தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
சிறப்புக் கட்டுரை: பாஜகவின் பரிதாப அரசியல்! மின்னம்பலம் ராஜன் குறை பாரதீய ஜனதா கட்சிக்கென்று ஒரு கொள்கை உண்டு என்பதை முதலில் கூற வேண்டும். அது என்னவென்றால் ஒரு ஒற்றை இந்து கலாச்சார, மத அடையாளம் கொண்ட இந்தியா ஒரு வல்லரசு நாடாக, உலக நாடுகளிடையே வலிமை வாய்ந்த நாடாக விளங்க வேண்டும் என்பதுதான் அது. இது நல்லதுதானே என்று பலருக்கும் தோன்றும். ஒற்றுமை, வலிமை என்பதெல்லாம் நல்ல விஷயங்கள்தானே என்று யாரும் நினைப்பார்கள். இந்த ஒற்றுமை சமத்துவத்தின் அடிப்படையில் உருவானதா அல்லது ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் உருவானதா என்பதே கேள்வி. இந்த வலிமை தேசத்தின் வலிமையா அல்லது அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் வலிமையா என்பதும் முக்கிய கேள்வி. சமத்துவத்தை அங்கீகரிக்கும் ஒற்று…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத்தமிழர்கள் துயர்துடைக்கும் அக்கறையில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து அர்பணிப்போடு நடந்து வருகிறது. மாணவர்கள் போராட்டத்தை நீர்த்து போக வைக்க, ஒடுக்க, அதை தன் கட்சியின் கணக்காக காட்ட பல சதிகளை அரசுகளும் அரசியல் கட்சிகளும் செய்ய முயற்சிக்கின்றன. இந்தச் சூழலில், தனி தனியாக போராடும் மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமும் அவசரமும்கூட. இதை மாவட்ட வாரியாக ஒருங்கிணைத்து, அதை மாநிலம் முழுக்க வழிநடத்தும் ஒரு தலைமை குழுவை உருவாக்கலாம். அந்த தலைமையை மாணர்வகளிடமிருந்தே உருவாக்க வேண்டும். மாணவர்களை ஒருங்கிணைக்க அவர்களை பின்னணியிலிருந்து வழிநடத்த, தேர்ந்த ஒரு குழு அவசியம். அதற்கான தகுதி, எப்போதும் ஈழத்தமிழர்களுக்கான துணிந்து அர்ப…
-
- 0 replies
- 425 views
-
-
ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம்: வைகோ உள்பட 5000 பேர் கைது. [படங்கள்] தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இன்று காலை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், வைகோ, நல்லக்கண்ணு, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்தனர். தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்கு ஆலை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமூக ஆர்வலர்கள் பலரும் பல ஆண்டுகளாக போராடிவருகின்றனர். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தீர்ப்பினை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு ஆலையில் இருந்து வெளியான வ…
-
- 0 replies
- 579 views
-
-
சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்ட அந்த இரண்டு பாரதிய ஜனதாவினர் இவர்கள்தானா? சுப்பிரமணியன் சுவாமி... தமிழகத்தில் ஊழல்குற்றச்சாட்டு காரணமாக ஒவ்வொரு முறை அதிரடியாக ஆட்சிமாறும் நேரத்தில் எல்லாம் அதன் பின்னணியில் இருக்கும் பெயர். 1992-ல் டான்சி நிலபேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்களில் ஒருவர். 1995-ல் அதே ஜெயலலிதாவுக்கு எதிராக நிலக்கரி ஊழல் வழக்கு, 1996-ல் சொத்துக்குவிப்பு வழக்கு என தொடர்ச்சியாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குகள் போட்டவர் சுப்பிரமணிய சுவாமி. இருபது வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களுரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்…
-
- 0 replies
- 312 views
-
-
‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட புயல், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மையம் கொண்டுள்ளது. 'அ.தி.மு.கவில் பிளவு நீடிப்பதையே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விரும்புகிறது. வி.என்.ஜானகியோடு ஜெயலலிதா முரண்பட்டபோது, இரட்டை இலை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. தற்போது அப்படியான எந்த அவசியமும் பிரதமர் மோடிக்கு இல்லை' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார் சசிகலா. ஆட்சி அதிகாரத்தை நோக்கியும் அவர் வேகம் காட்டியபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.…
-
- 0 replies
- 403 views
-
-
