Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்நாட்டுமுனைய மேற்கூரை இடிந்து விழுந்தது.சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்தமாதம் திறக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தின் மேற்கூரை இன்று அதிகாலை 4 மணிக்கு இடிந்து விழுந்தது. அந்த நேரம் எந்த விமானமும் தரையிறங்காததால், புறப்படாததால் பயணிகள் தப்பினர். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து ஹெச்1 மற்றும் ஹெச்2 நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. மேற்கூரை இடிந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=82591&am…

  2. கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக மே 15ல் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் சென்று மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டி வருகிறார். இதற்கிடையே இடிந்தகரையில் தாமஸ் மண்டபம் அருகே இன்று திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்தகரை மற்றும் சுற் றுப்புற கிராம மக்கள் போராடி வருகின்றனர். கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் கூடங்குளம் அணுமின்நிலையம் இயங்குவதற்கு தடை யில்லை என்று அறிவித் தது. இதையடுத்து இன் னும் ஓரிரு வாரங்களில் கூடங்குளத்தில் அணுமின்உற்பத்தி நடைபெறும் …

    • 0 replies
    • 547 views
  3. திருச்சி மத்திய சிறை வாசலில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாமல்லபுரத்தில் முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை. பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர். டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும், மந்திரிகள் வீட்டு முன்பும் அணுமதி இ…

    • 0 replies
    • 1.4k views
  4. மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் இன்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான கோர்ட்டு உத்தரவு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மகன் அ…

    • 0 replies
    • 570 views
  5. கச்சதீவு அருகே, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதில் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர். இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ``இலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக பேசி தாக்குகிறது. கச்சதீவ…

  6. கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் சாதனை கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200-க்கு 1121 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கும்பகோணம் சிறியமலர் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராமகோபாலன் பள்ளி அளவில் முதலிடமும், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர் தமிழில் 177 மதிப்பெண்கள் உட்பட மொத்தம் 1121 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ராமகோபாலன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டு மக்களுக்கு ஊழல் அற்ற நிர்வாகம் மூலம் சிறப்பான பணி செய்வதே தமது லட்சியம் என்கிறார் இராமகோபாலன். ht…

    • 0 replies
    • 370 views
  7. தர்மபுரி: ஓடும் பேருந்தில் தாயின் மடியில் உறங்கிய குழந்தை படியில் உருண்டு கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அதிசய சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சிலர் குழுவாக கோடை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்காக பேருந்து ஒன்றில் கிளம்பிய அவர்கள் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை சுற்றிப் பார்த்திருக்கிறார்கள். அதன்பின் அன்று மாலையே மேட்டூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கே.ஆர்.பி அணையை பார்க்கும் திட்டத்தோடு கிளம்பியிருக்கிறார்கள். அந்த சுற்றுலா குழுவில் உஷா என்ற பெண்ணும் அவரது 10 மாத கைக் குழந்தையான ஸ்ரீவாணியும் இருந்திருக்கிறார்கள். உஷா தன் குழந்தையுடன் பேருந்தின் படியோரத்தில் உள்ள சீட்டில் அ…

  8. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், ‘டெசோ’ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர். பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆ…

  9. 3 வழக்குகளிலும் ஜாமீன்: புழல் சிறையில் இருந்து அன்புமணி ராமதாஸ் விடுதலை பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அன்புமணி, திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி திண்டிவனம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த திண்டிவனம் கோர்ட், அன்புமணிக்கு இன்று ஜாமீன் வழங்கியது. சென்னை தி.நகரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதேபோல…

    • 0 replies
    • 454 views
  10. நெல்லை: பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற …

  11. டெல்லி: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியின் கடின உழைப்புதான் காரனம் என்று பாராட்டியிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், கர்நாடகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு கடினமாக உழைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தான் முன்னிலை வசித்தார். இந்த வெற்றிக்காக கர்நாடகாவில் சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகத்தில் ஏற்பட்ட தோல்வி என்பது பாஜகவின் சித்தாந்தத்துக்கான தோல்வியாகும். இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே பாஜக நிராகரிப்பட்டதற்கான காரணம் தெரியும். நாட்டில் ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சனை. இந்த ஊழலை அனைவரும் ஒ…

  12. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 27ம் தேதி வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in http://dge3.tn.nic.in இதில் http://dge3.tn.nic.in என்ற இணைய தளம் GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD<space><registration>,<DOB in DD/MM/YYYY> என்ற வடிவில் எஸ்எம்…

    • 0 replies
    • 436 views
  13. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு வெளியிட பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி முடிந்தது. விடைத்தாள் திருத்துவது முடிவடைந்ததும் மதிப்பெண் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி சென்னை கிண்டியில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்) மேற்கொள்ளப்பட்டது. மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடி…

    • 3 replies
    • 668 views
  14. சேலம்: சேலத்தில் காவல் நிலையம் முன்பு 7 பேர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் பைனான்சியர் சண்முகம் என்பவர் டீக்கடையில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாபு என்பவரை அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கன்டிஷன் ஜாமீனில் பாபு சிறையில் இருந்து வெளியே வந்தார். அதை தொடர்ந்து தினமும் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பத்து நாட்களாக காலையில் கையெழுத்து போட்டு வந்தார். இவருக்கு பாதுகாப்பாக அவரது உறவினர்களும் அவருடன் வருவார்களாம். அதேபோல இன்று காலை 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு கையெழுத்து போடுவதற்காக, பாபு தன்னுடைய…

