தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
விடுதலைப்புலிகளும், தலிபான்களும் ஒன்று என்பது போல பேசிய டைரக்டர் அமீரை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் தணிக்கை துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு படத்திற்கு சான்று அளிப்பதாக ஒரு குண்டை தூக்கி போட்ட டைரக்டர் அமீர், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை, தலிபான்கள் தான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் இனத்திற்கு எப்படி விடுதலை புலிகள் போராடுகின்றனரோ அதேப்போலத்தான் தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் பிரச்னை எழுப்புவது போல பேசியிருந்தார். இந்நிலையில், இந்து மக…
-
- 3 replies
- 702 views
-
-
தமிழக மீனவர்கள் கடற்படையினர் தாக்குதல்: மீனவருக்கு எலும்பு முறிவு By General 2013-03-10 11:19:21 காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் மீனவர்கள் தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(53). அவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(23), கருப்பையா(48), கண்ணப்பன்(63), பொன்னுசாமி(49), வைரக்கண்ணு(43) ஆகிய 6 பேர் கடந்த 5-ஆம் திகதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வெள்ளிக்கிழமை காலை அவர்கள் நாகை மாவட்டம், கோடியக்கரைக்குக் கிழக்கே…
-
- 0 replies
- 503 views
-
-
டெல்லியில் நடந்த டெசோ மாநாடு தோல்வி என்றும் அதனால் பந்த் நடைபெறாது என்றும் செய்திகளை ஊடகங்கள் பரப்புகிறது , ஆனால் எக்காரணம் கொண்டும் பந்த் நடைபெறும் என்று அறிவாலய அறிக்கை செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன . அவர்களின் அறிக்கையின் சாராம்சம் இதோ : 7-3-2013 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 'டெசோ’ கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் திட்டமிட்டு எழுதி வருகின்றன. நாம் முன்வைத்த எந்தக் கோரிக்கையிலிருந்தும் பின்வாங்காத வரை நமக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. நாம் பல்வேறு கட்சிகளை அக்கருத்தரங்கிற்கு அழைத்திருந்தோம். இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கருத்தரங்கில் பங்கேற்றன. இவர்கள் அனைவரும் சென்…
-
- 0 replies
- 615 views
-
-
மநாதபுரம் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் இலங்கையில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொலை குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா.சபையில் ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் 2 நாட்களாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 08.03.2013 வெள்ளிக்கிழமை காலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் சங்க உதவி தலைவர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வங்க முன்னாள் தலைவர்கள் குணசேகரன், தமிழரசு, வக்கீல்கள் கருணாகரன், சேக் இபுராகீம், உது மான், ஹாலித், முருகேசன், முருகபூபதி, அர்சத…
-
- 1 reply
- 396 views
-
-
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை,இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது. கடற்படையினரால் எந்த ஒரு தரப்புக்கு எதிராகவும் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படவில்லை என்று உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் கோடிக்கரை பகுதியில் வைத்து கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரமும் இவ்வாறு அத்துமீறி நுழைந்த 16 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tam…
-
- 0 replies
- 677 views
-
-
காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காவேரி பாசன விவசாயிகள் சார்பில் 9.3.2013 இன்று தஞ்சாவூரில் நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஆற்றிய உரை: காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியதற்காக எனக்கு நன்றி தெரிவிக்கும் விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்; இதை தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே; தமிழக விவசாயிகளுக்கு, குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன். இதில் எனக்கிருக்கும் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும்; உங்களையெல்லாம் நேரில் சந்திப்பதற்காகவும் தான், இந்த நன்றி தெரி…
-
- 1 reply
- 969 views
-
-
மதுரை குலமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தபால்தந்தி நகரைச் சேர்ந்த ஹெரன்ஸ் (வயது51), ஆத்திக்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புறநகர் செயலாளர் பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார். போலீசார் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் ஹெரன்ஸ், விஜயகுமார் ஆகிய இருவரையும் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தில் கூடல்நகர் போலீசார் கைது செய்தனர். கைதான ஆசிரியர்களை போலீசார் …
-
- 0 replies
- 846 views
-
-
