Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஏழு தமிழர்களின் விடுதலை கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் பயணம் ... இன்று அற்புதம்மாள் கோவையில் துவக்க இருக்கிறார்

    • 0 replies
    • 391 views
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பத்தூரை சேர்ந்த 32 வயது முபினாவின் செல்போனுக்கு கடந்த இரு வாரங்கள் முன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு செல்போனை பார்த்த அவருக்கு குறுஞ்செய்தியின் தகவல்கள் புரியாததால், தனது கணவரை அழைத்துள்ளார். முபினா ஃபாசிலுர்ஹ்மானின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அந்த குறுஞ்செய்தி கூறியது. அவர் 4.5 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி செலுத்தாததால், கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருப்பி செலுத்தும் வரை கணக்கை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. “வங்கிக் கணக…

  3. ஒரு மாநாடு நடத்தவே விஜய் திணறிப் போய்விட்டார்… தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து! தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அதன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே அக்டோபர் 27ம் தேதி நடத்துகிறார். இதற்கான பந்தல்கால் நடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி N ஆனந்த் இந்த பந்தல்கால் ஊன்றி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார். கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்காக ஏற்கனவே திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அது நடக்காமல் போனது. இதனால் விஜய் கட்சிக்கு மாநாடு நடத்துவதில் அழுத்தம் தரப்பட்டுள்ளது எனவும், ஒரு மாநாடு நடத்தவே …

    • 0 replies
    • 234 views
  4. மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! சென்னை மூழ்க என்ன காரணம்? ‘சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகிவிட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன. சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்ப…

  5. மும்பையில் விஜயகாந்த் 'ராக்ஸ்': வேட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்சில் தோன்றி அசத்தல் ! தமிழகத்தில் செய்தியாளர்களிடம் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி.யில் தோன்றி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி அசத்தினார். மும்பையில் 6 அணிகள் பங்கேற்கும் பிரிமீயர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் நேற்றுத் தொடங்கின. ஒர்லி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரனுக்கு சொந்தமான சென்னை ஸ்மாசர்ஸ் அணி, மும்பை ராக்கெட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை அணி 5-3 என்ற செட் கணக்கில் வெற்றி…

  6. கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் இருந்து 500 காணொளிகள் நீக்கம்! கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த 500இற்கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தளத்தை முடக்க வேண்டும் என யூ-ரியூப் நிறுவனத்திற்கு சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் தளத்தை ஒட்டுமொத்தமாக யூ-ரியூப் நிறுவனம்தான் முடக்க முடியும் என்றும் இருப்பினும் அதில் சர்ச்சைக்குரிய காணொளிகள் பல இருப்பதாலும் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகள் மேலும் ஏற்படக் கூடும் என்று கருதுவதாலும் பொதுமக்கள் யாரும் அந்தக் காணொளிகளைப் பார்க்க மு…

  7. ராஜபட்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி, கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் வேதாரண்யத்தில் நடைபெற்றது. இன்று காலை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகளில் சென்ற பேரணி, பின்னர் மீண்டும் பேருந்து நிலையத்துக்கே வந்தது. அங்கு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். http://dinamani.com/latest_news/article1495821.ece

    • 0 replies
    • 630 views
  8. “ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களில் உடன் இருந்தவர்களை விசாரிக்க வேண்டும்!” ஆவேச சசிகலா புஷ்பா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா-வின் மரணத்தில், சந்தேகமிருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பலவித சந்தேக கணைகளை வீசி வருகின்றனர். இதில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசிய ஆடியோ வாட்ஸ் அப் ஒன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த ஆடியோவில் இருக்கும் குரல் அவருடையதுதானா என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், (8-12-16) கோவையில் அதனை அவர் உறுதி செய்துள்ளார். ஜெயலலதாவின் மரணத்தில் சந்தேகம்! ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில், எங்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஜெயலலிதாவை ஒருமுறைகூட நேரில் காட்டவில்லை. ஒரு …

  9. தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது : வைகோ குற்றச்சாட்டு தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற ஹிட்லர், காந்தியைக் கொன்ற கோட்சே, ஈழப் படுகொலைக்குக் காரணமானவர்களின் படங்களைப் பகிர்பவர்களுக்குத் தடை இல்லை என வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 26ஆம் நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதையொட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர…

  10. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் ட்ராபிக் மற்றும் அங்குள்ள கூட்டத்தை கணக்கிட முடியும். அதன்படி தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ். 2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowd sourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித…

  11. தே.மு.தி.க.வை சேர்ந்த மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர்வரை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இதனால் தே.மு.தி.க தலைவர் வியகாந்த் உட்பட தே.மு.தி.க வினர் அதிர்ச்சியில் உள்ளது. சென்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. ஆனால் இந்த கூட்டணி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இதையடுத்து, தே.மு.தி.க உடைக்கும் முயற்சியில் அ.தி.மு.க ஈடுபட்டது. அதிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று வருகிறது. தொகுதி வளர்ச்சிக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதாக இதுவரை தே.மு.தி.க.வை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க பக்கம் சென்று விட்டனர். இவர்களை போல் மேலும் பல தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க ஈ…