  15. சென்னை: புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் Prevention of Food Adulteration Act 1954-ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்க…

  16. றைமலைநகர் அடிகளார் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் கீற்று கொட்டகையிலான கட்சி அலுவல கத்திற்கு தீ வைத்து தப்பி ஓடி விட்டனர். காற்றின் வேகத்தில் தீ மளமளவென கொட்டகை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, பேனர்கள் எரிந்து நாசமானது. கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் ஏராளமான விடுதலை சிறுத்தை பிரமுகர்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்…

    • 0 replies
    • 342 views
  17. ம.தி.மு.க.வின் இருபதாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக கடந்து வந்துள்ள பாதையை நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. நமக்கு உரிய இடத்தை தமிழக மக்கள் தந்துள்ளனர். தமிழக மக்கள் நம்மை அக்னி பரீட்சை கொண்டு பார்த்துள்ளனர். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு பல துயர சம்பவங்கள், இழப்புகள் மற்றும் அடிகளை சந்தித்து வந்துள்ளது. தமிழகம் கொடிய வறட்சியின் பிடியில் இருக்கிறது. இது அழிவை தரக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் காவிரி நீரை இ…

    • 0 replies
    • 350 views
  18. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாசும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களும் ஆற்றிய உரைகளும், அக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கும், வழியே இருந்த தாழ்த்தப்பட்டோர் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதலும், அது தொடர்பாக விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது மருத்துவர் ராமதாஸ், பா.ம.க.தலைவர் கோ.க. மணி உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்துவரும் வன்முறை நிகழ்வுகளும் மிகுந்த கவலையளிக்கிறது. மாமல்லபுரம் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான வன்மு…

  19. நீங்க சொல்லுங்க விஜயகாந்த்

    • 0 replies
    • 797 views
  20. கூடங்குளம் வழக்கு, மதுரை ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு உட்பட பழைய வழக்குகளெல்லாம் தூசி தட்டப்பட்டு ராமதாஸ் மீது போடப்படுவது, விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றம் சென்றது குறித்தெல்லம் பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன. பாமக கும்பல் கூடிய சீக்கிரத்தில் வெளியே வரக்கூடாது என்று ஜெயலலிதா இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு காரணம் என்ன? மாமல்லபுரம் வன்னியர் சங்க கூட்டத்தில் நடந்த நாடகமொன்றில் ஜெயா, சசிகலா வேடமிட்டவர்கள் பேசிய பேச்சுதான் ஜெயாவின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படி கோபப்படும்படி அந்த நாடகத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. அரசியலிலும், அறிக்கையிலும் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க முடியாதவர்கள் நாடக…

  21. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காருக்கு முன்பு சட்டையைக் கழற்றி தனது கோரிக்கையை வலியுறுத்தி போராட முயன்ற நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். நேற்று முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபை கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். தலைமைச் செயலக வளாகத்தில் அப்போது முதல்வரிடம் மனு கொடுக்க பலர் காத்திருந்தனர். அவர்களை கயிறு கட்டி பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். முதல்வர் காரில் ஏறி புறப்பட்டபோது திரண்டிருந்த அ.தி.மு.க.,வினர் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். அப்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிச்சையாண்டி என்பவர் திடீரென தன் சட்டையை கழற்றத் தொடங்கினார். அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை சுற்றி வளைத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணை நடத்தியபோது, தீயினால் பாதிக்க…

  22. சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தர விட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வராகி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி சித்திரை திருவிழா என்ற பெயரில் பா.ம.க. சார்பில் கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கலவரம் வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் காரணமாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பா.ம.க.வினரால் சேதப்படுத்தப்பட்டன. சில பேருந்…

  23. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பாஸ்போர்ட் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவானதை தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட், சில மாதங்களுக்கு முன், முடக்கி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். `சரியான காரணங்கள் இன்றி பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கக்கூடாது' என ஐகோர்ட் உத்தரவிட்டதால், பாஸ்போர்ட்டை அவரிடம் திரும்ப ஒப்படைத்தனர். அவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக, கைது வாரண்ட் உள்ளதாக, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு, நெல்லை எஸ்.பி., தெரிவித்துள்ளார். இதையடுத்து `உங்கள் பா…

    • 0 replies
    • 332 views
  24. மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன். பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கம்யூனிஸ்ட் தியாகிகள் இரணியன், ஆறுமுகம், சிவராமன் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த சிபிஐ விசாரணையில் மத்திய அமைச்சர்கள் தலையீடு இருப்பது தெரிய வந்துள்ளது. ரயில்வே அமைச்சரின் உறவினர் ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும். தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக…

    • 0 replies
    • 407 views
  25. புதுக்கோட்டையில் ம.தி. மு.க. 20-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கூடங்குளம் அணுஉலையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் எந்த பகுதியிலும் இந்த அளவிற்கு தொடர் போராட்டங்கள் நடந்தது கிடையாது. ரஷ்ய நாட்டுடன் அணு உலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே அணுஉலை அம…

    • 0 replies
    • 334 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.