அம்மாவின் அதிரடி ஆட்டம் பலிக்குமா? சந்திர. பிரவீண்குமார் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரமுகர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரடியாகச் சந்தித்து "ஆலோசனை" செய்வதால் பொதுக்குழுவை கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் ஆவலுடன் எதிர்நோக்குவது வழக்கம். அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயலலிதா இந்த கூட்டத்தில் அதிரடியான அறிவிப்புகளை வெளியிடுவதால் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்த பொதுக்குழுவிலும் அறிவிப்பு அமர்க்களப்படுத்தியது. இந்தக் கூட்டத்தில்தான், 'வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உட்பட யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது.…
-
- 0 replies
- 851 views
-
-
கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமைக்கும் குஷ்புவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல கடந்த 5 வாரங்களாகவே தொடர்ந்து குஷ்புவைப் பற்றி தகவல்கள் வாரஇதழ்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு ஆனந்த விகடனில் குஷ்பு பதில் சொன்னதால் திமுக வினர் கல்வீசி தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு. இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதவே அதற்கும் டுவிட்டரில…
-
- 0 replies
- 1.6k views
-
-
கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் குமார். இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் குமார் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஆல்லைன் மூலம் 29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது. அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவரின் மனைவியின் கணக்கிற்கு இவ்வளவு பணம் ஒரே நேரத்தில் வந்ததால், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வங்கியின் அதிகாரிகள், அம்பிகா மற்றும் அவரது கணவர் கும…
-
- 0 replies
- 641 views
-
-
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில் இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில், அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 1ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 5 நாட்களாக கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டு நேற்று முன்தினம் காரைக்காலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.10க்கு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே வந்தபோது, இலங்கை கடற்படையினர் 10 பேர் ஒரு படகில் வந்தனர்.அவர்கள் துப்பாக்கியை காட்டி, படகில் இருக்கும் மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் கடலில் போடுமாறு மிரட்டினர். மீனவ…
-
- 0 replies
- 784 views
-
-
கூடங்குளம் பஞ்சாயத்து தலைவரின் மனைவிக்கு லண்டனில் இருந்து ஆன்லைனில் வந்த 30 இலட்சம் ரூபா - புதிய சர்ச்சை வெடித்தது! [Friday, 2013-03-08 18:56:32] கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் குமார். இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் குமார் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது. அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவரின் மனைவியின் கணக்கிற்கு இவ்வளவு பணம் ஒரே நேரத்தில் வந்ததால், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நாவில் பசுமை தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பசுமை தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை ஜனாதிபதி மற்றும் அவனரது கூட்டாளிகள் மீது போர்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத…
-
- 0 replies
- 836 views
-
-
1,76,000 கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துள்ளது என்று கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் விசாரிக்க அல்லது சாட்சியம் அளிக்க அழைக்கவில்லை எனபது சர்ச்சை ஆனது . இப்போது அதில் ஏற்பட்ட முநேற்றமாக , 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு அனுமதி அளித்துள்ளது. இந்த ஊழல் புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. இந்த கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்குத் தணிக்கை துறை அதிகாரி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அ…
-
- 0 replies
- 491 views
-
-
தமிழகம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இந்திய கடற்படையினரின் பணி என்னவாக உள்ளதென பாஜக கேள்வியெழுப்பியுள்ளது. காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை புதுவை மாநில பாஜக செயலர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். பிறகு அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது : ஜெனீவாவில் ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய ஆதரிக்கவேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை தங்களது நிலைபாட்டை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை மறைம…
-
- 0 replies
- 518 views
-
-
நேற்று டெல்லியில் நடந்த டெசோ கருத்தரங்கில் தி.மு.க வை தவிர மற்ற முக்கிய அரசியல் கட்சிகளில் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. முக்கியமாக காங்கிரஸ் தரப்பிலான உறுப்பினர்களின் வருகை திமுக வுக்கு ஏமாற்றம் தருவதாகவே இருந்தது. டெசொ கருத்தரங்கிற்கு அகில இந்திய அளவிலான பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்தரங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ஞானதேசிகன், எம்.பி-கள் என்.எஸ்.வி. சித்தன், ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜவாதி உள்ளிட்ட பிரதான கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரத்யேக வரவேற்கப்பட்ட போதிலும் திமு…
