தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை... இரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிப்பு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வைத்தியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி வகுப்புகளுக்கான தகுதியாக 102 பொதுத்தேர்வுகள் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்படும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கின்றது. இருப்பினும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதி…
-
- 0 replies
- 350 views
-
-
‘அம்மாவைச் சந்திக்க வேண்டும்’:முருகன் இன்று மனுத்தாக்கல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன், தனது தாயாரைச் சந்திக்க அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று (15) மனுத் தாக்கல் செய்யவுள்ளார். முருகனின் சார்பில், அம்மனுவைத் தானே தாக்கல் செய்யவுள்ளதாக, அவருடைய வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். வேலூர் மத்திய சிறையில், முருகன் சிறை வைக்கப்பட்டுள்ள அறையை, பொலிஸார் அண்மையில் சோதனை செய்திருந்தனர். இதன்போது, விலையுயர்ந்த இரண்டு அலைபேசிகள், சார்ஜர் மற்றும் சிம் அட்டைகள் போன்றவை மீட்கப்பட்டன. இதையடுத்து, அவருடைய மனைவியான நளினி உள்ளிட்ட யாரையும், மூன்று மாதங…
-
- 0 replies
- 343 views
-
-
மக்களின் நம்பிக்கையை இழப்பதுதான் பேரிழப்பு! அதிமுக தன்னுடைய ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள சட்ட மன்ற உறுப்பினர்களோடு பண பேரம் நடத்தியதாகச் சொல்லப்படும் விவகாரம் தமிழகச் சட்ட மன்றத்தை ஸ்தம்பிக்க வைத்திருப்பது தமிழக அரசியலின் இழிந்த வரலாற்றின் ஒரு அத்தியாயமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தனித்துப் பார்க்க முடியவில்லை; ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் இரு பிரிவுகளும் அடுத்தடுத்து சிக்கும் முறைகேடு குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாகவே இதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மாநிலங்களின் உரிமை சார்ந்து பேச வேண்டிய ஒரு வரலாற்றுத் தருணத்தில் ஆட்சியைத் தன் கையில் வைத்திருக்கும் அதிமுகவினர் இப்படியான இழிவான குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கிவருவது அதிம…
-
- 0 replies
- 236 views
-
-
ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: உலகத்தில் மனித குலத்தின் பசி போக்கிடும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயற்கையின் அருட்கொடையான நிலத்துக்கும் பயிர் செழிக்கப் பயன்படும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாதான் தைப் பொங்கல் திருவிழாவாகும். பண்டைக்காலம் முதல் தமிழர்கள் கொண்டாடும் தேசியத் திருவிழாவாகும். அண்மைக் காலமாக விவசாயிகள் வாழ்வு கண்ணீர்க் களமாகிவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதரங்களான நதி…
-
- 0 replies
- 728 views
-
-
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்... ஓர் அலசல்! தீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பன்னீர் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் மற்றொரு அணி என பிரிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் தேர்தல் நடைபெற்றபோது, இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு வழங்க கூடாது என பன்னீர் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். அதை தொடர்ந…
-
- 0 replies
- 503 views
-
-
திருச்சி அகதிகள் முகாமில் விதைகள் சேகரித்து, மரக்கன்றுகள் வளர்த்து விநியோகிக்கும் இலங்கைத் தமிழர் ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 7 ஏப்ரல் 2022, 13:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHENDRAN சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் மரக்கன்றுகள் வளர்த்தும் விதைகளை சேகரித்தும் அதிகாரிகள் முன்னிலையில் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க …
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொண்டு வரவிருக்கும் தீர்மானம்,பெருமளவுக்கு தீர்வு காண்பதாக இருக்கும் என்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆணையக் கூட்டத்தில் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பிலும் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்…
-
- 0 replies
- 520 views
-
-
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே கருத்து வேறுபாடு! உறுதிப்படுத்தும் மைத்ரேயன் அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை என்கிறரீதியில் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அ.தி.மு.க அணிகளாகச் சிதறியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை ஒதுக்குவது என பன்னீர்செல்வத்தின் இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்ற, ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிகள் இணைந்தன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்ச…
