Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உயிர் காக்க..! ஒன்றிணைவோம்…!! மனித இனம் காக்க… நிலம், நீர், காற்று சூழலைப் பாதுகாத்து தலைமுறைகள் தளைத்திட ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடக் கோரி 08.04.2013 திங்கள்கிழமை தூத்துக்குடியில் முழு அடைப்பு. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது (முகநூல்)

    • 16 replies
    • 1.4k views
  2. சேலத்தில் காவல்நிலையத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் . சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் காவல்நிலைய போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு பிரச்சனையில் 4 பேரை கைது செய்தனர். 4 பேரையும் காவல்துறையினர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் மருத்துவ பரிசோதனை செய்யக்கோரி மனு செய்தனர். நீதிமன்றத்திற்கு போனவர்களை போலீசார் மிரட்டியதாக, வீராணம் பொதுமக்கள் காவல்நிலையத்தை வழக்கறிஞர் ஹரிபாபு தலைமையில் முற்றுகையிட்டனர். பொதுமக்கள் காவல்நிலையத்தை பூட்டு போட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களை கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13803:saleam-new…

    • 0 replies
    • 566 views
  3. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 19 மீனவர்களை மீட்டுக் கொண்டுவர சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில், டெல்லியில் உள்ள இலங்கை தூதரிடம் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் நீதிமன்ற காவல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இது குறித்தும் இலங்கை அரசுடன் இந்த…

  4. மகாராஷ்டிர மாநிலம் தானேயில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாயினர், 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 12 தீயணைப்புக்குழுவினரும், 24-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தானேயின் ஷில் பாட்டா பகுதியில் உள்ள அந்தக்கட்டடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். சம்பவம் நடந்த போது 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தக்கட்டடத்தில் இருந்துள்ளனர். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு சட்ட விரோதமாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் மீட்கும் பணி தொடர்ந்து ந…

    • 0 replies
    • 424 views
  5. தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், வ…

  6. மாணவர்களின் பேரெழுச்சி: முன்னும் பின்னும் - யமுனா ராஜேந்திரன் அமெரிக்கத் தீர்மானத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? புகலிடத்தமிழர்கள் மேற்குநாடுகளில் வாழ்கிற அவர்தம் இயல்பினால் மேற்கத்திய அமெரிக்க அரசுகளின் வழியிலான அழுத்த அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்ள முடியும். அமெரிக்காவின் மேற்கின் எந்தவிதமான முன்னெடுப்புகள் ஆனாலும் அதனை நிராகரிக்கிற நிலைமையில் புகலிட அரசியல் என்பது இல்லை. இந்தத் தீர்மானங்கள் குறித்த தமது தயக்கங்களுடன் அவர்கள் இத்தீர்மானங்களை வரவேற்கவே செய்வர். அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தீர்மானம் குறித்து எதிர்வு கூறி இதனால் பயனேதும் இல்லை என நிராகரித்திருக்கிறார் ஈழத்தின் உள்ளிருந்து செயல்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜ…

  7. ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மீனவர்களை தாக்குவதோடு, அவர்களது வலைகள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர். 16 நாட்களாக நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2 நாட்களாகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று 580 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் பெற்றன. ஆனால் 400 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. ஒரு படகுக்கு 5 பேர் வீதம் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பி…

    • 0 replies
    • 466 views
  8. சென்னை: மதுரையில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்றும் சோழிங்கநல்லூரியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை அரசு ஏற்படுத்தி வருகிறது. மதுரை …

  9. காங்கிரஸ் கட்சியையே நாடு கடத்த வேண்டும் இம்மண்ணை விட்டு விரட்ட வேண்டும் மாணவர்கள் சாலை மறியல். பிரிவு: தமிழ் நாடு ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது....அதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டி தமிழகம் முழுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது தமிழக அரசு...பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று (ஏப்ரல் 3) தமிழக கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது . மூடியது கல்லூரியின் கதவுகள் தான் எங்கள் இதயங்கள் அல்ல! எங்கள் இதயங்களில் எரிந்து கொண்டு இருக்கும் தீ! தமிழீழம் மலர வேண்டும் என்ற கொள்கை தீ!அது இலக்கை அடையும் வரை ஓயாது! அணையாது!' என்றவாறே சேலம் வின்செண்டில் இரு…

    • 0 replies
    • 737 views
  10. என்னது மதுரையில திமுக பொதுக்கூட்டம் நடந்துச்சா? விஜய் சேதுபதி பாணியில் அழகிரி. பிரிவு: தலையங்கம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் விஜய் சேதுபதி "என்னது சிவாஜி செத்துட்டாரா? என ஆச்சரியமாக கேள்வி கேட்பார். அதுபோல கடந்த மார்ச் 30 ஆம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ள வில்லை என அழகிரியிடம் கேட்டபோது அவர் "என்னது மதுரையில திமுக பொதுக்கூட்டம் நடந்துச்சா? என ஆச்சரியமாக கேட்டார். தென்மண்டல அமைப்பு செயலாளுக்கே தெரியாமல் மதுரையில் ஒரு கூட்டம் நடந்ததா? என திமுகவினர் ஆச்சரியத்தில் உள்ளனர். ம‌துரை மாநகர் மாவட்ட தி.மு.க.வில் அழகிரி விசுவாசிகள் 15 பேருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது தி.மு.க. தலைமை. மார்ச் 30 ஆ…