-
- 0 replies
- 983 views
-
-
sonia gandhiபாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சனைபற்றி 07.03.2013 வியாழக்கிழமை சிறப்பு விவாதம் நடந்தது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:- இலங்கை தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா? மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும் என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதை தெளிவுபடுத்துங்கள். (காங்கிரஸ் தல…
-
- 4 replies
- 887 views
-
-
சென்னை உயர்நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13204:road-chennai&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 558 views
-
-
பா ஜ க செயல் குழு கூட்டத்தில் பேசி இருந்த குஜராத் முதல்வர் மோடி , பிரதமரை சோனியா வீட்டை காவல் காக்கும் இரவு காவல்காரன் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் . அதற்க்கு பதில் அளித்து பிரதமர் நேற்று பேசுகையில் , பா ஜ க வின் ஆணவ பேச்சு மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைக்கும் என்று சொல்லி இருந்தார் . அதற்க்கு பதில் அளித்து , பேசிய பா ஜ க வின் செய்தி தொடர்பாளர் , பிரகாஷ் ஜாவேத்கர் (Prakash Javedkar) பிரதமரின் பகல் கனவு காணும் உரிமையை யாரும் மறுக்க முடியாது என்றார் . அது மட்டும் இல்லாமல் இப்படித்தான் பா ஜ க 2004 மற்றும் 2009 இல் கூட அத்வானி இரும்பு மனிதர் என்று பிரச்சாரம் செய்தது ஆனால் அவர்களால ஆட்சி அதிகாரத்தை பெற இயலவில்லை மாறாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந…
-
- 1 reply
- 436 views
-
-
மகளிர் தினம்:முதல்வர் வாழ்த்து . . அறிவுக்கண் திறந்து ஆக்கப்பூர்வமாய் பணியாற்றி உலகை வாழ வைக்கும் பெண்ணாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். . இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்செய்திட வேண்டுமம்மா' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் பெண்ணின் சிறப்பை பெருமையாக எடுத்துரைக் கிறார். பெண்ணின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8ஆம் நாள் “சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாள…
-
- 5 replies
- 836 views
-
-
ஈழத் தமிழர்களை அழித்து ஒழிக்கும் செயல் இன்று நேற்றல்ல காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக முடியும். 10 கோடி தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மதிக்க வேண்டும் என்று மதிமுக எம்.பி கணேசமூர்த்தி மக்களவையில் தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பேசிய கணேசமூர்த்தி கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் இனம் திட்டமிட்டு காலம் காலமாக அழிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சாலமன் பண்டாரநாயகே காலத்தில் இருந்தே இனப்படுகொலை தொடங்கிவிட்டது. ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்கவேண்டும் என்ற அடிப்படையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக அறிவி…
-
- 0 replies
- 580 views
-
-
Live Telecast of NO FIRE ZONE Release & Side By Side Debate By Thirumurugan & Prof. Gladstone Xavier டெல்கியில் நடைபெற்ற " No Fire Zone " திரைப்படம் பற்றிய திருமுருகன், பேராசிரியர் கிளாட்ஸ்ரோன் சேவியர் கலந்துரையாடல். http://www.youtube.com/watch?v=SD6zcAej3OI
-
- 0 replies
- 668 views
-
-
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2ஆம் திகதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் நேற்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குறித்த மீனவர…
-
- 1 reply
- 503 views
-
-
இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த போர்நிறுத்தத்தை உண்மை என்று தான் நம்பியிருந்ததுடன், இந்திய அரசாங்கமும் அதை நம்பி தனக்கு தெரிவித்ததால் உண்ணாவிரதத்தை தான் கைவிட்டதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இன்றைக்கு இலங்கை தமிழர்கள் மீது நாம் காட்டுகின்ற உணர்வுபூர்வமான அக்கறையை, அப்போதே காட்டவில்லை என்பதைப் போல ஒருசிலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தை, அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதை தி.மு.கழகம் அப்போது ஆட்சியிலே இருந்த காரணத்தால் தடுத்து நிறுத்தியிருக்கலா…
-
- 4 replies
- 1.1k views
-
-
டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம் - இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா? ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான டெசோ அமைப்பு வருகின்ற மார்ச்சு 12ஆம் நாள், தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளது. டெசோ வெளியிட்டுயிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக” பொதுவேலை நிறுத்தம் நடத்துவதென்று கூறியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததாக கூறப்படவில்லை…
-
- 0 replies
- 576 views
-