-
- 0 replies
- 493 views
-
-
தினகரனுக்கு எதிராக நாளை டைம்பாம் வெடிக்கும்! - ரகசியத்தை உடைத்த ஹெச்.ராஜா நாளைக்கு தினகரனுக்கு எதிராக டைம்பாம் ஒன்று வெடிக்கும். அது என்னவென்று நாளை வரை பொறுத்திருந்துப் பாருங்கள்" என்று ஹெச்.ராஜா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில், தனியார் அறக்கட்டளைத் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவும் வந்தனர். ராஜா காரைக்குடி வழியாகத் தனது காரில் பயணித்து வந்தார். தமிழிசை திருச்சி மார்க்கமாகப் பயணித்து புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டுச் ச…
-
- 0 replies
- 382 views
-
-
புதிய இணையதளம் துவங்கினார் கமல்ஹாசன்! நடிகர் கமல்ஹாசன் இந்த மாதம் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளார். அதற்கு முன்னதாக அவர் அமெரிக்காவில் பலவேறு துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசி வருகிறார். இன்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து, கமலும் புதிய இணையதளம் ஒன்றை துவங்கிவுள்ளார். 'நாளை நமதே' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம். ரசிகர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இணையும் வகையில் இணையதளத்தை தொடங்கியுள்ளார். இந்த மாதம் கமல் மக்களை சந்திக்கும் திட்டத்துக்கும் ’நாளை நமதே’ என்று தான் பெயரிட்டிருந்…
-
- 0 replies
- 522 views
-
-
அனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பல முறை அனுமதி இல்லாமல் இயங்கியது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.#bansterlite #sterliteprotest சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி நகர மக்கள் இன்றுடன்(சனிக்கிழமை) சேர்த்து 104-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நட…
-
- 0 replies
- 300 views
-
-
எனக்குப் பிடித்த பத்திரிகை குமுதம்!- விகடன் பாலசுப்ரமணியன் கடைசிப் பேட்டி தமிழ் இதழியல் கண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர் எஸ்.எஸ்.பாலன் என்கிற எஸ்.பாலசுப்ரமணியன். பலரையும்போல சினிமா கனவோடு, பத்திரிகைக்கு வந்தவர் அல்ல அவர். பத்திரிகைக்காக சினிமாவை விட்டவர். 1969-ல் அவருடைய தந்தை எஸ்.எஸ்.வாசன் மறைந்தபோது, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் தலைமைப் பொறுப்பு மட்டும் அவரிடம் வரவில்லை; திரையுலகின் உச்சத்திலிருந்த ‘ஜெமினி ஸ்டுடியோ’வின் தலைமைப் பொறுப்பும் அவரிடம் வந்தது. வாசன் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் வெளியான ஜெமினி ஸ்டுடியோவின் ‘மன்சுலு மராலி’ தெலுங்குப் படம் பெரும் வெற்றி பெற்றது. பாலசுப்ரமணியன் தொடர்ந்து படங்கள் எடுத்தார், இயக்கினார். ஆனால், அவருக்குள் இருந்த பத்திரி…
-
- 0 replies
- 438 views
-
-
படக்குறிப்பு, அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. 26 ஆகஸ்ட் 2023, 02:28 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக வந்திருந்தோர் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள், 4 ஆண்கள் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, புதுச்சேரி மழை பாதிப்புகள் 8 ஜனவரி 2024 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாகவே பரவலாக கனமழை பெய்துவருகிறது. திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஜன. 07 அன்று நாள் முழுவதும் மழை தொடர்ந்தது. புதுச்சேரியிலும் மழை பெய்துவருகிறது. இன்று (ஜன. 08) மதியம் ஒரு மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில்…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி. கட்டுரை தகவல் எழுதியவர், க.மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 16 மே 2024 சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும். கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பிரமாண்ட ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த ஏரி தமிழ்நாடின் கலாசாரத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காண…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா முழுவதும், 2017 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரையிலான 5 ஆண்டுகளில், 655 என்கவுன்டர் மரணங்கள் நடந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிலும் சத்தீஸ்கர், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அசாம், ஜார்க்கண்ட், ஒடிஷா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தரவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், உத்தர பிரதே…
-
- 0 replies
- 735 views
- 1 follower
-
-
முதல் மாத சம்பளத்தை வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு நிவாரணமாக அறிவித்தார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி பாட்னா: பீகார் மாநில துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். …
