமுக்கு அனுப்பக் கூடாது; கும்மிடிப்பூண்டி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.