அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
Published by J Anojan on 2019-09-02 16:26:22 ’பேட் பிடிக்க முடிந்த கையால் வாள் பிடிக்க முடியாதா?’ என்று ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக முன்னாள் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்திய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவைத் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும், லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் க…
-
- 0 replies
- 332 views
-
-
படத்தின் காப்புரிமைPAKISTAN FOREIGN MINISTRY Image captionகுல்பூஷன் ஜாதவ் குடும்பத்துடன் சந்திப்பு. (கோப்புப் படம்) பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்திய தூதர அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான். இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்: "இந்திய உளவாளியும், பணியில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியும், இந்திய உளவு நிறுவனமான 'ரா' வுக்காக செயல்பட்டவருமான கமாண்டர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிக்கு சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி வாய்ப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையர் அலுவலக பொறுப்பு அதிகாரியான கௌரவ் அலுவாலியா,…
-
- 0 replies
- 496 views
-
-
திகார் சிறைக்கு, தயவு செய்து அனுப்ப வேண்டாம்- ப.சிதம்பரம். தன்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திகார் சிறைக்கு மாத்திரம் அனுப்ப வேண்டாமென ப.சிதம்பரம் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தனக்கு 74 வயதாகின்றமையினால் தயவு செய்து திகார் சிறைக்கு மாத்திரம் அனுப்ப வேண்டாம் என சிதம்பரம் வலியுறுத்துவதாக அவரது சட்டத்தரணி கபில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, ”அமலாக்கத்துறை வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை 3 நாட்கள் வீட்டுக் காவலில் அனுப்புங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம…
-
- 1 reply
- 469 views
-
-
சிங்கம் ரிட்டர்ன்: மீண்டும் போர் விமானத்தை இயக்கினார் அபிநந்தன்.. விமானப்படை தளபதியும் உடன் பறந்தார்.! ரெல்லி: மிக்-21 விமானத்தை மீண்டும் இயக்கி பயிற்சி பெற்று அசத்தினார் விங் கமாண்டர் அபிநந்தன். ஏர் சீப் மார்ஷல் தனோவா அபிநந்தனுடன் இணைந்து விமானத்தில் பறந்தது சிறப்பாகும்.கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 ரக விமானத்தில், அந்த நாட்டு படையினர் இந்திய எல்லைக்குள் புகுந்தபோது, அதை தனது மிக்-21 வகை போர் விமானத்தை கொண்டு எதிர்த்து விரட்டியடித்தார் அபிநந்தன். ஆனால் எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாரசூட்டில் குதித்து தப்பினார் அபிநந்தன். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் …
-
- 5 replies
- 607 views
-
-
இந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப். டெல்லி: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா பராமரித்து வரும் பூடானின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை விட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை வெளியேற மறுத்துவிட்டது.இதையடுத்து இந்தியா கடுமையாக போராடி அவர்களை வெளியேற்றியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது போர் தொடுக்கவும் சீனா தயாரானது அதை எதிர்கொள்ள இந்தியாவும் தயாரானது. எனினும் சீன ராணுவத்தினர் டோக்லாமை விட்டு வெளியேறியதால் போர் மூளவில்லை. டோக்லாம் இந்த ப…
-
- 0 replies
- 411 views
-
-
காஷ்மீர் விவகாரம்: இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பேரணி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. ஜமாத், இஸ்லாமி என்ற கட்சியின் ஏற்பாட்டில் கராச்சி நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்றவர்கள் காஷ்மீரை இந்தியாவில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். குறித்த பேரணியில் 1000க்கும் மேற்கொண்டோர் பங்பேற்றிருந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை கடந்த மாதம் 5ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது. இதற்கு …
-
- 0 replies
- 204 views
-
-
இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்க்கும் சீனக் கப்பல்! இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்ப்பதற்காக சீனக் கப்பலொன்று அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் கடற்பரப்பில் புகுந்த அந்தக் கப்பல் அங்கேயே சில தினங்கள் தங்கியிருந்து உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்தமான்- நிகோபார் தீவுகளின் அருகே காணப்படுகின்ற இந்திய கடற்படையின் தளத்தை உளவுபார்க்க குறித்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய கடல்பகுதியில் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி…
-
- 0 replies
- 524 views
-
-
வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 10 வருட சிறை: வருகிறது புதிய சட்டம். வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வைத்தியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் இருக்கின்ற நிலையில் புதிய சட்ட வரைபுக்கு மத்திய அரசு தயாராகிறது. வைத்தியர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என சட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இதேபோல் வைத்தியசாலைகள் மீது நடத்தப்பட…
-
- 0 replies
- 503 views
-
-
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம்தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநர் நரசிம்மன் இருந்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இவரே ஆந்திரம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவுக்கு ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.கேரள ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் ஹிமாச்சல் பிரதேச…
-
- 4 replies
- 1.3k views
-
-
முடிவுக்கு வரும் ரகசியம்.. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை நாளை முதல், இந்திய அதிகாரிகள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: கருப்பு பணம் மீட்பு நடவடிக்கைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த யார் யாரெல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருந்தார்களோ அவர்களுடைய அனைத்து தகவல்களையும் அந்த வங்கி இந்திய அதிகாரிகளுக்கு வழங்க உள்ளது.செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த தகவல்களை ஸ்விஸ் வங்கி வழங்க உள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 456 views
-
-
ஈழப்போரின் வெற்றிக்கு காரணம் என்ன? : கூறுகிறது இந்தியா
-
- 0 replies
- 940 views
-
-