-
- 0 replies
- 219 views
-
-
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் பழ.கருப்பையா: தமிழக அரசு மீது சரமாரி புகார்! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, கழிவு நீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சமாக பெருந்தொகை தரும் சூழல் உள்ளது என்றும், இயற்கை வளம் சூறையாடப்படுகிறது என்றும் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பழ.கருப்பையாவை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கினார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பழ.கருப்பையா இன்று செய்தியாளர்களை சந…
-
- 0 replies
- 813 views
-
-
1500 கோடி ரூபாய் குறித்த கேள்விக்கு டென்ஷனாகி வெளியேறிய வைகோ! (வீடியோ) பாலிமர் தொலைகாட்சி நேர்காணலின்போது, 1500 கோடி ரூபாய் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோபத்துடன் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவை காண... http://www.vikatan.com/news/politics/61297-vaiko-polymer-tv-interview-with-sullen-sensation.art
-
- 0 replies
- 526 views
-
-
ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: கலெக்டர் கதிரவன் பேட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரத்தை பார்வையிட்ட கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:- ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ஈரோடு கிழக்கு ,கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற எந்திரம் தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க தயாராக இருக்கிறார்கள் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு …
-
- 0 replies
- 285 views
-
-
`முதல்வர் பதவி மீது OPS க்கு ஆசையில்லை` ''உங்கள் யாரிடமாவது என்னை முதலமைச்சராக்க வேண்டும் என கேட்டுள்ளேனா? என ஓ பன்னீர் செல்வம் வெளிப்படையாகவே செயற்குழு கூட்டத்தில் கேட்டார்.அவருக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை’’- அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகரன் பிரத்யேக பேட்டி
-
- 0 replies
- 616 views
-
-
பொதுச் செயலாளராக நியமிக்க தடை கோரி சசிகலா புஷ்பா எம்.பி. வழக்கு: சசிகலா, அதிமுக, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் சசிகலா | கோப்புப் படம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தோழியான சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க தடை விதிக்க வேண்டும். அவருக்கு சாதகமாக கட்சி விதி களில் திருத்தம் கொண்டுவர தடை விதிக்க வேண்டும்’’ என்று அதில் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக் காக எடுத்து விசாரிக்குமாறு நீதிபதி கே.கல்யாணசுந்தரத்திடம் சசிகலா புஷ்பா சார்பில் மூத்த வழக் கறிஞர் கே.எம்.விஜயன் நேற்று காலை முறையீடு செய்தார். இதை யட…
-
- 0 replies
- 329 views
-
-
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இருவருக்கு 10 மாத பயிற்சி கடந்த 27ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், இலங்கை அதிகாரிகளை வெளியேற்ற கோரி ராணுவ முகாமை முற்றுகையிட்டன. இதைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்பி செந்தில்குமார் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:குன்னூர்…
-
- 0 replies
- 399 views
-
-
தினகரனை நெருக்கும் 'பெரா' வழக்குகள்! - அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் #VikatanExclusive ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். கூடவே, அவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளும் நெருக்கிக் கொண்டே வருகின்றன. 'பெரா வழக்குகள் நிலுவையில் இருப்பதால், டி.டி.வி தினகரனின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முன்வைத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என நம்புகிறோம்' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக ஆட்சி மன்றக் குழுவை அமைத்தார் துணைப் பொதுச் ச…
-
- 0 replies
- 512 views
-
-
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க நினைத்தால் அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்: - ராதாரவி பேச்சு [Monday 2017-08-14 08:00] தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க நினைத்தால் அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்’’ என தூத்துக்குடியில் நடந்த கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகர்.ராதாரவி பேசினார்.தூத்துக்குடி, தாளமுத்து நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேசிய நடிகர் ராதாரவி, ‘’ ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என பல அணிகளாக அ.தி.மு.க பிளவுபட்டுக் கிடக்கிறது. தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிச்சுட்டா ஓ.பி.எஸ் அணி நம்ம பக்கம் சேர்ந்துடும், அதை வச்சு இரட்டை இலை சின்னத்தை மீட்…
-
- 0 replies
- 392 views
-