    • 0 replies
    • 501 views
  12. சசிகலா - ஓபிஎஸ் அணிகள் மோதலால் நெருக்கடி: உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை இருக்குமா? இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள் கட்சி பிரச்சினையால் உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராகவும், அக் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். இதை யடுத்து, அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும்…

  13. ‘சசிகலா பெயரை ஏன் தவிர்க்கிறார் தினகரன்?!’ - ஆர்.கே.நகர் கலவர நிலவரம் ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் நடந்து முடியும் வரையில், தொகுதி மக்களுக்கு நிம்மதியான உறக்கம் என்பது கேள்விக்குறிதான். ‘அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா பெயரைச் சொல்லாமலேயே தொகுதிக்குள் வலம் வருகிறார் தினகரன். கட்சித் தலைமையின் பெயரை மறைப்பது, சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துகிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தண்டையார்பேட்டையில், தினகரன் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடந்தது. ‘பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக உறுதியான தகவல் வந்ததன் அடிப்படையிலேயே சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது. தே…

  14. “நான் இவரிடம்தான் பணம் கொடுத்தேன்...!” : விஜயபாஸ்கர் வாக்குமூலம் நேற்று (08.04.2017) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பிறந்த நாள்! பாவம், மனுஷன் ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார். விஜயபாஸ்கரின் வீடு, ஆபீஸ்... என்று ஆரம்பித்து அவரது நண்பர்கள், உறவினர்கள், உதவியாளர்கள் ஆகியோரது வீடுகள் மற்றும் அவரது சொந்தக் கிராமத்து வீடு... என்று மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து, ரெய்டின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறி சில டாக்குமெண்டுகள் தொலைக்காட்சிகளில் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் செய்தது யார்? தொலைக்காட்சிகளில் வெளியான டாக்குமென்டுளில், 'ஆர்.கே நகர் தொகுதியில்…

  15. ஓட்டம்? ஜெ., பங்களா கொள்ளை; முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்? கோடநாடுக்கு கூலிப்படையினரை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மரக்கடத்தல், 'மாபியா' கும்பலின் தலைவன், முன்கூட்டியே வெளிநாடுக்கு தப்பியோடியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்து, கோர்ட்டில் சமர்ப்பித்த சொத்து பட்டியலில், வரிசை எண், 166ல் இடம் பெற்றிருந்தது, 900 ஏக்கர் பரப்புள்ள, கோடநாடு எஸ்டேட். ஜெ., மறைவுக்கு பின், இது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த எஸ்டேட்டை விட, 99 அறைகள், 48 ஆயிரம் சதுர அடி பரப்பில், அங்கு …

  16. மேடையிலேயே மயங்கி விழுந்தார் வைகோ! பரபரப்பில் கதிராமங்கலம் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கதிராமங்கலத்தை நோக்கி பேரணி சென்றார். பின்னர் அவருக்காக அமைக்கப்பட்ட மேடையில் பேசும்போது திடீரென மயங்கி விழுந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சிக்கு எதிராகவும், கடந்த 30ம் தேதி கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் 10-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் இன்று, கதிராமங்கலம் மக்களைச் சந்திக்க வைகோ, முத்தரசன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கதிராமங்கலம் வந்தடைந்தனர். கிராம மக்களைச் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்த அவர்கள், ப…

  17. பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்புகளை விழுங்கும் சிறுபான்மை பார்ப்பனர்கள்! “தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருந்தாலும், தற்போது அரசியல், வேலைவாய்ப்புகளில் பார்ப்பனர்கள் அதிகம் இல்லை’’ என்ற பத்திரி சேஷாத்திரிகளின் புலம்பல் ஒரு பக்கம். 4 சதவீதம் உள்ள நாங்கள் 60 சதவீத பதவிகளை அனுபவித்து வருகிறோம் என்று இணையத்தில் ஒரு பார்ப்பனரின் திமிர் மிகுந்த பதிவு மறுபக்கம். எத்தனைக் காலத்திற்கு இடஒதுக்கீடு? இனி இடஒதுக்கீடே வேண்டாம் என்று சில அரைவேக்காடுகளின் கோரிக்கை இன்னொரு பக்கம். மத்தியில் மதவாத பா.ஜ.க. ஆட்சி பெரும்பான்மையுடன் அமைந்தது முதல் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்குக் காரணமான இடஒதுக்கீட்டை எப்ப…

