Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்–அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு “தமிழக முதல்–அமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகள…

  2. புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு…

  3. நீட் தேர்வு: அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் வென்றது எப்படி? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,POOJA படக்குறிப்பு, பூஜா மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில் அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி பூஜா நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். தாம் படித்தது எப்படி, வெற்றி பெற தாம் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பவை குறித்து அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். …

  4. திமுக அமைச்சர் மீது தீண்டாமை குற்றச்சாட்டு - அடுத்தடுத்து எழும் சர்ச்சைகள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் காணொளி தம்மைச் சந்திக்க வந்த நரிக்குறவர் சமூகத்தின் பிரதிநிதியை தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல இலவச பேருந்து சேவை குறித்தும், பட்டியலின உள்ளாட்சி பிரதிநிதி ஒருவரை திமுக துணை பொதுச் செயலாளரும் மாநில அமைச்சருமான க. பொன்முடி பேசிய காணொளிகளும் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. …

  5. மிஸ்டர் கழுகு: “காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்!” - தமிழக அரசை எச்சரித்த கவர்னர் #WeWantCMB#GoHomeEPSnOPS ‘‘தமிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று சொன்னதன் மூலம், பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டார் ஸ்டாலின். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எழுந்த பேச்சுகளின் பரபரப்பில் இதை அறிவித்தார் ஸ்டாலின்’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்து, ‘‘கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன பேசினார்கள்?’’ என்றோம். ‘‘காவிரிப் பிரச்னைக்கான ஆலோசனைக்கூட்டம்தான் அது. தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்தாசன் பேசியபோது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தி.மு.…

  6. ஐ .நா. பொதுச் சபையில் மகிந்த ராஜபக்ஸ பங்கேற்று உரையாற்றுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்றுள்ளது. இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்ட ம.தி.மு.க தொண்டர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மகிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/_837/58/article

  7. “ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி?”: மனுஷ்ய புத்திரன் காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார். மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரன் ரஜினி நேற்று தூத்துக்குடி சென்று அளித்த மக்கள் விரோத பேட்டியை தொடர்ந்து காலாவை புறக்கணிக்க வேண்டும் என்று எழுதினேன். காலாவை தோற்கடிப்பதாக நினைத்து ரஞ்சிதை தோற்கடித்துவிடாதீர்கள் என்ற அழுகுரல்கள் ஒரு புறம். ரஜினியை தோற்கடித்து ரஞ்சித்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற போர்தந்திர அறைகூவல் இன்னொரு புறம். தூத்துக்குடியில் மக்கள் செத்ததைவி…

  8. டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படவிருக்கிறது. படத்தின் காப்புரிமை Getty Images இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டுவந்தது. ஜனவரி 23ஆம் தேதியன்று வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் சுமார் ஒன்றரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீ…

  9. தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்டுக்கள் கண்டுபிடிப்பு (காணொளி) https://www.youtube.com/watch?v=FZwu6MFcuiM

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாலசுப்ரமணியம் காளிமுத்து பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் IND-TN-12-MM-6376 எனும் பதிவு எண் கொண்ட படகில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் 12 மீனவர்கள் கடந்த அக்டோபர் 10ம் தேதி இந்தியப் பெருங்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அக்டோபர் 23ம் தேதி மாலத்தீவில் உள்ள தினதூ தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மாலத்தீவு கடற்பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்து அவர்களது படகை பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12…

  11. தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளுக்குத்தான் அதிகம் பேர் செல்கின்றனர். தமிழ்நாட்டில் 5 சதவீதக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் யாராவது ஒருவர் வெளிநாடுகளில் வேலைபார்ப்பதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் சென்டர் ஃபார் டெவலப்மெண்டல் ஸ்டடீஸ், லயோலா கல்லூரியின் சமூகவியல் பயிற்சி ஆய்வு மையம், ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இன்டர்நேஷனல் மைக்ரேஷன் ஃப்ரம் தமிழ்நாடு என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, இப்படி வெளிநாடுகளில் வசிப்பவர்களின் மூலம் தமிழகத்திற்கு மட்டும் 2013ஆ…

    • 0 replies
    • 353 views
  12. சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது சென்னையில் பெய்த கடும் மழையை அடுத்து, வெள்ள நீர் ஓடுபாதையில் புகுந்ததால், சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடல் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை) சுமார் 8 மணி வரை , மழை இருந்தாலும் விமான சேவைகள் கடினமான சூழலில் இயக்கப்பட்டன, ஆனால் இடைவிடாத மழை விமான நிலையப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டதாகக் கூறியது. ஆனால் அதற்குப்பின்னர் ஓடுபாதைகளில் தண்ணீர் சுமார் இரண்டடிக்கு உயர்ந்ததால், விமான ஓடுதளம் சுமார் மூன்று மணி நேரம…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES 26 பிப்ரவரி 2025, 02:25 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் இன்றைய ( 26/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. உணவு, சம்பளம் வழங்காமல் சித்ரவதை செய்ததாகக் கூறி ஓமனில் இருந்து படகில் தப்பி வந்த தமிழ்நாடு மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே மீன்பிடித் துறைமுகத்தின் அருகே கடல்பரப்பில் செயிண்ட் மேரீஸ் தீவு உள்ளது. இந்த தீவுப்பகுதியில் ஓமன் நாட்டுப்படகு டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும். இதனைப் பார்த்த உள்ளூர் மீனவர்கள் கடலோர காவல்ப…