பா.ஜ., மீது சசி அணி பாய்வது ஏன்? அ.தி.மு.க., சசிகலா அணிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரான சசிகலா, முதல்வராக முயற்சித்த போது, அவரை பதவியேற்க அழைக்காமல், கவர்னர் தாமதம் செய்தார். அதன் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக, சசிகலா குடும்பத்தினர் சந்தேகித்தனர். சசிகலா பதவியேற்புக்கு முன், சொத்து குவிப்பு வழக் கில், உச்ச நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்ததால், அவர் சிறை சென்றார். பின், அவர் ஆதரவாளரான பழனிசாமி முதல்வரானார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கும் படி, அ.தி.மு.க., பன்னீர…
-
- 0 replies
- 364 views
-
-
நாகப்பட்டிணம்: இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து மீனவ பெண்கள் சார்பில் 10ம் தேதி ஆர்பாட்டம் நடக்கிறது. நாகை மாவட்ட மீனவர்கள் 5 விசைப்படகுகளிலும், காரைக்கால் மீனவர்கள் 4 விசைப்படகுகளிலும் என மொத்தம் 9 விசைப்படகுகளில் மீன் பிடிக்க தென்கிழக்கு பகுதி நடுகடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் 9 விசைப்படகுகளையும், 65 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கூட்டி சென்றனர். இதில் 41 பேர் நாகையை சேர்ந்தவர்கள், 24 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 34 பேர் யாழ்பாணம் சிறையிலும், 31 பேர் திரிகோணமலை சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி மீனவர்க…
-
- 0 replies
- 373 views
-
-
பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது.. ரகசிய இடத்தில் விசாரணை Vishnupriya RUpdated: Sun, Jun 20, 2021, 8:59 [IST] துணை நடிகையும் மலேசியா தூதரக அதிகாரியுமான சாந்தினி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புகாரை கொடுத்தார். அதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். யாரேன்றே தெரியாது இந்த நிலையில் சாந்தினியை தனக்கு யாரென்றே தெரியாது என மணிகண்டன் தெரிவித்திருந்தார். மேலும் ஏதோ பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது சாந்தினி சேற்றை வாரி வீசிவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சாந்தினியின் வீட்டிற்கு மணிகண்டன் அடிக்கடி வந்…
-
- 0 replies
- 480 views
-
-
சசிகலா, தினகரன் பேனர்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றம்! சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டுவருகின்றன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றார். இதையடுத்து, டி.டி.வி. தினகரன் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க, ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாகப் பிளவுப்பட்டநிலையில், இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனையடுத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் கொடுக்…
-
- 0 replies
- 403 views
-
-
சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசுக்கு வருமானவரி துறை கடிதம்: அமைச்சர்கள், அதிகாரிகள், எதிர்க்கட்சியினர் கலக்கம் சேகர் ரெட்டி பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியிடம் இருந்து லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய அரசுக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், அவர்களது வீடுகளில் மத்திய அரசின் அமைப்பு விரைவில் சோதனை நடத்தக்கூடும் என்று தெரிகிறது. லஞ்சப் பட்டியலில் எதிர்க்கட்சி பிரமுகர்களின் பெயர் களும் இருப்பதால் அவர்களும் கலக்கம் அடைந் துள்ளனர். பொதுப்பணித் துறை ஒப்பந்த தாரரும், தொழிலதிப…
-
- 0 replies
- 145 views
-
-
சென்னையில் கனமழை; 2015ஆம் ஆண்டு திரும்புகிறதா? படக்குறிப்பு, மழை வெள்ளம் தேங்கியதைப் பார்வையிடும் அமைச்சர் சேகர்பாபு. வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கன மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக மழைபெய்துவருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவில் துவங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. இதனால் சென்னை நகரின் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழ…
-
- 0 replies
- 314 views
-
-
ஏன்? அ.தி.மு.க., இரு அணி இணைப்பு தோல்வி... முதல்வர் பதவி எனக்கே' பழனிசாமி பிடிவாதம் 'முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்; பொதுச் செயலர் பதவியும் எனக்கே வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், அ.தி.மு.க., இரு அணி களின் இணைப்பு பேச்சு, தோல்வியில் முடிந் துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப் பிடி போடுவதால், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. 'அ.தி.மு.க.,வில், இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைக்கும்; தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, இரு அணிகளும் இணைய …