    • 0 replies
    • 1.4k views
  18. இதற்குதானே ஆசைப்பட்டாய் முதல்வனே... மத்­த­ளத்­துக்கு இரண்டு பக்கம் அடி என்றால் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு நாலா பக்­கமும் அடி விழுந்து கொண்­டி­ருக்­கி­றது... தின­கரன் சொல்­வது போல எடப்­பாடி முதல்வர் பத­விக்கு வந்­தது ஒரு விபத்­துத்தான். அண்­ணாவும் கலை­ஞரும் எம்.ஜி.ஆரும் இறு­தி­யாக ஜெ. யும் அமர்ந்து ஆட்சி புரிந்த முதல்­வரின் சிம்­மா­ச­னத்தில் சசி­க­லாவின் குடும்ப தயவால் மாத்­தி­ரமே முதல்­வ­ரா­கி­யவர் எடப்­பாடி. இவர் ஜெய­ல­லிதா போல தி.மு.க.தலைவர் கரு­ணா­நி­தி­யுடன் போட்­டி­யிட்டு தேர்­தலில் வெற்­றி­பெறும் அளவு வல்­லமை படைத்­தவர் இல்லை. ஜெய­ல­லிதா உயி­ருடன் இருக்கும் வரை காலையில் இருக்கும் அமைச்­ச­ரவை மாலையில் இருக்­காது. அடிக்­கடி அமைச்­சர்­களின் பதவியை ப…

  19. “ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!" சீக்ரெட் சொல்கிறார் எம்.பி. நாகராஜன் ஜெயலலிதா இருக்கும்போது, ‘இவர்களுக்கெல்லாம் பேச்சு வருமா?’ என்று சந்தேகப்படும்படி இருந்த பலரும் தினம்தோறும் கொடுக்கிற அதிரடி பேட்டிகளால் அ.தி.மு.க மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகமும் திணறுகிறது. இந்நிலையில், ‘‘நான் உண்மைகளை வெளியிட்டால் ஆட்சிக்கு நெருக்கடி உருவாகும். என் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படும். அந்த அளவுக்கு உண்மைகள் என்னிடம் புதைந்துள்ளன’’ என அதிர வைத்திருக்கிறார் கோவை எம்.பி. நாகராஜன். உயிருக்கே ஆபத்து வரும் அளவுக்கு என்ன ரகசியத்தை வைத்திருக்கிறார் அவர்? கோவை கோவில்பாளையத்தில் உள்ள நாகராஜனின் வீட்டுக்குச் சென்றோம். எம்.பி என்பதற்கான எந்த அடையாளமும் இ…

  20. விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாள் கழித்து புதைக்கப்பட்ட பட்டியலின பெண் உடல் - சுடுகாடு இல்லாத அவலம் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 21 மே 2022, 10:59 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, உயிரிழந்த அமுதா விக்கிரவாண்டி அருகே புதைக்க இடம் இல்லாத நிலையில், பட்டியல் சமூகத்தை சார்ந்தவரின் உடலைத் தங்கள் கோயில் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இறந்த மூன்றாம் நாளே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் மாற்றாக வேறு இடம் வேண்டும் என்ற உறுதியை அரசு அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு,…

  21. காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு - கர்நாடகா சண்டை சென்னை: ரசகுல்லா மேற்கு வங்கத்திற்கு சொந்தமா அல்லது ஒடிசாவுக்கா என்ற சர்ச்சை வெடித்துள்ள சூழலில், இப்போது, தமிழகமும், கர்நாடகாவும், மைசூர் பாக் யாருக்கு சொந்தமானது என்ற கோதாவில் களமிறங்கியுள்ளன. புவிசார் குறியீடுக்கு இந்த கேள்வி அவசியம் என்பதால், சோஷியல் மீடியாவில் தமிழ் மற்றும் கன்னட நெட்டிசன்கள் இதற்காக மோதிக்கொண்டுள்ளனர். 1835ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியின்போது, மெக்காலே பிரபு மைசூர் பாக் குறித்து பேசியுள்ளதாக ஆதாரத்தை எடுத்து வைக்கிறார்கள் தமிழ் நெட்டிசன்கள். மெக்காலே சொல்லிட்டாருங்கோ இந்திய நாடாளுமன்றத்தில் மெக்காலே மைசூர் பாக் குறித்து பேசியுள்ளாராம். மெட்ராஸ்…

  22. புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி உள்பட 19 பேருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என சிஏஜி குற்றம்சாட்டியிருந்தது. மேலும், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு விசாரணை …

  23. சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஏற்கனவே பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வரும் நிலையில், மே 1 முதல் சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் பல மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பல மணி நேர மின் வெட்டு நிலவி வந்தது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக மின் வெட்டு குறைந்திருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், வழக்கம் போல சென்னையில் 2 மணி நேர மின்வெட்டும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பல மணி நேர மின்வெட்டும் அமலுக்கு வருகிறது. மற்ற மாவட்டங்களில் எத்தனை மணி நேரம்? மற்றமாவட்டங்களில் எத்தனை மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்பதை மின்வார…

  24. தமிழக ஸ்டூடியோ புகைப்படங்களை காப்பாற்ற இணைந்த கைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO தமிழகம் முழுவதும் உள்ள நூறு பழமையான போட்டோ ஸ்டூடியோகளில் உள்ள அறிய புகைப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் நிதியுதவியுடன் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சு ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுத்துவருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் இந்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.