  14. தமிழக முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு குடியரசுத்தலைவர் பாராட்டு விவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலேயே வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய செயற்பாடுகள் ஊடாக மக்களை கவர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதனால் மக்கள் நிலையான விவசாயத்தை கையில் எடுத்து அதன்மேல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆட்சி செயற்பாடுகள் மூலம் பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று வந்த முதலமைச்சர், இப்போது…

  15. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை - ஜெயா இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9-ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கடந்த ஐந்து ஆண்டு…

  16. UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவ…

  17. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் தினமும் பரபரப்பு தகவல்கள் வந்தவாறு உள்ளன. ஃபேஸ்புக்கில் சுவாதியின் கொலை தொடர்பாக தொடர்ந்து பல தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி என்பவர், தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். உண்மை குற்றவாளி ராம்குமார் இல்லை எனவும், கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான் எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே சுவாதியின் தந்தை அவரின் உண்மையான தந்தை இல்லை என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தமிழச்சி பதிவிட்டுள்ள …

  18. அதிர்ச்சி..! சசிகலாவின் செயல்பாடுகளால் ஜெ., விசுவாசிகள் கவர்னரை சந்திக்க தினகரன் எதற்கு என கேள்வி ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட, தன் உறவினர் தினகரனுடன் சென்று, அ.தி.மு.க., பொதுச் செயலராக, தன்னை அறிவித்துக் கொண்டுள்ள சசிகலா, கவர்னரை சந்தித்திருப்பது, கட்சியில் குடும்ப ஆதிக்கம் தொடர்வதை உறுதிப்படுத்தி உள்ளதாக, ஜெ., விசுவாசிகள் குமுறுகின்றனர். 'கட்சி உறுப்பினர்கள் இருக்கையில், உறவினரைக் கூட்டிச் சென்றது ஏன்?' என, கேள்வி எழுப்புகின்றனர். சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்ட கோபம் காரணமாக, அவரை இருமுறை வீட் டில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. கடந்த, 1996 தேர்தலில், அ.தி.மு.க., தோற்க,…

  19. ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு சசிகலா பெயருக்கு மாற்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஐதராபாத்: முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கினார். அவர் தன் வருமானத்துக்கு அதிகமான முறைகேடாக சொத்து சேர்த்ததாக வழக்கு, தொடரப்பட்டு, 21 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதாவின் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயல…

  20. யார் அந்த கறுப்பு ஆடு? கட்சியில் தேடுகிறார் ஸ்டாலின் சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடு குறித்த விபரங்களை, ஆளுங்கட்சி தரப்புக்கு, 'போட்டுக்' கொடுத்த, கறுப்பு ஆடு யாராக இருக்கும் என்ற விசாரணையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் துவக்கியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனி சாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும் பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் வித்யா சாகர் ராவ் உத்தரவிட்டார். தி.மு.க., நிலைப் பாடு குறித்து ஆலோசிக்க, சென்னையில், அக் கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், பிப்., 17ல் நடந்தத…

  21. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் சந்தித்துப் பேசியநிலையில், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் நடந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த…

  22. சசிகலா கும்பலை 'கழற்றிவிட' அமைச்சர்கள்...ஆலோசனை!: கட்சியை காப்பாற்ற முடிவெடுக்க வேண்டிய நெருக்கடி பிளவுபட்ட, அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, பழனிசாமி - பன்னீர் என, இரு தரப்பிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள், ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர். கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சசிகலாவையும், அவர் உறவினர்களையும் ஒட்டுமொத்தமாய் புறக்கணிக்க ஆலோசித்து வருகின்றனர். ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏ.,க்கள், 33 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்ட…

  23. ‘சசிகலாவின் சிறை வீடியோ வெளியானது எப்படி?’ - வில்லங்கத்தை விவரிக்கும் கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி #VikatanExclusive பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபாவை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் வீடியோக்கள் வெளியானததற்கு கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கிடையே நடக்கும் ஈகோவே காரணம் என்று சொல்லப்படுகிறது. சசிகலாவும் சிறை வீடியோவும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிமுறை மீறி சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா, பகிரங்கக…

  24. தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பாக விடுவிக்க முடியாது என்று கூறிய இலங்கை மந்திரியின் பேச்சு இந்திய அரசுக்கு விடுக்கும் சவாலாகும். இந்த கருத்தால் தமிழக மீனவர்களிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். மதவாத சக்திகள் வென்றுவிட கூடாது என்பதற்காக பா.ஜனதா கூட்டணியில் சேரக்கூடாது என்று விஜயகாந்திடம் கூறியிருந்தேன். அவர் தனது நிலைப்பாட்டை பிப்ரவர…

  25. பழனிசாமி அதிரடியில், 'பணால்' ஆன சசி குடும்பம் முதல்வர் பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை, சசிகலா குடும்பத்தினரை மிரள வைத்துள்ளது. ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 21 பேர் உதவியுடன், முதல்வர் பழனிசாமியை மிரட்டி பணிய வைக்க, சசிகலா குடும்பத்தினர் முயற்சித்தனர். அவர், மிரட்டலுக்கு பயப்படாமல், பொதுக்குழுவை கூட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியிலிருந்து, சசிகலாவை துாக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்த தினகரன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார். முதல்வராக இருந்த ஓ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.