-
- 0 replies
- 499 views
-
-
ஜெயலலிதா மர்மம்! - யார் அந்த 17 பேர்? எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி - ஓவியம்: கார்த்திகேயன் மேடி ‘மர்ம மரணம்’ பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பது ஜெயலலிதாவின் மரணம்தான். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டு ஜெயலலிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டபோது செவிடாய் இருந்த அரசு இப்போது செவி சாய்ப்பதற்குக் காரணம் அரசியல். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் எனச் சொல்லி பலரையும் கைது செய்தார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’’ என்றார். சி.பி.ஐ. விசாரணை கோரி மக்களவையில் ஓ.பி.எஸ். எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜெயலலிதாவின் தோழி கீதாவும் இந்த விவகாரத்தை எழுப்பினார். பிரதமரிடமே நேரில் போய்ப் புகார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்பாதை: திருவண்ணாமலை விவசாயிகள் கணிசமான இழப்பீடு பெற்றது எப்படி? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் பவர் கிரிட் கார்ப்பரேஷன், டான்டிரான்ஸ்கோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் உயர் அழுத்த மின் கம்பிகளை 14 மாவட்டங்களில் அமைக்கின்றன. இந்த மின் கம்பிகள், அதற்கான உயர் மின் கோபுரங்கள் விவசாயிகளின் விளை நிலங்களில் அமைகின்றன. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததால் அவர்களால் இழப்பீடு வாங்க முடியவில்லை, வாங்கிய சிலரும் சொற்ப அளவிலேயே இழப்பீடு பெற்றுள்ளனர். ஆனால், திருவண்ணாமலை…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தால் தேமுதிக காணாமல் போய்விடும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொற்பொழிவுகள், எழுத்துகள் அடங்கிய "வெல்லும் சொல்', "என் அண்ணா', "புரட்சிக் கதிர்கள்' ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் தமிழருவி மணியன் பேசியதாவது: தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் வரும் மக்களவைத் தேர்தலில் நல்ல அணி அமைய வேண்டும். அந்த அணியில் பாஜக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் அந்த அணிதான் வெற்றி பெறும். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கும், பாஜக தலைமையிலான அணிக்கும் இடையே போட்டி இருக்கு…
-
- 0 replies
- 454 views
-
-
பாலுமகேந்திரா... தமிழ் சினிமாவின் வீடு! இயக்குநர் ராம் எங்கள் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும். சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. 'வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கியபோது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் 'வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான். அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீட…
-
- 0 replies
- 818 views
-
-
சசிகலாவின்... 15 கோடி ரூபாய் சொத்துகள், முடக்கம். பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது. அதற்கமைவாக இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்படத்தக்கது. https://athavannews.com/2022/1289189
-
- 0 replies
- 519 views
-
-
ரஜனிகாந் + அரசியல் ஆலோசகர்? தமிழருவி மணியன் + ரசிகர் சந்திப்பு + நிபந்தனைகள் = அரசியல் பிரவேச அறிவிப்பு – என்ன நடக்குது? டிசம்பர் 31ம் திகதி நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31 வரை சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பை ஒட்டி தமது நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியனுடன் ரஜினி இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். குறித்த ஆலோசனையின் பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய தகவலிலேயே தமிழருவி மணியன் ரஜினி டிசம்பர் 31ல் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்…
-
- 0 replies
- 463 views
-
-