    • 0 replies
    • 597 views
  11. ஜெய்ஹோ… ஜெயா ஹோ! தமிழீழம் முதல் கூடங்குளம் வரை பிரிவு: அரசியல் அண்ணாவின் ஞாபகம் அதிகமாக அம்மாவுக்கு வந்துள்ளது. ‘நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு’ என்ற அண்ணாவின் வாசகத்தை ‘கெயில்’ விவகாரத்தில் உதாரணம் காட்டினார். ‘தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இருக்காமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை’ என்று ‘ஈழத் தமிழர்’ தீர்மானத்தில் சொன்னார். இது வரை தன் வழி யில் போய்க்கொண்டு இருந்த ஜெயலலிதா, இப்போதுதான் அண்ணா வழிக்கு வந்துள்ளார். …

    • 0 replies
    • 819 views
  12. சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உள்ளிட்ட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர். ஆனால் நடிகைகள் பெரும்பாலானோர் வரவே இல்லை. இது திரைத்துறையினருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்து இருந்தனர். வெளிநாடுகளில் வரமுடியாத சூழலில் இருந்த விஜய் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார். உண்ணாவிரதத்துக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்திருந்தனர். ஆனால் உள்ளூரில் இருந்த பல நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா, காஜல் அகர்வால், அசின், அஞ்சலி, ஹன்சிகா, டாப்சி, குஷ்பு, சமந்தா, கார்த்திகா…

  13. ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள ராஜபக்சே நடத்திய இனவெறி படுகொலைகளுக்கு துணை நின்றது மட்டும் இல்லாமல் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து விருந்தளித்து பாராட்டிய மத்திய ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை S .R .P டூல்சிலிருந்து பழைய மாமல்லபுறம் சாலை (omr ) வரை மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13759:manithasankili&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 599 views
  14. நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா? நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது -------------------------------------------------------------------------- விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி நடத்தினார். எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர். அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம…

  15. தென்னிந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம்: கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல்! Posted by: Mathi Published: Wednesday, April 3, 2013, 9:59 [iST] கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டித்து தென்னிந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரைக் கண்டித்து விளம்பர தட்டிகளை துறைமுக ஊழியர்கள் வைத்துள்ளனர். மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாகவும், துறைமுக தொழ…

  16. நாளை (03.04.2013) நடக்கும் அணு உலை போராட்டத்தை ஒடுக்க இன்றே காவல்துறை அராஜகம் Tuesday 2nd April 2013 , 21:51:01 நாளை கூட்டப்புளி அருகில் உள்ள அணுமின் நகரியை முற்றுகையிடுவதாக அணு உலை போராட்டக் குழு முன்னதாக அறிவித்தது . அந்த அறிவிப்பை தொடர்ந்து இன்றே தமிழக காவ துறை ஏராளமான பேர் கூட்டப் புளி கிராமத்தை முற்றுகையிட்டனர் . அத்தோடு நின்று விடாமல் , அத்துமீறி ஊருக்குள் நுழைந்த போது, ஊர்மக்கள் அவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி உள்ளனர் . இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறை , மக்களை கலைக்கும் நோக்கில் முதலில் தடியடி நடத்தி உள்ளனர் . பின்பு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் . இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த கண்ணீர் புகை குண்டுகள் அனைத்தும் காலாவதியான குண்டுகள் என்பது…

  17. சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த முடிவு தவறு.. தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்றம் போய் மக்களுக்காக போராட வேண்டும் என திமுக கூறியுள்ளது. பாஜகவும் விஜயகாந்த் முடிவு தவறு என கருத்து தெரிவித்துள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவையில் இருந்து தமது கட்சி உறுப்பினர் ஆறு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாகச் சாடிய அவர், இந்த விவகாரத்திற்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவ…

  18. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொண்றமை தொடர்பில் காணொளி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கூடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூடலூர் பழைய நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழக்கத்தில் தீவிரவாதிகள் எதிரியிடம் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட் குப்பிகளை உட்கொள்வது அல்லது ஒருவரையொருவர் சுட்டுக்கொல்;வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். எனினும், சிறுவனை கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அழகிரி குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையும் தமிழ்ம மக்களின் க…

  19. தமிழ்நாடு, இராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் வீசி துரத்தியதால் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் தற்போது இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிறைவைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த 15 நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். இதனிடையே கடந்த 30ம் தேதி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனி…

  20. சென்னை: காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை இன்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார். சட்டசபையில் அவர் இன்று பேசுகையில், நேற்று உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட வேண்டுமென்று கூறினார் என்று சொன்னார். அப்போது உறுப்பினர் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் குறுக்கிட்டு, மகாத…

    • 6 replies
    • 877 views
  21. ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்ச நீதிமன்றம் அனுமதி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை மூட கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 28இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திலிப்பி தர்மாராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதனால…

  22. தமிழர்களை ஏமாற்றும் தமிழ் நடிகர்கள் http://youtu.be/3lEzGHKWqHU

  23. தமிழீழ விடுதலைக்கான மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த கோரி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர் பல தமிழ் ஆவலர்கள் மாணவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13717:doctor-tamileelam&catid=36:tamilnadu&Itemid=102

    • 1 reply
    • 611 views
  24. நிலத்தை இழந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த தமிழினத்தை முப்படை அமைத்து தூக்கி நிமிர்த்தியவர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் என்று சீமான் அவர்கள் இன்று திருச்சியில் நடந்துவரும் மாநாடொன்றில் சற்று முன் தெரிவித்துள்ளார். காணொளி மற்றும் விரிவான செய்திகள் விரைவில் ஈழதேசம் இணையத்தில் எதிர்பாருங்கள். -ஈழதேசம் தமிழக செய்திப்பிரிவு- http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19933:2013-03-31-17-44-11&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  25. தந்தி செய்திகள் http://youtu.be/PL8MJ_Aaktg

    • 2 replies
    • 539 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.