பாகிஸ்தானைச் சேர்ந்த குருத்வாரா தம்பு சாஹெப் என்பவரின் மகள் கடந்த சில நாள்களுக்கு முன் கடத்தப்பட்டுள்ளார். இறுதியில் அந்தப் பெண், துப்பாக்கி முனையில் குண்டர்கள் சிலரால் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், மதமாற்றப்பட்டு, அந்தப் பெண் கட்டாயத் திருமணம் செய்துவைக்கபட்டுள்ளார். அந்தப் பெண்ணை விடுவிக்காவிட்டால் குடும்பத்துடன் கவர்னர் மாளிகை முன் தற்கொலை செய்துகொள்வோம் என்று அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். Victim's family ``சில குண்டர்கள் எங்கள் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, என் இளைய மகளைக் கடத்தியதால் எங்கள் குடும்பம் ஒரு சோகமான சம்பவத்தை எதிர்கொண்டது. அவர்கள் அவளை சித்ரவ…
-
- 2 replies
- 568 views
-
-
புதுடெல்லி: பாகிஸ்தான் திடீரென ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதால் இருநாடுகளிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ தளபதி இன்று காஷ்மீர் செல்ல இருப்பது பரபரப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கி மத்திய அரசு கடந்த 5ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அன்று முதல் காஷ்மீரில் முன்னாள் முதல்வர், கட்சி தலைவர்கள் 174 பேர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவினர் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச…
-
- 0 replies
- 259 views
-
-
அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல்! டெல்லியில் அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி டெல்லி மாநகர அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அரச-பேருந்துகளில்-பெண்கள/
-
- 0 replies
- 549 views
-
-
தீவிரவாதிகளை எங்கள் நாட்டுக்குள் திணிப்பதை நிறுத்துங்கள்: பாக். (Pakistan) மீது சீறும் இந்திய அரசு! ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் தலைவர்கள் மிகவும் ‘பொறுப்பற்ற கருத்துகளை' சொல்லி வருவதாகவும், ஐ.நா-வுக்கு அது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்திற்கு எந்தவித மதிப்பும் இல்லை என்றும் சாடியுள்ளது இந்திய அரசு தரப்பு. குறிப்பாக ஐ.நா சபைக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் ஆகியோரின் கருத்துகளும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. “இந்தியாவின் உள் விவகாரத்துக்கு உட்பட்ட ஒரு விஷயம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்த…
-
- 0 replies
- 256 views
-
-
இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு!! அமைச்சர் தகவலால் பரபரப்பு! காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய நிலையில், பாகிஸ்தான் முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா | Edited by Musthak (with inputs from PTI) | Updated: August 27, 2019 20:30 IST ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. N…
-
- 0 replies
- 533 views
-
-
இந்தியா – திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 19.16 இலட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் செல்லுகின்றனர். அங்கு அவர்கள் செலுத்தும் காணிக்கைகள் என சுமார் 9800 டன் நகைகள் திருப்பதி கோயில் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. மேலும் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 19.16 இலட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலாளர…
-
- 2 replies
- 422 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஆர்.எஸ்.எஸின் கொள்கையை அடிப்படையாக கொண்டதால்தான் மோதி அரசு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களுக்கு அவர் இன்று ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னை காஷ்மீருக்கான தூதுவராக நியமித்துக் கொண்டதாகவும், இறுதிவரை காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஆற்றிய உரை க…
-
- 0 replies
- 311 views
-
-
பிரான்ஸில் ஜி7 மாநாடு நடந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசியுள்ளார்; இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், ஜி7 மாநாட்டில், இருதரப்பு சந்திப்பின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. "நாங்கள் காஷ்மீர் குறித்து நேற்றைய சந்திப்பில் பேசினோம். காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோதி எண்ணுகிறார். அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானுடன் இது தொடர்…
-
- 0 replies
- 355 views
-
-
'காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்' - பாகிஸ்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 20ஆம் தேதி சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை இந்த பத…
-
- 2 replies
- 351 views
-
-
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பிப் அனுப்பப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி அசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, ஷரத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்கு சென்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய சென்றதாக காங்கிரஸின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்குள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க சென்றுள்ளன…
-
- 0 replies
- 485 views
-
-
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது…
-
- 0 replies
- 368 views
-
-
ஐ. நா.வில் காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பேச தீர்மானம் ; இம்ரான் கான் ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செம்படம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொது சபை நடைபெறவிருக்கிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இக் கூட்டத்தில் பங்கேற்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பாக கலந்துரைாயட உள்ளார் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/63280
-
- 0 replies
- 264 views
-
-
12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆய்வில் இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதிவு: ஆகஸ்ட் 23, 2019 11:03 AM உலகெங்கிலும் உள்ள 12 நாடுகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரம் ஆய்வு செய்யப்பட்டது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய இந்த ஆய்வில், பகுப்பாய்வு செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களும் அடங்கும். இந்த ஆய்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு சீனர்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது. அவற்றில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. …
-
- 0 replies
- 641 views
-
-
இந்தியாவில் ஊழல், குடும்ப அரசியல், கொள்ளைக்குச் செக்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு! Read in English ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர், சூசகமாக தெரிவித்தார். இந்தியா | Edited by Barath Raj | Updated: August 23, 2019 16:32 IST EMAIL PRINT COMMENTS பாரீஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார் மோடி. NEW DELHI: பிரான்ஸ் நாட்டுக்கு சுற்று…
-
- 0 replies
- 571 views
-