கூட்டணிக்கு புதிய பெயர், மோதி படம் இல்லாத பேனர் - புதிய முன்னணியை அமைக்கிறதா அ.தி.மு.க? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 1 பிப்ரவரி 2023, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த ஜன…
-
- 0 replies
- 755 views
- 1 follower
-
-
பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ள மதிமுக தொண்டர்கள், அந்தக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த முதல் கட்சி மதிமுகதான். அதன்பிறகே தேமுதிக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்தன. மோடி அலையால் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த தே.ஜ. கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றமே கிட்டியது. 2 இடங்களில் மட்டுமே ( பாஜக-1, பாமக-1)வெற்றி பெற்றது. தேமுதிக, மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்ததிலேயே மதிமுகவுக்கும் பாஜகவுக்குமான உரசல் ஆர…
-
- 0 replies
- 401 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 25 ஆகஸ்ட் 2023 அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? கே. தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் என்பது என்ன? இதன் பின்னணி என்ன? ப. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டமே, காலை உணவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது. “நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் க…
-
- 0 replies
- 709 views
- 1 follower
-
-
ப.சிதம்பரம் அமுலாக்கத்துறை விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார் December 19, 2018 ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள அமுலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, 305 கோடி ரூபா வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.. இது தொடர்பில் சிபிஐ மற்றும் அமுலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் முன்னலையாகுமாறு ப.சிதம்பரத்துக்கு அமுலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந…
-
- 0 replies
- 333 views
-
-
கடலுக்குள் கான்கிரீட் ஸ்லாப்களை செயற்கை தளங்களாக வைத்து, அதன் மீது வளர்க்கப்பட்டுள்ள பவளப்பாறைகள். இந்தியாவில் பவளப்பாறை மறு உருவாக்க திட்டத்தின் வெற்றிக்கு முன்னோடியாக மன்னார் வளைகுடா பகுதி அமைந்துள்ளது. பவளப்பாறை காலனி முற்றிலும் அழிந்துபோன 8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இத்திட்டத்தால் மீண்டும் பவளப்பாறைகள் புதிதாக வளர்ச்சி அடைந்துள்ளன. பவளப்பாறைகள் இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகம் உள்ள 4 முக்கிய பகுதிகளில் மன்னார் வளை குடாவும் ஒன்று. இங்கு 21 தீவுகளைச் சுற்றிய பகுதிகளில் பவளப்பாறை காலனிகள் அதிகம் அமைந்துள்ளன. கடற்கரை பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும், சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டும் பகுதியாகவும் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. 32 சதுர க…
-
- 0 replies
- 616 views
-
-
மீனாட்சி அம்மன் கோவிலின் அருகில் பாதாள சிறை கண்டுப்பிடிப்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அருகில் பழமையான பாதாள சிறையொன்று கண்டறியப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்காக 30 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண் ஒன்று வெளிப்பட்டுள்ளது. குறித்த தூண் பாதள சிறை என்பதை உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இராணி மங்கம்மாள் காலத்தில் இது சிறைச்சாலையாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/மீனாட்சி-அம்மன்-கோவிலின்/
-
- 0 replies
- 821 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஆகஸ்ட் மாதம் கன்னிப்படல முக்கியத்துவம், கன்னித்தன்மை மற்றும் கன்னிகழிதல் போன்ற தலைப்புகளை தடயவியல் மருத்துவ பாடத் திட்டத்தில் இணைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சூழலில் பெண்களின் புனிதம், பாலியல் தூய்மை, ஒழுக்கப் பண்புகள் மீது கட்டமைக்கப்படும் எதிர்பார்ப்புகள் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் சூழலில், என்.எம்.சியின் இந்த சமீபத்திய நடவடிக்கை பல்வேறு மட்டங்களில் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மருத்துவ மற்றும் LGBTQ+ உர…
-
- 0 replies
- 996 views
- 1 follower
-